Followers

Copyright

QRCode

Saturday, April 30, 2011

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith


(மீண்டும் ஒரு தல பதிவு )


இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட  .... எம்‌ஜி‌ஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் ....  எம்‌ஜி‌ஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..

நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....

அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...

ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.... 

ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்...  நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி  பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...


ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்... 


இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே .. 

இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர்  மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...


குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ... 

எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ... 

Tuesday, April 26, 2011

மங்காத்தா....



 பத்து நாட்களுக்கு முன்னாள் மாப்பிள்ளை படம் பார்த்தேன் , அதில் தல கட் அவுட்டுக்கு தனுஷ் மாலை போட்டு ட்ரம்ஸ் வாசிப்பதை போல ஒரு சீன் , சென்ற வாரம் கோ படம் பார்த்தேன் அதில் தல ரேஸ்ல ஜெயிக்கணும்னு மொட்டை போடுறோம் , தோனி சிக்சர் அடிக்கணும்னு காவடி தூக்குரோம்னு ஒரு வசனம் வந்தது ... இந்த இரண்டு படங்களிலும் திரை அரங்கில் அதிக விசில் சத்தம் கேட்ட காட்சிகள் இவைதான் ...அடுத்தவன் படத்துலயே தலைய காட்டுனா இவ்வளவு விசில்னா? தல படத்துக்கு .... சும்மா ஏரியாவே அதிர விடுவோம்ல... இதோ அந்த நாள் நெருங்கி விட்டது ...

தலையோட மாங்காத்தா கிட்டதட்ட ரெடி .... யுவனின் இசையில் பாடல் ரிக்கார்டிங்க் அனைத்தும் முடிந்து விட்டதாம்... இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் சூட் பண்ணி முடிந்துவிட்டால் சூட்டிங் ஓவர் ... எப்படியும் ஜூன் மாதம் படம் வெளிவந்து விடும் .... சென்ற வருடம் பிப்ரவரி மாதத்திர்க்கு பிறகு ஒன்றைவருட இடைவெளியில்  ஒரு தல படம் .. நீண்ட இடைவெளிதான். ஆனால் எங்களுக்கு அதுதான் கிக்கே ... தலையை மீண்டும் திரையில் தரிசிக்கபோக்கும் நாளுக்காய் இப்பவே வெயிட்டிங் ... அதுவும் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் யாருமே செய்ய துணியாத ஏன் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தல இந்த படத்தில் செய்துள்ளார் , நரைத்த முடியுடன் நடித்துள்ளார் .... ஆனால் அதுவும் அவருக்கு ஸ்டைளாகத்தான் உள்ளது.. இந்த படத்தை பாருங்கள் , வேறு எந்த ஹீரோவுக்காவது நரைமுடி இவ்வளவு எடுப்பாக இருக்குமா?


(அமர்க்களம் படத்திலேயே பல காட்சிகளில் தல காதோர நரைமுடியுடன் நடித்திருப்பார்... அந்த நரைமுடி இவர் அழகை ஒருபடி மேலே ஏற்றி காட்டி இருக்கும்... )

இந்த படத்தின் பாடல் உரிமையை சோனி ம்யூசிக் வாங்கி இருக்கிறார்களாம் .. பாடல்கள் மே 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது .... பாடல்கள் வருவதற்க்கு முன்னரே பாடல் வரிகள் தல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது ...
வாடா வாடா பின்லேடா பாடலும் ஓபன் த பாட்டில் பாடலும் இப்பொழுதே எங்கள் எதிர்பார்ப்பை ஏகத்திர்க்கும் எகிற வைத்திருக்கிறது.... யுவன் வேறு ஒரு முறை டிவிட்டரில் இப்பொழுது காரில் மாங்காத்தா தல இண்ட்ரோடக்சன் சாங்க் கேட்டு கொண்டு இருக்கிறேன் .... கேட்க கேட்க தாளம் போட வைக்கிறது பாடல்.. அஜீத் ரசிகர்களே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க  தாளம் போட என்று எங்களை உசுப்பேத்தி விட்டு இருந்தார் ... மே 27 எப்ப ஸார் வரும்?


