Followers

Copyright

QRCode

Wednesday, October 27, 2010

மங்காத்தா - strictly no rules & strictly for ajith fans...

தலையின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம் ஆகி விட்டது ... தல ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை ... பல நாட்களாக pre productionஇல் இருந்த இந்த படம் ஒருவழியாக ஆரம்பம் ஆகி விட்டது .. மிக நீண்ட எதிர்பார்பிற்கு பின்னர் , பக்காவாக ஸ்கிரிப்ட் உள்பட அனைத்தும் தயார் செய்து களத்தில் இறங்கி விட்டனர் தலையும் , அவர் இந்த முறை நம்பி பொறுப்பை கொடுத்து  இருக்கும் வெங்கட்டும் ... படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி படத்தை பற்றிய மிக பெரிய சந்தோசத்தில் இருக்கிறாராம் .. இருக்காதா தலையின் அம்பதாவது படமல்லவா? இப்பொழுதே படத்தின் promotion வேலைகளுக்கு என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஆலோசனைகளில் இருக்கிறாராம் .. கண்டிப்பாக எந்த தல படத்திற்கும் இல்லாத விளம்பரம் இந்த படத்திற்கு உண்டு ...இதுவே தல ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான்...


வெங்கட்டை பொறுத்த வரை முதல் முறையாக  பெரிய நடிகரை வைத்து இயக்குகிறார்... அவரிடம் என்னை போன்ற தல ரசிகர்கள் கேட்டு கொள்வது எல்லாம் எப்படியாவது நல்ல ஹாலிவுட் படத்தை காப்பி அடித்தாவது படத்தை ஹிட் ஆக்கி விடுங்கள் என்பதுதான் ... ஊரே அந்த வேலையை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது  தலையும் அதே வழியில் செல்வது ஒன்றும் பெரிய குற்றம் ஆகி விடாது ... ஏகன் முதல்பாதியில் வரும் அஜித்தை என்னை போன்ற தல ரசிகர்கள் அனைவரும் ரசித்தார்கள் ... அந்த படம் ராஜூ சுந்தரத்தின் அரைகுறை இயக்கத்தினால் இரண்டாம் பாதியில் இழுவையாக இருந்தது .. வெங்கட் படம் முழுவதும் அந்த ஏகன் முதல் பாதி தலையை ஸ்க்ரீனில் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ...   

தல சும்மாவே அழகு .. இந்த படத்திற்காக இன்னும் கொஞ்சம் உடம்பை குறைத்து படு ஸ்மார்ட்டாக இருக்கிறாராம் ... தலைய ஸ்க்ரீன்ல பார்க்க வேண்டும் என்ற ஆவல் இப்பொழுதே  எனக்கு அதிகமாகி விட்டது .....  அவரோட ஸ்க்ரீன் ப்ரசென்ஷ் ஒன்றே போதும் என்னை பொறுத்தவரை பார்த்து கொண்டே இருப்பேன் ... அந்த வகையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும் ... பில்லா படத்தில் இருந்ததை விட ரொம்ப ஸ்மார்ட் அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்று வெங்கட் சொல்லி இருக்கிறார் ... அதை விட அதிகம் வேண்டாம் பில்லா அளவுக்கு தலையை அழகாக காட்டினாலே போதும் எங்களுக்கு ... 

இசையை பொறுத்தவரை யுவன் எங்களுக்கு எப்பொழுதும் பெஸ்ட் ... அவர் இசை அமைத்த தல படங்கள் எல்லாமே இசை விருந்துதான் .. தீனா , பில்லா மற்றும் ஏகன் ... இதில் ஏகன் படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் பக்காவாக அமைந்தது... அதே போல் வெங்கட் யுவன் கூட்டணியும் வெற்றி கூட்டணிதான் ... ஜனவரி மாதம் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம் ... 

படத்தின் இன்னொரு மாஸ் attraction நாகர்ஜூன்... ரட்சகன் படத்திற்கு பின்னர் அவர் நடிக்கும் நேரடி தமிழ்  படம் ... படத்தில் இவர் இருந்தாலும் தலைதான் மாஸ் கேரக்டரில் வருகிறாராம் ... தல நாகர்ஜூன் கூட்டணி திரையில் என்ன மேஜிக் செய்ய போகிறது என்பதை பார்க்க அடுத்த மே வரைக்கும் தல ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் .. மே ஒன்னில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்... 

மூன்றாவது முறையாக தலையுடன் ஜோடி சேர போகிறார் த்ரிஷா ... இவர் தலையுடன் இதற்க்கு முன் நடித்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை பெற வில்லை என்றாலும் தலைக்கு நல்ல பெயரை பெற்று தந்த படங்கள் , அதிலும் இரண்டு படங்களிலும் காதல் காட்சிகள்("ஜி"- அஜித் திரிஷாவை முதல் தடவை  பார்க்கும் அந்த மழை காட்சி , இரண்டாம் பாதியில் கடைசியில் வரும் அந்த கோயில் ஸீன், "கிரீடம்"- இரண்டாம் பாதியில் வரும் தண்ணீர் தொட்டி காட்சி)  சிறப்பாக  அமைந்திருந்தது .. அது இந்த படத்திலும் தொடரும் என்று நம்பலாம் ... அந்த இரண்டு படங்களும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படங்கள் ... முதல் முறையாக த்ரிஷா பக்கா "தல" படத்தில் அவருடன் ஜோடி சேர்கிறார் ... கண்டிப்பாக இந்த ஜோடி வழக்கம் போல கலக்கும்  ... 

இப்படி எல்லா விதத்திலும் அவர் ரசிகர்களிடம் சகட்டுமேனிக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்த மங்காத்தா ... குறிப்பாக நான் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறேன் ... என் எதிர்பார்ப்பு எப்பொழுதும் வீண் போனதில்லை (ஜனா , ஆஞ்சநேயா , ஆழ்வார் , திருப்பதி என்று ஒரு சில படங்களை தவிர .. ) தல கண்டிப்பாக இதிலும் கலக்குவார் ... இப்பவே பயங்கர த்ரில்லிங்கா இருக்கேன் தலைய ஸ்க்ரீன்ல பாக்க ....

(நான் அஜித் படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க போவதில்லை எனக்கு அஜித்திடம் என்ன பிடிக்குமோ அது படத்தில் இருந்தாலே போதும் ...  படம் வெற்றியும் பெற்றால் எனக்கு டபுள் ட்ரீட்தான்...)

venkat take your own time... but we want a maas masala from our thala ...

and  if you are a true thala fan convey ur best wishes to our thala in this post...

Tuesday, October 26, 2010

மறுபடியும் ஒரு டாக்டர் பதிவு ....

நம்ம டாக்டர் அவர்களை வைத்து நான் எழுதிய போன பதிவிர்க்கு பெரிய வரவேற்பு .. சினிமாவில்  மார்க்கெட் போனாலும் இன்னமும் பதிவுலகில் நம்ம டாக்டர் மாஸ் அப்படியேத்தான் இருக்கு... அதான் தொடர்ந்து ரெண்டாவது பதிவு நம்ம டாக்டெர பத்தி ...

















எல்லாம் எனக்கு மெயிலில் வந்த காமெடிகள் ... அந்த காமெடிகளை எல்லாம் நம்ம டாக்டர் அவர்களோடு லிங்க் பண்ணி சரியான படத்த தேடி போட்டது மட்டும்தான்  என்னோட வேலை...




Friday, October 22, 2010

டாக்டர் ரசிகர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம்

பாவம் நம்ம டாக்டர் தம்பி ... முன்ன எல்லாம் அவரை பத்தி எஸ்.எம்.எஸ்லயும் ஈமெயிலயும்தான்ஓட்டிகிட்டுஇருந்தானுக,,, இப்ப பப்ளிக்கா டிவிலயும், அரசியல் மீட்டிங்ளையும் ஓட்ட ஆரம்பிச்சிட்டாணுக(மதுரை மீட்டிங்க்ல அம்மா என்ன ஓட்டு “ஓட்டுது ”)... அதான் நானும் என் பங்குக்கு நம்ம டாக்டர் அவர்களை ஓட்டலாமேன்னு இந்த பதிவு ... இது ஒரு மீள் பதிவுதான்... பதிவு எழுத ஆரம்பிச்ச காலகட்டத்துல எழுதுனது.... அத கொஞ்சம் டிங்கரிங் வேலை பாத்து இங்க திரும்ப போடுறேன் ...


தன்னுடைய அடுத்த  படத்துக்காக விஜய் கதை கேட்டுகொண்டிருப்பதை கேள்விப்பட்டு நம்முடைய கோடம்பாக்கத்து மசாலா பேக்டரிகள் மசாலா அரைக்க அவரை தேடி செல்கின்றனர்.... கூடவே நம்ம அண்ணன் கவுண்டமணியும் இருக்காரு...


முதல் ஆளா  நம்ம அண்ணன் பேரரசு வராரு ....

பேரரசு: கவலைபடாதீங்க விஜய் உங்க படத்த உலகமே கொண்டாடுற மாதிரி எடுத்துருவோம்...

கவுண்டமணி: அடேயப்பா இவரு பெரிய ஸ்பீல்பெர்க்கு இவரு படம் எடுத்தா உலகமே கொண்டடபோது... நீ ஒரு மொள்ளமாரி, அவன் ஒரு முடிச்சவிக்கி... டேய் உன் ரேஞ் என்னவோ அதுக்கு ஏத்தமாதிரி  மட்டும் பேசு...

பேரரசு: நீங்க அமெரிக்கால அணுகுண்டு தயாரிச்சிட்டு இருக்கீங்க...

கௌண்டர்: யாரு இவனா? ஏன்டா உனக்கு கோலிகுண்டாவது செய்ய தெரியுமா? அணுகுண்ட கண்ணால பாதுருக்கயா? அது என்னனாவது உனக்கு தெரியுமா? அதுளா என்ன மாதிரி scientist பண்ற வேலைடா ஜாங்கிரி தலையா.... இவனுக்கு தெரிஞ்ச ஒரே அணுகுண்டு சாப்ட பின்னாடி போடுவாங்களே அது மட்டுந்தான்....

பேரரசு: உங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி அவள நீங்க ஈராக்குல கட்டி கொடுகிறீங்க.... அங்க இருக்குற தீவிரவாதிகலால உங்க தங்கட்சிக்கு பிரச்சன வருது.... உடனே நீங்க ஈராக்குக்கு போய் அங்க இருக்குற டெர்ரரிஸ்ட்கள எல்லாம் பஞ்ச் டையலாக் பேசியே கொள்ளுறீங்க....

