Followers

Copyright

QRCode

Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்








சரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்,  திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது. எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும் வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள் விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு சென்றிருந்தோம்.. 


வரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்  அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய  ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்...  வண்டியில் ஓடிய டிவியில் எம்‌ஜி‌ஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன .  வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள் சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...



நாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில் அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர் நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும்  அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது ,  என்னை பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது  , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும் அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று  பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்.. 





என் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்‌டி‌டி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு  ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே  என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண்டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டி‌வி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக  என் வாழ்க்கையை லேசாக  உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது... 

சரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு எரிச்சல்தான் வந்தது...   அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி  கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம் ஊனத்திற்கு பதிலாக விபத்து ...  தில்லாலங்கடி என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன் நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும்  , அதுவே அந்த படம் நமக்கு பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன் குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும் பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்?






இந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும் பொது நம் ஞாபகத்தில் இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி...  விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில் உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே காரணம்...  நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை  மட்டும் சாகும் வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள் என்று நம் சமூகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபோகிறது..  

 அனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்... 



Monday, September 12, 2011

மங்காத்தாவும் நானும் , குரு பூஜைகளும் சில அப்பாவிகளும்





இதற்க்கு முன்னர் நான் அதிக முறை திரையரங்கிற்க்கு சென்று பார்த்த படம் படையப்பாதான் ... அந்த படம் வெளி வந்த காலகட்டம்தான்  எனக்கு சின்னதாக  மீசை அரும்ப  தொடங்கிய காலம்  , அதற்க்கு முன்பு நான் தியேட்டரில் சென்று  படம் பார்க்க வேண்டும் என்றாள் என்னுடைய மாமாக்கள் யாராவது அழைத்து சென்றால்தான் உண்டு ... ஒரு மாமா தீவிர ரஜினி ரசிகர் அவர் ரஜினி படம் எது வந்தாலும் என்னை அழைத்து சென்று விடுவார் ... தளபதி முதல் முத்து வரை அவர் புண்ணியத்தில்தான் எனக்கு தியேட்டர் தரிசனம்... அப்பொழுதெல்லாம் படம் பார்க்க போகிறோம் என்பதை விட , இடைவேளையில் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்பதுதான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும், அந்த ஐஸ் கிரீம் சுவைக்காகவே ரஜினி படம் வந்தால் எங்கள் மாமாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் .. அவரும் போனால் போகிறது என்று என்னை ஒரு முறை படத்திர்க்கு அழைத்து செல்வார்... அதே போல இன்னொரு மாமா கமல் ரசிகர் .. அவர் கமல் படம் எது வந்தாலும் அழைத்து சென்று விடுவார்... அப்பொழுதெல்லாம் ரஜினி படங்கள் அளவுக்கு கமல் படங்கள் எனக்கு ஈர்ப்பை கொடுத்ததில்லை , படத்தில் ரஜினியை யாராவது அடித்து விட்டாள் ,  அவர் எப்படியாவது  படம் முடிவதற்க்குள் அவர்களை அடி வெளுத்து விடுவார் ... நான் ரஜினி அவனை எப்பொழுது  அடிப்பார் என்ற ஆவலிலேயே தூங்காமல் படம் பார்ப்பேன் .. ஆனால் கமல் படங்களில் அவர் கடைசி வரை அடி வாங்கி கொண்டேதான் இருப்பார் ... அதனால் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் தூங்கிவிடுவேன் ,,, அப்படி  நான் தூங்கிய படங்களில் ஒன்று சதிலீலாவதி ... அதை என் மாமா பார்த்து விட , சதிலீலாவதியோடு கமல் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் ...


இப்படி எத்தனை நாளைக்குத்தான் படம் பார்க்க எங்கள் மாமாவையே நம்பி இருப்பது , நாமாக தனியாக படம் பார்க்க சென்றாள் என்ன என்று எனக்கு தோன்றிய பொழுது நான் பத்தாம் வகுப்பு சென்றிருந்தேன்... என்னுடைய நெருங்கிய நண்பனும் நானும் சேர்ந்து அதற்கான திட்டம் தீட்டினோம் எங்கள் ஊரில் அப்பொழுது வாலி என்று ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது , எங்கள் வகுப்பை சேர்ந்த சுரேஷ் என்பவன் அதை பார்த்து விட்டு அதன் கதையை ஏற்கனவே எங்களுக்கு சொல்லி இருந்தான்...  எங்களுக்கு கதை மீதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை , எப்படியாவது தனியாக ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் எங்களின் அப்போதைய இலக்கு , அவன் சொல்லிய இன்னொரு விஷயம்தான் இந்த படத்தை தனியாக பார்த்தே தீருவது என்று எங்களை முடிவே செய்ய வைத்தது , அது டேய் இந்த படத்துல ஹீரோ ஒரு பாட்டுல சிம்ரன் ஜாக்கெட்டுக்குள்ள கைய விடுராண்டா என்பதுதான் ...  விடுமுறை நாட்களில் வீட்டிற்க்கு தெரியாமல் செல்ல முடியாது என்பதால் , பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு செல்வது என்று முடிவு செய்து அதன்படியே ஒரு சுபயோக சுப தினத்தில் பள்ளிக்கு மட்டம் போட்டு வெற்றிகரமாக படமும்   பார்த்தாகி விட்டது ... அன்றிலிருந்து மனதிர்க்குள் பெரிய மனுஷ தோரணை வந்து விட ,எல்லா படங்களையும் தனியாகவே சென்று பார்க்க தொடங்கினேன் .... அப்படி பார்த்ததுதான் படையப்பா .

