Followers

Copyright

QRCode

Wednesday, April 22, 2009

கவிதைகள்


என் உயிர் போனால்

உனக்கு அழுகை

வருமோ வராதோ?

எனக்கு தெரியாது
ஆனால் உனக்கு

அழுகை வந்தால்

என் உயிர் போய் விடும்....


திட்டும் இதழ்கள்

எல்லாம் கொஞ்சுமா

என்று எனக்கு தெரியாது...

ஆனால் நீ

திட்டுவதே கொஞ்சுவது

போல்தான் உள்ளது....


புதியதாய் வாங்கிய

புடவையை பார்த்து

"ஹேய் எனக்கா இந்த புடவை"

என்று நீ குதுகளிதாய்..."

ஹேய் எனக்கா இந்த தேவதை "

என்று நான் குதுகளிதேன்

எனது கவிதைகள்



என்னை ஊர் கிறுக்கன் என்றது...

நீ நடந்து

விட்டு சென்ற

உன் பாதசுவடுகளுக்கு

குடை பிடிதேனாம்....

அவர்களுக்கு எங்கே தெரியும்

உன் பாதம் பட்டால்

மண்ணும் உயிர் பெரும் என்று...

உன் விழி பட்டு

உயிர் பெற்ற

என் இதயத்திற்கு தானே

அது தெரியும்......



காற்றில் ஆடும்

உன் கலைந்த

முடியில்

ஊசல்ஆடியது என் இதயம்....

நீ அழகாய் அதை

உன் கையால்

உன்னோடு இழுத்து

கொண்ட போது

முடியோடு சேர்ந்து

உன்னோடு வந்து விட்டது

என் இதயமும் ........

Saturday, April 18, 2009

எனக்கு பிடித்த கவிதைகள்




அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மௌனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.


யாராவது

ஏதாவது

அதிர்ச்சியான செய்தி சொன்னால்

அச்சச்சோ என்று

நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்


என்னை உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள்

நீ...........


என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று விடுகிறாய்?

என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்

கண்ணாடியை

எங்கு பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.

உன்னைப் பார்க்க

உனக்கே அவ்வளவு

ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளவு இருக்கும்..

latest technology 3







latest technology 2





































latest technologies1






















LinkWithin

Related Posts with Thumbnails