Followers

Copyright

QRCode

Saturday, May 29, 2010

மீண்டு வருவார் விஜய் ....







இன்று அவரை மிரட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரின் படத்தை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்க தயாராக வரிசையில் நின்றவர்கள்தான் ... மறுபடியும் இவர்கள் அனைவரும் அதே வரிசையில் நிற்கத்தான் போகிறார்கள்... அது நடக்க வேண்டுமானால் விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..


விஜயின் இந்த நிலைமைக்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்ற தன மகனை அரசியலிலும் வெற்றி கோடி நாட்ட வைக்க வேண்டும் என்ற அவர் தந்தையின் பேராசைதான்... கில்லி , திருப்பாச்சி, சிவகாசி என்று வெற்றி படிக்கட்டில் ஏறி கொண்டு இருந்தவரை சடாரென்று தோல்வி பாதையில் இறக்கி விட்டது அவரின் இந்த ஆசை ....

விஜய் ஒன்றும் எந்த திறமையும் இல்லாதவர் இல்லை .. அவரின் கில்லி படம் பெற்ற பெரிய வெற்றிக்கு அவரின் துள்ளலான நடனம் , இளமையான நடிப்பு , சண்டைகாட்சிகளில் அவர் காட்டிய வேகம் எல்லாமும் ஒரு காரணங்கள் .. அடித்து சொல்லலாம் அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்காது....அந்த விஜயைதான் மக்களும் அவரின் ரசிகர்களும் எதிர்பார்கிறார்கள் ... 

இவ்வவளவு தோல்விகளுக்கு பிறகும் விஜய் திரை துறையில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்றால் அவரின் ரசிகர்கள்தான் காரணம் ... இரண்டு தோல்விகளிலே முடங்கி போன எத்தனையோ ஹீரோக்கள் உண்டு நம் தமிழ் திரை உலகில் ... அவரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்தான் என்று அவர் வாய் வழியாக மட்டும் சொல்லாமல் மனதளவில் நினைத்து சொல்லுகிறார்  என்றால் அந்த ரசிகர்களுக்கு பிரதி உபகாரமாக அவர் இனி நல்ல  கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் ... உங்களால் பணம் சம்பாதித்து இன்று உங்களையே தூற்றுபவர்களை  மீண்டும் உங்கள் பின்னால் வர வைத்து உங்கள் ரசிகர்களை தலை நிமிர செய்யுங்கள் ... அரசியல் ஆசையை கொஞ்சம் ஓரங்கட்டி வையுங்கள் தலைவா ... உங்களை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ... பதவியும் பட்டமும் தானாக தேடி வரும் உங்களை நோக்கி .. 
ரஜினியை பாருங்கள் .. எவ்வளவு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவரே சந்தரமுகி போன்ற நல்ல கதைகளைத்தான் தெரிவு செய்து நடிக்கிறார் ... மக்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்கள் மக்கள் மீண்டும் உங்களை வெற்றி படிக்கட்டில் ஏற்றுவார்கள் ...

இந்த தடுமாற்றங்களில் இருந்து விஜய் மீண்டு வர தல ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...

Friday, May 28, 2010

சிங்கம் - நொண்டி அடிக்குது


நல்லூரில் sub inspectorஆக இருக்கும் சிங்கத்துக்கும் சென்னையை ஆட்டி படைக்கும் மயிலவாகனனுக்கும் இடையே நடக்கும் சடு குடு ஆட்டம்தான் இந்த சிங்கம் .. ஹரியின் படமாம் , நம்பி போகலாம் என்று போனேன் .. படத்தில் ஒரு காட்சியில்கூட சாமி கொடுத்த ஹரி தெரியவில்லை...

சூர்யா மசாலா போலீஸ் வேடத்தில் வருகிறார் ... ஆரம்பம்மே build up தான் .. ஜீப் கூரையை பிய்த்துகொண்டு வருகிறார் ... பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார் .... அதை தவிர வேலை ஒன்றும் இல்லை அவருக்கு... போலீஸ் வேடத்திற்காக தன்னை வருத்தி தயார் ஆகி இருக்கிறார் என்பது அவரது உடலை பார்த்தாலே தெரிகிறது .. ஆனால் ஹரி இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை ... காக்க காக்க மாதிரி போலீஸ் வேடம்தான் அவருக்கு பொருந்துகிறது .. விஜயகாந்த் டைப் போலீஸ் வேடம் இவருக்கு பொருந்தவே இல்லை ... better luck next time surya ...

