Followers

Copyright

QRCode

Wednesday, September 29, 2010

இப்படியும் நடக்கும் நம் நாட்டில்...




2030 இல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை:




1. காவேரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிக பெரிய பஞ்சம் ...அதன் காரணமாக  வளர்ந்து வரும் தமிழ் தீவிரவாத இயக்கமான தமிலோயிஷ்டுக்கள் கன்னடத்தில் புகுந்து தற்கொலை படை தாக்குதல்...


2. தமிலோயிஷ்ட்டுக்கள் முற்றிலும் அளிக்கப்பட வேண்டும் - பிரதமர் ராகுல் காந்தி கருத்து.. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிலோயிஷ்டுக்கள் முற்றிலும் அளிக்க பட வேண்டியவர்கள் ... அவர்களை அளிக்க ராணுவ தாக்குதல் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்... தன தந்தையை கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள்(no spelling mistake) கருத்து தெரிவித்துள்ளனர்...

3. தமிழர்களின் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும் , தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும்   உண்ணாவிரதம்... உண்ணாவிரதத்தை கை விடாவிட்டால் அவர்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் டிஸ்மிஸ் செய்யபடுவார்கள் என்று டெல்லி தலைமை மிரட்டியதால் உண்ணாவிரதம் வாபஸ்.. மேலும் ராகுலின் மகன் திருமண பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால் தமிழ் நாட்டில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.. இதை மறைத்து என்னுடைய உண்ணாவிரதத்தின் பயனாகவே மத்திய அரசு தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவித்து உள்ளது என்று முரசொலியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி தனி தனி அறிக்கை...

4. தி.மு.காவில் உச்சகட்ட பனிப்போர்... வடக்கு தமிழக துணை முதலவர் உதயநிதிக்கும் , தெற்கு தமிழக துணை முதல்வர்  தாயாநிதி அழகிரிக்கும் நடுவே புகைச்சல்...  ஒட்டு மொத்த தி.மு.கவின் தலைவராக அடுத்து தானே ஆகவேண்டும் என்று இருவரும் தம் தம் தந்தைகளிடம் சண்டை இட்டு வருகின்றனர்... எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே   குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்... தம் தந்தை ராஜ தந்திரமாக நாட்டை இரண்டாக பிரித்ததை போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரட்ச்னைக்கு தீர்வு காண முடியாது என்று அழகிரி ஆவேச பேட்டி...

5. சன் பிக்சர்ஸ் வழங்கும் எந்திரன் பார்ட் 4ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் மறுப்பு... மணிரத்தினத்தின் அம்பதாவது படத்தில் நடிக்க ஏற்கனவே  தேதி ஒதுக்கி விட்ட படியால் என்னால் ரஜினியுடன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என்று வருத்தம் தெரிவித்தார்... இந்த படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சி கன்னி ஷ்ரேயா நடிக்கவுள்ளார்...


6. அஜித் இனி எனக்கு தேவை இல்லை .. கௌதம் மேனன் கடுப்பு பேட்டி.. தொடர்ந்து பத்தாவது முறையாக அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்து வழக்கம் போல கடைசி நேரத்தில் படம் கைவிடபட , அவர் இவ்வாறு ஆனந்த விகடனில் பேட்டி அளித்து உள்ளார்..  இதற்க்கு பதில் அளித்த அஜித் அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணி விட்டேன் , நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணி விட்டார் யாருக்கும் யாரும் தேவை இல்லை என்று கூறினார்..


6. தொடர்ந்து பத்து படங்கள் தோல்வி அடைந்ததால் அம்பது கோடி வரை நஷ்டம்.. இளைய (அப்ப கூடவா)  தளபதி விஜய் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார்... நஷ்டத்தை திருப்பி தாராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை விஜய்க்கு தரக்கூடாது என்று தடை உத்தரவு அளித்து விடுவோம் என்று மிரட்டியதால் விஜய் கலக்கம்.. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் சூலாயிதத்தில் அவருடன் ஜோதிகாவின் மகள் தியா முதன் முதலாக ஜோடி சேருகிறார்... 


7. குஷ்பூவின் மகள் தி.மு.காவில் இணைந்தார்.. தன அன்னையை போலவே தானும் கட்சி தலைமைக்கு கடைசி வரை உண்மையாய் சேவை செய்வேன் என்று பேட்டி அளித்தார்...


8.மானாட மயிலாட கின்னஸ் ரெக்கார்ட்... உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி ஐமபது சீசன்களை கடந்து இன்னும் ஒளிபரப்பபடுவது இதுவாகத்தான் இருக்கும் என்று  கலா மாஸ்டர் பெருமிதம்... இந்த நிகழ்ச்சியையும் விடாமல் (வேறு வழி இல்லாமல்) அம்பது வருசத்திற்க்கும் மேல் பார்த்து வரும் தமிழ் மகா ஜனங்களுக்கு சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என்று நோபல் கமிட்டி அறிவிப்பு...


9. நடிகை எயிட்தாரா தனது எட்டாவது காதலன் நடிகர் பரத்துடன் திருப்பதியில் ரகசிய திருமணம்.. பரத்தின் மூன்றாவது  மனைவி போலீசில் புகார்..

10. 2031 இல் நான்தான் முதல்வர் ... ஸ்டாலினின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து கட்டி மக்கள் என்னை ஆட்சிபீடத்தில் ஏற்றுவார்கள் என்று விஜயகாந்த் அறிக்கை... இந்நிலையில் அவர் இயக்கி நடித்து கொண்டிருக்கும் விருதகிரி படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளி வந்து விடும் என்று அவர் பீதியை கிளப்பி உள்ளார்.. 

10. தமிழ் பதிவுலகில் புனைவு எழுத தடை... தமிழ் நாட்டிலேயே அதிகம் மக்களால் விரும்பி படிக்கப்படும் வலைபூக்களில் யாரும் யாரையும் தாக்கி புனைவு எழுதகூடாது... ஒருவரை தாக்கி புனைவு எழுதுவது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்பதால் புனைவு எழுதுபவர்களுக்கு ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு...

மக்கா நான் மேல சொன்னதெல்லாம் வெறும் கற்பனைன்னு சொல்லி ஒதிக்கிற முடியாது .. நாட்டுல நடக்குற கூத்த பாத்தா இதெல்லாம் உண்மையிலேயே நடந்தாலும் நடக்கும் .. பின்னால நாம சொல்லிகலாமல இதெல்லாம் நடக்கும்னு நாங்க இருபது வருசத்துக்கு முன்னாலேயே கணிச்சிட்டோம்னு... அதுக்காகத்தான் இந்த பதிவு...



  

Monday, September 27, 2010

தல நிமிருமா?


தலைய பத்தி பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சி ... அதான் என்னை போன்ற தீவிர தலை ரசிகர்களுக்காக ஒரு  பதிவு எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... இனி அடுத்து வருவது எல்லாம் முழுக்க முழுக்க தலை ரசிகர்களுக்கு மட்டுமே ... அவரை பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு அவர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு வீம்புக்காக திட்டுவதை போல , இந்த பதிவையும் முழுவதும் படித்து விட்டு பின்னூட்டத்தில் ஏடா கூடமாக ஏதாவது எழுதி சண்டைக்கு வரும் அன்பர்கள் வரவேற்க படுகிறார்கள் 

  அவர் எந்த நேரத்துல மங்காத்தான்னு அவர் படத்துக்கு பேர் வச்சாரோ படமும் பேருக்கு ஏத்த மாதிரியே இழுத்துக்கோ பறிச்சிக்கொன்னு மங்காத்தா ஆட்டம் ஆடுது... தொடர்ந்து ஆறு படம் ப்ளோப் கொடுத்த நடிகர்கள் கூட அடுத்தடுத்து படம் காட்டிகிட்டு இருக்க , தல ஏன்  இவ்வளவு   டிலே  பண்ணுதுன்னு  ரசிகர்களுக்கு  ஒன்னும்   புரியல  ... கடைசியா  மெகா ஹிட் படம் கொடுத்து இவ்வளவு லேட் பண்ணுனாகூட  பரவா இல்லை , அதுவும் சரியா ஓடல ... காஞ்சி போய் கெடக்குறோம் தல ரசிகர்கள் எல்லாம் ... நடுவுல வேற இந்த கௌதம் மேனன்கூட   சண்ட ...இப்படி சண்ட போட்டு தல விட்ட நல்ல படங்கள் நெறைய இருக்கு ... நந்தால ஆரம்பிச்சி நான் கடவுள் வரைக்கும் ... அந்த படங்களை எல்லாம் பார்க்கும் போது இன்னைக்கு வரைக்கும் வயிறு எறியும் எனக்கு ... ஒவ்வொரு சீன்லயும் ச்சே தல இந்த சீன்ல வந்திருந்தா சும்மா பட்டய கெளப்பி இருக்கும் அப்படின்னு தோணும் ... குறிப்பா நந்தால சிவாஜியும் அஜித்தும் நடிக்கிறதா இருந்தது முதலில் .. சும்மா கற்பனை பண்ணி பாத்தாலே என் உடம்பெல்லாம் சிலிர்கிறது .. அது மட்டும் நடந்திருந்தா கமலுக்கு ஒரு தேவர் மகன் மாதிரி ஏன் அதவிட பயங்கர கெத்தா தலைக்கு அந்த படம் அமைந்திருக்கும் ... அதேமாத்ரிதான் மிரட்டல் படமும் ... தலைய வச்சி ஷூட்டிங்க்லாம் ஆரம்பம் ஆகிடுச்சி .. எல்லா ஊருலயும் போச்டேர்லாம் ஒட்டிட்டாணுக விரைவில் அப்படின்னு ... சும்மா ஒவ்வொரு போஸ்டரும் பட்டய கெளப்புது ... அதும் அஜித் பப்பூன் வேசத்துல இருக்கிற போஸ்டர் பயங்கர ஹிட் அந்த சமயத்துல .. ஹ்ம்ம் அது மட்டும் நடந்திருந்தா இன்னைக்கு தலையோட ரேஞ்சே வேற ... அந்த ரெண்டு படத்துலையும் நடிச்சி ஒண்ணுமே இல்லாம இருந்த ஒரு நடிகர் இன்னைக்கு முன்னணி நடிகரா வளந்துட்டார் ... அந்த குறிப்பிட்ட  படங்கள்    வந்த காலகட்டத்தில் அஜித்தான் இளம்  தலைமுறையில் no. 1  ஹீரோ, அவர் இந்த படங்களில் நடித்திருந்தால் அவர் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றுப்பார்?. 