கௌண்டர்: ஏண்டா இவன் பஞ்ச் டையலாக் பேசி தமிழ்நட்டுகாரண கொன்னது பத்தாதுன்னு அமெரிக்காகாரனையும் கொல்ல போறீங்களா.... ஆண்டவா என்ன ஏன் இந்த கலுசட பயலுககூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற.... எங்க ஒரு டையலாக்எடுத்து வுடு பாப்போம்...

பேரரசு: டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல

கௌண்டர்: தம்பி கொஞ்சம் எழுதிரிசி திரும்பி நில்லு... (பேரரசு எழுதிரிசி நிக்க கௌண்டர் தன் ஸ்டைலில் அவரை எத்தி மிதிக்கிறார்) ( விஜையை பார்த்து)  இவனுககூடலம் சேந்த உன்ன உச்சி வெயில்ல பழநிமலை அடிவாரத்துல பிச்ச எடுக்க வுட்டுருவானுக,, இப்ப இருக்குற நெலமைல நீ போன அங்க இருக்குற 
பிச்சகாரன் கூட உன்ன சேத்துக்க மாட்டான்....

அடுத்து நம்ம நடன புயல் பிரபு தேவா வாராரு 

பிரபு: சார் என்கிட்டே ஒரு அருமையான கதை ஒன்னு இருக்கு ... சரிஞ்சி போய் இருக்கிற உங்க மார்கெட்ட தூக்கி நிறுத்திற  மாதிரியான காதல் கதை இது ... உங்கள பூவே உனக்காக காலத்து விஜய்யா மாத்திற கதை சார் இது...

கவுண்டர்: டேய் தாடிகார கேடி .. இந்த மூஞ்ச பாருடா (விஜய் மூஞ்சை காட்டுகிறார்) நல்லா சுகர் வந்த @@@@@ கனக்கா இருக்கு ... இத திரும்ப யூத் மாதிரி காட்ட போறியா? இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க காட்டாதடி...

விஜய்: அண்ணன் கொஞ்சம் சும்மா இருங்கண்ணே... நீங்க சொல்லுங்க பிரபு ...

பிரபு: சார் இந்த படத்துல  உயிருக்குயிரா காதலிக்கிற ஒரு காதல் ஜோடிய சேத்து வைக்கிற கேரக்டர்ல நடிக்கிறீங்க ... படத்தோட ஆரம்பத்துல உங்க லவ்வர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்டுறாங்க ... அதனால நீங்க ரொம்ப மனசு ஒடிஞ்சி வாழ்கையே வெறுத்து போறீங்க ... அப்பத்தான் நீங்க ஒரு காதல் ஜோடிய சந்திக்க வேண்டி வருது ... அவங்க ரெண்டு பெரும் உயிருக்குயிரான காதலர்கள் ... ஆனா அவங்க ரெண்டு பேரும் வாழ்கையில ஒன்னு சேருவதற்கு நிறைய தடைகள் வருது ... அவனுக்கு அவனோட முதல் மனைவியின் மூலமா ... அவளுக்கு அவளோட முன்னாள் காதலன் மூலமா... அவங்க ரெண்டு பேரும் ஊருலயே பெரிய ரௌடிங்க ... அவங்ககிட்ட இருந்து ரெண்டு பேரையும் காப்பாத்தி அவங்கள ஒன்னு சேத்து வைக்கிறீங்க ... இதுதான் படத்தோட கதை  இதுல அந்த காதலர்கள் கேரக்டேர்ல நானும் நயன்தாராவும் நடிக்கிறோம் ... உங்களுக்கு ஜோடியா சிம்ரன போட்டிடுவோம் ... நம்ம கவுண்டர் அண்ணனுக்கு கூட ஒரு கேரக்ட்டர் இருக்கு இந்த படத்துல 

கவுண்டர்: அந்த சொம்பு பையன் கேரக்டர எனக்கு குடுப்பா ... லிப் டு லிப் கிஸ் சீன்லாம் வரும் ... நானும் இப்படி குஜாலா நடிச்சி ரொம்ப நாள் ஆச்சி  ...

விஜய்: சும்மா இருக்கண்ணே .. நானே அப்படி நடிச்சி ரொம்ப நாள் ஆச்சி ... சுறா வேட்டைன்னு நடிச்சதுக்கு பதிலா எங்க அப்பாவ வச்சி ரெண்டு பிட்டு படம் எடுத்து ஓட்டிருக்கலாம்...   ஓகே பிரபு உங்க கதை கொஞ்சம் நல்லா இருக்கு ... ஆனா இன்னும் கொஞ்சம் மாத்தினா நல்லா இத விட பெட்டரா இருக்கும்னு நெனைக்கிறேன் ... நீங்களும் நயன்தாராவும் லவ் பண்ணுறீங்க ... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வரேன் இது வரைக்கும் ஓகே.. அப்பறம் என்ன ஆகுதுன்னா என்னோட பெர்சனாலிட்டி , மக்களுக்கு நல்லது பண்ற என்னோட நல்ல  குணம் இதை எல்லாம் பாத்திட்டு நயன்தாராவுக்கு என் மேல லவ் வந்திடுது ... நீங்களும் அவங்க லவ்வ புரிஞ்சிகிட்டு அவங்களை எனக்கு விட்டு கொடுத்திடுறீங்க .. இப்படி கதையை மாத்துங்க .. நான் நடிச்சி கொடுக்கிறேன் ...

கவுண்டர்: அட்ராசக்க .. கதைய மாத்துறேன்னு சொல்லி அடிமனசுல இருக்கிற ஆசையை அப்படியே வெளிய எடுத்து விடுது பாரு ... டேய் தாடி கதை சொல்லுரப்பவே உன் காதல பிரிக்க ப்ளான் பண்ணுறான் ... இவன வச்சி படம் எடுத்த அந்த சொம்பு பையன் மாதிரி நீயும் புலம்ப வேண்டி வந்திடும் .. பாத்துக்கோ...

பிரபு : நயன்தாரா என் உயிர் சார் ... அவ இல்லாம நான் இல்ல ... நான் இல்லாம அவ இல்ல .. அவளை யாருக்காகவும் நான் விட்டு கொடுக்க மாட்டேன் ... (கண்களில் நீர்  வர அழுது கொண்டே இடத்தை காலி பண்ணுகிறார் பிரபுதேவா)


அடுத்து நம்ம தரணி கத சொல்ல வராரு

தரணி: விஜய் இந்த படம் வந்த பின்னாடி அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்குற உங்க ரசிகர்கள் எல்லாம் உங்கள அடுத்த பிரதமர்னு சொல்ல அரம்பிட்சிடுவாங்க... அப்டி ஒரு பவர்புல் கத இது....

கௌண்டர்: என்னது அடுத்த பிரதமரா? உலக மகா பில்ட்டப்புடா சாமீ....

தரணி: நம்ம நாட்டோட பிரதமர பின்லேடன் கடத்திட்டு போயிடுறான்.. அப்ப ஆப்கானிஷ்தானுக்கு கபடி விளையாட போயிருந்த நீங்க பின்லேடன அடிச்சி போட்டுடு நம்ம பிரதமர கூப்பிட்டு ஆப்கானிஷ்தானுல ரோட் ரோட அலையுறீங்க... ....

கௌண்டர்: ஐயய்யோ.... ஏண்டா பின்லேடன என்ன உங்க வீட்டுல பேப்பெர்போடுற பையன்னு நெனசியா.... அமெரிக்கால அணுகுண்டு போடுறவன்டாஆனானப்பட்ட அமெரிகாகரனே அவன ராக்கெட்டு விட்டு தேடியும் கெடைக்க மாட்டேன்றான்.... இந்த பேரிக்கா தலையன் கண்டுபுடிசிடுவானா? எழுந்திரிச்சி வந்தேன் ஏறி மிதிச்சிடுவேன்... ஓடி போய்டு ....(விஜயை பாத்து) இன்னொரு தடவ கத கேட்டு சொல்லுங்கன்னேனு இந்த மாதிரி பசங்கள கூப்டுடு வந்த தெரு நாய விட்டு கடிச்சி கொதறி புடுவேன்....

விஜய்: சரிங்கண்ணா அப்டினா நீங்களே நல்ல கதையா சொல்லுங்க...

கௌண்டர்: அப்டி கேளுடா... இதுக்குதான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆள் அழகு ராஜா வேணும்கிறது.... நீ என்ன பண்ற செந்தில் நடிச்ச படத்தையெல்லாம் வங்கி பாக்குற... அடுத்த படத்துல இருந்து நீதான் எனக்கு செந்தில்... அவன் ஹீரோவா நடிக்க போனதுல இருந்து அடிக்க ஆள் இல்லாம எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு....
விஜய் : யார பாத்து என்ன சொல்லுற? தமிழ் நாட்டுல என்ன பாத்து காமெடியனா நடிக்க சொன்ன மொத ஆளு நீதான்...

கௌண்டர்: அது என்னடா எதுகேடுதாலும் ஒரு பஞ்ச் டையலாக்கு.... நீ நடிச்ச படத்த எல்லாம் பாதுருக்கயடா?

விஜய் : இல்லனா அந்த ரிஸ்கெல்லாம் எடுக்குறது கெடையாதுனா... நடிகிரதோட மட்டும்தாண்ணா,, அதையெல்லாம் பாக்குறது கெடையதுனா?

கௌண்டர்: என்னது நடிக்கிறயா?  நீ பண்றதெல்லாம் நடிகிரதுனா அப்ப நம்ம நடிகர் திலகம் பன்னுனதேல்லாம்....ஆம்மா உண்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கனும்னு நெனசிருந்தான்.... புதிய கீதைனு ஒரு படம் நடிச்சையே அந்த படத்தோட கத என்னடா?

விஜய்: எண்னனா இப்டி கேக்குறீங்க.. ஊருக்கு நல்லது பண்ண நமக்கு நல்லது தானா நடக்கும் இதுதான்னா அந்த படத்தோட கத....

கௌண்டர் : அதுல என்னடா பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுகுற.. இந்தியாலேயே பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுந்த ஒரே ஹீரோ நீ மட்டுந்தாண்டா...

விஜய்: அதெல்லாம் வித்தியாசமா இருக்கட்டுமேனு வட்சதுன்னே...
கௌண்டர்: சரி விடு எதாவது ஒரு படதுலையது கெட் - அப் மாத்தி நடிசிருக்கயா

விஜய்: என்னன்னா இப்டி கேட்டுடீங்க... அந்த படத்துல ஆறு விரல் வச்சி நடிசிருப்பேனே பாக்கலையா நீங்க....

