Followers

Copyright

QRCode

Tuesday, November 15, 2011

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா (ஒரு டாஸ்மாக் பதிவு)



இந்த உலகத்தில் மட்டும் இல்லை இந்த அண்டவீதியிலேயே  வேற எங்கெங்க  எல்லாம் மனித இனம் இருக்கோ அங்க எல்லாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கிற  பாவப்பட்ட ஆம்பளைகளுக்கு (அதாங்க கல்யாணம் பண்ணுண ஜீவன்கள்) கிடைக்க கூடிய அதிகபடியான சந்தோஷம் அவன் மனைவி தனியா அவங்க அம்மா வீட்டுக்கு போறதுதான்... இந்த சந்தோஷம் அடிக்கடி கிடைக்கணும்கிறதுக்காகவே  அவனோட மாமனாருக்கோ மாமியாருக்கோ வருஷம் முழுக்க நெஞ்சு வலி வரணும்னு வேண்டிக்கிற பாவப்பட்ட பல ஜீவன்கள்  இப்பவும் வீட்டுக்கு வீடு வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கு .... என்  நண்பன் ஒருத்தன் இருக்கான் , அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகுது ... கல்யாணதுக்கு முன்னாடி எல்லாம் தினமும் சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு போறவன் , இப்ப வாரத்துக்கு ஒருக்கா கூட சரக்கு அடிக்கமுடியாமல் ரொம்ப திண்டாடுறான்  ... காரணம்  ஒருதடவை சரக்கு அடிச்சா ஒரு வாரத்துக்கு மேட்டர் கிடையாதுன்னு அவன் பொண்டாட்டி போட்ட புது ரூல்  ... ஒரு கையில சரக்கையும் , இன்னொரு கையில மலையாள பிட்டு பட சிடியையும் காட்டி   ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் கிடைக்கும்னு சொன்னா , மலையாள பிட்டுக்கே முன்னுரிமை கொடுக்கும் வீக்கான சமூகம்  இந்த   ஆண் சமூகம்  ... கல்யாணத்திற்க்கு பிறகு சரக்கும் பிட்டும் சேர்ந்து கிடைப்பது மிக அபூர்வம் ... சரக்கடித்து கொண்டே பிட்டு பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் எல்லாம் அவர்கள் மனைவிக்கு அவர்கள் வாழும் தெரு முனையில் சிலையே வைக்கலாம் ... கண்ணகி போல அவர்களும் அபூர்வ பிறவிகள்தான்...

போர் அடித்தால் பீர் அடிக்கும் மற தமிழர்கள் நாம்.... நாடே மழை தண்ணியில் மிதந்த போதெல்லாம் மக்களை காக்க என்ன செய்யலாம் என்று கூடி ஆலோசிக்காமல் , டாஸ்மாக்கில் தண்ணி விற்பனை குறைந்து விட்டால் , உடனே அமைச்சரவையை கூட்டி ஊருக்கு ஊர் உயர் ரக மதுக்கடைகளை திறக்கும் குடியரசு நம் அரசு... இப்படி பட்ட ஒரு சமூகத்தில் வாழும் ஒருவன் சரக்கு அடிக்க வழியில்லாமல் அவதிபடுவது என்பது காதலர் தினத்தன்று மெரினா பீச்சில் காதலி இல்லாமல் தனியாக சுற்றுவதை போல கொடுமையானது  ...  இன்று திருமணம் ஆன பல ஆண்கள் இந்த கொடுமையை தாங்கிக்கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காத கலைஞரை போல டாஸ்மாக்கை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் கனக்கிறது , இதயம் வலிக்கிறது... சச்சினுக்கு நூறாவது சதம் எப்படியோ அப்படித்தான் எங்களுக்கு சரக்கும் எவ்வளவு முயன்றும் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது...