இப்படி தன கேரியரில் டாப் கியரில் செல்ல வேண்டியவரை இந்த படங்களுக்கு பதிலாக தேர்வு செய்த படங்கள் அதல பாதாளத்தில் தள்ளி விட்டன ... நந்தாவுக்கு பதில் ரெட் , அவரின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் , மிரட்டலுக்கு பதில் அவர் தேர்வு செய்த படம் ஜீ ... எத்தனை தோல்விகள் வந்தாலும் தாங்கி கொள்ளும் என்னை போன்ற அஜித் ரசிகர்களையே அசைத்து பார்த்த தோல்வி படம் இது ... இந்த படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இன்று தல அசைக்கமுடியாத உயரத்தில் இருந்திருப்பார் ... அந்த படத்திற்கு அமைந்த ஒப்பெநிங் இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு ... எங்கள் ஊரில் அன்று முழவதும் படம் ஓடிய தியேட்டரை சுற்றி traffic jam  .. முதல் ஷோ பார்த்து விட்டு படம் முடிந்து நான் தியேட்டரை விட்டு வெளியேறி மெயின் ரோட்டை பிடிக்கவே ஒருமணி நேரம் ஆனது .. இத்தனைக்கும் மெயின் ரோடு ஒரு முன்னூறு  மீட்டர் தூரம்தான் தியேட்டரில் இருந்து... கால்  வைக்ககூட  இடம்  இல்லாமல்  அவ்வளவு  கூட்டம் .... இத்தனைக்கும் அதற்க்கு முன்னர் அஜித்தின் இரண்டு  படங்கள்  செம்ம ஊத்து ஜனா மற்றும் ஆஞ்சநேயா, அட்டகாசம் மட்டுமே ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருந்தது .... நாங்கள் ஜீ மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பு அவ்வளவு ... ஆனால் லிங்குசாமி எங்களை வகையாக ஏமாற்றி விட்டார் .. அதுகூட பரவா இல்லை அடுத்து அவர் விசாலை வைத்து சண்டைகோழி என்று ஒரு மெகா ஹிட் படம் ஒன்று கொடுத்தார் ... அதுதான் என்னை போன்ற தல ரசிகர்களுக்கு அவரின் மேல் கோபத்தை உண்டு பண்ணியது ... பின்ன தலையை வைத்து ஒரு மொக்கை படம் கொடுத்து விட்டு அடுத்து  யார் என்றே தெரியாத ஒரு நடிகனை வைத்து ருசியான அதிரடி  மசாலா கொடுத்தால் யாருக்குதான் கோபம் வராது... அதன் பிறகு பீமா அட்டர்  பிளாப் ஆனபொழுது என்னை போல் யாரும் அவ்வளவு சந்தோசபட்டிருக்க மாட்டார்கள் ...

இன்றும் அதே போல ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது ... கௌதம் மேனன் படத்தை கை கழுவி விட்டு வெங்கட் படத்தில் தல நடிக்க போகிறார்... பழைய செண்டிமெண்ட் படி பார்த்தால் கெளதமின் அந்த படம் (வேறு யாரையாவது வைத்து இயக்கினால் ) வெற்றி பெரும் , தலையின் மங்காத்தா தோல்வி பெரும் என்று சிலர் ஆருடம் கூறுகின்றனர் ... ஆனால் தலையை ஆரம்பத்தில் இருந்து கூர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரியும் .. அஜித் தோல்வி பாதையில் வீழும் போதெல்லாம் ஒரு எதிர்பாராத வெற்றியை கொடுத்து அவரை கைதூக்கி விடுபவர்கள் அந்த காலகட்டத்தில் பார்மில் இருக்கும்  அவர்களின் நெருங்கிய நண்பர்களான இயக்குனர்களே  .... வசந்த் , அகத்தியன் ,  சரண் , சூரியா , ரவிகுமார் என்று அந்த பட்டியல் பெரியது ... இன்றும் அஜித் துரதிர்ஷ்டவசமாக ஒரு வெற்றியை கண்டிப்பாய் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார் , வெங்கட் இன்று பார்மில் இருக்கும் இளம் இயக்குனர் ... ஏன் அஜித்தின் பழைய "நன்பேண்டா" செண்டிமெண்ட் இவர் விசயத்திலும் work out ஆக கூடாது.... தல ரசிகர்கள் சார்பில் வெங்கட்டுக்கு ஒரு வார்த்தை "எப்பா வெங்கட் சரணோட இடம் இப்ப காலியாத்தான் இருக்கு ... இந்த படத்தை  மட்டும் ஹிட் ஆக்கிட்ட , சரண் மாதிரியே தலைய வச்சி இன்னும் நாலு படம் பண்ணலாம் ... சோ வாய்ப்பை ஒழுங்கா யூஸ் பண்ணிக்கொப்பா" ... எது எப்படியோ சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிச்சி படத்த சீக்கிரம் கண்ணுல காட்டுனா நல்லா இருக்கும் ... 

அப்பறம் இன்னொரு விஷயம் இந்த படத்தை பொறுத்த வரை மற்றவர்கள் கூறுவது அஜித் இந்த படத்தில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க போகிறார் , அப்பறம் எப்படி இதை அஜித் படம் என்று கூறமுடியும் என்பது ... ஏன் அந்த மற்ற நடிகர்கள் மங்காத்தாவை தவிர வேறு சில படங்களிலும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த படங்களை பற்றி இந்த அளவுக்கு யாரும் எதுவும் எழுத மாட்டேன்கிறார்கள் ... காரணம் அவர்களை பற்றி எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் , தலையை பற்றி எழுதினால் படிக்க நிறைய பேர் இருக்கிறார்கள் .. உங்களுக்கே இவ்வளவு விடயம் தெரியும் பொழுது கோடிகணக்கில் பணம் போட்டு படம் எடுக்கும் அவர்களுக்குக்கு தெரியாதா ? யாரை நம்பி இந்த படம் எடுக்கிறோம் என்று , யாரை முன்னிலை படுத்தி படம் எடுக்க வேண்டும் என்று ... 

எது எப்படியோ எங்களுக்கு உடனடியாக தேவை ஒரு மெகா ஹிட் ... ஆனா தலைய பொறுத்த வரை  இந்த படம் மட்டும் நல்லா ஓடுனா  போதாது .. வில்லன் படம் வரும்போது அவர் மார்க்கெட் எப்படி இருந்ததோ அதே போல ஒரு மார்க்கெட்ட பிடிக்க இன்னும் நாலு ஹிட் கொடுக்கணும் தல ... ஆனா அவர் படம் பண்ணுற வேகத்த பாத்தா இன்னும் மொத்தமே நாலு படமாவது பண்ணுவாரான்னு சந்தேகமா இருக்கு ... தமிழ்நாட்டுல ரஜினிக்கு அடுத்து பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறது இவருக்குதான் ... அப்படி இருந்தும் ஏன் வருசத்துக்கு ஒன்னு, ரெண்டு வருசத்துக்கு ஒண்ணுன்னு இப்படி ஆமை வேகத்துல படம் பண்ண ஆசைபடுராருன்னு தெரியல... தலைக்கிட்ட என்னை போன்ற ரசிகர்கள் எல்லாம் கேட்டு கொள்கிற அல்லது ஆசைபடுகிற ஒரு விஷயம் முன்பு போலவே வருசத்துக்கு மூன்று அல்லது குறைந்தபட்சம் ரெண்டு படமாவது பண்ணலாம் ... இல்லை என்றால் தல நாங்கள் மட்டும்தான் உன்னை ஞாபகம் வைத்திருப்போம் , சாதாரண ரசிகன் உன்னை மறந்து போய் விடுவான் ... குறுக்கு புத்தி உடையவன் , ஏமாத்தி நல்ல பேர் வாங்குபவன் எல்லாம் வெற்றி பெற்று உன்னை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதன் தோற்று போய்  நல்லவனுக்கு காலம் இல்லை என்ற நிலைமை சினிமாவிலும் வந்து விட கூடாது ...  

அடுத்து விஜயை வைத்து விஷ்ணுவரதனை வைத்து அடுத்தடுத்து படம் பண்ண போவதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் இருக்கிறது ... ஒரு சின்ன வேண்டுகோள் ரசிகர்கள்  சார்பாகா , ஒரு இயக்குனரிடம் படம் பண்ணபோவது  உறுதியாக முடிவான பிறகு எங்களுக்கு அதை அறிவியுங்கள் தல ... ஒவ்வொரு முறையும் இந்த இயக்குனருடன் இணைந்து  படம் பண்ண போகிறேன் என்று அறிவித்து எங்களை பெரிய அளவில்  கனவு காண வைத்து பிறகு மொத்தமாக அதை உடைத்து விடாதீர்கள் ... இது உங்கள் ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு நெகட்டிவ் எனர்ஜியை  படம் வெளிவருவதற்கு முன்னரே ரசிகனிடம் உருவாக்கும் ... இனிமேலும் இந்த தவறை செய்யாமல் நல்ல படங்களை கொடுத்து எங்களுக்குள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த அந்த  பழைய உற்சாகத்தை  மீண்டும் உருவாக்குங்கள்   ... இல்லை என்றால் ஊரே அவமானபடுத்தும் தளபதியின் ரசிகர்களிடமெல்லாம் நாங்கள் அவமானப்பட வேண்டி இருக்கும் தல      

Sunday, September 26, 2010

எந்திரன் மேனியா



இன்னும் ஐந்து நாட்கள்தான் படம் வெளிவர , அதற்குள் தமிழ்நாடு முழுவதும் எந்திரன் பீவர்  பன்றி காய்ச்சலை விட வேகமாக பரவி வருகிறது. நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்தேன் .. நான் சென்னைக்குள் நுழையும்பொழுது மணி சரியாக அதிகாலை ஐந்து ... உதயம் தியேட்டர் வெளியே ஒரு பெரிய கூட்டம் அந்த நேரத்திலும்  ரொம்ப ஒழுக்கமாக சரியான கியூவில்  நின்று கொண்டு இருந்தது  எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய ... முதலில் நிற்பவன் எப்படியும் பனிரெண்டு மணிக்கே வந்திருக்க வேண்டும்  அவ்வளவு பெரிய கூட்டம் அது இவர்களில் பலர் தங்கள் பரிச்சை அன்றுகூட ஐந்து மணியை பார்த்து இருக்க மாட்டார்கள் ...   இவர்களின் கலைதாகம் என்னை அந்த அதிகாலை வேளையிலும் புல்லரிக்க வைத்து விட்டது .... அந்த கூட்டத்தில் ஒருவன் சைக்கிள் வைத்து டி , காபி விற்று கொண்டு இருந்தான் ... அவனுக்கு நல்ல கலெக்சன் ஆகி இருக்கும் அன்று ... இவர்களை போன்றவர்களை பார்த்துதான்  ரஜினி சொல்லுகிறாரோ என்னால் நிறைய பேர் வாழுகிறார்கள் என்று .... அதுசரி  இவர்கள் எல்லாம் நஷ்டப்பட்டு விட கூடாது என்றுதானே தன சுயமரியாதையைகூட விட்டு கொடுத்து  குசேலன் படம் வெளி வரும் பொழுது மன்னிப்பு கேட்டார் அவர் .. இந்த பெரிய மனசு யாருக்கு வரும்...