தல இந்த படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் வருகிறாராம்... படத்தில் அவர் பெயர் விநாயக் மாதவன்... இது வரை தல நடித்த எல்லா நெகட்டிவ் ரோல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இந்த படமும் கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் (நாங்க எல்லாம் ஆழ்வாரையே தலைக்காக ரசித்து பார்த்தவர்கள் )...இந்த படத்தில் தல பேசும் பன்ச் வசனம் எல்லாரும் கெட்டவங்கன்னா .. நான் ரொம்ப கெட்டவன்.... எனக்கு விசில் அடிக்க தெரியாது , படம் வெளிவருவதற்க்கு முன் கண்டிப்பாக விசில் அடித்து பழக வேண்டும் ...

படத்தில் மொத்தம் ஆறு பாடல்களாம்.. இதில் மூன்று பாடல்கள் தலைக்கு (அறிமுக பாடலையும் சேர்த்து), ஒரு பாடல் த்ரிஷா வரும் சோக பாடலாம் , ஒரு பாடல் வைபவ் அஞ்சலி ஜோடிக்கும் இன்னொரு பாடல் அர்ஜூன் ஆன்ட்ரியா ஜோடிக்கும் பிரித்து கொடுத்திருக்கிறார்கள்... தல படத்தில் தல இல்லாத பாடலை பார்க்க கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும், இருந்தாலும் ஆறு பாட்டுக்கும் சேர்த்து அந்த மூணு பாட்டுக்கு நாங்க பட்டைய கெளப்புவோம்ல...

இந்த படத்தின் இயக்குனர் , கூட நடிக்கும் நடிகர்கள்  , இசையமைப்பாளர் (நம்ம தல படம் , சும்மா விட முடியுமா , பாட்டிற்காக தீவிரமாக உழைத்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்ன யுவன் ), ஏன் படத்தின் தயாரிப்பாளர் என்று எல்லாருமே அஜீத் ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ... இதுதான் படத்தின் பெரிய பலம்



படம் வெளிவரும் நாள் நெருங்க நெருங்க படத்தை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது .. அதில் ஒன்று இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று .. ஆனால் அது வெறும் வதந்திதான் என்று நினைக்கிறேன் ... எது எப்படியோ உலகத்திர்க்கு தீபாவளி நவம்பர் மாதம்தான் .. ஆனால் இதோ எங்கள் தீபாவளி நெருங்கி விட்டது... ஜூன் மாதம் கலக்குறோம் தல ....


Monday, April 18, 2011

தேர்தல் ஆணையமும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் .....

ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது .... தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் அனைத்தும் தலையில் தூக்கி வைத்து கொண்டுடாடுகின்றன ... ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் ... பாம்பு வேட்டைக்கு போயி தவக்களைய பிடித்து வந்தது போல எல்லாத்தையும் ஒழுங்கா பண்ணிய கமிஷன் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியவில்லை .. எங்கள் ஊரில் தெனாவட்டாக தேர்தலுக்கு முந்தின நாள் இரவு மின்சாரத்தை நிறுத்தி விட்டு வீடு வீடாக சென்று பணம் கொடுத்தார்கள் ... தேர்தல் நடக்க இருந்த பூத் இருந்த தெருவில்  இந்த கமிஷன் நியமித்த போலீஸ்காரர்கள் கண் முன்னாலயே பணம் விநியோகம் செய்யபட்டது ... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை .... அதற்க்கு முந்தின நாள் இரவு வேறு ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இதே போல மின்சாரத்தை நிறுத்தி விட்டு பணம் பட்டுவாடா செய்தனர் ...அவர்கள் அதோடு நிறுத்து இருந்தால் பரவாயில்லை ... தேர்தல் முடிந்ததும் ஒருவாரதிர்க்குள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் மிக்ஸி ஒன்று தரப்படும் என்று வீடு வீடாக சென்று வாக்குறுதி கொடுத்து சென்றனர் .. இதை கேள்விபட்ட இன்னொரு கட்சியை சேர்ந்த கும்பல் அடுத்த நாள் வீடு வீடாக சென்று அவர்கள் மிக்ஸி கொடுப்பதற்க்கு முன்னரே உங்கள் வீட்டில் கிரைண்டர் இறக்கி வைக்கப்படும் என்று எதிர்வாக்கு கொடுத்து சென்றனர் ...