இப்படி வாழ்வின் பெரும் சுகத்தை இழந்து விட்டு அடிமைகளாய் வாழும் எங்களுக்கு கிடைக்கும் தற்காலிக விடுதலைதான் பொண்டாட்டி ஊருக்கு போவது ... பக்கத்து ஊரில் பெண் எடுத்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கடி கிடைக்கும் ஆனால் நீண்ட நேரம் நீடிக்காது தேமுதிகா வின் வெற்றியை போல , காலையில் போகும் மனைவி மாலையில் திரும்பி விடுவாள்... ஆனால் என்னை போன்ற தொலைதூரத்தில் பெண் எடுத்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் எப்பொழுதாவதுதான் அடிக்கும் , ஆனால் ஒருமுறை கிடைத்துவிட்டால் குறைந்தது மூன்று நாலாவது நீடிக்கும்... அதுவும் ஒரே நேரத்தில் நம் மனைவியும் நம் நண்பனின் மனைவியும் அவரவர் அம்மா வீட்டுக்கு செல்லும் அதிசயம் எல்லாம் நம் வாழ்க்கையில் ஒரு மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் நிகழும்... இதோ இப்பொழுது என் வாழ்க்கையில் அந்த அதிசயம் நடந்து விட்டது ... என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...

திரும்பவும் இந்த வாய்ப்பு ரெண்டு மூணு வருசத்துக்கு அப்பறம்தான் கிடைக்கும்.. மூன்றே நாளில் மூன்று வருடத்திற்கான வாழ்க்கையை வாழும் சூத்திரம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்  .. இந்த மூன்று நாளில் எந்த பெரிய மனுசனும் மண்டைய போடாம இருக்கணும் ... இல்லைனா டாஸ்மாக்க மூடிருவாணுக... அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்கக்கூடாதுன்னு போதை தருமரை (அதாம்பா நம்ம கேப்டன் விசயகாந்து) வேண்டிக்கிட்டு டாஸ்மாக்குக்கு கெளம்புறேன்  பாஸ்...




கடைசியா  நம்ம முதல்வருக்கு டாஸ்மாக்குள அதிரடியா விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல ஐடியா ... யானையயெல்லாம் முதுமலை காட்டுக்கு கட்டாய ஓய்வுக்கு அனுப்பிவச்ச மாதிரி எல்லா பொண்டாட்டிகளையும் ஒரு நாலு நாளைக்கு கட்டாய ஓய்வுன்னு சொல்லி அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க .. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம் ...  டாஸ்மாக்குள கூட்டமும் கூடும் , இந்த ஆண் சமூகமே உங்களை தெய்வமாக போற்றி வணங்கும்... சாகுற வரைக்கும் நீங்கதான் தமிழக முதல்வர் ...  



Tuesday, November 8, 2011

ஏழரை அறிவும் உலகநாயகன் கமலும்

ஏழரை அறிவு 



இந்த படத்தில் ஒரு வசனம் வரும் .. தமிழ் தமிழன்னு  கூத்தடிக்கிறது இப்ப ஒரு பேஷன் ஆகி  விட்டது என்று ... இதைத்தான்  நமக்கு நாமே ஆப்பு வைக்கிறதுன்னு சொல்றது .... தமிழுணர்வு என்று சொல்லி அரசியலிலும் , கல்வியிலும் காசு பார்த்துகொண்டிருந்தவர்கள் இப்போழ்து சினிமாவிலும் ஆரம்பித்துவிட்டார்கள் ... நீங்கள் உண்மையிலேயே தமிழை தமிழர்களை வாழவைக்க பெருமைபடவைக்க படம் எடுக்க வேண்டும் என்று ஆசைபட்டால்  ஐம்பெரும் காப்பியங்கள் என்று சொல்லப்படும் சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி போன்ற பழைய காப்பியங்களை இன்றைய டெக்னாலஜி உதவியுடன் பிரமாண்டமாக படம் எடுத்து பழைய தமிழனின் படைப்பு திறமையை இன்றைய உலகம் அறிய காட்டியிருக்கலாமே .... இல்லை போதிதர்மனை உலகம் அறிய செய்ய வேண்டும் என்றால் அவரை பற்றியாவது முழுமையாக காட்டியிருந்திருக்கலாம்... அதைவிட்டு விட்டு கடைசியில் படத்தின்  நாயகன் வில்லனை புரட்டி புரட்டி எடுக்க வேண்டும் என்ற ஒரே  காரணத்திற்க்காக மட்டும் போதிதர்மனை ஏதோ ஒரு லேகியம் தயாரிக்கும் சித்த வைத்தியனை போல , கண்கட்டி வித்தை காட்டும் மேஜிக்காரனை போல முதல் பாதியில் அரைகுறையாக காட்டியிருக்கிறார்கள். கண்டிப்பாக போதிதர்மனுக்காக படம் எடுக்கவில்லை இவர்கள் படத்திற்கு போதிதர்மனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.... ஆனால் அவர்கள் ஆசைப்பட்டது  ஓரளவு நிறைவேறிவிட்டது என்றுதான் படம் பார்க்கும் போது தோன்றியது .... முதல் பாதி மொக்கையாக செல்லும் படம் போதிதர்மன் புண்ணியத்தில் இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கிறது ... சில பல லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் விறுவிறு திரைக்கதைக்காக ரசிக்கலாம்...