 முதல் தடவை பார்த்ததுமே  ரஜினியின் ஸ்டைல்  இரவு முழுவதும்  என்னை தூங்க விடவே இல்லை , கண்ணை மூடினால் விசுக் விசுக் என்று ரஜினி கையை சுற்றுவதுதான் ஞாபகம் வந்தது , எப்படா விடியும் என்று காத்திருந்து , அப்பாவின் பையில் இருபது ரூபாய் "ஆட்டைய" போட்டு , மறுநாள் படத்திர்க்கு சென்ற பின்னர்தான்  மனம் நிம்மதி அடைந்தது  , இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து பதிமூன்று நாள் அந்த படம் பார்த்தேன் ... இருந்தும் ரஜினியின் ஸ்டைல் எனக்கு அலுக்கவே இல்லை , கடைசியில் தினமும்  பையில் காசு குறைவதை பார்த்து உஷாரான என் அப்பா காத்திருந்து கையில் காசோடு என்னை பிடிக்க அன்றோடு முடிந்து போனது எனக்கும் படையப்பாவுக்கும் இருந்த உறவு , அதன் பின்னால் பல வருடங்களுக்கு பின் டிவியில் படம் போடும்பொழுதுதான் மீண்டும் எனக்கு படையப்பா தரிசனம் கிடைத்தது ....  




அந்த படத்திர்க்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்  அலுக்காமல் அடுத்து எப்பொழுது பார்க்கலாம் என்று படம் முடியும் போது நினைக்க வைக்கிறது இந்த மங்காத்தா.... இதுவரை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை .... டெய்லி தண்ணி அடிக்கிறதுதான் தப்பு , எப்பொழுதாவது இப்படி தினமும் படம் பார்ப்பது தப்பே இல்லை , நான் கடைசியாக பார்த்த படம் எத்தன்... அதன் பின்னர் planet of apes பார்த்தேன்... வேறு தமிழ் படங்கள் எதுவும் பார்க்க தோன்றவில்லை , அதர்க்கெல்லாம் சேர்த்துதான் இப்பொழுது மங்காத்தா பார்த்து கொண்டிருக்கிறேன்... அதே போல டான்ஸ் ஷோ , ஃபோன் போட்டு மொக்கை போடுறது என்று எங்கு திரும்பினாலும் மொக்கைகளாகவே தெரிந்ததால் , சில வருடங்களாக  டிவியே பார்க்க பிடிக்கவில்லை , ஆனால் சன் டிவியில் மங்காத்தா பற்றி எந்த நிகழ்ச்சி போட்டாலும் விளம்பர இடைவேளை முதற்கொண்டு பார்த்து விடுகிறேன்... என் மனைவியே அஜீத் மேல இவ்வளவு தீவிரமான ஈடுபாடு எப்படி உங்களுக்கு வந்தது என்று ஆச்சரியமாக கேட்கிறாள்... அந்த அளவுக்கு இப்பொழுது மங்காத்தா ஃபீவர் பிடித்து அலைகிறேன்...


நான் மட்டும் இல்லை , ஒவ்வொரு அஜீத் ரசிகனும் ஏன் அவர் மேல் இவ்வளவு வெறியோடு இருக்கிறான் என்பதற்க்கு ஒரு பதிவில் நண்பர் ஒருவர் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார் .. அஜீத் பற்றி நான் படித்த பதிவுகளில் மிக சிறந்த பதிவு இதுதான்... நீங்களும் படித்து பாருங்களேன் ...



அஜித்தை நான் ஏன் நேசிக்க ஆரம்பித்தேன் , எனக்குள் அந்த நேசிப்பு எப்பொழுது அளவு கடந்த பாசமாக மாறியது , எதுவரை நான் அந்த மனிதனை நேசிப்பேன் எல்லா கேள்விகளுக்கும் அந்த பதிவே பதில் சொல்லிவிட்டது ... அதன் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லுகின்றன ...


குருபூஜையும் அப்பாவி இளைஞர்களும் ..


நேற்று எங்கள் ஊரில் பெரிய கலவரம் ... ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த தலைவரின் குரு பூஜைக்கு அந்த ஜாதி இளைஞர்கள்  வண்டியில் கும்பலாக சென்று கொண்டிருந்த பொழுது வழியில் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் கைகலப்பு ஆகிவிட , லத்தி சார்ஜ் நடத்தி இருக்கிறார்கள்... அதனால் பெரிய கலவரம் உருவாகும் சூழல் உருவாகிவிட  ,நேற்று மதியம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடபட்டுவிட்டன... எங்கு திரும்பினாலும் மக்கள் பீதியுடனே இருந்தார்கள்... பொதுவாக எந்த  தலைவர்களின் குருபூஜை நடந்தாலும் எங்கள் ஊர் சிக்கி சின்னாபின்னமாகி விடும் .. காரணம் பசும்பொன் , பரமக்குடி இந்த இரண்டில் எங்கு   செல்ல வேண்டும் என்றாலும் அருப்புக்கொட்டையை தாண்டிதான் செல்ல வேண்டும்... குரு பூஜை நடக்கும் அந்த இரண்டு நாட்களில் சாதாரண மக்கள் வண்டியில் வெளியே எங்கும் செல்லவே முடியாது .... வரிசையாக டாடா சுமோவிலும் , வேனிலும் கொடியை கட்டி கொண்டு செல்லுவார்கள் ... அதிலும் வாகனத்தில் உள்ளே உக்கார இடம் இருந்தாலும் , வெளியே தொங்கி கொண்டேதான் செல்லுவார்கள்... இவர்களின் இந்த ஊர்வலத்தில் அந்த தலைவர்களுக்கு மரியாதை செய்ய செல்வதற்கான எந்த அறிகுறியும் இருக்காது .. மாறாக பாருங்கடா எங்க ஜாதி பலத்தை என்று அடுத்தவர்களுக்கு அவர்கள் ஜாதியின் கெத்தை காட்டுவதற்காக மட்டுமே இந்த குருபூஜைகள் நடக்கின்றன.... 