கௌண்டர்: ஒன்ன எல்லாம் காமெடியனா நடிக்க கூப்டதுல தப்பே இல்லடா...
அது சரி ஏன் எப்ப பாத்தாலும் உயரமான எடத்துல இருந் கீழ விழற மாதிரியே நடிக்கிற , சினிமாலயும் நீ மேல இருந்து கீழ விழுந்துகிட்டு இருக்கங்கிரத  சிம்பாலிக்கா காட்டுரயா?சரி சரி நீ உன் படத்துக்கு சுறான்னு பேரு வச்சதுல இருந்து கடல்ல இருக்குற சுறா மீனெல்லாம் தற்கொல பண்ணிகிடுசாமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி...

விஜய்: (கோபமாக) சாமிகிட்ட மட்டுந்தான் சாந்தமா பேசுவேன் உன்ன மாதிரி சாக்கடகிட்ட எல்லாம் இல்ல...

கௌண்டர்: உனகெல்லாம் கௌண்டமணி உத பத்தாதுடா வேற வேற பின்லேடன் படதாண்டா  வேணும்.... சீ இவனுக கூட  சேந்து  எனக்கும் பஞ்ச்  டயலாக் பத்திகிடுசே... இனிமே இவனுக கூட எல்லாம் சவகாசமே வச்சிக்க கூடாதுடா சாமி... 
ஷோவை அவசர அவசரமாக முடித்து கொண்டு பின்வாசல் வழியே ஓடுகிறார்
கௌண்டர்

BONUS: 


எனக்கு வந்த சில விஜய் SMS

ரஜினி : உங்களுக்கு தெரிஞ்ச ஒரு software பேரு சொல்லுங்க ...

சூரியா : MS-WORD

விக்ரம் : MS-EXCEL

தனுஷ் : MS-POWER POINT

சிம்பு : MS-PAINT

விஜய் : (சிறிது நேரம் யோசித்து விட்டு ) MS. தோணி 

டாக்டர் .விஜய் S.S.L.C rocks...


சென்னையில் ஒரு வேலைவாய்ப்பு 

இடம் : AVM studio வாசல் 

படிப்பு : தேவை இல்லை 

சம்பளம் : மாதம் ரூ.30,000

வேலை : நம்ம டாக்டர் சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும் ...

NOTE (???): நான் தலைப்பிலேயே சொல்லி விட்டேன் நம்ம டாக்டர் ரசிகர்கள் யாரும் இதை படிக்க வேண்டாம் என்று மீறி படித்து டென்ஷன் ஆகி இருந்தால் அது என்னுடைய தவறு கிடையாது ...

Sunday, October 17, 2010

அழகிய தீயே -- அனுபவித்தே தீர வேண்டிய படம்

ஒரு இயக்குனரின் வெற்றி எவ்வளவு பிரமாணடமாக தன் கற்பனையை ரசிகனுக்கு திரையில் வெளிபடுத்துகிறார் என்பதில் இல்லை , எவ்வளவு சரியாக தான் சொல்ல வந்த விஷயத்தை... தான் உருவாக்க நினைத்த உணர்ச்சிகளை... ரசிகனின் மனதில் பதிய வைக்கிறார் என்பதில்தான் இருக்கிறது... எந்த ஒரு திரைப்படத்திற்கும் லாஜிக் பார்ப்பது என்னை பொருத்தவரைக்கும் தேவை இல்லாத ஒன்று ... திரைப்படம் என்பது ஏதோ ஒரு இயக்குனரின் கற்பனைதான்.... நம் கனவுகளை போல.... நாம் தினந்தோறும் பல கனவுகளை கடந்துதான் வருகிறோம் , ஆனால் ஒரு சில கனவுகள் மட்டுமே ரசனையாக நம்மை சந்தோசபடுத்தும் விதமாக அமையும் ... அந்த கனவுகளின் நீட்சியாக அன்று முழுவதும் நம் மனதில் ஒரு இனம் புரியா சந்தோசம் இருந்துகொண்டே இருக்கும் .. அப்படிப்பட்ட ஒரு கனவுதான் இந்த அழகிய தீயே திரைப்படமும் ...
சினிமாவில் ஜெய்க்க வேண்டும் என்று ஒரு லச்சியத்துடன் வாழும் ஒரு இளைஞன் , பணக்கார குடும்பத்தில் பிறந்து அங்கு இருக்கும் மனிதர்களை பிடிக்காமல் தன சொந்த காலில் நிற்க ஆசைப்படும் ஒரு பெண் , இந்த இருவருக்கும் இடையே எப்படி காதல் முளைக்கிறது என்பதே இந்த படம் ... இந்த படம் என்னை ரசிக்க வைத்ததிற்கு மிக முக்கிய காரணம் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் உருவாக்கமும் அதை கொஞ்சம் கூட தடுமாறாமல் திரையில் அப்படியே கொண்டுவந்த விதமும்தான்...   படம் முழுவதும் இந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் கதையில் வராத ஒரு பெண்ணிடம் கதை கூறுவதை போலதான் (flash back) திரைகதை இருக்கும் ... 

கதையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை படத்தை பார்க்கும் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு நம்மை அந்த மனநிலைக்கு தயார்படுத்துவதற்கு இந்த திரைகதை அமைப்பு உதவியிருக்கிறது... உதாரணமாக இனிமேல்தான் இருவரும் முதன்முறையாக சந்திக்க போகிறார்கள் , இனிமேல்தான் கதையில் ஏதோ ஒரு முக்கியமான திருப்பம் நடக்கபோகிறது , எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்கும் நடுவே இனிமேல்தான் ஒரு புரிதல் ஆரம்பம் ஆக போகிறது என்று ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குனர் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவார் அந்த கதை சொல்லும் கதாபாத்திரத்தின் மூலம் ... சுற்றுலா செல்லும்போது அடுத்து நாம் இந்த இடத்திற்கு செல்ல போகிறோம் என்று கைடு சொல்லியதும் நமக்குள் அந்த இடத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு உருவாவதை போல நமக்கும் இந்த யுக்தி கதையின் மேல் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது... கடைசி வரை அந்த எதிர்பார்ப்பை  ஏமாற்றாமல் நிறைவேற்றி இருப்பதில்தான் இயக்குனர் ஜெய்த்திருப்பார்...


படத்தின் டைட்டில் கார்டில் சில கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டுவார்கள் அதில் ஒன்றில்  ஒரு பால் பூத்தில் மனிதர்களோடு கன்றுகுட்டி ஒன்றும் வரிசையில் நின்று கொண்டு இருக்கும், இப்படி அந்த டைட்டில் கார்டிலேயே இயக்குனர்  அடுத்த இரண்டு மணிநேரம் நாம் எப்படிப்பட்ட ஒரு படத்தினை பார்க்க போகிறோம்  என்று நம் மனதை டியூன்   செய்து விடுகிறார்... படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதே அலைவரிசையில் இருப்பதால் நம்மால் எளிதில் அதை உள்வாங்கி கொள்ள முடிகிறது .... படத்தில் மூன்று முக்கிய கதாபத்திரங்களில் பிரசன்னா , பிரகாஷ்ராஜ் மற்றும் நவ்யா நாயர் நடித்திருப்பார்கள் ... இதில் பிரகாஷ் ராஜ் கொஞ்சநேரமே வருவார் ... ஆனால் அவர் கதாபத்திர உருவாக்கத்தில் இயக்குனரின் திறமை பளிச்சிடும் ... ஆரம்பத்தில் ஒரு கேனை கிறுக்கனாக நமக்கு தெரியும் அந்த கதாபத்திரத்தின் மேல் போக போக நமக்கு ஒரு மரியாதை உருவாகி விடும் ... அந்த மரியாதையும் ஏதோ ஒன்றிரண்டு காட்சிகளில் அவரை நல்லவர் போல காட்டி  உருவாக்காமல்,, வலிந்து திணிக்கபடாமல்,,  கதையின் ஓட்டத்திலேயே நமக்கு இயல்பாக உருவாகி விடும்...இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கி இருப்பார் இயக்குனர் ...

இந்த படத்தில் இயக்குனர் ராதாமோகனுக்கு பெரிய துணையாக இருந்தவர் வசனம் எழுதிய விஜி அவர்கள் ... வசனம் எழுதுகிறேன் என்று தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டாமல் , படம் பார்க்கும் நாம் என்ன நினைக்கிறோமோ  அது அப்படியே வசனமாக வரும் வகையில்,,  என்ன தேவையோ அதை மட்டுமே எழுதி இருப்பார் ... உதாரணமாக பிரகாஷ் வரும் இரண்டு மூன்று காட்சிகளிலேயே முன்ன பின்ன தெரியாதவனுக்கு இவ்வளவு உதவி செய்கிறானே இவ்வளவு நல்லவனா இவன் என்று நமக்கு தோன்றும்....   அந்த வசனம் அடுத்த காட்சியில் வந்து விடும்... அதே சமயம் "ஒருத்தனோட கனவை குறை சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது" , "நம்மை சுத்தி நாலு நல்லவங்க இருந்தா போதும் அதை விட பெரிய ஆசிர்வாதம் எதுவும் கிடையாது" ,"கறந்த பால், அதிகாலை பனித்துளி , குழந்தையின் சிரிப்பை போல காதலும் புனிதமானது"   என்பதை போன்ற ரசிக்க வைக்கிற வசனங்களும் படம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் ... அதே போல நகைசுவை காட்சிகளில் இவரின் வசனம் புகுந்து விளையாடி இருக்கும் ... குறிப்பாக நாய்க்குட்டி வாங்க அந்த மாதிரியான வீட்டுக்குள் பிரசன்னாவும் அவர் நண்பரும் நுழையும் காட்சியில் குட்டி சம்பந்தமாக கொஞ்சம் இரட்டை அர்த்தம் வரும் மாதிரியான வசன  அமைப்புகள் இருந்தாலும் அந்த காட்சியின் இறுதியில் நாம் இவ்வளவு நேரம் பேசிய குட்டி நாய் குட்டி பற்றி இல்லை என்று தெரிந்தவுடன் அந்த நண்பர் "தேவை இல்லாம எங்க அப்பனை வேற அசிங்கபடுத்திடேனே" என்று புலம்பும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது... அதே போல பாஸ்கர் வரும் காட்சிகளில் சில சினிமாக்களை நாசூக்காக காலை வாரி இருப்பார் ...அடித்து சொல்லலாம் இந்த படத்தின் வெற்றிக்கு விஜிக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்று...

இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் இசை அமைப்பாளர் வித்யாசாகர் ... கண்டிப்பாக இப்படி ரொம்ப எளிமையான இரைச்சல் இல்லாத  ஆனால் ரசிக்க வைக்ககூடிய  பாடல்களை இவரை தவிர வேறு யாராலும் தர முடியாது ... "விழிகளின் அருகிலே வானம்" பாடல் படம் வந்த பொழுது பெரிய ஹிட் .. இப்பொழுதும் கேட்கும் பொழுது அதே பிரெஷ்நெஸ் அப்படியே... பின்னணி இசையிலும் ஆர்பாட்டம் இல்லாத அதே எளிமை .. குறிப்பாக  ஊட்டியில் பனிமூட்டம்  விலகி வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் அதே போல் கிளைமாக்சில் கொசுமருந்து புகை விலகி அதே வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் ஒரே இசையை இரு வேறு பீட்டில் கொடுத்து அந்த காட்சிக்கே புது பரிமாணத்தை உருவாக்கி இருப்பார்... அவர் இப்பொழுது மார்கெட்டில் இல்லாததற்கு  அவர் காரணம் இல்லை அவரை சரியாக பயன்படுத்த யாரும் இங்கே இல்லை என்பதே காரணம் என்பது இந்த படத்தை பார்த்தால் புரியும் ...     

படம் முழுவதும் ஒரு கவிதை தொகுப்பை போல கோர்வையாக கொண்டு போய் இருப்பார் இயக்குனர் ... சைக்கிள் டியுப் பஞ்சர் ஓட்ட போகும் ஹீரோவுக்கு நவ்யா நாயருடன் திருமணம் நடப்பது, இருவரும் முதன் முதலில் எங்கே சந்தித்தோம் என்பதை பிரசன்னா கற்பனையாக  பிரகாஷ் ராஜிடம் கூறும் இடம் , நவ்யாவின் செருப்பு வீட்டிற்கு வெளியே எந்த பொசிசனில் இருக்கிறது என்பதை கொண்டு பிரசன்னா அவரின் மூடை(mood) கணிப்பது,,, அந்த "ப்பூம்" ஸீன், அதன்  நீட்சியாய் கிளைமாக்சில் நவ்யாவிற்கு ஒரே நொடியில் அதுவரை அவருக்கே தெரியாமல் அவர் மனதில் பிரசன்னாவின் மேல் இருந்த காதல் வெளிவரும் ஸீன் என்று கவிதைநயமான காட்சிகள் ஏராளம் ...  

படத்தில் குறையே இல்லையா என்றால் இருக்கிறது ... படத்தின் இரண்டாம் பாதியில் சினிமாத்தனமான காட்சிகள் ஏராளம் .. குறிப்பாய் விபத்தில் அடிபட்டு சாகும் தருவாயில் இருக்கும் ஹீரோவின் நண்பன் இறக்கும் தருவாயில் நவ்யாவிடம் பிரசன்னாவின் காதலை சொல்ல முயற்சி செய்வது (ஆனால் கிளைமாக்சில் நவ்யா அவன் சாகும் தருவாயில் அவனின் கடைசி நிமிடங்களில் கூட இருந்த அனுபவத்தை பதைபதைப்புடன்   சொல்லும் பொழுது நம் நெஞ்சம் கணக்கும் விதத்தில் அவரின் நடிப்பு இருக்கும்) , அதே காட்சியில் பாஸ்கர் எவ்வளவு செலவானாலும் பரவாய் இல்லைடா நீங்க எல்லாம் என் புள்ளைக மாதிரி அவன் பொளைக்கனும்டா என்று பீலிங்க்ஸ் விடுவது  (அவர் அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு) , பிரசன்னாவின் அம்மா வரும் காட்சி என்று அக்மார்க் தமிழ் சினிமா செண்டிமெண்ட் காட்சிகள் இரண்டாம் பாதியில் அதிகம் ... 

இது ரொம்ப எளிதான ஒரு படம் ஆனால் கோடி கோடியாக பணத்தை கொட்டி எடுத்தாலும் கொடுக்க முடியாத பல மெல்லிய உணர்வுகளை படம் முழுவதும் நமக்கு தந்துகொண்டே இருக்கும் ... கண்டிப்பாக ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய படம் இது ... இதுவரை பார்க்காதவர்கள் நம்பி ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்...  

(ரொம்ப  நாளாக இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ... நேற்று மீண்டும் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அமைந்தது ... எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும்   எனக்கு பிரெஷாகவே படம் தெரிந்தது (my sassy girl போலவே) ... அதனால் அடக்க முடியாமல் இந்த படத்தை பற்றி இன்று எழுதி விட்டேன்...  )          

Thursday, October 14, 2010

ரசிகனும் நடிகனும்


இது எந்த குறிப்பிட்ட நடிகரையோ இல்லை அவரின் ரசிகர்களையோ குறித்து எழுதப்பட்ட பதிவு இல்லை ...எல்லா நடிகர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும் ....

இப்ப எல்லாம் தலைவா வணக்கம் .. நான்தான் உன்னோட தீவிர ரசிகன் பேசுறேன் அப்படின்னு ஏதாவது பதிவ பாத்தா கடுப்பா வருது ... காரணம் நீங்களும்தான் வருசகணக்கா இப்படிஎழுதிகிட்டு இருக்கீங்க  யாராவது  திருந்தினார்களா? அப்பறம் எதுக்கு இப்படி எல்லாம் பொலம்புரீங்க... நீங்க வயித்தெரிச்சல்ல சொல்லுறீங்களோ இல்லை சமூக அக்கறையோட சொல்லுறீங்களோ எப்படி சொன்னாலும் சரி... ஒரு விஷயம் உண்மை  நீங்க சொல்லுறது நூற்றுக்கு நூறு   ... இந்த நடிகர்களால் யாருக்கு என்ன நன்மைன்னு யோசிச்சி பாத்தா ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ... மன்னர்கள் காலத்திலெல்லாம் உழைத்து கலைத்து சோர்ந்து பொய் இருக்கும் மக்களை அந்த சோர்வில் இருந்து கொஞ்சம் குஷிபடுத்த கூத்தாடிகள் என்று ஒரு குழு இருப்பார்கள் ... அவர்கள் தினமும் ஒவ்வொரு தெருவில் சென்று அந்த மக்களை குஷிபடுத்தி விட்டு மக்கள் தரும் உணவை உண்டு நாடோடிகள் போல வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் ... அந்த நாடோடிகள் வழி வந்த எச்சமே இன்றைய நடிகர்கள் கூட்டம்.. ஆனால் இன்று நம் நாட்டையே ஒரு ஆட்டு மந்தைகூட்டமாய் மாற்றும் ஒரு சக்தி இவர்கள் கையில்... சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அவ்வளவே ... ஆனால் இன்று பொழுதுபோக்கு என்பதை விட அதை  ஒரு சூதட்டமாய் மாறி போக செய்ததில் இந்த நடிகர்களின் பங்கு ரொம்ப பெரியது ... அவர்கள் அந்த சூதாட்டத்தில் ஜெய்க்க பல இளைங்கர்களின் வாழ்கையை பணயம் வைத்து கொண்டு இருக்கிறார்கள் ...  

இன்று ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி கொண்டு இருக்கும் ஒரு ரசிகன் கண்டிப்பாய் கணினி துறையில் பல லட்சங்களை சம்பாதித்து கொண்டு பொழுதுபோகாமல் தன அபிமான நடிகனின் படத்திற்கு முதல் நாள் சென்று தன மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள வந்தவன் இல்லை ... ஒன்று அவன் ஒரு கலூரி மாணவனாக இருக்க வேண்டும் இல்லை அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் ...  தான் கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காய் நடிகன் திரையில் வீசும் வலைகள் எல்லாம் இந்த ஏமாந்த சோணகிரி மீன்களை நோக்கிதானே...

இந்த தூண்டில் போடும் வேலையை   முதன் முதலில் ஆரம்பித்தது எம்.ஜி.ஆர்தான்... அவர் நன்றாக குளு குளு அறையில் படுத்து கொண்டு தன படங்களில் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர் வர்க்கத்திற்கு தூண்டில் போடுவார் ... அவர் படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைக்கும் பாட்டாளியாகவும் வில்லன் அவன் உழைப்பை சுரண்டும் முதலாளியாகவுமே இருப்பான்... ஆனால் நிஜத்தில் இவர்தான் சினிமா என்னும் பேரில் உழைப்பாளர்களை ஏமாற்றி அவர்களை மூளை சலவை செய்து பணம் சம்பாதித்த முதலாளி ... ஆனால் இவருக்கு கிடைத்த பேரோ பாட்டாளி மக்களின் தலைவன் அவர்களின் அமோக ஆதரவுடன் அரசியலிலும் இறங்கி வெற்றி பெற்று கோடிகளை குவித்தார் ... தமிழ் நாட்டில் மட்டுமே இப்படி எல்லாம் நடக்கும்...  அடுத்து வந்த நடிகர்களும் அந்த வழியிலேயே சென்றார்கள்... அவர்களின் இலக்கு தனக்கு பின்னே ஆட்டுமந்தைகளை போல ஒரு கூட்டம் வேண்டும் ... தான் என்ன செய்தாலும் அவர்கள் அதை ரசிக்க வேண்டும் ... அவர்களை வைத்து நான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும்... அவ்வளவுதான் எந்த நடிகனும் தான் இவ்வளவு சொகுசாக வாழ்வதற்கு காரணமான ரசிகனுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை ... படம் வெளிவரும் நேரத்தில் மட்டுமே ரசிகர்கள் அவர்களுக்கு கடவுள் ... தனக்கு தேவை என்றால் அவர்களை பயன்படுத்திக்கொள்ள தயங்க மாட்டார்கள் ... தன சுயநலத்திற்காக தன எதிரியிடம் சண்டை இட செய்து பின்னர் வேறு  சுயநல காரனத்திர்க்காய் ரசிகனை கழட்டி விட்டு  அதே எதிரியின் காலில் விழும் நடிகர்கள்தான் இங்கே அதிகம்.. ஆனால் அதன்பின்னரும் அந்த ரசிகன் அவர் பின்னால் இருப்பான் அந்த அளவுக்கு மூளை சலவை செய்யும் சக்தி சினிமா என்னும் துறைக்கு உள்ளது ... அதை இவர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர் ...