அனௌஷகா , சூர்யா சிங்கம் என்றால் இவர் புலி ... வேட்டைகாரனில் வந்துட்டு போனது மாதிரி பாடல் தேவை படும் போது மட்டும் வருகிறார் ... ஒரு பாடலில் பில்லா நயன்தாரா மாதிரி திறந்த மார்புடன்  வருகிறார்  ...இடைவேளைக்கு பின்னர் சூர்யாவை வசனம் பேசி வில்லனுக்கு எதிராக உசுப்பேத்தி விடுகிறார் ... கடைசியில் பிரகாஷ்ராஜ் கையால் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்து கொள்கிறார் ... அவ்வளவே ..இவருக்கும் சூர்யாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் எரிச்சல் ரகம்




பிரகாஷ்ராஜ் .. பாவம் சென்னையின் பெரிய ரவுடி கட்ட பஞ்சாயத்து , ஆள் கடத்தல் என்று எல்லா வேலைகளையும் செய்கிறார்  ... ஆனால் ஹீரோவை எதிர்த்து அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை ... கடைசி வரை வசனம் மட்டுமே பேசுகிறார்.. சோப்ளாங்கி வில்லன் ... படத்தின் பெரிய பலவீனமே இவரின் கதாபாத்திரம்தான் .... அந்த அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் இவரின் கதாபாத்திரத்தில்...

பாடல்கள் என்று பெரியதாக சொல்ல எதுவும் இல்லை ... தேவி ஸ்ரீ பிரசாத் ஏமாற்றி விட்டார் ... கடைசியில் வரும் she stole my heart பாடல் மட்டும் ok ரகம் ... பின்னணி இசையில் பெரியதாக மெனக்கெடவில்லை.. சிங்கம் சிங்கம் என்று கத்திகொண்டே இருக்கிறார்... இன்னும் கொஞ்சம் அவர் உழைத்திருக்கலாம்...

ஹரி ... இவரின் சாமி படம் இன்றும் என்னுடைய favorite படம் .. எப்பொழுது டிவியில் போட்டாலும் பார்த்து விடுவேன் ... அந்த படத்தில் இருந்த திரைக்கதையும் , கதாபாத்திர உருவாக்கமும்(குறிப்பாக விக்ரம் , வில்லன் மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்கள்) இதில் சுத்தமாக இல்லை ...
பார்த்து பார்த்து சலித்து போன கதை , லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கிற திரைகதை... பக்கம் பக்கமாக வசனங்கள் என்று படம் பார்பவர்களை காய வைத்து விடுகிறார் ... வசனம் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது ...இவரின் படத்தில் எப்பொழுதும் சில புத்திசாலிதனமான காட்சி அமைப்புகள் இருக்கும் ... இதில் அதையும் தவற விட்டு இருக்கிறார் ...


விவேக் ... இவரை நான் பெரியதாக நம்பி போகவில்லை .. சரக்கு சுத்தமாக இல்லை என்பதை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.... சில இடங்களில் வசனங்களில் சிரிப்பை வர வைக்கிறார் .. பல இடங்களில் வடிவேலு மாதிரி body languageல் சிரிப்பை வரவைக்கிறேன் என்று நமக்கு கடுப்பை உண்டு பண்ணுகிறார் ....

படத்தில் பாராட்ட பட வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர்தான் ... படம் முழுவதும் சேசிங் காட்சிகளில் அவரின் உழைப்பு தெரிகிறது .. அதை விட பாடல் காட்சிகளில் சூர்யாவை அனௌஷ்கா உயரத்திற்கு காட்டுவதற்கு நிறைய உழைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்...அதே போல எடிட்டரும் தன பங்கை நிறைவாக செய்து இருக்கிறார் ... சில காட்சிகளில் உள்ள வேகம் இவரின் கைவண்ணமே...
 
மொத்தத்தில் வீறு நடை போட வேண்டிய சிங்கம் ரொம்ப பழைய கதை  சொதப்பலனா திரைகதை ,வீக்கான வில்லனால் நொண்டி நடை போடுகிறது.... சிங்கத்தை டிவிலையே பாத்துக்கோங்க...