ரோட்டில் ஏதாவது ஒரு பெண் வண்டியில் சென்றாள் அவ்வளவுதான் விசில் அடிப்பதும்  , கெட்ட  வார்த்தையில் திட்டுவதுமாக அந்த பெண்ணை நாணி கூச செய்து விடுவார்கள் ... எனக்கு தெரிந்து அந்த தலைவர்களின் மேல் உண்மையிலேயே மரியாதை இருப்பவர்கள்  இப்படி அடாவடிதனம்  எதுவும் செய்ய மாட்டார்கள்.... நேற்று இரண்டு வாலிபர்கள் டாடா சுமோவின் கூரையில் அமர்ந்து கொண்டு சரக்கு அடித்து கொண்டே போகிற வருகிறவர்களை பார்த்து கத்தி கொண்டே சென்று கொண்டிருந்தனர் ... இதில் கொடுமை என்னவென்றால் போலீஸ்காரர்கள் வரிசையாக நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான்...  தமிழ்நாட்டில் ஜாதி பெயரை சொல்லி எண்ணவேண்டும் என்றாலும் செய்யலாம் என்னும் சூழல் உருவாகி விட்டது ... ஓட்டு அரசியல் நடக்கும் நம் நாட்டில் யாரும் இதை தட்டி  கேட்க போவதும் இல்லை... மாறாக இவர் ஆட்சியில் அவரும் , அவர் ஆட்சியில் இவரும் கலவரத்தை தூண்டி விட்டு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களின் அரசியல் விளையாட்டில் சிக்கி உயிரையும் வாழ்க்கையும் இழப்பது இவர்களால் மறைமுகமாக மூளை சலவை செய்யபட்ட குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த இந்த வாலிபர்கள்தான்.. நேற்று தமிழகம் முழுவதும் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்து இருக்கிறார்களாம்... அவர்கள் கண்டிப்பாக அந்த தலைவருக்காக வந்திருக்கமாட்டார்கள் , சரக்குக்காகவும் ஒருநாள் பொழுதுபோக்கிர்க்காகவும் வந்து உயிரை விட்டு இருக்கிறார்கள்... ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் குடுப்பதர்க்காக எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு அரங்கேற்றபட்ட கலவரம் இது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது , அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்... எது எப்படியோ ஜாதியை காட்டி ஏமாற்றுபவர்களின் வாய்ஜாலத்திர்க்கு ஏமாறாமல் இளைஞர்கள் என்று சொந்தமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அன்றுதான் இதுக்கெல்லாம்  விடிவுகாலம் பிறக்கும் ...    




Monday, September 5, 2011

என் ஆசானுக்கு நன்றிகள் - ஆசிரியர் தின சிறப்பு பதிவு




அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் , அனைவருக்கும் வாழ்த்து சொல்ல இது தீபாவளியா? இல்லை பொங்களா? இல்லை atleast காதலர் தினமா? என்று நீங்கள் சந்தேகபடலாம் , ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருக்கிறாலோ இல்லையோ? ஏதோ ஒரு விதத்தில் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இருப்பார்... எனவே இதுவும் எல்லோராலும் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு தினம்தான் ஆனால் ஏனோ இது ஆசிரியர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று ஒரு சின்ன வட்டத்திர்க்குல் சிக்கி விட்டது .... அன்னையர் தினம் , ஃபாதர்ஸ டே என்று எந்த டே வந்தாலும் எனக்கு எல்லா நண்பர்களிடம் இருந்தும் குறைந்தது இருபது எஸ்‌எம்‌எஸ்கள் வந்து குவிந்து விடும் , ஆனால் இன்று மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே அதுவும் என்னுடன் பணிபுரியும் சில ஆசிரியர்கள் மட்டுமே அனுப்பி இருந்தனர்... சரி விடுங்கள் இந்த நாகரீக உலகத்தில் ஒதுக்கபட்டால்தானே அது நல்ல விஷயம் ...

ஒரு காலத்தில் நம் நாட்டில் மிக சிறந்த மற்றும்  மதிப்பிற்குரிய பணி என்றாள் அது ஆசிரியர் பணிதான் , காரணம் அதற்க்குதான் நல்ல சம்பளம் வந்து கொண்டு இருந்தது அந்த காலகட்டத்தில் , ஆனால் இன்று நிலமையே வேறு , ஆசிரியர் பையன் மக்கு என்ற நிலை மாறி மக்கு பசங்கதான் ஆசிரியராக வர வேண்டும் என்ற நிலமை உருவாகி விட்டது ... காரணம் அதே சம்பளம்தான் , அதுவும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிலமை படு மோசம் , ஒருத்தன்  BE முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில் பணி கிடைத்து சென்று விட்டான் என்றாள் எடுத்தவுடனே மாதம் 50 ஆயிரம் , 60 ஆயிரம் என்று சம்பளம் வாங்கி விடுவான் , ஆனால் அதே மாணவன் அடுத்து ME இரண்டு வருடம் படித்து , பிறகு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிய தொடங்குகிறான் என்று வைத்து கொண்டால் அவன் அதே 60 ஆயிரம் சம்பளம் வாங்க குறைந்தது பத்து வருடங்கள் ஆகும் , நிலமை இப்படி இருக்க யார்தான் விரும்பி ஆசிரியர் பணிக்கு வருவார்கள்,

சரி சம்பளம்தான் கம்மியாக இருக்கிறது , வேலை பளு அதிகம் இல்லாமல் மன நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தால் அதுவும் நடக்காது , காரணம் நீங்கள் ஆசிரியர் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் விரும்பியபடி உங்களால் வாழ முடியாது... இன்றைய இளைஞர்களுக்கு என்ன என்ன சுதந்திரம் இருக்கிறதோ அது எல்லாமும் ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் எங்களை விட்டு சென்று விடும் , காதல் திருமணம் செய்ததால் நீயெல்லாம் எப்படி மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருப்பாய் என்று சொல்லி வேலையை விட்டு  தூக்கபட்ட பல ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்... எனக்கு ஒன்றாம் வகுப்பு எடுத்த ஸ்டெல்லா டீச்சர் முதல், இங்கு சென்ற வருடம் வரை என்னுடன் ஒன்றாக வேலை பார்த்த என் நண்பன் காஜா மைதீன் வரை இதற்க்கு பல உதாரணங்கள்.....