இவர்கள் சொன்னதையும் நம்பி தேர்தல் முடிந்த நாளில் இருந்து இன்று வரை இரவு எங்கள் ஊரில் மின்சாரம் எப்பொழுதாவது தடைபட்டால் மக்கள் கதவை திறந்து வைத்து கொண்டு மிக்ஸிக்கும் கிரைண்டருக்கும் காத்து கிடக்கிறார்கள்....  இதை பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கொள்ளை கும்பல் ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் தங்கள் கைவரிசையை காட்டி சென்றது .... மக்கள் எப்பொழுதுதான் திருந்தபோகிறார்களோ?  


(இவர்கள் மிக்சி கிரைண்டர் , கட்டில் மெத்தை , வாஷிங் மெசின் என்று கொடுப்பதை விட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு UPS INVERTOR வாங்கி கொடுத்தால் வெற்றி நிச்சயம்.... இப்ப எல்லாம் கரண்ட பாக்குறதுதான் கடவுள பாக்குற மாதிரி இருக்கு )


ரஜினி நின்னா மாஸ் , நடந்த மாஸ் , உக்காந்தா மாஸ் , படுத்தா மாஸ் , சாயா குடிச்சா மாஸ் , கக்கூஸ் போனா மாஸ் , இப்ப ஓட்டு போட்டாலும் மாஸ் .... அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை தெளிவாய் படம் பிடித்து காட்டி விட்டார்கள் .... மீடியாகாரர்கள் செய்தது பெரும் தவறுதான் என்றாலும் இதில் ரஜினிக்கும் , தேர்தல் கமிசனுக்கும் பங்கு இருக்கிறது ... கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரஜினியும் கமலும் கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்தனர் அல்லது இருக்க வைக்கபட்டனர் ... ஆனாலும் உள்ளுக்குள் இரண்டு பேருமே அவர் மேல் வெறுப்பில்தான் இருந்தனர் என்பது அனைவரின் கணிப்பு ... எனவே இந்த தேர்தலில் அவர்கள் ஓட்டு யாருக்கு என்பதை அறிய மக்கள்  ஆர்வமாக இருந்தனர்... கமல் எப்பொழுதும் போல அமைதியாகவே இருந்து விட்டார் ... ரஜினியும் தன்னை சந்தித்த எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும்  வாழ்த்து சொல்லி விட்டு நடுநிலையுடன்தான் இருந்தார் தேர்தல் நடக்கும் நாள் வரைக்கும் ... ஆனால் தேர்தல் அன்று அவருக்கு சனி உச்சத்தில் இருந்திருக்கிறது .... கேமராவை தன் தலைக்கு மேலே ஒருத்தன் தூக்கி பிடித்திருக்கும் போது பட்டனை அழுத்தி விட்டார் , அது கேமராவில் பதிவாகி விட்டது ... கமலை போல இவரும் அவர்கள் வெளியேறும் வரைக்கும் கையை கட்டி கொண்டு சும்மா இருந்திருக்கலாம் ,  செய்யாததால் பாவம் இன்று கேலிக்குரிய விஷயமாக ஆகிவிட்டது இது ....


 
அதன் பின்னர் ஒரு ஆங்கில தொலைகாட்சி நிருபரை தனியாக அவர் வீட்டுக்கு அழைத்து ஆளுங்கட்சியை மறைமுகமாக எதிர்த்து ஒரு பேட்டி கொடுத்தார் ...  1996 இல் இந்த அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் ஆட்சியில் இருக்கும் போதே அறிக்கை விட்ட ரஜினியா இது? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது ... அன்று அம்மாவை தைரியமாக எதிர்த்த ரஜினியால் இன்று அய்யாவை அப்படி எதிர்க்க முடியாமல் போக காரணம் என்ன? அம்மா என்றால்  ஜெயித்தாலும் அதன் பின்னர் இவரை கண்டு கொள்ளவே மாட்டார் ,. ஆனால் அய்யா அப்படி இல்லையே , கல்யாண மண்டபம் இடிந்து விழும் , கர்நாடகாவில் இருக்கும் நிலங்கள் ஆக்கிரமிக்கபடும் , படம் எடுத்து அதை வெளியிட முடியாமல் அல்லாட வேண்டி இருக்கும் .... இப்படி பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும் அதனால்தான் அய்யாவை தைரியமாக எதிர்க்க பயப்படுகிறார் .... உண்மையிலேயே மக்கள் மேல் தமிழகத்தின் மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் 1996 இல் வெளிப்படையாக ஆளுங்கட்சியை எதிர்த்தது போல இப்பொழுது எதிர்திருக்கலாம் ரௌடிகளின் வன்முறை தேர்தலில் ஜெயிக்க பணம் என்று தமிழகம் அப்பொழுதை விட இப்பொழுது ரொம்ப கேவலமான நிலையிலேயே இருக்கிறது .... அன்று ஒரு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போல கம்பீரமாக தெரிந்த ரஜினி இன்று பயணங்கள் பிரித்திவிராஜ்  போல பரிதாபமாக தெரிகிறார் ... 