சினிமாவை சினிமாவாக பார்க்கும் ரசிகர்கள் இங்கே மிகவும் குறைவு .. திரையில் வரும் பிம்பங்களை நிஜ மனிதர்களாய் நினைத்து கொள்ளும் பாமர மனம் கொண்ட ரசிகனே இங்கு அதிகம் ... தன ஆடம்பர வாழ்க்கைக்கு அவனை விலை பேசி விற்று விடுகிறார்கள் இவர்கள் ... நிஜ வாழ்கையில் ஊழலுக்கு எதிராக சண்டை இடும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இங்கு இருக்கிறார்கள் .. ஆனால் அவர்களுக்கு இங்கே யாராவது ரசிகர் மன்றம் ஆரம்பித்து இருக்கிறார்களா? அவர்கள் கஷ்டப்படும் பொழுது அவர்களுக்கு ஆதரவாக குரல் ஓங்கி ஒலிக்குமா நம் நாட்டில் ... அவரை பற்றிய செய்தியை கூட ஒளிபரப்ப ஆள் கிடையாது இங்கு.. ஆனால் ஒரு நடிகன் சினிமா எடுத்து அதை யாராவது தவறாக பேசி விட்டால் உடனே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார் அதை ஏன் தவறாக பேசுகிறாய் என்று பலத்த சத்தம் கேட்கும் ... நொடிக்கு ஒருமுறை அம்மா வாங்க ஐய்யா வாங்க வந்து படத்த பாருங்க என்று டிவீ பெட்டிகள் அலறும்... 


இப்படி எல்லாமே தலைகீழாய் மாறி போனதிர்க்கு மிக மிக முக்கிய காரணம் நாம் நாட்டு மக்களின் உணர்ச்சிகரமான மனப்பான்மை.. எதர்க்காகவும் எளிதில் உணர்ச்சிவசபடும் ஆட்கள் நாம் எல்லாம்... 

ஒரு நடிகரை ரசிப்பதில் தவறேதும் இல்லை .. அதை ஏதோ கொலைகுற்றம் அளவுக்கு  குற்றம் சொல்லுவது கண்டிப்பாய் தவறுதான் .. ஆனால் ரசனை எல்லை மீறி அந்த நடிகரை கடவுளாய் துதிக்கும் ரசிகனை கண்டிப்பாய் குறை  சொல்லித்தான் ஆகவேண்டும் ...எந்த  ஒரு நடிகனும் சும்மா கஷ்டமே இல்லாமல் பணம் சம்பாதித்து விடுவதில்லை ... எனவே அவர்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது ... ஆனால் நடிகர் தன நடிப்பு திறமையால் நம்மை மூன்று மணி நேரம் சந்தோசபடுத்துகிறார் , நாமும் மூன்று மணி நேரம் என்ஜாய் பண்ணுகிறோம்  என்பதோடு நமக்கும் அந்த நடிகனுக்கும் இருக்கும் உறவு முடிந்தால் யாரும் இந்த நடிகனையோ இல்லை ரசிகனையோ  குறை சொல்ல போவதில்லை  , ஆனால் எப்பொழுது ஒரு நடிகன் தன பின்னால் ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது என்று நினைத்து தன சுயநலத்திற்காக அவர்களை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் அந்த நடிகனிடமும் ரசிகனிடமும் சில கேள்விகள் கேட்க்க வேண்டியதாகிறது ... நீ இந்த சமூதாயத்திற்கு என்ன செய்து கிழித்து விட்டாய் என்று அரசியலில் இறங்க போகிறாய்? என்று நடிகனிடமும் உனக்கு அவர் என்ன செய்தது விட்டார் என்று இவருக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறாய்?அவன் பணம் சம்பாதிக்க உன்னை பயன்படுத்துகிறான் என்று புரிந்துகொள்ளகூட முடியாமல் இருக்கும் அடிமுட்டாளா நீ ?  என்று அந்த ரசிகனிடமும் கேட்க வேண்டியதாகிறது.. ஆனால் இதை  ரஜினி ரசிகனை பார்த்து நம் கேட்டால் நம்மை கமல் ரசிகன் என்று சொல்லி வயித்தெரிச்சல்  பார்ட்டி  என்று பட்டம் குத்திவிடுவார்கள் ... கமல் ரசிகனிடம் கேட்டால்  ரஜினி ரசிகன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள் ....  ஒரு குறிப்பிட்ட நடிகன் மேல் இருக்கும் சொந்த வெறுப்பே உன்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நம் மேல் சேரை வாரி இறைக்கிறார்கள்... உனக்கேண்டா இந்த அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறை , நீ இல்லாம போனா இந்த சமூதாயம் என்ன ஆகும் என்று கேலி செய்வார்கள் ... அவர்கள் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்தானே , அதனால்தான் இப்படி யோசிக்காமல் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவார்கள் ... இந்த விசயத்தில் கொஞ்சம்  உணர்வுகளை தள்ளி வைத்து விட்டு சுய அறிவை கொண்டு சித்தித்தால் அவர்களுக்கும் உண்மை புரியும்... 

அதேபோல் படமே பார்க்க கூடாது படங்கள்தான் இன்றைய இளைங்கர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது muthalil சினிமாவை தடை பண்ண வேண்டும் என்று கூருவதும் மிக பெரிய தவறு .. இப்படி இளைங்கனை சீரழிக்கிறது என்று சொல்லி ஒவ்வொன்றாக தடை பண்ண ஆரம்பித்தால் நாம் திரும்பவும் கற்கால மனிதனை போல காட்டுக்குள் ஆடை இல்லாமல் அம்மணமாக வாழ வேண்டியதுதான் ...  எல்லா விசயங்களிலும் நல்லதை போல கேட்டதும் இருக்கத்தான் செய்யும் ... ஆனால் எது நல்லது எது கேட்டது என்று நாம்தான் பகுத்தறிய வேண்டும் ...

நடிகனை நடிகனாய் பார்த்து ரசிக்கலாம்  .. ஆனால் அவனை கடவுளாய் நினைத்து துத்திப்பது கண்டிப்பாய் தவறுதான் இதை என்ன்றைக்கு   நம் இளைங்கர்கள் உணர போகிறார்கள் என்று தெரியவில்லை  

Wednesday, October 13, 2010

ஷங்கர் சகாப்தமா? சறுக்கலா ?


எல்லா திறமையும் படைத்த ஒரு ரோபோ உங்களுக்கு கிடைத்தால் இல்லை நீங்களே அந்த ரோபோவாக மாறினால் என்ன செய்வீர்கள்? 

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனரின் திறமையால் அவரின் கற்பனை வளத்தால் தன் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.. ஸ்ரீதரில் இருந்து இன்றய பாலா வரை அப்படி வித்தியாசம் காட்டி சினிமாவை ஒரு படி மேலே ஏற்றியவர்கள் பலர் ... மக்கள் ரசனை கீழ்தரமாக இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் ஏமாற்றாமல் தன்னால் முடிந்த அளவுக்கு அதை மேம்படுத்த போராடிய இயக்குனர்கள் அவர்கள்.. ஷங்கர் அவர்களில் ஒருவாரா? இல்லை மக்களின் ரசனையில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி தன் சரக்கை போணி பண்ணி கல்லாவை நிரப்பும் வியாபார தந்திரணா?

ஷங்கருக்கு இருக்கும் ஒரே ஒரு திறமை திறமைசாலிகளிடம் இருந்து திறமைகளை வாங்குவது மட்டுமே... அவரின் எல்லா படங்களையும் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புரியும் ... அவரின் எல்லா படங்களிலும் பாடல்கள் மற்றும் வசனங்கள் மிக பெரிய வெற்றிகளை பெற்றிருக்கும்... அந்த இரண்டு விசயங்களையும் எடுத்து விட்டு பார்த்தால் அவர் இயக்கிய அத்துணை படங்களும் குப்பைகளே... இன்னொரு முக்கியமான விசயமாக அவரின் படங்களில் கையாளபடுவது கிராபிக்ஸ்... நிறைய செலவு செய்து அதை எல்லா படங்களிலும் பண்ணுவார்... பார்பதற்கு நன்றாக இருக்கும் .. ஆனால் அது ஏன் பயன்படுத்தபடுகிறது என்பதர்க்கு காரணமே இருக்காது.. எல்லா படங்களிலும் அது வழிய திணிக்கபட்ட ஒரு விசயமாகவே இருக்கும்... உதாரணம் ஜீன்சில் எலும்புக்கூடு ஆடுவது (ஒரு காதல் படத்திர்க்கு இதெல்லாம் தேவையா,,,,) 



பரிட்சை பேப்பரில் எழுத எந்த விஷயமும் இல்லாதவனே கலர் கலராக  படம் போட்டு கஷ்டபட்டு பேப்பர டெக்கரெட் பண்ணி , வாத்தியார ஏமாத்த முயற்சி செய்வான்.. ஒருதடவை வாத்தியார் ஏமாந்து அவன் பண்ணிய அலங்காரத்தில் மயங்கி படிக்காமல் மதிப்பெண் போட்டு விட்டால் அவ்வளவுதான் அடுத்து பரிட்ச்சைக்கு அவன் படிக்கவே மாட்டான் ,பரிட்சை எழுதும் அந்த மூன்று மணிநேரம் மட்டும் கலர் கலரா ஜிகினா வேலை பண்ணி மார்க் எடுத்து விடுவான் ... அந்த பையனை போலத்தான் ஷங்கரும்... வித்தியாசமான கதையோ இல்லை அழுத்தமான காட்சி அமைப்புகளோ அவர் படங்களில் இருக்காது … அதற்கெல்லாம் மிக நுணுக்கமான சமுதாய பார்வை , படைப்பு திறன் நிறைய வேண்டும் ... இரண்டும் அவரிடம் அறவே கிடையாது என்பதர்க்கு அவரின் மொன்னை படங்களே மிக பெரிய சாட்சி...

சிறிய உதாரணமாக ஒரு படம் எடுத்து கொள்ளுவோம் ... அவர் இயக்கிய பாய்ஸ் என்று ஒரு படம்... அந்த படம் வெளிவருவதர்க்கு முன் இந்த படம் இன்றய இளைங்கர்களின் வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்க போகிற படம் , இந்த படம் வந்த பின்னர் இளைய சமூதாயத்தில் மிக பெரிய மாற்றம் வர போகிறது என்றெல்லாம் ஷங்கர் பேட்டி அளித்தார் ... ஆனால் புது வசந்தம் , உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று விக்ரமன் கையேந்தி பவனில் தயாரித்த இட்லியை கொஞ்சம் கூட மாற்றாமல் கொஞ்சம் ஆபாசம் , கொஞ்சம் கிராபிக்ஸ் , A.R. ரகுமான் என்று காஸ்ட்லியான சட்னிகளை கூட வைத்து பைவ்ஸ்டார் ஹோட்டேல் "புத்தம் புது" ரேசிப்பி என்று விற்க முயன்றார்... அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமெண்ட் காட்சியாகட்டும் ஒரே பாடலில் ஓகோவென்று வளர்வதாக்கட்டும் சும்மா விக்ரமனையே மிஞ்சி இருப்பார்... இதே போன்ற ஒரு கருவை கொண்டு சமீபத்தில் வந்த படம் சுப்ரமணியபுரம் .. இதில் எந்த பிரமாண்டமும் கிடையாது... ஆனால் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாய் நம் மனதில் பதிய வைத்த காட்சி அமைப்புகள் ஏராளம்... ஒரு இயக்குனரின் வெற்றியே இதில்தான் உள்ளது...