Thursday, May 27, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

இன்னைக்கு நாட்டுல நடக்கிற,, நடந்து முடிஞ்ச சில விசயங்கள பாக்குறப்ப எனக்கு இந்த வசனம் ஞாபகம் வருது... "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" ,, என்னோட சந்தேகங்களை எல்லாம் நான் சொல்லுறேன் ... பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க



1. நான் கைவிட்டு விட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் , பிரபுதேவா உருக்கம்


எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நயன்தாரா அவ்வளவு நல்லவரா? இல்ல அவர இந்த அளவுக்கு நம்புற பிரபுதேவா ஒரு அரலூசா? பல பேரு கைவிட்டுதான் கடைசில இவரு கையில வந்து விழுந்துச்சி அந்த பீசு... இவரு விட்டா பிடிக்க இன்னொரு மடையன் மாட்டாமலா போய்டுவான்?..



2. கட்சியில் இருந்து ஒரு உருப்பினரைகூட இழக்க விருப்பம் இல்லை , ஜெயலலிதா கண்ணீர்



அம்மாவுக்கு எல்லாம் கைமீறி போன பின்னாடிதான் கட்சின்னு ஒன்னு இருக்கிறதே ஞாபகம் வருது ... எனக்கு என்னா சந்தேகம்னா,, யாரையும் இழக்க விரும்பவில்லை என்று அன்று திருநாவுக்கரசு ஆரம்பித்து சாத்தூர் ராமச்சந்திரன், மாதவன், அரங்கநாயகம், ராஜாராம், ராம. வீரப்பன், கருப்பசாமி பாண்டியன், செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் என சத்தியமூர்த்தி வரை(நான் குறிப்பட்டது சிலர் மட்டுமே, ஆனால் இந்த பட்டியலில் ஆயிரத்துக்கு அதிகமானோர் உள்ளனர்) எல்லாரையும் இழந்துவிட்டீர்களே... இனியும் கட்சிய விட்டு வெளிய போக அங்க ஆளு இருக்கா ? உங்களையும் உங்க உடன்பிறவா சகோதரியையும் தவிர...



3. விஜய் படங்கள் வசூல் வரவில்லை , திரை அரங்க உரிமையாளர்கள் பலத்த நட்டத்தை சந்தித்து உள்ளனர் ... நட்டத்தை சரிகட்டாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட்-- திரை அரங்க உரிமையாளர்கள் சங்கம் மிரட்டல்



ஏனுங்கண்ணா விசை ... படத்துல மட்டும்தான் சூப்பர் ஸ்டார காப்பி அடிப்பீன்களான்னா? அவர மாதிரியே பஞ்ச் அடிக்கிறீங்க .. அரசியலுக்கு வர போறேன்னு உங்க அடிபொடிகள உசுப்பி விடுறீங்க... சம்பாதிச்ச காசுல கல்யாண மண்டபமா கட்டுறீங்க... நிஜ வாழகையில அவருக்கு இருக்கிற நேர்மைய follow பண்ண  மாட்டேங்கிறீங்க? ஒரு வார்தைக்காகவது காச திருப்பி தரேன்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே ... அத விடுங்க அடுத்த படத்துல உங்க நஷ்டத்த ஈடுகட்டிருவேன்னு வாய் சவாடலாவது விடலாம்ல... ஏனுங்கண்ணா உங்க படம் மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா?


அப்புறம் அவரோட ரசிக கண்மணிகளுக்கு .. வசூல் சக்கரவர்த்தி ... அடுத்த ரஜினி , எங்க தளபதியால யாருமே நட்ட பட்டதில்ல அப்படி இப்படின்னு கைக்கு வந்ததெல்லாம் பதிவுல எழுதிகிட்டு இருந்தீங்களே ... இப்ப இப்படி ஆகி போச்சே? சொல்ல வேண்டியவங்களே உங்க தளபதியோட வசூல் வரலாற கிழிச்சி தொங்க விட்டாங்க.. இனிமே எப்படி உங்க பதிவுகளுள அவர பத்தி சப்ப கட்டு கட்டுவீங்க? ? இனிமேலாவது உண்மைய ஒத்துக்குவீங்களா இல்ல ஆப்ரிக்காவில் சுறா வசூல் சாதனை... நெல்சன் மண்டேலா விஜயின் செல்வாக்கை பார்த்து நடுக்கம் , அப்படின்னு ஏதாவது பதிவு போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடுவீங்களா உங்க காமெடிய?