அடுத்து இன்றைய மாணவர் சமூதாயம் , ஒரு காலத்தில் ஆசிரியர்கள் என்றாள் மாணவர்களிடம் பயம் இருந்தது , அடுத்து அந்த பயம் போய் கொஞ்சம் மரியாதை இருந்தது , ஆனால் இன்றைய மாணவ சமூதாயம் பெரும்பாலும் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை , இப்பொழுதெல்லாம் நாங்கள்தான் அவர்களை பார்த்து பயப்பட வேண்டி இருக்கிறது , காரணம் நாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா நடந்து கொண்டோம் என்றாலும்  ஃபேஸ்புக் , கூகிள் பஸ் , ட்விட்டர் என்று எங்களை ஊடு கட்டி அடிப்பார்கள், அப்படிபட்ட ஊடு கட்டுதலில் அடிக்கபடும் கமெண்ட்களை சம்பந்தபட்ட ஆசிரியர் பார்க்க நேர்ந்தால் அவரின் நிலமை அவ்வளவுதான்...

ஆனால் இதை எல்லாம் மீறி நான் எப்பொழுதும் பெருமையாக சொல்லி கொள்ளுவேன் நான் ஒரு ஆசிரியன் என்று , எப்பொழுது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவன் அவனுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் ஃபோன் செய்து கூறினான் , ஸார் எங்க அப்பா , அம்மா முடிவு செய்தவுடன் என் சார்பா நான் இன்னும் யாருக்கும் சொல்லவில்லை ஸார் , முதல் முதலா நான் உங்ககிட்ட தான் சொல்லுறேன் என்று அவன் கூறிய பொழுது பெருமையாக இருந்தது .. காரணம் அந்த பையன் கல்லூரியில் படித்த பொழுது மோசமான குடும்ப சூழ்நிலைகளால் விரக்தி அடைந்து இருந்த சமயம் , நான் அவனுக்கு வகுப்பு எடுக்கும் போது வகுப்பில் பொதுவாக பேசிய ஒரு சில விசயங்களால் என் மேல் ஒரு ஈர்ப்பு வந்து , என்னிடம் வந்து அழுதான் , அதன் பின்னர் அவனுக்கு பல சமயங்களில் ஒரு வழிகாட்டியாய் இருந்து , படிப்பு  விஷயத்தில் அவனுக்கு நிறைய உதவிகள் செய்தேன் .. அவனும் நல்ல படியாக படித்து முடித்து சென்றான் , கடைசியாக ஸார் நீங்க இல்லை என்றாள் நான் கண்டிப்பாக படித்தே இருக்க மாட்டேன் ஸார் என்று சொல்லிவிட்டு சென்றான் ... இதோ இன்று மூன்று வருடங்கள் ஆகியும் அதே மாரியாதையுடன் அவன் பேசிய பொழுது சந்தோஷமாக இருந்தது ... இப்படி ஒவ்வொரு  ஆசிரியரும் ஏதாவது ஒருவகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து இருப்பார்கள் , அந்த மானவர்கள்தான் நாங்கள் சம்பாதித்த விலைமதிக்க முடியாத பொக்கிசங்கள்...


அப்படி என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த ஒரு ஆசிரியருக்கு நன்றி செலுத்தவே இந்த பதிவு... அவர் நான்  முதுகலை படித்த கல்லூரியின் துறை தலைவர்... இளங்கலை படித்து முடித்து அங்கு ஆடிய ஆட்டத்தால் குறைவான மதிப்பெண்களே பெற்று , வேலைக்கு செல்ல முடியாமல் இளங்கலை பயிலும் முடிவுக்கு வந்திருந்த சமயம் அது.... BE படிக்கும்போதாவது அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோமோ என்னும் பயம் இருக்கும் , ஆனால் ME படித்த பொழுது எப்படியும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று விடலாம் என்னும் நம்பிக்கை இருந்தது , இதனால் கல்லூரியில் படிப்பை விட ஆடிய ஆட்டம்தான் அதிகம், கல்லூரிக்கு சென்ற முதல் வாரத்திலேயே என்னை போலவே யோசிக்கும் ஒரு பெண்ணின் நட்பு கிடைத்தது , அதன் பிறகு கல்லூரி வாழ்க்கை ஒரே மஜாவாகி போனது ... நான் படித்த கல்லூரி ஒழுக்கத்திர்க்கு பெயர் போன கல்லூரி , அங்கு காதல் என்றாலே மரண தண்டனைதான் , உடனே கல்லூரியை விட்டு தூக்கி விடுவார்கள் , இருந்தாலும் காதலுக்கு மூளை கிடையாதே நான் அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் காதல் வானில் சிறகடித்து பறந்து திரிந்தேன் , ஒரு நாள் மாலை வேளையில் நானும் , அவளும் தனியாக எங்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம் , அதை எங்கள் ஆசிரியர் ஒருவர் பார்த்து விட்டு எங்கள் HODயிடம் போட்டு கொடுத்து விட , அடுத்த நாள் enquiry HOD அறையில் , 