இவர்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் நாட்டை மட்டும் இல்லை மத்திய மந்திரி ஆகி இந்தியாவையே சுரண்டி ஒருவர் சேர்த்து வைத்திருக்கும் ஊழல் பணத்தில் எடுக்கும் படத்தில் நடித்துள்ளார்... சற்று உள்நோக்கி கூர்ந்து கவனித்து பார்த்தால் புரியும் இது ஒரு மறைமுகமான ராபின்ஹூத் வேலை என்பது ... எந்திரன் படத்திற்கு நிமிடத்திற்கு நிமிடம் சன் டிவியில் விளம்பரம் போடுவார்கள் ... இதன்மூலம் தியேட்டரில் கூட்டம் பெருகும் ... அதனால் சம்பாதிக்க போவது இந்த படம் எடுத்த கலாநிதி   மட்டும் இல்லை , தியேட்டர்காரன் ,அந்த தியேட்டரில் முறுக்கு விற்பவன் , போண்டா விற்பவன் , சைக்கிள் டோக்கன் போடுபவன் , தியேட்டர்க்கு வெளியே நிற்கும் ஆட்டோகாரன் , பக்கத்தில் இருக்கும் குளிர்பான கடைக்காரன் , பீடா கடைக்காரன் என்று எல்லாரும்தான்... இப்படி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவன் பணத்திலேயே மக்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காய் இரண்டு வருடங்களாய் மழை வெயில் என்று பார்க்காமல் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் ரஜினி ... அவரை தவறாக பேசி வருபவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி இப்படி தனக்காக இல்லாமல் மக்களுக்காக அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக படம் பண்ணும் ஒரு நடிகனை உலகில் வேறு  எங்காவது காட்ட முடியுமா உங்களால்... 

இப்படி  ஒரு நல்ல எண்ணத்தில் எடுக்கப்படும் இந்த எந்திரன் என்னும் காவியம் பெரிய வெற்றி பெறுவதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது ... படம் இன்னும் வரவில்லை என்றாலும் இரண்டு முக்கியமான விஷயங்கள் வெளி வந்து விட்டது .. ஒன்று பாடல்கள் இன்னொன்று பட டிரைலர்... நேற்று சத்யம் திரை அரங்கில் inception படம் பார்த்த பொழுதுதான் முதன் முதலில் எந்திரன் டிரைலர் பார்க்க நேர்ந்தது... பார்த்தவுடனே எனக்கு தோன்றிய விஷயம் சுஜாதாவின் இழப்புதான் ... சிவாஜி படத்திலேயே வசனங்கள் படு மொக்கையாக இருக்கும் ... இந்த டிரைலரை பார்த்த வரைக்கும் எனக்கு தோன்றியது இதில் அதைவிட பயங்கர மொக்கையாக இருக்குமோ என்று ... நிறைய செலவு பண்ணி பிரமாண்டமாக hi-tech set போட்டிருக்கிறார்கள் , என் கண்ணுக்கு எல்லாம் கோடி கணக்கில் செலவழித்து போடப்பட்ட நாடக செட்டுகள் மாதிரியே தெரிகிறது... படத்தில் எல்லாமே பார்த்தவுடனே நான் செட் என்று  பல்லிளிக்காமல் இருந்தால் சரி... இன்னொன்று ரஜினியின் குரல் வயதாகி விட்டதால் நடுக்கம் தெரிகிறது ... முன்ன எல்லாம் வசனத்த விட அத பேசுற அவர் கம்பீரமான குரலுக்கே நம்ம தல முடியெல்லாம் நட்டுக்கும் ... அப்ப வசனமும் நல்லா இருந்தது , குரலும் நல்லா இருந்திச்சி ... இப்ப ரெண்டிலுமே சுருதி குறைந்து விட்டது என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும்.... பாடல்களை பொறுத்த வரைக்கும் A.R.R சொதப்பி விட்டார் ... எந்த பாடல்களும் மனதில் தங்காமல் போவது பெரிய குறை....  மேல்தட்டு மக்கள் வேண்டுமானால் பாடல்களை ஆகா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம் , அடித்தட்டு கிராம மக்கள்  ரசிக்கும்படியான விஷயம் பாடலில் எதுவும் கிடையாது ... ஷங்கர் சிவாஜியில் செய்த அதே தவறு இது ... சந்திரமுகியின்  மிக பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம்  பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பிய அதன் பாடல்களே .... ரஜினி பாடல்கள் என்றால் பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கெளப்பும் என்பதெல்லாம் முடிந்த போன விசயமாகி விட்டது என்று நினைக்கிறேன் ... என்ன பண்ண முப்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகனைவிட ஆயிரம் ரூபாய் கொடுத்து அபிராமி மாலில் படம் பார்க்கும் ரசிகனுக்காக படம் எடுக்கும் கூட்டத்தில் ரஜினியும் இணைந்து பல வருடங்களாகி விட்டதே ..   ஆனால் ரஜினியின் உண்மையான ரசிகன் கிராமத்தில்தான் இருக்கிறான் , அவனை காயபோட்டால் என்ன ஆகும் என்பதை அவர் சிவாஜியில் இருந்து கற்று கொள்ளாதது ஆச்சரியமே...

என்னை பொறுத்த வரை ஷங்கர் ஒரு hi-tech விக்ரமன் அவ்வளவே ... அந்த விக்ரமனதனம் இந்த டிரைலரிலும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது ... பார்க்கலாம் படம் எப்படி வருகிறது என்று ... ரஜினியின் எந்த படத்திற்கும் இல்லாத ஒரு hype இந்த படத்திற்கு சன் டிவி புண்ணியத்தில் உருவாக்கி இருக்கிறது .... பார்க்கலாம் நம் மக்களை இது திருப்தி படுத்துகிறதா என்று .... ஹாலிவுட் தரத்திற்கு படம் இருக்கும் என்று படத்தின் டிரைலரை பார்த்தும் நம்புகிறவர்கள் ஹாலிவுட் தரம் என்றால் என்னவென்று அறிய உடனே inception படம் பார்க்க கேட்டு கொள்ள படுகிறார்கள்...

Saturday, September 25, 2010

என்றும் இளமையுடன் வாழ்வது எப்படி?



இங்கிலீஷ்காரன் படத்துல சத்தியராச பாத்து ஒரு வசனம் பேசுவானுக ,  நீ யூத் இல்ல யூத் மாதிரின்னு , அந்த சத்தியராஜ் மாதிரியான யூத் மாதிரி நண்பர்களுக்கான பதிவு இது ... நம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான காலகட்டம் என்றால் அது இந்த யூத் பருவம்தான் ... ஓசி சாப்பாடு,நண்பர்கள் கூட்டம் ,24 மணி நேரமும் ஜாலி , மனதிற்கு தோன்றியதை செய்ய கூடிய தைரியம் என்று நம் இஸ்டத்துக்கு சந்தோசமாக வாழலாம் ... படிக்கிற காலத்தில் கூட படிக்கிற சப்ப பிகரிடம் போய் தைரியமாக நீ ரொம்ப சப்ப பிகரா இருக்க என்று அசால்ட்டாக அந்த பெண்ணை டீஸ் செய்யலாம் ... மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண் ஆசிரியர்களிடம் போட்டு கொடுப்பாள் , அவர்களும் நம்மை விசாரித்து விட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள் .. நாமும் நம் நண்பர்களிடம் நான் enquiry attend பண்ணிட்டேன் , நானும் ரௌட்தான் என்று சட்டை காலரை தூக்கி விட்டு  கொள்ளலாம் ... ஏனென்றால் அந்த வயதில் நாம் இழப்பதற்கு மானம் , சுயமரியாதை என்று எதையும் நாம் சம்பாதித்து இருக்க மாட்டோம் ... நம்மை சுற்றி இருப்பவங்களும் அப்படியே இருப்பார்கள் .... நாம் என்ன தவறு செய்தாலும் சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் என்று சமூகம் நமக்கு வக்காலத்து வாங்கும் ... ஆனா ஒரு வேலைக்கு சேந்து ரெண்டு மூணு வருஷம் ஆன பின்னாடி நம்ம வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறி போய்டும் ... ஆபீஸ்ல மெமோ வாங்கிட்டோம்னா ரெண்டு மூணு நாளைக்கு தூக்கமே வராது .. அது நமக்கு prestige problem ஆகிரும்.. இப்பதான் நமக்கு அந்த வயசோட அருமை தெரியும் ... சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான் ... தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் ... சில பேரு அந்த வயசுல படிப்பு படிப்புன்னு அம்மாஞ்சியா இருந்திட்டு , பார்டர் வயசுலதான் திடீர்னு ஞானோதயம் வந்து அப்ப விட்டத எல்லாம் மொத்தமா இப்ப அனுபவிச்சிடனும்னு   அளப்பர பண்ணிக்கிட்டு அலைவாணுக ... இந்த உலகத்துக்கு நாம இன்னமும் யூத்துதான் என்று நம்ப வைப்பதே  அவர்களின் பெரிய சவாலாக இருக்கும் ... அந்த மாதிரியான யூத்துகளுக்கு சில ஐடியா தருவதற்கே இந்த பதிவு  ...

யூத்துகளுக்கான பெரிய அடையாளம் அவர்கள் வைத்திருக்கும் பைக்குதான்.. வண்டி பார்பதற்க்கே பிரமிப்பாய் பெரியதாய் இருக்க வேண்டும் .. வண்டியின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் சிகப்பு , மஞ்சள் அல்லது ஆரஞ்சு என்று இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ... மிக முக்கியமான விஷயம் வண்டியில் ஏறி விட்டால் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே கூடாது... ஹாரன் மற்றும் சைலேன்சரில் சத்தம் வித்தியாசமாய் இருப்பது கூடுதல் தகுதி ...

யூத் பருவத்தின் பெரிய சந்தோசமே காதலும் அதன் நீட்சியாய் நம் நண்பர்கள் நம்மையும் அவளையும் இணைத்து ஓட்டுவதுமே... இந்த வயதில் நமக்கு பிகர் மாட்டுவது கொஞ்சம் கஷ்டமே ... இருந்தாலும் மனம் தளர்ந்து விட கூடாது , நம் அலுவலகத்தில் நம்மை போலவே கொஞ்சம் வயசாகி போய் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு பிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் ... பிகர் கொஞ்சம் சுமாராக இருந்தாலே போதும் ... உங்கள் நண்பர்களிடம் இவள்தான் என் காதல் தேவதை என்று சொல்லுங்கள் ... பின்னர் உங்கள் நண்பர்கள் கண்ணில் படும்படி அவளுடன் அடிக்கடி  பணி நிமித்தமாய் பேசி கொண்டு இருங்கள்....   உங்கள் நண்பர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் அவளையும் உங்களையும் வைத்து ஓட்டி கொண்டிருப்பார்கள் .... இது மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பை உருவாக்கும் .... உங்கள் அதிர்ஷ்டத்திற்கு அந்த பெண்ணும் மடிந்து விட்டால் நீங்கள் நிஜ யூத்தாகவே மாறி விடலாம் ...

நண்பர்களுடன் எங்கு வெளியில் சென்றாலும் ஜீன்ஸ் , டி ஷர்ட் போட்டுத்தான் செல்ல வேண்டும் .. அந்த டி ஷிர்ட்டில் " I HATE BEAUTIFUL GIRLS .. B'COZ THEY ALWAYZ TORTURE ME BY THEIR LOVE "போன்ற வாசகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் , தலையில் ஒரு கேப் , மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் எப்பொழுதும் இருப்பது அவசியம் ... இது உங்கள் வழுக்கையை மறைக்க உதவும் 

நிற்கிற பேருந்தில் கண்டிப்பாக ஏறவே  கூடாது ... அதே போல் பேருந்தினுள் எவ்வளவுதான் இடம் இருந்தாலும் புட்  போர்டில்தான் தொங்க வேண்டும் .