பருத்தி வீரனும், சேதுவும் அழுத்தமாய் நம் மனதில் பதிந்ததை போல சங்கரால் தன் படங்களை அழுத்தம் திருத்தமாய் நம் மனதில் பதிய வைக்க முடியாது .. சுஜாதாவின் பேனாவும், கொஞ்சம் கணினி அறிவும், அதிகமான நேரமும் , தேவையான காசும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் பிரமாண்டத்தை கொடுத்து விடலாம்... ஆனால் சேது, பருத்திவீரன் ,சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் எடுக்க வாழ்க்கையை பற்றிய புரிதல் வேண்டும்... அந்த புரிதலை செல்லுலோய்டில் அப்படியே பிரதிபலிக்க வைக்க , அதை ரசிகனின் மனதில் அப்பட்டமாய் பதிய வைக்க படைப்பு திறமை வேண்டும்... அது யாருக்கு இருக்கிறதோ அவன்தான் உண்மையான படைப்பாளி... உண்மை என்னவென்றால் அதை போன்ற படைப்புகளை சங்கரால் தர முடியவில்லை என்பதுதான்...


அவரை சரித்திரம் என்று சொல்ல முடியாமல் போனதிற்கு இன்னொரு காரணம் அவர் படங்கள் முழுவதும் ஒரே டெம்ப்ளேட்டில்தான் இருக்கும்... முதல் பாதியில் ஹீரோ சட்ட விரோதமான காரியங்கள் (பெரும்பாலும் கொலை) செய்துகொண்டு இருப்பான் .. ஆனால் அவன் குடும்பத்தினர்க்கே அவன் செய்யும் கொலைகள் அடிக்கும் கொள்ளைகள் எல்லாம் தெரியாது ... அவர்கள் முன் அம்மாஞ்சியாக நடந்து கொள்ளுவான்..தொடர்ந்து நடக்கும் இந்த அசம்பாவிதங்களை எல்லாம் ஒரு போலீஸ் ஆபீசர் விசாரணை செய்து வருவார்.. ஒரு கட்டதில் ஹீரோ அவரிடம் மாட்டி கொள்ளுவான் ... அப்புறம் பிளாஷ்பெக் வரும் ஏன் ஹீரோ இதையெல்லாம் செய்கிறான் என்பதர்க்கான விளக்கம் அதில் இருக்கும்... ஹீரோ போலீசிடம் இருந்து தப்பி தான் செய்ய நினைத்த காரியத்தை செய்து விடுவான் .. இதில் எல்லா படங்களிலும் ஹீரோ அந்த தவறுகள் செய்வது சமூகத்தை திருத்துவதற்காக ... அவன் அப்படி செய்ய காரணம் சமூகம் செய்யும் தவறுகளால் அவன் பாதிக்கபட்டு இருப்பான்... அதில் வெகுண்டெழுந்து தான் பாதிக்கப்பட்டதை போல இனி யாரும் பாதிக்கப்பட கூடாது என்று தவறு செய்பவர்களை எல்லாம் போட்டு தள்ளுவார்... (இதில் காமெடி என்னவென்றால் ஹீரோ அரசியல்வாதிகளால் பாதிக்கபட்டிருந்தால் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்ய மாட்டார் படம் முழுவதும் அவர் டார்கெட் அரசியல்வாதிகள் mattume .. அதே போல லஞ்சம் வாங்குபவர்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய்ய மாட்டார்.. இப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோவை போல வேலை செய்து கொண்டிருப்பார்) கடைசியில் சமூகம் அவனால் மாற்றபட்டு இருக்கும் .... இது ஒருவகையான டெம்ப்லெட்...


இன்னொரு வைகையான டெம்ப்ளேட் ஹீரோ கஷ்டபட்டு ஒரு விஷ்யம் செய்திருப்பான் ... அதை சமூக முன்னேற்றதிர்க்கு பயன்படுத்த நினைப்பான்... ஆனால் அதர்க்கு அவனுடய துறையிலேயே இருக்கும் இன்னொரு பெரிய மனிதரின் துணை தேவைப்படும் .. ஆனால் அந்த பெரிய மனிதர் ஹீரோவை போல நல்லவனாக இருக்க மாட்டார் ... ஹீரோ நினைத்தது நடந்தால் தான் நினைத்தது நடக்காது என்பதால் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டு இருப்பார் வில்லன் ... ஒருகட்டத்தில் ஹீரோ வில்லனால் தான் சம்பாத்தித்த அனைத்தையும் இழந்து ஒன்றும் இல்லாமல் நிற்பார் (சிவாஜியில்  சம்பாத்தித்த பணம் , எந்திரனில் பத்து வருடம் கஷ்டப்பட்டு செய்த ரோபோ).. அப்புறம் மீண்டும் அதிரடியாய் வளர்ந்து வில்லனை ஜெய்பார்.. 


எனக்கு தெரிந்து இப்படி ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுப்பவர்கள் தமிழ் நாட்டில் ரெண்டு பேர் மட்டுமே ஒருவர் இந்த சங்கர் இன்னொருவர் விக்ரமன் ... ஆனால் விக்ரமனை காமெடி பீஸாக பார்க்கும் நம் ஆட்கள் ஷங்கரை அறிவு ஜீவியாக பார்ப்பது கொடுமை ... 

அதே போல சங்கருக்கு எதையும் நறுக்கென்று சொல்ல தெரியாது ... பத்து காட்சிகளில் புரியவைக்க வேண்டிய விசயத்தை ஒரே வசனத்தில் புரிய வைத்து விடலாம்... (இயக்குனர் பாலா வசனமே இல்லாமல் ஒரே ஒரு ஷாட்டில் தன மொத்த கதையையும் புரியவைத்து விடுவார்)... ஆனால் ஷங்கர் இந்த விசயத்தில் பூஜ்யம் ... அவர் படங்களில் எதையுமே ரொம்ப நீட்டி முழக்கிதான் சொல்லுவார்... சமீபத்திய எந்திரன்கூட இதற்க்கு சிறந்த உதாரணம் அதனால்தான் அவர் படங்களில் பக்கம் பக்கமாக வசனம் இருக்கும்... நல்லவேளை இதுநாள் வரை சுஜாதா இருந்தார் இல்லை என்றாள் ஏதாவது ஒரு மொக்கை வசனகர்த்தாவுடன் இணைந்து நம்மை சாகடித்திருப்பார்...

நூறு மனிதனின் வேகம் ஆயிரம் கணினியின் அறிவும் உடைய ரோபோ மனிதனை போல தானே சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்... யோசிக்க ஆரம்பித்தாலே சும்மா பயங்கரமா இருக்குல ... நம்ம ஷங்கரிடம் கேட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகான பெண்ணை பார்த்து காதல் செய்யும் ,அந்த பெண்ணிற்காக சண்டை போடும் ,கொசு பிடிக்கும் என்பார்... இதை காமெடியாக சொல்லாமல் ரொம்ப சீரியஸா வேறு சொல்லி காமெடி பண்ணி இருப்பார்...இதுதான் அவரின் படைப்பு திறமை ... அதுவும் அவரின் கனவு படைப்பு வேறு அது ... இவரை எப்படி சரித்திரம் என்று சொல்ல முடியும்... ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இப்படிதானே... அவரும் பிரமாண்டங்களை மட்டும்தானே படமாக எடுக்கிறார் அவரை உலகமே கொண்டாடுதே .. ஒரு தமிழன் அவரை போல நம் நாட்டில் படம் எடுக்க முயற்சி செய்தால் பாராட்டாமல் குத்தம் சொல்லுகிறார்கள் என்று அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் "schindler's list" DVD அனுப்பி வைக்கிறேன் பாத்துட்டு அவரை ஏன் உலகமே கொண்டாடுதுன்னு சொல்லுங்க.... அதை போன்ற ஒரு படம் வாழ்நாள் முழுவதும் யோசித்தாலும் இவரால் எடுக்க முடியுமா?

Wednesday, October 6, 2010

மாற்று திறனாளிகளும் வல்லரசு கனவும் ....







நேற்று ஒரு இணையதளத்தில் ஒரு புள்ளி விபரம் காண நேர்ந்தது.. இந்தியாவில் இருக்கும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை ஆஸ்த்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாம்... சென்ற மே மாதம் வரையிலான கணக்கெடுப்பில் இந்தியாவில் இருக்கும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை ரெண்டு கோடியே அம்பது லட்சமாம் ... ஆஸ்த்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே ரெண்டு கோடியே ஐந்து லட்சம்தானாம்...

ஏன்  இந்த பிரமாண்ட எண்ணிக்கை? காரணம் மிக எளிது , நாம் நாட்டில் கருவில் உருவாகும் மாற்று திறனாளிகள் மிக மிக குறைவுதான் .. நம்மால் உருவாக்கப்படும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கையே இந்த பிரமாண்டமான எண்ணிக்கைக்கு காரணம்...


ஒரு குழந்தை இயற்கையாக மாற்று திறனுடன் பிறப்பதர்க்கு காரணம் அதன் ஜீனில் உருவாகும் குளறுபடிகளே ... இது பரம்பரை குறை... இதை நம்மால் தடுக்கவே முடியாது ...ஆனால் நன்றாக எந்த குறையும் இல்லாமல் கருவில் உருவாகும் குழந்தைகள் மாற்று திறனுடன் பிறப்பதர்க்கு மிக முக்கிய காரணம் நாம் நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் போவதே... கருவில் இருக்கும் குழந்தைகள் நல்ல வளர்ச்சி பெற சில ஊட்டசத்துக்கள் அவசியம் தேவை... இல்லாமல் போனால் ஏதாவது ஒரு உறுப்பின் வளர்ச்சியில் குறை கண்டிப்பாய் உருவாகும்.. நம்  கிராமப்புற பெண்களுக்கு அந்த ஊட்டசத்துக்கள் இன்று கிடைக்கின்றனவா? இல்லை அதை பற்றிய விழிப்புணர்ச்சியாவது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? கண்டிப்பாக கிடையாது... அரசாங்கம் இன்று வீட்டுக்கு வீடு இலவசமாக டீவீ , கேஸ் என்று கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறது... அதற்க்கு பதில் ஒவ்வொரு கிராமத்திலும் முடியவில்லை என்றாள் ஒரு ஐந்து அல்லது பத்து கிராமங்களுக்கு சேர்த்து ஒரு சிறிய அரசு மருத்துவமனையை கட்டி  கொடுக்கலாமே.. மாட்டார்கள் இதனால் அவர்களுக்கு என்ன  லாபம்? 