4. மங்களூரு விமான விபத்துக்கு காரணம் இன்னும் தெரியவில்லை , கருப்பு பெட்டியை ஆராய்ந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும்



என்ன காரணமா இந்த விபத்து நிகழ்ந்து இருந்தாலும் போன உயிர்கள் திரும்ப வராது... அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது ... எனக்கு என்ன சந்தேகம்னா அந்த காரணத்தையாவது சரியா விசாரிச்சி கண்டுபிடிச்சி , மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணி இனிமேல் இந்த மாதிரி விபத்து நடைபெறாமல் தடுப்பீர்களா? இல்லை விமானிதான் இறந்துட்டாரே , அவர் மேலே பழிய தூக்கி போட்டுட்டுவோம்னு , விமானியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என்று விசாரணையை இழுத்து மூடி விடுவீர்களா? ( உலகில் விமானி இறந்த எந்த விமான விபத்துக்கும், விமானியின் கவன குறைவே காரணமாக இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி)



எனக்கு இன்னொரு கேணத்தனமான சந்தேகமும் வருது .. எவவளவு பெரிய விபத்து நடந்தாலும் விமானத்தோட கருப்பு பெட்டி மட்டும் அழியாதாம்.. கூட கொஞ்சம் செலவு பண்ணி மொத்த விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி மாதிரியே தயாரிச்சா உயிரிழப்புகள் குறைய வாய்ப்புகள் வருமா? ( சுறா படம் பாத்ததில இருந்து  எனக்கு ஏன் இப்படிலாம் யோசனை வருது? )


பிடிச்சிருந்தா வோட்டு போடுங்க ...

Tuesday, May 25, 2010

சாப்ட்வேர் கம்பெனின்னா சும்மாவா?





*"*
ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா
பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" -
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"

வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா
வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும்
செலவு செய்ய தயாரா இருக்கான்."

"

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"

இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி,
"நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"

சரி"

"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த
அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales
Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு
கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத
பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "
முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"

இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS

னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"
- அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"

சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல
முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு
பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட்
கிடைக்கும்"

"500

நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா
வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"

இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு
சொன்ன உடனேclient
சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச
பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க
கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise
பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-

னா?"

"Change Request.

இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல்
எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள்
வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின்

முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"

இதுக்கு அவன் ஒத்துபானா?"

"

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"

முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு
தான் பொறுப்பு."

"

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"

அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி
பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"

பாவம்பா"

"

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய்
சொல்லலாம்."

"

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"

ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே
உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"

நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"

"

இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க
இருப்பாங்க."

"

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"


"

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு,
அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,
வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான்
இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்
பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக
கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு.
சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு
கொடுத்துடுவீங்கள்ள?"

"

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற
உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த
அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு
இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"

எப்படி?"

"

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல
வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி
அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச
நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க
அப்படித்தான?"

"

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"

அப்புறம்?"

"

ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற
மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க
ஆரம்பிப்போம்."

"

அப்புறம்?"

"

அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப
ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ
கணக்கா போகும்.

"

ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது
மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க
வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."



மெயிலில் வந்த கதை ... நன்றாக இருந்ததால் பதிவில் தருகிறேன் 

Monday, May 24, 2010

Aeon Flux - செம்ம படம் மச்சி




பையா , சுறா , இரும்புகோட்டை , கோரிபாளையம் என்று வரிசையாக மொக்கை படங்களாக பார்த்து திரைப்படங்கள் மேலே ஒரு வெறுப்புடன் இருந்தேன் ... அந்த சமயம் என் நண்பன் ஒருவன் இந்த படத்தின் DVD கொடுத்து பாக்க சொன்னான்.. அவன் ஒரு தீவிர ஆங்கில பட வெறியன் என்பதாலும் அவன் மொக்கை படங்களை கூட நல்லா இருக்கு என்று கூறி பலமுறை என்னையும் அந்த படங்களை பார்க்க வைத்து மனரீதியாக என்னை துன்புறுத்தி இருந்ததாலும் எனக்கு இந்த படத்தின் மேல் சந்தேகமாகவே இருந்தது .. அதனால் இரண்டு வாரங்களாய் இதை நான் பார்க்கவே இல்லை ... நேற்று வேறு வழியில்லாமல் பொழுதை போக்க இந்த படத்தை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ... வேண்டா வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தேன் ... படத்தை பார்த்து முடிக்கும் பொழுது எப்படி இந்த படத்த இவ்வளவுநாள் பாக்காமல் தவற விட்டோம் என்று நினைத்து கொண்டேன் .. அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்தது இந்த படம்....