விடுமுறை நாள் என்றால் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு இல்லை பிகருடன் போனில் கடலை போட்டு விட்டு பகல் முழுவதும் தூங்க வேண்டும்

சினிமாவிற்கு தனியாக செல்ல கூடாது ... பிகரை பிக் அப் பண்ணி கூட கூட்டி கொண்டு  போகலாம் ... அப்படி பிகருடன் போகும் பொழுது படம் முடியும் வரை அவள் தோள் மீது கை வைத்தே பார்க்க வேண்டும் , இல்லை என்றால் அவளை உங்கள் மார்போடு அணைத்து வைத்து  படம் பார்க்க வைக்கலாம் ... இது உங்களை சுற்றி தனியாக உர்க்காந்து படம் பார்பவர்களுக்கு புகைச்சலை உண்டு பண்ணும் ... பின்னர் பிகரே இல்லாத உங்கள் நண்பர்களிடம் அவளுடன் படம் பார்த்த அனுபவத்தை பற்றி கிளுகிளுப்பாய் சொல்லுங்கள் ... அவர்களும் மனதிற்குள் உங்களை புகைச்சலுடன் பார்ப்பார்கள் ...நாலு பேரு உங்களை பாத்து புகைந்தாலே நீங்கள் யூத்தா மாறிட்டீங்கன்னு அர்த்தம் பாஸ்....

நண்பர்களுடன் படம் பார்க்க போகும்போது அமைதியாக படம் பார்க்க கூடாது ... பிடித்த  சீன வரும் பொழுதெல்லாம் விசில் அடிக்க வேண்டும் , பிடிக்காத மொக்கை சீன வரும் போதெல்லாம் சத்தமாக எல்லாரும் சிரிக்கும்படி கமென்ட் அடிக்க வேண்டும் .... 

 உங்கள் அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,  வெகேசன் டூர் , இல்லை பார்ட்டி என்றாலும் நீங்கள்தான் முன்னால் நின்று ஆர்கனைஸ் பண்ண வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பாடல் திறமையவோ இல்லை கவிதை திறமையவோ இல்லை மிமிக்கிரி திறமையவோ எடுத்து விட வேண்டும் ... இது உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் கிடைக்க உதவி செய்யும். உங்களுக்கு ஆண் நபர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் நண்பர்களும் இருக்க வேண்டும் ... உங்கள் மொபைல் , மற்றும் மெயிலுக்கு வரும் மேச்செஜ்சுகள் அதிகம் பெண்களிடம் இருந்து வந்தால் உங்களுக்கே உங்கள் மேல்  நாம் இன்னும் யூத்துதான்  என்று நம்பிக்கை வந்து விடும் ...
   
கடைசியா இது எல்லாம் பண்ணியும் யாரும் உங்களை யூத்ன்னு நம்ப மாட்டேங்கிரானுகளா.. பாஸ் லேட் பண்ணாதீங்க .. உங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிடுங்க ... முத்துன கத்திரிக்கா சந்தையில விலை  போகாது ... லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும்   



Sunday, September 19, 2010

செல்போன் படுத்தும் பாடு...

அறிவியல் கண்டுபிடிப்புல பெரிய அதிசயம் எதுனா அது செல் போன்தான்  .... உள்ளங்கையில் உலகம் அது .. ஆனா இன்னைக்கு அது உள்ளங்கையில் ஒரு கலகமா மாறிடுச்சி ...நேரங்காலம் தெரியாம நம்மள இம்ச பண்ற சில விசயங்களில் முதல் இடம் செல்போனுக்குதான் ... போன மாசம் கல்லூரியில செமஸ்டர் எக்ஸாம் .. அதுக்கு நான்   மேற்பார்வையாளரா போய் இருந்தேன் ... எக்ஸாம் ஆரம்பிச்சி பத்து நிமிஷம் ஆகி இருக்கும் எல்லாரும் மும்முரமா எழுதிகிட்டு இருக்கானுக ... திடீர்னு ஒருத்தன் செல்போன் கத்த ஆரம்பிச்சிருச்சி ' நேத்து ராத்திரி யெம்மா  தூக்கம் போச்சிடி யெம்மா" இப்படி செல்போன் முக்கல் முனங்கல்களோட  பாடுனா  எவனுக்காவது எக்ஸாம் எழுத மூட் வருமா?

இதுகூட பரவா இல்லை .. நேத்து ராத்திரி அவன் தூங்காம படிச்சிருப்பான் அப்படின்னு எடுத்துக்கலாம் ... ஆனா இந்த business பண்ற ஆசாமிகள் செய்ற இம்சைதான் பெரிய இம்சை  ... இன்னைக்கு business பண்ண மூளை கூட தேவை இல்லை , முக்கியமான தேவையே செல் போன்தான்... ஆனா சில பேருக்கு அவன் செல்லே அவன் கடையை இழுத்து மூட காரணம் ஆகிடும் ...என்கூட வேலை பாக்குற மேடம் ஒருத்தவங்க அவங்க கல்யாணத்துக்கு video coverage  பண்ண உங்களுக்கு தெரிஞ்சphotographer  இருந்தா சொல்லுங்கன்னு கேட்டாங்க ... நான் என்   நண்பன் ஒருத்தன் இருக்கான் மேடம் அவன்கிட்ட என் பேர சொல்லி கேளுங்க மேடம் , ஒழுங்கா நீங்க நெனைக்கிற மாதிரி பண்ணி தருவான் அப்படின்னு சொல்லி அவன் நம்பர் கொடுத்தேன் , அவங்க அவனுக்கு போன் பண்ணுனா "தாலியே தேவை இல்ல நீதான் என் பொண்டாட்டின்னு" பாடுது... அவங்க என்ன கேவலமா திட்டிட்டு  போய்ட்டாங்க ...

  இன்னொரு நாள் எங்க  மாமா  அவர்  பொண்ணு  ரொம்ப  நேரம்  ஆகியும்  வீட்டுக்கு வரலேன்னு பயந்து போய் அவரோட பொண்ணுக்கு போன் பண்ணுனாரு ... எதிர்முனையில "ஓடோ... ஓடோ... ஓடோடி போறேன்"....  பாட்டு  வந்தது ... அத கேட்டு அவருக்கு heart attackகே வந்துருச்சி         

கல்யாண வீட்டுக்கும் , எளவு வீட்டுக்கும் போகும்போது செல்ல silent mode ல போடமாட்டாணுக நம்ம ஆளுக ... கல்யாண வீட்டுல மேடை ஏறி கல்யாண ஜோடிக்கு கிப்ட் கொடுக்க போற நேரத்துல செல்லு அபசகுனமா அலறும் "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்"னு ....எளவு வீட்டுக்கு போன அடுத்த நிமிஷம் கொரியா செட்டு சத்தமா பாடும் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி"ன்னு ...அன்னைகோட நமக்கும் அந்த குடும்பத்துக்கும் இருக்கிற உறவை அத்து விட்டு வந்திற வேண்டியதுதான்...

இந்த dialor toneனும் ring toneனும்தான் இப்படி நம்மள கடுப்பேத்துதுன்னா சில நேரம் நம்ம நெலம புரியாம நமக்கு வர்ற இன் கம்மிங் கால் அதவிட வெறுப்பேத்தும்  ...ஞாயித்துகிழமை லீவும் அதுவுமா ரொம்ப லேட்டா எழுந்திருச்சி அவசர அவசரமா பாத்ரூம் போய்கிட்டு இருப்போம்.. அந்நேரம் பாத்து நம்ம செல் அலறும் .. சரி ஏதோ முக்கியமான காலா இருக்கும் , நம்ம கேர்ள் பிரண்ட் கால் பண்ணுறா போலன்னு அவசரத்த மறந்து செல்ல எடுத்தா , ஹலோ நாங்க icici பேங்க்ல இருந்து பேசுறோம் உங்க வீட்டுல பாத் ரூம் கட்டுறதுக்கு நாங்க புதுசா லோன் தரோம் ... அதுவும் குறைந்த வட்டியில அப்படின்னு நம்ம அவசரம் புரியாம நான் ஸ்டாப்பா பேச ஆரம்பிச்சிடுவாணுக .. நாமளும் நாகரீகம் கருதி கட் பண்ணாம பேசுறத கேட்டுகிட்டு இருந்தோம்னா அவன் பேசி முடிச்சி ஆப் பண்ணும்போது நமக்கும் பின்னாடி ஆப் ஆகி இருக்கும் அப்பறம் நாம என்னதான் ட்ரை பண்ணுனாலும் வராது   

இன்னும் சில பேரு மெசேஜ் அனுப்பியே நம்மள சாவடிப்பாணுக ... நட்பு என்பது மனதிற்கு மட்டுமே புரியும் ஒரு மொழி .. அது பூமியை விட ஆழமானது வானத்தை விட உயரமானதுன்னு இப்படி மொக்க மேசெஜ்ஜா  அனுப்பி நம்ம இன்பாக்ஸ  நெரப்புரதுதான் அவனுங்க வேலையே ... இவனுங்க அனுப்புற மேசெஜ்ச படிச்சி அத delete பண்ணுரதுலையே  நமக்கு பாதி நாள் செலவாகிடும் ... அதும் நைட்  நாம ரெண்டு மணி நேரமா தூக்கமே வராம பொரண்டு பொரண்டு படுத்து அப்பத்தான் லைட்டா கண்ண மூடி இருப்போம் கரெக்ட்டா நம்ம மொக்க சாமி ஒரு மெசேஜ் அனுப்பி இருப்பாரு ... நாம ஏதோ முக்கியமான மேசெஜ்ஜா இருக்கும்னு அடிச்சி பிடிச்சி செல்ல தேடி எடுத்து படிச்சி பாத்தா நான் தூங்க விழிகளை மூடினாலும் நீ நுழைய  என் இதயம் திறந்தே இருக்கும் ..good night sweet dreams  அப்படின்னு இருக்கும்.. இத படிச்ச கோபத்துளையே நமக்கு தூக்கம் போயிரும் .... 