சரி அந்த பெண்கள் எப்படியாவது கஷ்டபட்டு பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றுக்குள் எந்த குறையும் இல்லாமல்  வளர்த்து பிரசவ வலி வரும் நேரத்தில் பிரசவம் பார்க்க எந்த வசதியும் இல்லாமல் அவர்களாகவே பிரசவம் பார்க்க வேண்டி வரும் ... நம் அரசாங்கம்தான் அதற்க்கும் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லையே.. இன்றய தேதியில் முறையான மருத்துவ வசதிகளுடன் பிரசவம் பார்த்தாலே நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டி வருகிறது... இதில் எந்த வசதியும் இல்லாமல் அவர்களாகவே பிரசவம் பார்த்தால் என்ன நடக்கும் ... பாதிக்கும் மேல் குழந்தைகள் ஏதாவது குறையுடனே பிறக்கும்... இதுவும் ஒரு மிக பெரிய காரணம் ...


அடுத்து ஒரு காரணம் காசுக்காக குழந்தைகளை கடத்தி அவர்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்... நான் கடவுள் படத்திலேயே பார்த்திருப்பீர்கள் இதை ... நாம் தெருவிலோ இல்லை பேருந்து நிலையங்களிலோ பார்க்கும் பிச்சை எடுக்கும் குழந்தை உண்மையில் ஏதாவது பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்... சில சுயநல மிருங்களின் பணத்தாசைக்கு பலியாகி நம் நாட்டின் அவமானசின்னமாகி விட்டார்கள்...

அடுத்து நம் நாட்டில் நடக்கும் அபரிமிதமான விபத்துக்கள்... தண்ணி அடித்து விட்டு போதையில் வண்டி ஓட்டும் மூளை இல்லாதவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்... இவர்களால் அன்றாடம் நடக்கும் விபத்துகளால் கை கால்களை இழந்து ஊனமாகும் அப்பாவிகள் அதிகம் ... குறைந்த பட்ச தனிமனித ஒழுக்கம்கூட  இல்லாமல் போனதே இதற்க்கு காரணம் ... அது சரி அரசாங்கமே குடிக்க பாரும் நடத்தி அதில் வண்டி மற்றும் கார் நிறுத்த டோக்கணும் தரும் ஒரே நாடு எனக்கு தெரிந்து நாம் வாழும் இந்த பாரத தேசம் மட்டுமே..


நம் நாட்டில் இருக்கும் சாலைகளின் உலகதரம் அனைவரும் அறிந்ததே... எனக்கு சென்னை , பெங்களூர் போன்ற பெரிய பெரிய நகரங்களில் வண்டி ஓட்டி  பழக்கம் இல்லை .. நான் சொல்வது தென்மாவட்டங்களில் இருக்கும் சாலைகளின் நிலை... புதியதாக போட்டு இருக்கும் தார் சாலைகள் இரண்டு நாள் மழை பெய்தால் பள்ளிளுத்துவிடும்... நேற்று சாலை நன்றாகத்தானே இருந்தது என்று நீங்கள் வண்டியை கொஞ்சம் வேகமாக ஓட்டினாலும் அதோ கதிதான் .. நேற்று உங்களுக்கே தெரியாமல் பெய்த மழையில்  உருவாகி இருக்கும் .பள்ளத்தில்   விழுந்து கைகால்களை ஒடித்து கொள்ளவேண்டியதுதான்...


மழை பெய்யாத கோடை காலங்களில் சாலை முழுவதும் ஒரே தூசி படலம்தான்.. நீங்கள் வண்டியில் போகும் பொழுது உங்கள் முன்னாள் ஒரு பேருந்தோ இல்லை லாரியோ சென்று நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் அதன் பின்னால் சென்றாள் போதும் உங்களுக்கு ஆஸ்த்துமா , சைனஸ் போன்ற மூச்சு தொந்தரவுகள் இலவசமாக கிடைக்கும் ... எங்கும் தூசி எதிலும் தூசி மயம்தான் ...    


நம் சாலைகள் எங்கும் நிறைந்திருக்கும் வேகதடைகள் இன்னொரு முக்கிய காரணம் .. வேகதடைகள் விபத்தை குறைக்கதான் என்ற விதி தழைகீலாய் போனது நம் நாட்டில்தான்... நான் தினமும் அறுபது கிலோமீட்டர் வண்டியில்தான் சென்று வருகிறேன் ... அந்த தூரத்திர்க்குல் நான் கடக்க வேண்டிய வேகத்தடைகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேல் ... அதுவும் ஒவ்வொரு தடையும் ஒரு சின்ன மலை போல இருக்கும் .. அதில் வண்டியை ஏற்றி இறக்குவதே பெரிய சர்க்கஸ் சாகசம்தான்...  தினமும் புதுசு புதுசாக சில வேகதடைகள் முலைக்கும்..  இரவு நேரங்களில் இந்த வேகதடைகள் கண்ணுக்கே தெரியாது ... அதில் வெள்ளை  நிற கொடும் இருக்காது... சிவப்பு நிற சிக்னலும் இருக்காது ... வேகத்தடைக்கு நூறு மீட்டர் முன்னாள் ஒரு அறிவிப்பு போர்டும் இருக்காது ... இரவு நேரத்தில் புதியதாக ஒருவன் அந்த ரூட்டில் வந்தால் அவ்வளவுதான் செத்தான் ... அவன் போகும் வேகத்திர்க்கு அந்த குட்டி மலையில் மோதினால் சிதறு தேங்காய்தான்...


ரோட்டுல நடந்து போறதுல நம்ம ஊர் மக்கள மிஞ்ச ஆளே கெடையாது ...  ஹை வேய்ஸ்ல நடுவுள ஒரு சின்ன கிராமம் வந்தா ,அந்த ஊருகாரன் பண்ற அளப்பறை தாங்க முடியாது ..  அவன் ஊர் வழியா  ஒரு ரோடு போனால் அத ஏதோ அவனே அவங்க அப்பன் காச செலவு பண்ணி போட்ட மாதிரி தெனாவெட்டா நடு ரோட்டுல நடந்து போவாணுக.. நாம என்னதான் ஹாரன் அடிச்சாலும் ஒரு இஞ்ச்கூட நகர மாட்டாணுக்க .. நாமதான் பிரேக் பிடிச்சி வண்டிய   திருப்பி நகர்ந்து போகணும் ... இப்படி தெனாவெட்டா நடந்து போரவங்க மேல ஏதாவது ஒரு வண்டிக்காரன் தெரியாம மோதிட்டான் அவ்ளோதான் ... எங்க ஊருள எல்லா வண்டிக்காரனும் வேகமா போரான் , இதனால இங்க நிறைய விபத்துக்கள் நடக்குது... இங்க ஒரு வேகத்தடை போட்டே ஆகனும்னு சாலை மறியல் போராட்டத்துல இறங்கிடுவாணுக... அதிகாரிகளும் பிரச்சனை முடிஞ்சா போதும்ன்னு ஒன்னுக்கு ரெண்டா அவசர அவசரமா வேகத்தடை போட்டு கொடுக்க .. அன்னைக்கு ராத்திரியே வேகதடை இருக்கிறது தெரியாம பைக்காரன் எவனாவது வேகமா வந்து ரத்தகளரியா விழுந்து கெடப்பான்...

இதுபோதாதுண்ணு நடு ரோட்டுல நாய் , எருமைண்ணு சுதந்திரமா நடமாட வீட்டிடுவாணுக்க... நானே ஒருமுறை நைட் நேரம் ஒரு கறுப்பு நாய் மேல தெரியாம  மோதி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில கெடந்தேன் ...  நான் மோதின நேரம் எதிரில்  எந்த பெரிய வண்டியும் வரவில்லை... இல்லைனா விழுந்த வேகத்துக்கு அந்த வண்டி ஏறி நான் சட்னி ஆகி இருந்திருப்பேன்... இப்படி நாய் மேல மோதி பரலோகம் போனவங்க நிறைய பேரு நம்ம ஊருள...  


இது தவிர்த்து தீவிரவாதம் , சாதி கலவரம் என்று வாரம் ஒருமுறை எங்காவது நடந்தேறும் வன்முறைகள்... ஒவ்வொரு கலவரத்திலும் சொல்லபடும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் மாற்று திறனாளிகள் எண்ணிக்கையில் சேர்ந்து விடுவார்கள்... 

இப்படி எந்த நிமிடமும் நாம் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அந்த இரண்டு கோடியே அம்பது லட்சம் எண்ணிக்கையில் ஒன்று கூடி விடக்கூடிய அபாயம் இருக்கிறது... நாம பிறந்ததில் இருந்து சாகுற வரைக்கும் மாற்று திறனாளியா மாறுவதர்க்கு நிறைய வாய்ப்புகள் நம் நாட்டில் ... இந்த லட்சணதில் நம்ம நாடு வல்லரசா ஆக போகுதுண்ணு கனவு வேற...  முதலில் நாட்டு மக்களுக்கு அடிப்படை  பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் பிறகு காணலாம் வல்லரசு கனவை...



Tuesday, October 5, 2010

தலையின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்...