உள்ளே சென்றவுடன் வாங்க ராஜா வந்து உக்காருங்க என்று தனக்கு எதிரில் ஒரு சேரில் உக்கார சொன்னார்... நான்  வெட்டுவதற்க்கு முன்னாள் மாலை போட்டு மரியாதை செய்யபடும் ஆட்டை போலவே உணர்ந்தேன், ஆனால் அவரோ தம்பி காதல் செய்றதுங்கிரது உன்னோட உரிமை , நான் தப்பு சொல்லமாட்டேன் , ஆனால் படிப்புக்கு உன்னோட காதல் தடையாக இருந்து விடாமல் பார்த்துக்கொள் , நம்முடைய கல்லூரிக்கு என்று சில விதிமுறைகள் உண்டு , உன்னோட காதலை கல்லூரிக்கு வெளியில் வளர்த்து கொள் , ஆனால் படிப்பையும் விட்டு விடாதே , நீ வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் , உன் காதலிலும் ஜெயிக்க வேண்டும் , என்னுடைய மாணவர்கள் இரண்டு பேர் வாழ்க்கையில் ஜெயித்து புரிதலோடு இணைகிறார்கள் என்றாள் எனக்கு சந்தோசமே , ஆனால் கல்லூரிக்கு உள்ளே இதை நான் அனுமதிக்க முடியாது , மற்றபடி உன் காதல் ஜெயிக்க என் வாழ்துக்கள் என்று பேசி முடித்தார் ... என் வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி பேசும் ஒரு ஆசிரியரை நான் பார்க்கிறேன் , அப்பொழுது தான் தீர்க்கமான முடிவு எடுத்தேன்  நாம் காதலிலும் ஜெயிக்க வேண்டும் வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்று...

அதன் பின்னர் எனக்கு அவரின் மேல் பெரிய மரியாதை ஏற்பட்டாலும் , மாணவ சமூதாயத்துக்கே உரிய இவர் ரொம்ப நல்லவரா இருக்காருடா , நாம என்ன தப்பு பண்ணுனாலும் கண்டுக்க மாட்டாருடா என்ற  மன நிலையில்தான் இருந்தேன் , அதன் பின்னர் துணிந்து தவறு செய்ய ஆரம்பித்தேன்... அதை எல்லாம் அவர் கவனித்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யவில்லை ...

சரியாக அடுத்த செமெஸ்டெர் , ஒரு நாள் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து ப்ராஜக்ட் வேளையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம் , அப்பொழுது என் நண்பன் ஒருவன் மாமியுடன் சல்லாபம் என்னும் ஒரு கில்மா கதையை டவுன் லோட் செய்து படித்து கொண்டிருந்தான் , என்னை கூப்பிட்டு மச்சி இங்க பாருடா இவனுங்க firewall  லச்சனத்தை என்று அவன் ஃபயர்வாலை பிரேக் செய்து அதை  டவுண்லோட் செய்த விதத்தை எனக்கு செய்து காட்டினான் , ஆனால் அந்த ஆய்வகத்தின் technician நாங்கள் படித்து கொண்டிருந்த கில்மா கதையை பார்த்து விட்டு எங்கள் HOD யிடம் போட்டு கொடுத்து விட , மீண்டும் இன்னொரு அசிங்கமான காரணத்திற்காய் அவரிடம் enquiry , அதற்க்கு இரண்டு நாட்கள் முன்னால்தான் ECE டிபார்ட்மெண்ட்டில் இரண்டு மாணவர்கள் இதே காரணத்திர்க்காய் டிஸ்மிஸ் செய்யபட்டு இருந்தார்கள் , எங்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை எல்லாமும் நடுங்கி கொண்டு இருந்தது , ஆனால் அவரோ இம்முறையும் கொஞ்சம் கூட கோபமேபடாமல் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை கூறினார் , 

அவர் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த புதிதில் ஒரு திரையரங்கில் ஆங்கில கில்மா படம் பார்க்க சென்றிருக்கிறார் ,அப்பொழுது இடைவேளையில் அவருடைய மாணவன் ஒருவன் முன்வரிசையில் அமர்ந்து இருந்தவன்,இவரை பார்த்து ஸார் குட் ஈவினிங் ஸார் என்று வணக்கம் வைத்திருக்கிறான் , குற்ற உணர்ச்சியில் அன்றிலிருந்து  கில்மா படம் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து விட்டேன்  என்று கூறினார் , personal lifeல நாம எவ்வளவு அயோக்கியனாகவும் இருக்கலாம் , ஆனால் அது நம்முடைய professional lifeல கொஞ்சம் கூட reflect ஆகிவிட கூடாது என்னும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விசயத்தின் மூலம் எங்களுக்கு உணர்த்தினார் , இவ்வளவு வெளிபடையாக பேசும் ஒரு ஆசிரியரை நான் அன்றுதான் முதல் முறையாக சந்தித்தேன்...


அதன் பிறகு என்னுடைய ஃபைனல் செமெஸ்டெர் ப்ராஜக்ட்டுக்கு அவர்தான் கைட் ... வேறு ஒருவர் என்றாள் இப்படி ஒருவனுக்கு நாம் ஏன் நேரத்தை ஒதுக்கி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று என்னை ஒதுக்கி இருப்பார்கள் , ஆனால் அவரோ பல நாட்கள் இரவு ஒன்பது மணிவரை என்னுடன் இருந்து எனக்கு ஹெல்ப் செய்தார் , ஆரம்பத்தில் நான் ஒழுங்காக செய்தாலும் போக போக சோம்பேறிதனத்தால் வேலை எதுவும் செய்யாமல் ஒப்பேத்த ஆரம்பித்தேன் , ஆனால் அவரோ கொஞ்சம் கூட கோபபடாமல் வாரம் ஒருமுறை என்னை கூப்பிட்டு , ஸ்டேட்டஸ் தெரிந்து கொண்டு , கொடுத்த வேலையை முடிக்கவில்லை என்றாலும் அடுத்த வாரத்திர்க்குள் முடித்து விடு  என்று சிரித்து கொண்டே சொல்லுவார் , ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு ஆர்வம் வந்துவிட கடகடவென வேலை பார்த்து ரிசல்ட் கொண்டு வந்துவிட்டேன் , எனக்கே ஆச்சரியம் , கடைசியில் ப்ராஜக்ட் டெமோவில் 600 க்கு 595 மதிப்பெண்கள் கொடுத்து என்னை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்ய வைத்தார்... அதுவரை நம்ம படிச்ச படிப்புக்கு ஏதாவது ஒரு சின்ன கல்லூரியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டி விடலாம் என்னும் எண்ணத்தில் இருந்த என்னுள் நாமும் நல்ல கல்லூரிக்கு சென்று வேலை பார்க்க முடியும் என்னும் நம்பிக்கை வந்தது ... நான் படித்த கல்லூரிக்கே என் resume அனுப்பி வைத்தேன் , என்னுடைய நண்பர்கள் அனைவரும் கேலி செய்தாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது ...