படத்தில் குறிப்பிடப்படவேண்டிய விசயங்கள் அந்த சீன வில்லனும் சுருதி ஹாசனும் தான் .... சுருதி பேர் சொல்லும் பிள்ளையாக நடிப்பில் ஜொலிக்கிறார் ... சில காட்சிகளில் ரொம்ப அழகாக இருக்கிறார் ... பாடல்களில் நன்றாக நடனம் ஆடுகிறார் .. மொத்தத்தில் ஒரு குட்டி லேடி கமலாக தமிழில் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ... கண்டிப்பாக அவர் அப்பாவுக்கு இன்னும் பெருமை சேர்க்கமுடியாமல் போனாலும் அவர் பேரை கடைசி வரை கெடுக்க மாட்டார் என்று நம்பலாம்... 



கமல் ' A Universal Hero '


சென்ற வாரம் கேரளாவின் புனலூரில்  ஒரு மதுபான விடுதியில் நானும் என் நண்பனும் அமர்ந்து மது அருந்திகொண்டிருந்தோம் ... அப்பொழுது இரண்டு மலையாளிகள் எங்கள் அருகில் உக்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார்கள்  ... அவர்களிடம் மெல்லமாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் .... புனலூரில் என்ன என்ன ஸ்பெஷல் என்று ஆரம்பித்த பேச்சு மெல்ல மெல்ல கம்னியுசம் பக்கம் திரும்பி கடைசியில் சினிமாவில் முடிந்தது ... அவர்களிடம் நம்ம ஊர் ஹீரோக்கள் பற்றி கேட்டேன் ...  ரஜினியையும் "விசை"யையும் வசூல் மன்னர்கள் என்று சொன்னார்கள் ... அஜித் பற்றி கேட்டேன் சிடிசன் , வரலாறு , இப்பொழுது மங்காத்தா என்று அவருடைய ஹிட் படங்கள் கேரளா ஹீரோக்களின் படங்களை விட அதிகம் வசூல் ஆகியதை சொன்னார்கள் ... ஆனால் விசை படங்கள் என்றால் நகர்ப்புறங்களில் நல்ல வசூல் இருக்குமாம் ... கடைசியாக மமூட்டியும் மோகன்லாலும் நடிக்கும் கேரள மண்ணில் அவர்கள் யாரை சிறந்த நடிகனாக பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உங்கள் ஊரில் யார் நடிப்பை எல்லாரும் ரசித்து பார்ப்பார்கள் என்று கேட்டேன் ... அவர்கள் சற்றும் தாமதியாமல் எங்க ஊரில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் கமலை போன்ற சிறந்த நடிகன் யாருமே இல்லை என்று பெருமையாக சொன்னார்கள் ... அதுவரை ரஜினியை சூப்பர் ஸ்டார் என்றோ , விசையை தளபதி என்றோ , அஜித்தை தல என்றோ பட்டங்களை வைத்து அழைக்காதவர்கள் , கமலை வார்த்தைக்கு வார்த்தை உலகநாயகன் என்றுதான்  அழைத்தார்கள் ... கமலஹாசன் ஆரம்பகாலத்தில் கேரள மண்ணில் நடித்தது எங்களுக்கெல்லாம் பெருமையான விஷயம் என்றும் கூறினார்கள் ... எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது நம்மிடம்  யாராவது வந்து உனக்கு பிடித்த நடிகன் யார் என்று கேட்டால் கண்டிப்பாக மம்முட்டியவோ இல்லை மோகன்லாலையோ சொல்லமாட்டோம்  ... தமிழன் என்ற இகோவில் ஏதாவது ஒரு தமிழ் நடிகனின் பெயரைத்தான் சொல்லுவோம் , ஆனால் ஒரு கேரளாகாரன்  ஒட்டுமொத்த இந்தியாவிலும் கமலை போல சிறந்த நடிகன் இல்லை என்று பெருமையாக கூறினான் ... அடுத்த மொழிகாரனையும் தன நடிப்பால் கட்டிபோட்ட கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான் ... 