தல கிளம்பிருச்சி ... என்னை போன்ற தல ரசிகனுக்கெல்லாம் ரொம்ப நாளா இருந்த  ஏக்கம் இன்னும் கொஞ்ச நாளில் தீர போகிறது .. ஆம் தல மங்காத்தா ஆட்டத்தை  ஆரம்பிக்க போகிறார்...  என்னதான் தல கடைசி ரெண்டு படத்துல சொதப்பி இருந்தாலும் இந்த விஷயத்தை கேட்ட வுடனே எனக்கு ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம் ... பின்ன இனிமேல் அடிக்கடி புதுசு புதுசா தல போஸ்டர் வெளிய வரும் ... கொஞ்ச நாளில் பாடல் வெளி வந்து விடும் ... அப்பறம் என்ன படம்தான் ... இப்பவே எனக்கு மங்காத்தா படம் எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லை இல்லை  வெறி வந்து விட்டது ...  இனி ஒவ்வொரு போஸ்டரா வெளிவிட்டு என் எதிர்பார்ப்பை எகிற வைத்து விடுவார்கள் ...  படம் எப்படி இருந்தாலும் என் எதிர்பார்ப்பு வீணாகாது ... ஏன் என்றால் எனக்கு படத்துல தல மட்டும் இருந்தா போதும் ... வேறு எதுவும் தேவை இல்லை ... நான் அப்படிப்பட்ட ஒரு அஜித் வெறியன் ... எங்க கிராமத்தில் முதல் முதலில் அஜித் ரசிகனாக ஆகியது நான்தான் .. இன்று ஒரு பெரிய கூட்டமே அஜித் ரசிகனாக இருக்கிறது .. காரணம் நான்தான் ... அமர்க்களம் வந்த நேரம் அதன் பிறகு ஒவ்வொரு அஜித் படம் வெளி வரும் பொழுது முதல் நாளே  என் காசை செலவு செய்து குறைந்தது நான்கு பேரையாவது படம் பார்க்க கூட்டி செல்லுவேன் ... அதில் இரண்டு பேராவது அஜித்திற்கு வரும் கூட்டத்தை பார்த்து வியந்து அவர் ரசிகனாக மாறி விடுவார்கள் ... இப்படியே ஒன்று இரண்டானது இரண்டு நான்கானது ... நான்கு எட்டாகி இன்று என் கிராமத்தில் இருக்கும் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட கல்யாணமாகாத பசங்களில் பாதி பேர் தல ரசிகர்கள்தான் ...   தல பிறந்தநாள், இல்லை படம் வெளி வரும் நாளில் எல்லாம் குழாய் செட் கட்டி இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் எல்லாம் என்னால் எங்கள் ஊரில் உருவாகி விட்டார்கள் ...   அஜித் என்றால் எங்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் ... இத ஏன் இப்ப இங்க சொல்லுறன்னு கேக்கிறீங்களா... தலையோட மங்காத்தா official poster வெளி வந்து விட்டது... பாருங்க பாஸ் ஸ்டில்ல .. 


சும்மா நச்சுன்னு இருக்குள்ள... என்னதான் சொல்லுங்க தல தலதான்... தல ரசிகனுக்கெல்லாம் மண்டையில் வெங்காயம்தான் இருக்குன்னு சொன்ன சில பெருங்காயங்கள் எல்லாம் வயிறெரிய போகிற நாள் வெகு தொலைவில் இல்லை ... 

(அப்புறம் இந்த பதிவை படித்து விட்டு நீயெல்லாம் ஒரு மனுசனா? ஒரு நடிகனை இப்படி கண்மூடித்தனமாக ரசிக்கிராயே? அறிவுகெட்ட ஜென்மம் ... உன்னை மாதிரி ஆட்களால்தான் இந்த சமூகம் இப்படி முன்னேறாமல் இருக்கு ... என்று சமூக கண்ணோட்டத்தோடு வரும் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..)   


(அதேபோல் மறுபடியும் கன்ன(gun) தூக்கிட்டாரா உங்க ஆளு ... அவருக்கு வேறு எதுவுமே தெரியாதா என்கிற ரீதியில் வரும் பின்னூட்டங்களும் வரவேற்க்கபடுகின்றன )

Saturday, October 2, 2010

எந்திரன் - ரசிகனல்லாதவனின் பார்வை

மக்கா இந்த படத்துல கடைசி இருபது நிமிஷம் சும்மா ரஜினி பட்டைய கெளப்பி இருப்பாரு அப்படின்னு சொன்னா அது ரொம்ப சாதாரண வார்த்தை ... ஒரு சீன ரோபோவோட ரோபோவா கலந்துட்ட வசீகரன ரோபோ ரஜினி கண்டுபிடிக்க ஒவ்வொரு ரோபோவா கத்திய வச்சி தட்டிகிட்டே வருவார் ...ஒரு ரோபோ மேல சந்தேகப்பட்டு அது தலைய வெட்டும்போது  அதோட டாப் கழண்டு  உள்ள இருக்கிற circuit தெரியும் .. அப்ப ஐஸ்வர்யாராய பாத்து சும்மா ஸ்டைலா ரோபோ அப்படின்னு சொல்லுவாரு பாருங்க (அதேதான் டிரைலர்ல  வருமே அந்த வசனம்தான் ) சும்மா தியேட்டர் அதிருச்சி... இப்படி கிளைமாக்ஸ் முழுசா ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் ... மூன்று முகம் நடை ,அதே ஸ்டைல் என்று அசத்தி இருப்பார் ரஜினி ... 

அதே போல் முதல் பாதியில் நல்ல புள்ளையாக அதே ரோபோவில் காமெடியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்... ஐஸ் பிட் அடிக்க உதவி செய்து பின்னர் அவர் ஆசிரியர்களிடம் அப்பாவியாக அவரை  மாட்டி விடும் சீன  , முதன் முதலில் கோயில் திருவிழாவில் அடிக்க வரும் ரவுடிகள் கையில் இருக்கும் ஆயுதங்கள்  அனைத்தையும் மேக்னட் சக்தி மூலம் தன பக்கம் கவர்ந்து இழுக்கும் காட்சி என்று வெடி சிரிப்பு வர வைக்கும் காட்சிகள் ஏராளம் ... சில காட்சிகளில் டைமிங் காமெடியிலும் அசத்துகிறார்.... படத்தின் ஹீரோ இந்த ரோபோ ரஜினிதான் ... படத்தில் வரும் ஒரே ஒரு பஞ்ச வசனமும் இந்த ரோபோ ரஜினிக்குதான் 

இன்னொரு ரஜினி அடக்கி வாசிக்கிறார் .. படத்தில் அவருக்கு அறிமுக பாடளும் இல்லை சண்டைகாட்சிகளும் இல்லை பஞ்ச வசனமும் இல்லை .. தீவிர ரஜினி ரசிகர்களை இது சற்று ஏமாற்றம் அடைய செய்திருக்கும்... கடைசி சண்டையில்கூட ரோபோவை கணினி தொழில்நுட்பம் கொண்டே வீழ்த்துகிறார் ...     
 படம் முழுவதும் இளமையாக தெரிகிறார் ... சில காட்சிகளில் கமலுடன் போட்டி போடும் இளமை அவர் முகத்தில் ... எல்லா புகழும் சங்கருக்கே...

ஐஸ் அழகு பதுமையாக வந்து போகிறார் ... சில காட்சிகளில் கொள்ளை அழகு சில காட்சிகளில் கிழடு தட்டிய முகம் என்று கலவையாக இருக்கிறார் ... இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் வரும் இரண்டாவது கெட்டப்பில் அள்ளுகிறார்   ... அதேபோல் பிறந்தநாள் பார்ட்டி காஸ்டியும் அவர் அழகை எடுப்பாக காட்டுகிறது ... ஆனால் படத்தில் இவர் நடிக்க பெரியதாய் ஸ்கோப் இல்லை  .. சிவாஜியில் ஸ்ரேயா பண்ணிய ரோல் அளவுக்குகூட இவர் ரோலில் நடிப்பிற்கான வாய்ப்பு இல்லை.... ஒரு வேளை ரோபோவிற்கு இவர் மேல் காதல் வந்தால் மட்டுமே  கதையின் நம்பகத்தன்மை கூடும் என்ற காரணத்திற்க்காக ஷங்கர் இவரை தேர்வு செய்திருப்பாரோ?

ஹீரோ ரோபோவை ஆண்டி ஹீரோ ரோபோவாக மாற்றுவதோடு முடிந்து விடுகிறது வில்லனின் வேலை... நம் ஊர் வில்லன்கள் யாரும் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்கம் சம்பாதித்து இருக்க மாட்டார்கள் ... அவ்வளவு வீக்கான வில்லன் ... 

ரகுமான் , சாபு சிறில் , ரத்தினவேலு  இவர்களின் பங்களிப்பு நீங்கள் இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும் ...கடைசி பதினைந்து நிமிட பிரமாண்டத்திற்கு ரத்தினவேளுவும் ஒரு காரணம் ... மனிதர் மிரட்டி இருப்பார்...

படத்தின் இரண்டாம்பாதியின்   முதல் முக்கால்மணிநேரம் படத்தின் பெரிய மைனஸ்... ஷங்கர் தன hi-tech  செண்டிமெண்ட் காட்சிகளால்  நம் நெஞ்சை ஈரமாக்கி கொண்டே இருப்பார் ... முதல் பாதியில் வரும் பிரசவம் பார்க்கும் ஸீன்., தீபிடிக்கும் கட்டிடத்தில் spider  man போல ரோபோ ரஜினி பறந்து பறந்து மக்களை காப்பாற்றும் காட்சி இரண்டாம் பாதியில் . அந்த கொசு காட்சி ... கலாபவன் மணி வரும் காட்சி என்று நம் பொறுமையை சோதிக்கும் காட்சிகளும் நிறைய உண்டு படத்தில் ...  படத்தின் இறுதியில் ரோபோ ரஜினி திருந்துவது , பின்னர் அதை எல்லார் முன்னிலையிலும் dis assemble செய்வது(மற்ற இரட்டை வேட படங்களில்  ஒரு ஹீரோ சாவதை போல ) என்று புளித்த மாவு காட்சிகளை தவிர்த்திருக்கலாம் ..       

கடைசி இருபது  நிமிடம்  கலக்கல் ...  மொத்த படத்தையும் விட இந்த இருபது நிமிடம் படமாக்கவே அதிகம் நேரம் செலவாகி இருக்கும் என்று எண்ணுகிறேன் ...

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் .. ரோபோவிற்கு மனித உணர்ச்சிகள் எப்படி வந்தது என்பதை பற்றி சரியாக சொல்லவில்லை என்பதால் அதற்க்கு ஐஸ் மேல் வரும் காதலை முழுவதுமாக ஏற்று கொள்ள முடியவில்லை ... ஆனால் இவை எல்லாம் ரஜினி பண்ணும் வில்லதனத்திற்கு முன்னால் காணாமல் போய் விடுகிறது ...

கதாநாயகி மேல் காதல் கொள்ளும் வில்லன் அவளை கடத்துகிறான் அவளை ஹீரோ எவ்வாறு காப்பாற்றுகிறான் என்ற பழைய கதையை ரோபோடிக்ஸ் என்னும் புது தொழில்நுட்பத்தில் தந்திருக்கிறார் சங்கர் ... அவர் தன முயற்ச்சியில் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் ரஜினி தன நடிப்பால் அவரையும் தன்னோடு சேர்த்து சிகரத்தில் ஏற்றி இருக்கிறார் ..

இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக குஷிபடுத்தும்  .. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு படையெடுக்க போவது உறுதி .. கலாநிதி காட்டில் அடைமழைதான் ...
எந்திரன் - தமிழ் சினிமாவின் புது முயற்சி ... இன்னும் கொஞ்சம் ஷங்கர் தன் செண்டிமெண்ட் தனத்தை விட்டு கொடுத்திருந்தால் மனதார பாராட்டலாம்   


LinkWithin

Related Posts with Thumbnails