சரியாக ஒருவாரத்தில் HOD எனக்கு ஃபோன் செய்து தம்பி உனக்கு இன்டர்வியூ கார்ட் அனுப்பி இருக்கோம் , அடுத்த வாரம் இன்டர்வியூ வந்து அட்டென்ட் பண்ணு என்று கூற என்னால் நம்ப முடியவில்லை , இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே ஃபுல் ஸ்டாப் வைக்கப்பட வேண்டிய என் கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு கமா போட்டு விட்டார் என் HOD , இன்டர்வியூவில் அவரும் , பிரின்சிபாலும் கல்லூரி கரஸ்பாண்டென்டும் அமர்ந்து இருந்தனர் , என்னை ஒரு கிளாஸ் எடுக்க சொன்னார்கள் , எனக்கோ கை கால்கள் எல்லாம் நடுங்குகிறது , வாய் உளறுகிறது , கையில் மார்க்கர் பிடித்து போர்ட்டில் எழுத முடியவில்லை , ஒரு நிமிடம் கூட கிளாஸ் எடுக்கவில்லை , correspondent நிறுத்த சொல்லிவிட்டார் , அவர் HOD யை பார்த்து உங்க ஸ்டூடண்ட்டா என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்ல , என்னை வெளியே சென்று வெயிட் செய்ய சொன்னார்கள் , எனக்கோ கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை , சிறிது நேரத்தில் வெளியே வந்த HOD நல்ல வேளை  தம்பி , அவர் என்கிட்ட உன்னை பற்றி கேட்டார் , நான் பையன் ரொம்ப டாலெண்ட்டான பையன் என்று சொன்ன பின்னாடிதான்  சரி என்று job ஆர்டரில் கையெழுத்து போட்டார் , நீ நாளைக்கு வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிடலாம் என்று சொல்லி விட்டு என் நன்றியை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டார் ... கமா போட்டு தொடரபட்ட என் கல்லூரி வாழ்க்கையின் கடைசியில் ஆச்சரிய குறி .... ஆமாம் என்னுடன் படித்த எல்லா மாணவர்களுக்கும் நான் அங்கு வேலைக்கு சேர்ந்தது பெரிய ஆச்சரியம்தான்...

 நான் கல்லூரிக்கு சென்று படித்த அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூலமாய் எனக்கு நிறைய மாற்றங்கள் , வேறு யாராவது அந்த பதவியில் இருந்து இருந்தால் நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருந்திருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை  , நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்தோஷமான  வாழ்க்கைக்கு முழு காரணமும் நீங்கள்தான் ... ஆசிரியர் தினம் அன்று இந்த பதிவின் மூலமாய் உங்களுக்கு நன்றி சொல்லி நான் பட்ட கடனில் கொஞ்சமேனும் கழித்து கொள்கிறேன் ஸார் .... 








  

Sunday, September 4, 2011

தறுதலைகளின் வாந்திக்கு தல ரசிகனின் எதிர்வாந்தி


மங்காத்தா பற்றி எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன் , ஆனால் சும்மா இருந்த என்னை சொறிஞ்சி விட்டது ஒரு தறுதலை ரசிகனோட  வாந்தி , இது முழுக்க முழுக்க ஒரு தல ரசிகனாக நான் ஆடியிருக்கும் வெறியாட்டம் , அது எங்களை திட்டுவதற்கு கவுண்டமணியின் பின்னால் ஒழிந்து கொண்டு அந்த கோஸ்டியின் குணத்தை அப்பட்டமாய் காட்டி இருக்கிறது ஆனால் நான் அவனுங்களை திட்ட  யார் பின்னாடியும் ஒழியபோவதில்லை , நேருக்கு நேர்தான் நம்ம பாலிசி ....

அப்பறம் யாராவது நான்   நல்லபையன் என்னும் (தப்பான) எண்ணத்தோடு இருந்தால் தயவு செய்து இதோடு வாசிப்பதை நிறுத்தி விட்டு சென்று விடுங்கள் , (நீங்க எனக்கு ரொம்ப முக்கியம் ) நாம் அடுத்த பதிவில் சந்திப்போம்...

அந்த பதிவில் அது படத்தை பற்றி மட்டமாக விமர்சனம் செய்திருந்தால் நான் படித்து  சிரித்து  விட்டு சென்றிருப்பேன் ... பன்றிகள் எப்பொழுதும் சாக்கடையில்தான் புரண்டு திரியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ... ஆனால் அதை மீறி அந்த பதிவில் எடுக்கப்பட்டு இருக்கும் சிலவாந்திகள் எங்கள் மீது தெரிதததால்தான் இந்த பதிவு எழுதவேண்டியதாகி விட்டது ...

முதலில் தலயின் நரைத்த தலை கெட் அப் பற்றி ஒரு வாந்தி எடுக்கப்பட்டு இருந்தது , அதை பார்த்த பொழுது அதுகளின் மேல் எனக்கு பரிதாபம்தான் வந்தது ... பின்ன நாலைந்து வயாக்கிரா மாத்திரை போட்டும் எழுந்திரிச்சி  நிக்காத ஒருத்தனுக்கு தினமும் புது புது பிகர் கூட மேட்டர் பண்ணுற ஒருத்தன் மேல் வரும் பொறாமைக்கு ஒப்பானது இவனுங்களின் பொறாமை... இப்படி அடுத்தவனை பார்த்து பொறாமை பட்டால் மட்டும் உங்களுக்கு எந்திரிச்சி நின்னுடாது ....தானா எந்திருக்கைலைனா,  அனிமேட்ட்ரானிக்ஸ் (rise of the apes ) மாதிரி ஏதாவது டெக்னாலஜி ட்ரை பண்ணி பாருங்க அப்பவாவது கொஞ்சமாவது எந்திருக்கிதான்னு பாப்போம்...