சரி இப்படிஎல்லாம் எதுக்கு கஸ்டபடணும்னு ஒரு நாள் முழுவதும் நிம்மதியா இருக்கலாமேன்னு  செல்ல switch off பண்ணி வச்சிருந்து அடுத்த நாள் ஆண்   பண்ணி பாத்தா மிஸ்டு கால் அலெர்ட் மெசேஜ் வரும் .. அதுல ஒரு புது நம்பர் இருக்கும்..  யாரா இருக்கும்னு போன் பண்ணி பாத்தா, ரொம்ப நாளா நாம எதிர்பார்த்துகிட்டு இருந்த கம்பனிகாரன் interviewகாக போன் பண்ணி இருந்திருப்பான் ... நாம எடுக்காம போனதால வேற ஒருத்தன செலக்ட் பண்ணிட்டோம்னு நம்ம தலையில இடிய தூக்கி போடுவான் ...  அடுத்து நம்ம நண்பன் ஒருத்தன்  கால் மேல கால் பண்ணி இருந்திருப்பான் அவனுக்கு போன் பண்ணுனோம்னா மச்சி நேத்து  என்னடா உன் போன் எடுக்கவே இல்ல .. நம்ம சுரேஷ் பெறந்த நாள்டா மச்சி நேத்து ... செம்ம ட்ரீட் கொடுத்தான் மச்சி ... சரக்கு சாப்பாடு சினிமான்னு எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுனோம் மச்சி ... அதான் உன்னையும்  கூப்பிடலாமேன்னு உன் செல்லுக்கு ட்ரை பண்ணுனோம் , மிஸ் பண்ணிடடா மச்சி அப்படின்னு எரியிற நெருப்புல எண்ணைய ஊத்துவான் ...

இப்படி அது இருந்தாலும் இம்சைதான் இல்லாம போனாலும் இம்சைதான் ...  பிகர் மாதிரிதான் செல் போனும்... அது வாயில சிரிச்சி நம்மள கவுக்கும் .. இது ரிங்டோன்ல சிரிச்சி நம்மள கவுக்கும் .. ரெண்டுக்கும் மாசம் மாசம் நெறைய செலவு பண்ணனும் .. ரெண்டுமே நம்மகிட்ட இல்லாதவரைக்கும் வச்சிருக்கிரவண பாத்து பொறாமையா இருக்கும் .. நம்ம கைக்கு வந்த பின்னாடி நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணுனாலும் நம்மால ரெண்டையும் பிரிஞ்சி இருக்க  முடியாது... ரெண்டுமே நம்மகிட்ட இருக்கிறத  விட அடுத்தவன்கிட்ட இருக்கிறது எப்பவுமே நமக்கு அழகா தெரியும்... என்ன ஒரே ஒரு வித்தியாசம் கொஞ்ச நாள்ல செல்லு பழசா போயிடுச்சின்னு நாம அத தூக்கி எறிவோம் ,   நாம பழசா போயிட்டோம்னு  நம்மள அவ தூக்கி எறிவா              
   

ஆத்தா நான் காப்பி அடிச்சிட்டேன்

 
நேற்று நான் வெளியிட்ட பதிவு வேறு ஒரு பதிவரின் காப்பி என்று சில பின்னூட்டங்கள் வந்தன ... நன்றி அவர்களுக்கு , எனக்கு இந்த கான்செப்ட் எனக்கு வந்த ஒரு மெயிலின்  மூலமே தோன்றியது  ... அந்த மெயிலில் வந்த மூன்று pointகளை மட்டுமே நான் அப்படியே பயன்படுத்தி உள்ளேன் ... மற்றபடி அனைத்துமே என்னுடைய பாணியில் நான் யோசித்து எழுதியதுதான் ... இதற்க்கு முன்னர் எனக்கு மெயில் வந்த பதிவுகளை பதிவேற்றும் போதெல்லாம் இது எனக்கு மெயிலில் வந்த பதிவு என்று சொல்லித்தான் பதிவேற்றி இருந்தேன் ... இது என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் ... இதை நான் அப்படியே பயன்படுத்தாமல் என்னுடைய சொந்த சரக்குகளையும் சேர்த்து போட்டதால் அந்த வார்த்தையை இணைக்கவில்லை ... எனக்கு இது வேறு ஒரு பதிவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதிய பதிவு என்பது தெரியாது .. தெரிந்திருந்தால் இந்த பதிவையே கைவிட்டு இருப்பேன் ...  

நான் வேறு ஒரு பதிவரின் பதிவை அப்படியே பயன்படுத்தி இருக்கும் போதெல்லாம் அவரின் லிங்க் கொடுத்துதான் பயன்படுத்துவேன் ... ஆனால் இந்த பதிவின் மூலம் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன் , நானும் பிரபல பதிவர் ஆகிவிட்டு இருந்திருக்கிறேன் என்பது , என்னுடைய பதிவிலும் நல்ல பதிவுகள் இருக்கும் என்று நிறைய பேர் வந்து படித்து   விட்டு செல்கிறார்கர் என்று தெரிந்து கொண்டேன் ... சென்ற பதிவில் நான் யாரையும் ஏமாற்றவில்லை ... அப்படி நீங்கள் நினைத்து வருந்தினால் நான் மனமார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ... 

கடைசியாக அந்த பதிவின் உண்மையான (பாதி) சொந்தகாரர்,,, அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை , உங்கள் அறிவை நான் தெரிந்தே திருடவில்லை , இருந்தாலும் சென்ற பதிவில் எனக்கு வந்த ஓட்டுகளையும் பின்னூட்டங்களையும் அவருக்கே சமர்பிக்கிறேன்... 

(எனக்கும் பதிவுலகில் ஒரு சின்ன மரியாதை உருவாகி விட்டது என்று புரிய வைத்த நண்பர்களுக்கு நன்றி ...    நான் தெரிந்தே இந்த தவறை செய்யவில்லை , நான் இப்படியெல்லாம் சொல்வதினால் இந்த பதிவு முழுக்க முழுக்க வேறு ஒருவரின் பதிவும் கிடையாது , இதில் முக்கால்வாசிக்கும் மேல் என்னுடைய சொந்த கற்பனையும் உள்ளது ... )

Saturday, September 18, 2010

பிஸியா வேலை செய்வது போல நடிப்பது எப்படி?


நான் பதிவுலகத்திற்கு வந்து நூறு பதிவுகள் எழுதி விட்டேன் .. எனக்கு ஆரம்பத்தில் tamilish, tamilmanam போன்ற திரட்டிகள் பற்றி எதுவும் தெரியாது, அதனால் கொஞ்சம் கூட எனக்கு ஹிட்ஸ் கிடைக்கவில்லை ... நான் கடைசியாக எழுதிய நாற்பது பதிவுகளை மட்டுமே திரட்டிகளில் இணைத்து இருந்தேன் ... கொஞ்சம் கொஞ்சமாக என் ஹிட்ஸ் ரேட் எகிற தொடங்கியது ... இப்பொழுது அது முப்பதாயிரத்தை தாண்டி விட்டது... இதற்கெல்லாம் காரணம் என் பதிவுகளை ஆபீசில் இருந்து படிக்கும் என்னை போன்ற பதிவுலக வாசகர்கள் மற்றும் சக எழுத்தாளர்களே(ஹி ஹி நாங்களும் எழுத்தாளர் ஆகிட்டோம்ல ) ... இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று கேள்வி கேட்டு என் மனசாட்சி என்னை இரண்டு மூன்று நாட்களாக தூங்க விடவில்லை ... அதன் பாதிப்புதான் இந்த பதிவு... (ஆனானப்பட்ட ரஜினியே ரசிகர்களை பத்தி கவலை படுவதில்லை .. சுண்டக்கா பையன் நீ , உனக்கு ஏன் இந்த கவலை என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது ... என்ன பண்ண ஆண்டவன் நமக்கு இரக்க குணத்த இரக்கமில்லாம அதிகமா படச்சிட்டானே)

 நம்ம பதிவர்கள் பல பேருக்கு இருக்கிற பெரிய கவலையே அலுவலகத்தில் நாமளும் வேலை பார்க்கிறோம் அப்படின்னு மத்தவங்களை நம்ப வைப்பது எப்படி என்பதுதான்.... நான் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் எப்பொழுதும் வேலை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பதை போல மற்றவர்களுக்கு காட்டி கொள்ளும் சிலரை ரெண்டு மூன்று நாட்களாக நோட்டம் விட்ட பொழுது அவர்கள் உண்மையிலேயே வேலை பார்ப்பது இல்லை , சில நடவடிக்கைகளின் மூலமாய் மற்றவர்களை அப்படி நம்ப வைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்(ரொம்ப லேட் சார் நீங்க என்று நீங்கள் சொல்லுவது தெரிகிறது) ... இதோ அவர்கள் செய்யும் டகால்டி வேளைகளில் சில ... இது நம்மள போன்ற பல பேருக்கு யூஸ் ஆகும்னு நெனைக்கிறேன் ... 



டிக்கி sorry டிஸ்கி:  நீங்க உண்மையிலேயே ஆபீசில் உண்மையாக வேலை பார்க்கும் ஆசாமியா தயவு செய்து இதுக்கு மேல படிக்காதீங்க ... இத படிச்சி நீங்களும் வேலை பார்க்காமல் டகால்டி வேலைகளை கற்று கொண்டு ஸீன் போட ஆரம்பித்து விட்டால் ஆபீசில் எந்த வேலையும் நடக்காது ... பிறகு எல்லாரும் கூண்டோடு மாட்டி கொண்டு விடுவார்கள் ... நீங்க வியர்த்தா நம்ம உடம்புக்கு ஆகாது என்று வியர்வைக்கு பயப்படும் ஆசாமியா ... ம்ம் start music

1. பதிவுகளை படிக்கும் போது பதிவு சம்பந்தமான உணர்சிகளை உங்கள் முகத்தில் காட்டாதீர்கள் .... கொஞ்ச நேரம் படித்து விட்டு , ரொம்ப நேரமா உங்க மானிட்டரையே மொறச்சி பாத்துகிட்டு இருங்க ... அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி உங்க பைல் எடுத்து ஏதாவது ஒரு டாகுமெண்ட கையில வச்சிக்கிட்டு இன்னும் கொஞ்சம் நேரம் மானிடர மொறச்சி பாருங்க ... எல்லாரும் ஏதோ முக்கியமான டாகுமென்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு நெனப்பாணுக ... ஆனா நீங்க உங்களுக்கு பிடிச்ச பதிவ படிச்சிகிட்டு இருக்கீங்கன்னு யாருக்கும் தெரியாது ...

2. பதிவ படிக்கும்போது சில சமயம் உங்களையும் அறியாமல் சிரித்து விடுவீர்கள் , அது மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும் , எனவே அப்பப்ப தலையை சொரிந்து கொள்ளுங்கள் , பல்லை கடித்து கொண்டே ரெண்டு மூன்று வார்த்தை டைப் செய்து கொள்ளுங்கள் .. உங்கள் ஆபீஸ் போன் எடுத்து உங்கள் நம்பருக்கே கால் பண்ணுங்க ... ரெண்டு மூணு தடவ இப்படி உங்களுக்கே கால் பண்ணிட்டு போன் ரிசீவர கோபமா வையுங்க ... சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஏதோ முக்கியமான வேலையா யாருக்கோ போன் பண்ணி லைன் கெடைக்காம கோபத்துல இருக்கீங்க போலன்னு நெனச்சிகிடுவாணுக 

3. கம்ப்யூட்டர் மவுஸை அடிக்கடி யூஸ் பண்ணுனா நாம browse பண்ணிக்கிட்டு இருக்கோம்னு சுத்தி  இருக்கிறவனுக்கு டவுட் வந்திடும் .. அதனால ப்ரௌசெர் விண்டோ   maximize minimize பண்ணுரதகூட keyboard short cut keys யூஸ் பண்ணியே பண்ணுங்க .. அப்பத்தான் நாம ஏதோ கோடிங் டைப் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு எல்லாரும் நம்பிடுவாணுக 

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. சும்மா கம்ப்யூட்டர் மட்டும் நோண்டிகிட்டு இருந்தா எவனும் நம்பமாட்டான் ..அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. ரொம்ப நேரம் பதிவ படிச்சிட்டு அடுத்து சாப்பிட canteen  போகும்போது சொங்கி மாதிரி நடந்து போகாதீங்க ...எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம் எப்பவாது மீட்டிங் போகும்போது சும்மா வெறும் கைய வீசிக்கிட்டு போகாதீங்க ... கையில ஒரு பேனா மற்றும் நோட்டு புத்தகம் கொண்டு போவது வேலை பார்ப்பது போல நாம் ஸீன் போடுவதற்கு மிகவும் உதவும் ... பால்ம்டாப் இருந்தால் இன்னும் நலம் .. அது ஆபீசில் இருக்கும் பிகர்களின் கண்கள் உங்கள் மேல் திரும்ப வைக்க உதவும் ...