இந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ பரவாயில்லை .... அவர் 1996 ரஜினியை போல சிங்கமாக கர்ஜனை செய்யவில்லை என்றாலும் செம்பரி ஆட்டை போல மே மே என்றாவது (சுயநலத்திர்க்காகவாது )ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து விட்டார் ... ஆனால் பாவம் கருணாநிதி திரும்பவும் ஜெயித்து வந்து விட்டால் இந்த ஆடு கோபாலபுரத்தில் பிரியாணி ஆகுமா இல்லை மட்டன்  சுக்காவாகுமா தெரியவில்லை....  


 
ரஜினி ரசிகர்கள் சொல்லுவதை போல அவர் ஒரு நடிகர் அவரை அவர் தொழிலை நிம்மதியாக செய்ய விடுங்கள் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .. அவர் அவருடைய  தொழிலை மட்டும் பார்த்து கொண்டு இருந்திருந்தால் அவரை பற்றி இப்படியான விமர்சனங்கள் வந்தே இருக்காதே .... தெரிந்தோ தெரியாமலோ ரஜினி இந்த அரசியல் சாக்கடைக்குள் கால் வைத்து விட்டார் .... அந்த சாக்கடை கண்டிப்பாக அவரை அவரே விரும்பாவிட்டாலும் உள்ளே இழுத்து விடத்தான் செய்யும் ....

(தலைவா ஒண்ணு முழுசா அரசியலுக்குள் எறங்கி ஒரு கை பாருங்க , இல்லையா மொத்தமா அத விட்டு வெளிய வந்து உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க .. அதை விட்டு இப்படி அரைகுறையா எதையும் பண்ணி உங்களை நீங்களே அசிங்கபடுத்தி கொள்ளாதீர்கள் ... )

Monday, April 4, 2011

கப்பு எனக்கு ஆப்பு உனக்கு - பைனல் போட்டோ கமெண்ட்ஸ்












(சச்சின் அவுட் ஆனதும் ரஜினியின் முகபாவனை)




















என்னை பொறுத்தவரை இந்த உலககோப்பையில் இந்தியாவின் டாப் 5 ஆட்டக்காரர்கள் அதே வரிசையில்

1. ஜாகீர் கான் 
2. கௌதம் கம்பீர் 
3. யுவ்ராஜ் சிங்
4. சச்சின் டெண்டுல்கர்
5. மற்ற அனைவரும்






எங்கள் கனவை நனவாக்கிய உங்கள் அனைவருக்கும் ஒரு ரசிகனாக எங்கள் நன்றிகளும் வாழ்துக்களும்.... 





Saturday, April 2, 2011

லகான் 2011 - சரித்திரம் திரும்புமா?






இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் .. நூறு கோடி மக்களின் பிரார்த்தனைகள் உங்களுக்காக இன்று உண்டு .... வெற்றி பெற்று கோப்பையை சச்சினுக்கு பரிசளிக்க வாழ்த்துக்கள் ...

(ஆனால் நம்ம பிளாக்கர்ஸ் எல்லாம் இப்பவே இந்தியா ஜெயிச்சிட்ட மாதிரி பதிவு எழுதுறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு ... நம்மளோட ராசி அப்படி ... இருந்தாலும் நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம் ... (28 வருட கனவு பலிக்கனும்ல) ) 

LinkWithin

Related Posts with Thumbnails