அடுத்த வாந்தி இவ்வளவு பெரிய opening வந்ததுக்கு காரணம் போட்டிக்கு யாரும் இல்லையாம் , விடுமுறை தினத்தில் வந்து விட்டதாம் , இவனுங்க படம் வில்லுன்னு ஒன்னு இதே மாதிரி விடுமுறை தினத்தில் போட்டிக்கு யாரும் இல்லாமல் வந்தது அவனுங்களுக்கே மறந்து விட்டது போலும் ... அப்ப காட்டி இருக்க வேண்டியதுதான இந்த ஒபெநிங்  , சரி அவனுங்க 50 ஆவது படம் சுறா வும் இதே மாதிரி போட்டிக்கு யாரும் இல்லாமல் தனியாக இதே சன் picture வெளியீட்டில் வந்ததுதானே , அப்பவாவது காட்டி இருக்கலாமே இந்த ஒபெநிங் ,என்னமோ இவனுங்க படம் ரிலீஸ் ஆனா போதெல்லாம் போட்டிக்கு ரஜினியும் , கமலும் ஆளுக்கு ரெண்டு ரெண்டு படம் எடுத்து விட்ட மாதிரி பேசுறானுக ...  உனக்கு இம்மாம் பெருசா எந்திருச்சி நிக்க காரணம் நீ ஜட்டி போடல , தடை எதுவும் இல்ல  அதான் இம்மாம் பெருசா எந்திரிச்சி நிக்குது , எனக்கு எந்திரிக்காம போனதுக்கு காரணம் நான் ஜட்டி போட்டதுதான்னு சொன்னா ஊர் நம்புமா சார்... 

அடுத்த வாந்தி  தல சிரிக்கிறது நல்லா இருக்காம் , ஆனா அதையே அடிக்கடி காட்டுறது சகிக்கலையாம் ... நீங்க தட்டுல தலப்பாக்கட்டு பிரியாணிய ரசிச்சி சாப்பிட்டு கிட்டு இருக்கிறப்ப , ஏண்டா இப்படி பீயை அள்ளி தின்னுரீங்கன்னு , எப்பவுமே பீயை மட்டும் தின்னுற ஒரு நாய் வந்து சொன்னா எப்படி இருக்கும் உங்களுக்கு , எங்கடா கல்ல காணம்னு தேடுவீங்கள்ள , இந்த வாந்தியை பாத்ததும் , எனக்கு அப்படிதான் இருந்திச்சி... 

கடைசியா உனக்கு தறுதலைய ரொம்ப பிடிக்கும்னா , எங்க தறுதலை மாதிரி ஒரே ஸ்டெப்ப போட்டு அம்பது படத்தை ஒப்பெத்துங்கடா பாக்கலாம் , பைல்ஸ் வந்தது மாதிரி பஞ்ச் டயலாக் பேசுங்கடா பாக்கலாம், சுகர் பேசன்ட் மாதிரி மேக் அப் போட்டு வாங்கடா பாக்கலாம் , அழ சொன்னா சிரிங்கடா பாப்போம் , சிரிக்க சொன்னா அழுவுங்கடா பாப்போம் , இப்படி ஏதாவது சொல்லிட்டு போய்கிட்டே இரு , அதவிட்டுட்டு தல படத்தை பத்தி ஏதாவது பேசுன , பாம்ப பிடிச்சி ஜட்டிக்குள்ள உட்டுடுவேன் .... 

இந்த பதிவு ரொம்ப கவுஜையா இருக்கு , ஒரு "பிரபல பதிவரை" நீ இப்படிலாம் பேசலாமான்னு யாராவது நாட்டாமைகள் சொம்பை தூக்கிகிட்டு கழுவி  விட இங்கு  வரும் எண்ணத்தோடு இருந்தால்,முதலில் அங்கு சென்று அந்த வாந்தியை கழுவி விட்டு வரும்படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்... 

அப்பறம் நான் பின்னூட்டத்தை மூடி வைக்கவில்லை , மட்டருத்தலும் கிடையாது , ஒருகை பார்த்து விடலாம் என்று யார் வந்தாலும் மாறு கை மாறு கால் பார்க்க நான் ரெடி ..



Friday, September 2, 2011

மங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு


டிராவிட்டும் , சேவாக்கும் ஒபெனிங்க் ஏறங்கி , ஆரம்பத்தில இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேவாக் தன்னோட அதிரடிய ஏத்திக்கிட்டே போக , இன்னொரு பக்கம் டிராவிட் விக்கெட் விழாம டீம ஸ்டெடி பண்ணிக்கிட்டு இருக்க , பாதி ஆட்டம் முடிஞ்சதும் 50 அடிச்ச சேவாக் ,அடுத்து முழுக்க முழுக்க ஆட்டத்த தன்னோட கண்ட்ரோளுக்கு கொண்டு வந்து ருத்திரதாண்டவம் ஆடுனா எப்படி இருக்கும் , அதுவும் கடைசி பத்து ஓவரில் சேவாக்கோட யுவ்ராஜும் சேர்ந்து பட்டைய கெளப்புனா அந்த கேம் எப்படி  இருக்குமோ அப்படி இருக்கு இந்த மங்காத்தா.... இதுல சேவாக் அஜீத் , டிராவிட் மத்த கதாபாத்திரங்கள் , யுவ்ராஜ் அர்ஜூன் ... இவங்க எல்லாரும் அடிச்சி விளையாட அருமையான பிட்ச் அமைத்து கொடுத்திருக்கிறார் வெங்கட்.... வெங்கட் பிரபுவின் இந்த கேம் பல சாதனைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த கேமின் மேன் ஒஃப் தி மாட்ச் சந்தேகமே இல்லாமல் தலதான் .. அந்த சேவாக் இன்னும் டபுள் செஞ்சுரி போடவில்லை , ஆனால் தல இந்த படத்தில் அட்டகாசமா டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார் .... அதுவும் இடைவேளைக்கு அப்புறம் கிடைக்கிற பால் எல்லாம் சிக்ஸெரும் , போருமா பறக்க வைத்திருக்கிறார் தல .. சந்தேகமே இல்லாமல் தலையோட கேரியரில் வாலிக்கு அடுத்து இரண்டாவது பெஸ்ட் performance இந்த விநாயக் மாதவன்தான் ... வாவ் வாவ் வாவ் .... எத்தனை நாள் ஆகிவிட்டது தலையை இவ்வளவு ஆக்டிவாக திரையில் பார்த்து ... எங்க இருந்தார் இப்படி ஒரு  தல இவ்வளவு நாளா?