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம் மத்தியான சாப்பாட்டுக்கு மொத ஆளா போய் உக்காரகூடாது ... பத்து நிமிடம் கூடுதலாக சில பதிவுகளை படித்து விட்டு எல்லாரும் பாதி சாப்பாடு முடித்து விட்ட பின்னர் அவசர அவசரமாக சென்று கொஞ்சம் வேலை இருந்தது அதான் லேட் என்றுயாரும் உங்களிடம் காரணம் கேட்கா விட்டாலும் அனைவர் காதிலும் கேட்கும் படி சொல்லுங்கள் .. அதே போல்தான் டீ கொண்டுவந்து கொடுத்தவுடன் குடித்து விடாதீர்கள் ... கொஞ்சநேரம் அதை ஆறவைத்து விட்டு வேறு டீ கேட்டு வாங்கி குடியுங்கள் ... 

11 .வேலை நேரம் முடிந்தவுடனே ஆபீசில் இருந்து கிளம்பிவிட கூடாது ... குறைந்தபட்சம் ஒரு அரைமனிநேரமாவது சாட்டில் நண்பர்களுடனோ இல்லை பிகருடனோ பேசி விட்டு கிளம்புங்கள் ... இப்படி லேட்டா கிளம்பும்போது உங்கள் project leader கண்ணில் படுமாறு அவர் கேபின் வழியாக செல்வது நலம் ... 


இதையும் மீறி எப்பவாது நீங்க உருப்படியா ஒரு வேலை பார்த்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் ... அதை நோட்டிஸ் போர்டில் ஒட்டாத குறையாக எல்லாரிடமும் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள் .... அடுத்தவன் யாராவது உருப்படியாய் வேலை செய்து கொண்டு இருக்கும் போது நீங்களாக சென்று தெரியுமோ தெரியாதோ ஏதாவது அவனுக்கு ஐடியா கொடுங்கள் ... கடைசியில் அவன் செய்த வேலை சொதப்பி விட்டால் நான் அப்பவே சொன்னேன் இப்படி மாத்தி பண்ணுடான்னு .. நான் சொன்னத மாதிரி பண்ணிருந்தேனா இந்நேரம் உன் வேலை முடிந்திருக்கும் என்று கூசாமல் எல்லார் முன்னாடியும் பலியை அவன் மேல் தூக்கி போட்டு விடுங்கள் ... 

உங்களுக்கு கீழே சில அல்லகைகள் வேலை செய்தால் உங்கள் வேலைகளை எல்லாம் அவர்களிடமே கொடுத்து செய்ய சொல்லுங்கள் ... வேலை சரியாக முடிந்தால் மேலதிகாரியடம் கையெழுத்து வாங்குவதற்கு நீங்கள் மட்டும் தனியாக  சென்று வாங்குங்கள் ... அவரிடம் உங்கள் அல்லகைகள் யாரும் வேலை பார்க்கவில்லை என்றும் நீங்கள் தனி ஆளாக இந்த வேலையை முடித்ததாகவும் சொல்லி வையுங்கள் ...பின்னாளில் நீங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்காமல் போனால் மேலதிகாரி உங்கள் அல்லகைகளைதான் திட்டுவார் நீங்கள் escape ஆகி விடலாம் ...

மேல நான் சொன்ன ஐடியா எல்லாமே மற்றவர்கள் உங்களை நம்பும் வரைக்கும்தான் work out ஆகும்... உங்க மேல கொஞ்சூண்டு டவுட் வந்தாலும் மக்கா ரொம்ப ஆபத்து .. நீங்க கண்டிப்பா வேலை பாத்துதான் ஆகணும் ... சில பதிவர்கள் நடுவில் ஒரு மாதம் இல்லை ரெண்டு மாதம் பதிவே போடாமல் இருப்பார்கள் .. அதற்க்கு காரணம் இதுதான் ... அதை போன்ற ஒரு நிலைமை உங்களுக்கு வராமல் பார்த்து கொள்ளுங்கள் 


"தப்பே பண்ணாம எல்லாவற்றையும் சமாளிக்கிரவன் புத்திசாலி 
மாட்டிக்காம தப்பு பண்ணுறவன் அதிபுத்திசாலி..."

போனஸ் : ஒரு அழகான பெண்ணின் படம்  கீழே 


 மக்கா நீங்க ஒழுங்கா வேலை செய்யலேன்னு வச்சிகோங்க.. இப்படிதான் ஒரு அழகான பொண்ணு நீங்க இப்ப ஒக்காந்து இருக்கிற சீட்டுல உக்காந்து ஸீன் போட்டுக்கிட்டு இருப்பா .. என்ன அத பாக்கத்தான் நீங்க அந்த ஆபீஸ்ல இருக்க மாட்டீங்க  


Thursday, September 16, 2010

நண்பேண்டா

  

DISKI: இது நட்புக்குள் எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் பழகும் உண்மையான நண்பர்களுக்கான பதிவு 



நேற்று பாஸ் என்கிற பாஷ்கரன் படம் பார்க்க நேர்ந்தது ... படத்தோட trailor பார்த்த பொழுதே புரிந்து விட்டது  இந்த படம் சிவா மனசுல சக்தி படத்தோட இரண்டாம் பாகம் என்று... சிவா மனசுல சக்தி படம் எனக்கு மிகவும் பிடிக்கும் ..... அதற்க்கு காரணம் அதில் வரும் ஜீவா சந்தானம் நட்பு மற்றும் ஜீவா அனன்யா காதல் ... இந்த படத்தில் இரண்டாவது மேட்டர் மொக்கையாக  போனாலும் முதலாவது மேட்டர் செமையா வொர்க் அவுட் ஆகிருக்கு ... அதிலும் அந்த நன்பேண்டா வசனம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிருது .. காரணம் நாம எல்லாருமே அப்பப்ப கோபமாவோ இல்ல பெருமையாவோ நம்மளோட நண்பர்களை பார்த்து பேசுற வசனம் அது ... இந்த படம் வந்த நாளில் இருந்து இந்த வசனத்த வச்சி நெறைய மொக்கை SMSகள் எனக்கு வந்துகிட்டு இருக்கு... அதுல மரண மொக்கையா (except the last one which is really a nice one) சில SMSகள் இங்கே ...

நேர்முக தேர்வுல கலந்துகிட்டு வெற்றியோட திரும்புறப்ப ....
அப்பா : எவ்வளவுடா சம்பளம் இந்த வேலையில 
அண்ணன் : டெம்ரவரியா பெர்மனேன்டாடா?
அம்மா : வேல எங்கடா சென்னையா பெங்கலூராடா?

ஆனா நண்பன் : மச்சி எத்தன பிகர்டா உன்கூட சேந்து செலக்ட் ஆச்சி... உன்கூட ஒண்ணா வேலை பார்க்க 

என்ன வேல பாக்க போறோம்கிறது முக்கியம் இல்ல நம்ம கூட எத்தன பிகர் வேலை பாக்க போராங்கங்கிரதுதான் முக்கியம்னு நெனைக்கிற  நம்மோட பிஞ்சி மனச சரியாய் புரிஞ்சிகிட்டு இந்த கேள்விய கேக்குற நண்பன பாத்து நாம சத்தமா சொல்லலாம் "நண்பன்டா"   

ஒரு மாசமா இரவு பகலா கஷ்டப்பட்டு வேலை பார்த்து மொத மாச சம்பளம் வாங்குனவுடனே 

அப்பா   : காச செலவு பண்ணிராதடா ... திருப்தி உண்டியலுல போடுறதா     வேண்டி இருக்கேன் 
தங்கை : அண்ணா எனக்கு புது மாடல் சுடி ஒன்னு வாங்கி கொடுடா?
தம்பி : டேய் எனக்கு ஒரு பைக் வாங்கி கொடுடா?

ஆனா நண்பன் : மச்சி ஒரு குவாட்ட்டர் சொல்லேன் .. நாம ரெண்டு பேரும் சேந்து தண்ணி அடிச்சி என்ஜாய் பண்ணி எத்தன நாள் ஆச்சி

காசு கைல இருந்தா நமக்கு தண்ணி அடிக்க ஒரு கம்பெனி தேவப்படும்கிரத சரியாய் புரிஞ்சிகிட்டு இத சொல்லுற நண்பன பாத்து நாம பெருமையா சொல்லலாம் "நண்பேண்டா"

மாச கணக்குல நம்மளோட ஒண்ணா ஊர் சுத்தி நம்ம பர்ஸ  காலி பண்ணுன பிகர் நம்மள கழட்டி விட்டப்ப    
மத்தவன் : டேய் அவளோட சேந்து நீ ஓவரா சீன போட்டப்பவே தெரியும்டா அவ ஒரு நாள் உன்ன கழட்டி விடுவான்னு ... உனக்கெல்லாம் இது தேவையா?
ஆனா நண்பன் : மச்சி ECE departmentல சுதர்ஷினின்னு  ஒரு சூப்பர் பிகர் ஜாயின்ட்  பண்ணிருக்குடா.. இந்தாடா அவ செல் நம்பர் டிரை பண்ணு மச்சி உனக்கு கண்டிப்பா மாட்டும்  

தனக்கு பிகர் மாட்டலேனாகூட அத பத்தி கவலைபடாம நமக்கு பிகர் செட் ஆகணும்னு கவலைபடுற நண்பன பாத்து பெருமிதமா சொல்லலாம் "நண்பேண்டா"


  காலேஜ் லேப்ல பிகர்கூட சாட் பண்ணி மாட்டிகிட்டா என்கொரில 

பிகர் : சார் இவன்தான் என்ன ஒருவாரமா  follow பண்ணிகிட்டே இருக்கான் ... இப்படிலாம் என்  பின்னாடி சுத்துனா  ...HODகிட்ட போட்டு கொடுத்திடுவேன்னுதான் அவனுக்கு மெசேஜ் அனுப்புனேன் அவன்தான் விடாம மெசேஜ் மேல மேசெஜ்ஜா  அனுப்புனான் ...  