படம் ஒரு science fiction கதை ... "ஒரு தடவ வாழ்ந்தால்தான் அதுக்கு பேரு வாழ்க்கை ... பல தடவை வாழ்ந்தால் நமக்கு பேரு மனுஷன் இல்ல பேய்" என்று ஹீரோயின் பேசும் வசனம்தான் மொத்த படமும்... கதை நடக்கும் காலகட்டம் 2425... 2011இல் ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் அனைவரும் மடிந்து விடுகின்றனர்... ஆனால் ப்றேக்னா என்னும் நகர மக்கள் மட்டும் அந்த ஊரில் உள்ள ஒரு டாக்டரின் உதவியுடன் தப்பி பிழைக்கின்றனர்... உலகத்தின் கடைசி மனிதர்கள் அவர்கள்தான் ... 


பின் கதை 2425க்கு செல்கிறது... அந்த நகரத்தை சில்ட்ஹூத் என்னும் மனிதர் ஆண்டு கொண்டு இருக்கிறார்... நகரத்தில் உள்ள மக்கள் பலர் திடீர் திடீர் என்று காணாமல் போகிறார்கள்... இதற்கெல்லாம் காரணம் அந்த சில்ட் ஹூட்தான் என்று எண்ணி அவருக்கு எதிராக ஒரு புரட்சி படை ஒன்று ஊரில் உருவாகிறது ... அதில் ஒருத்திதான் Aeon Flux... அவளுக்கு அந்த சில்ட் ஹூட்டை கொலை செய்யும் வேலை தரபடுகிறது ...... அவள் சில்ட் ஹூட்டை கொள்ள அவன் தங்கி இருக்கும் கோட்டைக்குள் நுழைகிறாள் ... அவனை அவள் கொன்றாளா , காணமல் போன மக்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பதை பல சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்லி இருக்கும் படம்தான் Aeon Flux.


இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் அதன் திரைகதை ... படம் ஆரம்பிக்கும் பொழுது சில்ட் ஹூத் தான் படத்தின் வில்லன் என்பதை போல காட்டி இருப்பார்கள் ... ஆனால் படம் நகர நகர கதையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வரும் ... தான் ஏன் மக்களை கடத்தி கொண்டு வருகிறேன் என்று அவர் விளக்கும் அந்த ஒரே காட்சியில் படத்தின் ஹீரோவாக மாறி விடுவார் அவர்... அந்த காட்சியில்தான் நமக்கும் படத்தின் கதை புரிய ஆரம்பிக்கும் ... ஒரு சஸ்பென்ஸ் படத்தில் திரைகதை எவ்வாறு அமைய வேண்டும் என்பதுக்கு இந்த படம் நல்ல உதாரணம்... 


படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் ஒளிபதிவு மற்றும் படத்தில் காட்டப்படும் அந்த நகரத்தின் செட்... 2425இல் கதை நடப்பதை போல காட்டி இருப்பதால் அதற்க்கு ஏற்றார்போல செட்டிங்குகள் அமைத்து இருப்பார்கள்.. விமானங்கள் , ரயில்கள் , கட்டிடங்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாக காட்டி இருப்பார்கள்.... 


அதேபோல சண்டை காட்சிகள் நம்மை மிரள வைக்கும் .. பல தடைகளை தாண்டி Childhood வாழும் கோட்டைக்குள் Aeon Flux செல்லும் காட்சியில் கிராபிக்ஸில் நம்மை மிரட்டி இருப்பார்கள்... அந்த கோட்டையை சுற்றி வளர்ந்திருக்கும் ஒரு மரம் அவர்களின் கற்பனை திறனுக்கு ஒரு சின்ன உதாரணம்....வசனங்களும் பல இடங்களில் அட போட வைக்கும் 