அம்பதாவது படத்தில் முழுக்க முழுக்க எதிர்மறையான வேடம் , நரைத்த முடியுடன் தோன்றியிருக்கிறார் , யாருமே செய்ய தயங்கும் விஷயங்கள் இவை இரண்டும் , திரைக்கு பின்னால் படம் வெளிவருவதற்க்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் தன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார்... இந்த தைரியம் வேறு யாருக்கு வரும்... அதான் தலையின் இந்த தைரியத்திர்க்கு அவர் ரசிகர்கள் நாங்கள் அடித்திருக்கும் ராயல் சல்யூட்தான் படத்திர்க்கு கிடைத்த இமாலய ஒபெனிங்க் ... king of openingன் king of opening இதுதான் .. இனிமேல் எவனாவது நான்தான் இனி king of opening என்று சொல்லுங்கடா பாப்போம் என்று அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் தல  ரசிகர்கள் ... முதல் நாள் மட்டும் இல்லை இன்று வரை ஹவுஸ் ஃபுல்...   ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்திருக்கிறார் தல .. ஆமாம் அரங்கில் உக்கார மட்டும் இல்லை நின்று கொண்டு பார்க்க கூட இடம் இல்லை ... நேற்று இரவில் மூன்றாவது முறையாக படம் பார்க்க சென்றிருந்தேன் ... தியேட்டர் ஒனர் தம்பி தயவு செஞ்சி புரிந்து கொள்ளுங்கள் உள்ள நிக்க  கூட இடம் இல்லை , போயிட்டு நாளைக்கு வாங்க என்று எனக்கு முன்னர் வந்து வரிசையில் நின்று கொண்டு இருந்த ரசிகர்களிடம் கெஞ்சி கொண்டு இருந்தார் .... அந்த வரிசையில் மட்டும் நூறு பேர் இருந்தார்கள் ... இப்படி படம் பாக்க வந்தவர்களை போய்ட்டு நாளைக்கு வாங்கப்பா என்று எங்கள் ஊரில் இதுவரை சொல்லியதே இல்லை...  முதல் இரண்டு  நாளில் எங்கள் ஊர் தியேட்டரில் மட்டும் வந்த கலெக்ஷன் 7 லட்சதிர்க்கும் மேல் ... இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லபடும் கோ படம் அம்பது நாட்கள் தாண்டி வசூலித்த தொகை இதை விட கொஞ்சம்தான் அதிகம் , ஸோ நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அது சூப்பர் ஹிட் என்றாள் மங்காத்தா என்ன மாதிரியான ஹிட் என்று ... இந்த ஹைப் இப்படியே இன்னும் இரண்டு வாரங்கள் தொடர்ந்தால் போதும் படம் மெகா ஹிட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது ...  



ஒரு அஜீத் ரசிகனா வெங்கட் பிரபு ஸாருக்கு நன்றி சொல்லியே ஆகணும் ... படத்தில் பிரேம்ஜி போடும் சில மொக்கைகள் , அப்பறம் கொஞ்சம் நீளமாக வரும் சண்டைக்காட்சிகளை தவிர்த்து பெரியதாக குறை சொல்லும்படி எதுவும் இல்லை ... வெங்கட் அண்ட் டீமின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது .... நன்றி வெங்கட் ... நாங்க நன்றி சொல்ல வேண்டிய இன்னொரு ஆள் தயாநிதி அழகிரி ... இவர் இல்லை என்றாள் மங்காத்தா சாத்தியமே இல்லை ... ஸார் உங்க குடும்பத்துல யாரையும் எனக்கு பிடிக்காது , யாருக்குமே நான் இது வரை ஓட்டு போட்டதில்லை , ஆனால் தலைக்கு இப்படி ஒரு படம் கொடுத்ததற்க்காகவே நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அந்த தொகுதியில எனக்கு ஓட்டு இல்லை என்றாலும் கள்ள ஒட்டாவது கண்டிப்பா போடுவேன் ...  

அப்பறம் யுவன் , இவருக்கு எத்தனை தடவைதான் நன்றி சொல்றதுன்னே தெரியவில்லை ... எல்லா நன்றியையும் இப்பவே சொல்லாமல்  பில்லா2 வுக்கு ஒரு நன்றியை ஒதுக்கி வச்சிக்கிடுறேன்... அடிச்சி ஆடுங்க யுவன் ...

மங்காத்தா - இந்த வருடம் வந்த படங்களில் காஞ்சனா திரையில் பேயாட்டம் ஆடினது என்றாள் மங்காத்தா வசூலில் பேயாட்டம் ஆடி கொண்டு இருக்கிறது...  தமிழ் சினிமாவில்  ஓலை வெடிகள்தான் அடிக்கடி வெடிக்கும் , பொஹ்ரான் அணுகுண்டுகள் எப்பவாவதுதான் வெடிக்கும் ... ரொம்ப நாளைக்கு அப்பறம் தமிழ் சினிமா வெடித்திருக்கும் பொஹ்ரான் அணுகுண்டு இந்த மங்காத்தா...


LinkWithin

Related Posts with Thumbnails