காலேஜ் லேப்ல பலான வெப்சைட் பாத்து மாட்டிகிட்டா என்கொரில 

நண்பன் : சார் நான் மட்டுந்தான் அந்த வெப்சைட் பாத்தேன் .. இவன் எனக்கு ப்ரோக்ராம்  சொல்லி கொடுக்கத்தான் எங்கிட்ட  வந்தான் ...    என்னை  வேணும்னா சஸ்பென்ட் பண்ணுங்க அவன விட்டிடுங்க  

சஸ்பென்ட் ஆனா நம்ம வீட்டுல நமக்கு சாப்பாடு கெடைக்காதுன்னு நல்லா தெரிஞ்ச நண்பன் நம்மள காப்பாத்தி விடுறப்ப அடிமனசுல இருந்து அழுத்தமா சொல்லலாம் "நண்பேண்டா "

ஆஸ்பத்திரியில இருக்கிற அப்பாவ காப்பாத்த லட்சக்கணக்குல  காசு தேவை படும் பொது 

சொந்தக்காரன் : தம்பி மனசு கஷ்டமாத்தான் இருக்கு ... ஆனா என்ன பண்ண இப்பதான் வீடு கட்டி முடிச்சிருக்கேன் .. கையில நயா பைசா கெடையாது .. மன்னிச்சிடு தம்பி 

நண்பன் : மச்சி .. நம்ம பசங்ககிட்ட எல்லாம் பேசி ரெண்டு லட்சம் ரெடி பண்ணிட்டேன்டா ... ஒரு பத்தாயிரம்தாண்டா குறையா இருக்கு ... டிரை பண்ணி பாத்தேன் மச்சி .. கடைசி வரை கெடைக்கவே இல்ல ஸாரிடா  மச்சி...

காசுக்காக வீட்டை பிரிஞ்சி  சென்னையிலயும் பெங்களூர்ரிலும்  , வாங்குற சம்பளம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே பத்தாம இருக்கும்போதும் தங்கச்சியோட கல்யாணத்துகாகவோ இல்ல தம்பிகளோட படிப்புக்காகவோ கஷ்டப்பட்டு சேத்து வச்சிருந்த காச கொஞ்சம் கூட யோசிக்காம நமக்கு தூக்கி கொடுக்கிற அந்த நண்பர்களை பார்த்து பெருமையா அழுத்தமா கண்கலங்க அடி மனசுல இருந்து சந்தோசமா சொல்லலாம் "நண்பேண்டா

Monday, September 13, 2010

My Sassy Girl(2001) - கண்டிப்பாய் அனுபவிக்க வேண்டிய காதல் கதை



DISC: இது முழுக்க முழுக்க காதலை ரசிப்பவர்கள் இல்லை காதல் செய்து கொண்டு இருப்பவர்களுக்கான பதிவு ... உங்களுக்கு காதல் மேல் பெரிதாய் மரியாதையோ ஈடுபாடோ இல்லை என்றால் இப்படியே கிளம்பி விடுங்கள் ... 
உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்....


கொரிய படங்களின் தீவிரமான ரசிகனாக மாறி விட்டேன் ... அந்த படங்களில் காட்டப்படும் மிக மென்மையான காதல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது... பொதுவாக நம் ஊர் காதல் படங்கள் எல்லாமே ஒரே templateதான் .. ஹீரோ பொறுக்கி ஹீரோயின் நன்றாக படிக்கும் மாணவி ... அவர் ஏழை இவள் பணக்காரி , அவர் கீழ் சாதி இவள் மேல்சாதி .. இப்படி வெவ்வேறு தளங்களில் இருக்கும் இருவருக்குள் காதல் வரும் ... அதுவும் ஹீரோவின் பொறுக்கித்தனத்தை பார்த்துதான் அவள் காதலிப்பாள் ... பின்னர் இந்த காதலுக்கு ஹீரோயினின் அப்பாவோ அண்ணனோ இடைஞ்சலாய் வர ஹீரோ தன முழு பலத்தையும் காட்டி அவர்களை தாக்கி அழித்து விட்டு அனாதையாய் ஆனால் சந்தோசமாய் நிக்கும் ஹீரோயினை கைபிடிக்க படம் முடியும் .. இடையில் ஹீரோயினின் அழகை பார்த்தவுடன் ஹீரோ கனவில் அமேரிக்கா சென்று விட அங்கு ஒரு குத்து பாட்டு ....   இப்படி எந்த ஒரு பிரேமிலும் காதலே இல்லாமல் ஒரு முழு "நீல"  படம் எடுத்து விட்டு காதலை யாரும் காட்டாத வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறேன் என்று வெக்கமே இல்லாமல் டிவியிலும் பத்திரிக்கையிலும் பேட்டி கொடுக்கும் அரைவேக்காட்டு இயக்குனர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய படம் "MY SASSY GIRL" 


இந்த  படத்தில் ஒரு காட்சி வரும் ... ஒரு ராணுவ வீரன் தற்கொலை செய்ய முயலுவான் ... அதற்க்கு அவன் சொல்லும் காரணம் தன்னுடைய காதலி வேறு ஒருவனுடன் ஓடி போய் விட்டாள் , நான் இறந்து விட்டாளவது அவள் தன்னுடைய தவறை நினைத்து வருந்துவாள் அவளுக்கு இததான் சரியான தண்டனை என்பான் ...  அவன் தற்கொலை பண்ணுவதை பார்க்க  அவன்  காதலியை கூட்டி கொண்டு வர வேண்டும் என்பதற்காய் ஹீரோவை பிடித்து வைத்து கொண்டு இவனையும் சேர்த்து கொன்று விடுவேன் என்று மிரட்டுவான்  ..  அந்த கட்டத்தில் ஹீரோயின் பேசும் வசனம் படு ஷார்ப் "நீ அவளை உண்மையிலேயே காதலித்திருந்தால் அவள் வேறு ஒருவனுடன் சந்தோசமாய் இருப்பதை நினைத்து நீ சந்தோசப்பட வேண்டும் , இப்படி அவளை பழி வாங்க வேண்டும் என்று நீ நினைத்தால் அவளை நீ உண்மையிலேயே காதலிக்கவில்லை என்று அர்த்தம் , நீ காதலிக்காத ஒருத்தி யாருடன் வாழ்ந்தால் உனக்கு என்ன?..."  இதை அப்படியே கொஞ்சம் மாற்றி jab we metடில்  பயன்படுத்தி இருப்பார்கள் ... ஹீரோ அவனுடைய அம்மாவை புரிந்து கொள்ள ஹீரோயின் பேசும் வசனமாக...

ஹீரோயினின் பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிளை பார்த்து இருப்பார்கள் ... அவள் ஹீரோவை கூட்டி கொண்டு அவனை சந்திக்க செல்லுவாள் ... அப்பொழுது ஹீரோ அவளுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் எதுவெல்லாம் பிடிக்காது .. அவள் அவனிடம் இருந்து எதை எல்லாம் எதிர் பார்ப்பாள் என்பதை பற்றி அந்த மாப்பிள்ளையிடம் தன காதலை மறைத்து விட்டு அழுகையை அடக்கிய சோகமான முகத்துடன்  கூறுவான் .... அதை கேட்கும் ஹீரோயின் அவன் தன்னை பற்றி முழுமையாய் புரிந்து வைத்துள்ளான் என்பதை உணர்ந்து , அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி ஹீரோவை தேடி ஓடுவாள் ... இந்த காட்சி அப்படியே சிவா மனசுல சக்தி படத்தில் வரும்... 

ஹீரோயின் தன்னை விட்டு பிரிந்தாலும் அவளை மறக்க முடியாமல் தன்னுடைய காதல் கதையை திரைக்கதையாக்கி ஹீரோ ஒரு படமாக எடுப்பான் ...இது எந்த தமிழ் படத்தில் சுடப்பட்டுள்ளது  என்று நான் சொல்ல தேவை இல்லை ...இப்படி இங்கே நீங்கள் ரசித்து பார்த்த பல காதல் காட்சிகள் இந்த படத்தில் பார்க்கலாம் ... காதல் படம் எடுக்கும் நம் எல்லா இயக்குனர்களையும் பெரிதும் பாத்தித்த படம் இது என்று நினைக்கிறேன் .... 



கதை இதுதான் , தன காதலன் இறந்து விட்ட துக்கத்தில் தினமும் தண்ணி அடிக்கும் ஹீரோயின்.... அவளுடன்   விதி வசத்தால்  இரண்டு முறை ஹோட்டல் ரூமில் தங்க நேரிடும் ஹீரோ ... தன பழைய காதலன்தான் இவனை தனக்கு காட்டி உள்ளான் என்று நினைத்து அவனை போலவே இவனிடம் பழகுகிறாள் ... ஆனால் இவளின் அடாவடித்தனத்தை நினைத்து பயந்து ஹீரோ இவளை விட்டு விலக பார்கிறான் , ஆனால் முடியவில்லை .... கடைசியில் வேறு வழி இல்லாமல் அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் ... போக போக ஹீரோ அவள் மேல் காதலில்  விழுகிறான் ஒரு கட்டத்தில் அதை அவளிடம் சொல்கிறான் .. அவளுக்கோ ஒரு விதமான குழப்பம் ... தனக்குள் இருக்கும் காதல் உண்மையிலேயே இவன் மேல் உள்ளதுதானா இல்லை தன பழைய காதலனை போல எண்ணி இவனிடம் பழகினதால் அவன் மேல் இருக்கும் காதலை இவன் மேல் இருக்கும் காதல் என்று தவறாக எண்ணுகிறோமா? என்று... அவள் ஒரு முடிவு செய்கிறாள் இருவரின் மனதில் இருப்பதையும் ஒரு லெட்டரில் எழுதி மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு , இரண்டு வருடம் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும் ... இரண்டு வருடம் கழித்தும் இந்த காதல் அப்படியே இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ... அதன் படியே செய்கிறார்கள் ... இரண்டு வருடம் கழித்து ஹீரோ அங்கு வருகிறான் .. ஹீரோயினை வரவே இல்லை .. அவள் என்ன ஆனால் , இருவரும் இணைந்தார்களா  இல்லையா என்பதே  இந்த படத்தின் கதை ...

படம்  முழுவதும் விதியையும் ஒரு கதாபாத்திரமாய் உலவ விட்டிருப்பார்கள் ... ஹீரோ ஹீரோயினை முதலில் பார்ப்பது ... அவனுக்கு அவள் மேல் காதல் வருவது .. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிவது ... இறுதியில் இருவரும் இணைவது இப்படி எல்லாமே விதியால்தான் நடப்பது போல திரைகதை அமைத்திருப்பார்கள் ...