எங்கள் ஊரில் கமல் ரசிகர்கள் மிக அதிகம் .. தெனாலி படம் பார்க்கும்போது கமல் அவருடைய அம்மாவை பற்றி ஒரு வசனம் பேசுவார் ... திரையரங்கில் இருந்த  ஒட்டுமொத்த ரசிகனும் எழுந்து நின்று கைதட்டினார்கள் ... நான்  எழுத்து சுவாரஷ்யத்திர்க்காக இதை சொல்லவில்லை ..... உண்மையிலேயே தியேட்டரில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள் ... தனக்கு பிடித்த ஹீரோ பஞ்ச் வசனம் பேசும் போது ரத்தம் சூடாகி விசில் அடுக்கும் ரசிகனையே அதுவரை பார்த்து பழகிய எனக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது ... அன்று முதல் இன்று வரை கமல் படங்கள் வந்தால் அதை முதல் நாளே பார்த்து ரசிக்கும் அவரின்  கோடிக்கணக்கான  ரசிகர்களில்  நானும் ஒருவன்... மன்மதன் அம்புவில் சொதப்பியிருந்தாலும் , விஸ்வரூபம் மூலம் மீண்டும் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்க  அவர் பிறந்த நாளில் வாழ்த்துவோம்...


Saturday, November 5, 2011

தோற்கடிக்க முடியாதவன்



நான் ஒரு தீவிரமான அஜீத் ரசிகன் ... சின்ன வயதில் நான் இன்னும் சில நடிகர்களை இதை விட அதிகமாக ரசித்திருக்கிறேன் .. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில் எனக்கு வாழ்க்கை குறித்த பக்குவமும் புரிதலும் வந்த பின்னர் ஒரு சினிமா நடிகனை நாம் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவேண்டும் என்று அந்த ரசிப்புதன்மையில் இருந்து என்னை விடுவித்து கொண்டேன்... ஆனால் ஏனோ அஜீத் மீதான ஒரு பாசம் மட்டும் என்னை விட்டு நீங்கவே இல்லை .. நானே ஒரு சினிமா நடிகனை நாம் ஏன் ரசிக்க வேண்டும் , நேசிக்க வேண்டும் என்று பல சமயங்களில் எண்ணியதுண்டு ஆனால்,  இன்று பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலையில் வந்த ஒரு பதிவு நான் நேசிப்பதும் ரசிப்பதும் ஒரு நல்ல மனிதனைத்தான் என்ற திருப்தியை எனக்குள் ஆழமாக விதைத்து விட்டது ... அந்த பதிவை எனக்கு தெரிந்த சில அஜீத் ரசிக நண்பர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று என்னுடைய பதிவில் ரி ஷேர் செய்கிறேன் ... அவர் பதிவின் லிங்க் இதோ 

http://thoughtsintamil.blogspot.com/2011/11/blog-post_05.html





LinkWithin

Related Posts with Thumbnails