ராணுவ வீரனுக்கு காதல் என்றால் என்னவெண்டு புரிய வைக்கும் காட்சி ... ஹீரோவை மலை உச்சியில் நிற்க வைத்து அவனிடம் ஹீரோயின் தன குழப்பத்தை அழுது கொண்டே சொல்லும் காட்சி , பிரிய முடிவு செய்ததும் railway stationலேயே பிரிந்து விட எண்ணி ஹீரோவை முதலில் வரும் ட்ரெயினில் ஏற்றி விட்டு தான் அடுத்த ட்ரெயினில் சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு ஹீரோ ஏறிய ட்ரைன் கிளம்பியதும் அவனை பிரிய முடியாமல் ஓடி சென்று அந்த ட்ரெயினில் ஹீரோயின் ஏற , அதே நேரத்தில் ஹீரோ ஹீரோயினை பிரிய முடியாமல் அவளுடனே வந்துவிட எண்ணி ட்ரைனை விட்டு விழுந்து பிளாட்பார்மில் இருந்து கொண்டே ட்ரெயினில் ஏறிய ஹீரோயினை பார்த்து அழும் காட்சி என்று படத்தில் நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைய உண்டு ...

அதே  போல வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளும் அதிகம் உண்டு ... ட்ரெயினில் ஒரு சிறுவன் தன அம்மாவின் லிப்ஸ்டிக் கொண்டு கிழித்த கோட்டை வைத்து இருவரும் விளையாடும் காட்சி பயங்கர குறும்பு ... ஹீரோவின் ஆசிரியரிடம் தான் கர்பமாக இருப்பதாக கூறி ஹீரோவை கிளாசில் இருந்து கூட்டி போய் அவனுடன் ஊர் சுற்றும் காட்சி செம யூத் புல் சீன...   
படம் முழுக்க பெரும்பாலும் இருவர் மட்டுமே .. சிறு வயதுதான் என்றாலும் உணர்ந்து செய்துள்ளார்கள். மொத்தத்தில்   நீங்கள் காதல் கதைகளை  விரும்பி  பார்க்கும் ரசிகர்  என்றால் நீங்கள் இதுவரை  அனுபவித்திராத  ஒரு புது உணர்வை இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்... 

My Sassy Girl - surely you feel good after watch this

Sunday, September 12, 2010

ஜாக் (எ) ஜாகீர் ஹுசைன்

"நண்பா அழகேந்திரனுக்கு  வெள்ளிகிழமை கல்யாணம் ,,, வந்திருடா " ஜாக்கிற்கு போன் பண்ணினேன்

"அவனுக்கு கல்யாணம்னா அவன கூப்பிட சொல்லுடா அப்பத்தான் வருவேன்

" எப்ப இருந்துடா உனக்கு மானம் ரோஷமேல்லாம் .... மச்சி ரெண்டு நாளைக்கு ஓசி சரக்கு, கறி சாப்பாடு .... வந்திடு "

"நண்பா அவனே மதிக்காம போன் பண்ண மாட்டேங்கிறான் , நான் வர முடியாதுடா " சொல்லி விட்டு கட் பண்ணி விட்டான் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"அழகு... அவனுக்கு போன் பண்ணுனேன் நீ கூப்பிட்டாத்தான் வருவானாம் "

"சரக்கு சாப்பாடு இருக்குன்னு சொன்னேலடா ... கண்டிப்பா வருவான் எதுக்கு பெங்களூருக்கு ஒரு போன் வெட்டியா பண்ணனும்"   

சொன்னது போலவே கல்யாணத்திற்கு முதல்நாள் வந்துவிட்டான் ஜாக் .... வழக்கம் போல ரெண்டுநாளைக்கு துவைக்காத சட்டை,  ஒரு அழுக்கு ஜீன்ஸ் , முதுகில் ஒரு ரீபோக் பேக் , ஒரு கூலிங் கிளாஸ் என்று ராஜேஸ் பட ஹீரோ போல இருந்தான் ...

அங்கு இருந்த பான்ஷாவிடம் "மச்சி  என் கண்ணு சிவந்திருக்கான்னு பாத்து சொல்லு மச்சி" என்று கண்ணாடியை கழட்டி விட்டு கேட்டான் ....
"ஆமா நண்பா  செவந்திருக்குடா "

"மச்சி நல்லா உத்து பாத்து சொல்லு மச்சி , எப்படி செவந்திருக்குன்னு"

அவன் கண்ணிற்கு அருகில் சென்று பார்த்து ,

"நல்லா செவந்து செக்க செவேல்னு இருக்கு மச்சி ... நேத்தே உனக்கு ஓசி குடி குடிக்க ஆள் மாட்டிட்டானா   "

"இல்ல மச்சி ரெண்டு நாளா எனக்கு MADRAS-EYE " கூலாக சொன்னான் "மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் இப்படிதான் எனக்கு பரப்பி விட்டான் ... அதான் நானும் ட்ரை பண்ணுனேன் ... நீ ரொம்ப நல்லவன் மச்சி"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"நண்பா அது என்னடா உன் பேக்குக்கு  வெளிய ஒரு COKE பாட்டில்?, நீ எப்பவுமே ட்ரைன்லயே withoutல்தான வருவ ... சரக்கடிக்கவே மிக்ஸிங்க்கு கக்கூஸ் குழாய் தண்ணிதான் ... இன்னைக்கு என்னடா காசு கொடுத்து COKEலாம் வாங்கி குடிச்சிருக்க ?"

"நண்பா வயித்தெரிச்சல கிளப்பாத  ? withoutல வரலாமேன்னுதான் ப்ளான்... கடைசில 500ரூபா கொடுத்து A/C பஸ்ல வர வேண்டியதா போச்சிடா மச்சி "

"தனியாவா வந்த?"

"இல்ல மச்சி கூட ஒரு பிகரும் வந்துச்சி"

"டேய் தில்லாலங்கடிடா நீ .. யாருடா அந்த பொண்ணு? உன் பழைய ஜிங்கிடி  சரோஜாவா? "

" இல்லடா .. இது வேற புதுசு .... அவதான் ஒண்ணா பஸ்ல போகலாம்னு  கூப்பிட்டா , பக்கத்து பக்கத்து சீட்டு சரி இன்னைக்கு நமக்கு நல்ல வேட்டதான்னு  நானும் சரின்னு சொல்லிட்டேன்... ஆனா கடைசி வரைக்கும் ஒன்னும் பண்ண முடியல ? எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ? தப்பா நெனச்சிடுவாலோன்னு பயமா இருந்துச்சி மச்சி ... எப்படி ஆரம்பிக்கலாம்னு  யோசிச்சிகிட்டே வந்தேன் மதுரை வந்திடுச்சி மச்சி ... பயங்கர கடுப்பாகிடுச்சி "

"சரி மச்சி இந்த கதையில கோக் எங்க வந்துச்சி?"

"மதுரை busstandல வந்து தாகமா இருக்குடா cool drinks வாங்கி கொடுடான்னு கேட்டா , நானும் போய் PEPSI வாங்கி குடுத்தேன்... எனக்கு PEPSI பிடிக்காது COKEதான் பிடிக்கும்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டா? சரின்னு கடைக்கு  போயிட்டு திரும்பி வந்து பாக்குறேன் ஆள காணோம் மச்சி?"

"ஏண்டா அவ அப்பன்காரன் வந்து கூப்பிட்டு போயிட்டானா?"

"சீ சீ .. அவ ஆளு வந்து கூப்பிட்டு போய்ட்டான் மச்சி"

"டேய் அப்ப அது உன் ஆளு கெடையாதா? "

"மச்சி உனக்கு தெரியாதா ? நமக்கு உள்ளூருலையே ஆளு கெடயாது ... silk board bus stopல லுக் விட்டு correct பண்ணுனேன் மச்சி ... என் அழகுல மயங்கி என்கூட வந்தான்னு சந்தோசமா இருந்தேன் மச்சி ... அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது , ஒரு பாதுகாப்புக்கு body guard மாதிரி என்ன யூஸ் பண்ணிருக்கா மச்சி"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------    

கல்யாணத்துக்கு வந்திருந்த  கல்யாண பெண்ணின் தொழிகளுக்கெல்லாம் பக்கத்தில் இருந்த MOTELலில் அறை எடுத்து கொடுத்திருந்த நண்பனிடம் சென்று
"மச்சி எங்களுக்கும் அதே MOTELதான?"

"இல்லடா  மச்சி நீங்க எல்லாம் என் வீட்டு மாடியில்தான் தங்க போறீங்க"

"என்னடா சொல்லுற .. இது ரொம்ப மோசமான ஏரியா? இங்க எப்படி அவங்கள தனியா தங்க வைக்க போற ...  அவங்க பாதுகாப்புதான் முக்கியம்  அதான் சொல்லுறேன் எங்களுக்கும் அங்கேயே ரூம போடு நாங்க அவங்கள பாத்துகிடுவோம்ல..."

"அவங்க பாதுகாப்பா அங்க இருக்கனும்கிரதுனாலதான் உன்ன எங்க வீட்டுல தங்க வைக்க போறேன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணம் முடிந்து அடுத்த நாள் மாப்பிளை வீட்டில் விருந்து ... மாடியில் தம் அடித்து கொண்டு இருந்த ஜாக்குடன்  புது மாப்பிளையும் தம் அடித்து கொண்டு இருந்தான் ...  அதை பார்த்த எங்கள் நண்பர் ஒருவர் 

"ஜாக் ... நீ தம் அடிக்கிரதுனாலத்தான் நண்பனும் அடிக்கிறான் ... அவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி .. இனிமேலாவது அவன திருந்த விடு ... தயவு செஞ்சி இனிமே அவன்கூட தம் அடிக்காத ... நீதான் இப்ப அவன கெடுக்குற ... நீ தம்  அடிக்கலைனா அவனுக்கு தம் அடிக்க வாய்ப்பே கெடையாது இங்க ... இப்ப அந்த பொண்ணுக்கு இவன் இங்க வந்து தம் அடிச்சிட்டு போனது தெரிஞ்சா  நம்மள பத்தி என்ன நெனைக்கும் அந்த பொண்ணு" என்று அவனை மானாவாரியாக திட்டிவிட வேகமாக  எழுந்த ஜாக் தன ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து 

"நண்பன் கல்யாணம் பண்ணி புது வாழ்க்கைய தொடங்க போறான் .... நான் இன்னும் வெளையாட்டு புள்ளையாவே இருக்கேன் ... நான் என்ன அவன கெடுக்கனும்னு நெனச்சா அவன தம் அடிக்க கூப்பிட்டேன் .. வெளையாட்டுதனமா கூப்பிட்டேன் ... நீங்க எல்லாம் கோபபடுறீங்க ... இன்னைக்கோட இந்த சனியன தல முழுகனும்" என்று அந்த சிகரெட் பாக்கெட்டை கசக்கி தூக்கி எறிந்தான் ...

அந்த சிகரெட் பாக்கெட்டை பெருமையாய் பார்த்த நண்பரிடம் 

" மச்சி நான் திருந்துனத இன்னைக்கு கொண்டாடனும் மச்சி ... ஒரே ஒரு பாக்கெட் கிங்க்ஸ் சொல்லேன்"  என்று சீரியசாய் கேட்ட அவனிடம் 

"டேய் இப்பதானட கசக்கி தூக்கி எரிஞ்ச " என்று கேட்க 

"மச்சி அது காலி பாக்கெட் மச்சி " என்று சொல்லி விட்டு தம் வாங்க கடைக்கு போய் விட்டான் கல்யாண மாப்பிள்ளையோடு   

LinkWithin

Related Posts with Thumbnails