கதை தெரியாமல் போய் பார்த்தால் கண்டிப்பாக படம் ரொம்ப பிடிக்கும்... நேரமும் DVD யும் கிடைத்தால் தவறாமல் பாருங்கள்... ஒரு பக்கா ஹீரோயிநீசப்படம்(heroinism) இது... நம்ம ஊரிலும் எடுக்கிறார்களே Heroism படம் என்று .. அவர்கள் கற்று கொள்ள நிறைய பாடம் உண்டு இந்த படத்தில் 


பி. கு : 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.. காரணம் இந்த படத்தின் கதை அமெரிக்க மக்களுக்கு புதிது இல்லை .. இந்த படம் ஏற்கனவே அமெரிக்க டீவீக்களில் சக்க போடு போட்ட அனிமேஷன் படம் ஒன்றின் (அதற்க்கு பெயரும் Aeon Fluxதான்) தழுவல்தான்.. அதனால் இந்த படத்தின் சஷ்பென்ஷ்கள் அவர்களை பெரியதாக கவரவில்லை... ஆனால் நமக்கு கண்டிப்பாய் இந்த படம் ரொம்ப புதியதாய் இருக்கும்.... ஒன்ற மணிநேரம் பொழுது போவதே தெரியாது உங்களுக்கு .. அதுக்கு இந்த படம் கியாரண்டீ...


ஏங்க உங்களுக்கு ஒரு நல்ல படத்த அறிமுகபடுத்தி வச்சிருக்கேன்... ஓட்டு போடாம போறீங்களே... போட்டுட்டு போங்க பாஸ் ஓட்ட... அப்படியே விமர்சனம் நல்லா இருக்கா இல்லையா? நான் ஏதாவது தப்பா எழுதிருக்கேன்னான்னு கம்மேன்ட்ல சொல்லிட்டு போங்க 



Friday, May 21, 2010

கடலை ஒரு அற்புத அனுபவம்


"ஆணும் ஆணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு அரட்டை...
பொண்ணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு புரணி...
ஆணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேருதான்  கடலை...."



இருபத்தியோராம் நூற்றாண்டு வந்துடுச்சி, இன்னமும் நீங்க கடலைக்கூட போட தெரியாத அப்பாவியா இருந்தீங்கன்னா நீங்க யூத்தா இருக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை பாஸ்... அதான் எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு , எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை வச்சி ஒரு பொண்ணுகிட்ட எப்படி கடலை போடுறதுன்னு சொல்லி கொடுக்கலாமேன்னு இந்த பதிவு... (சுய சொரிதல்)


கடலை போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை நல்லா தெரிஞ்சிக்கோங்க கடலைன்கிறது எந்த ஒரு காரணமோ ,இல்ல தேவையோ இல்லாம ஒரு குறிப்பிட்ட விசயத்துக்குள்ள நம்ம பேச்ச சுருக்கிகொள்ளாமல் எல்லை கடந்து நம்ம மனசுக்கு தோன்றிய , அவங்களுக்கு பிடிச்ச பல விசயங்களை தேவையே இல்லாம பேசுறதுதான் ... அங்க போய்கிட்டு உங்க அறிவாளிதனத்த காட்டுற மாதிரி மாவோயிஸ்டுகளை பத்தியோ , இல்ல உலக பொருளாதாரத்தை பத்தியோ பேசக்கூடாது...மீறி பேசுனீங்க கண்டிப்பா அடுத்த தடவ அவ உங்களை கூப்பிடவே மாட்டா , (அறிவாளிங்க கடலை போட தகுதி இல்லாதவங்க பாஸ்)


கடலை போடுறதுல இன்னொரு முக்கியமான விஷயம் டைமிங் ... அவ எந்த விசயத்தை பத்தி பேசி முடிச்சாலும் நாம டக்குன்னு அதுக்கு பதில் சொல்லணும் , யோசிக்கவே கூடாது , மீறி யோசிச்சீங்க அந்த சின்ன கேப்புல எவனுக்காவது மிஸ்டு கால் கொடுத்து கடலையை அங்க விளைக்க ஆரம்பிச்சிடுவாளுக.... ஆரம்பத்துல இந்த டைமிங் கொஞ்சம் மிஸ் ஆகத்தான் செய்யும் , அப்புறம் போக போக அது தானா வந்திடும் ... (வேல வெட்டி இல்லாதவங்க நெறைய பேரு திரியிறாங்க பாஸ்)


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கடலை போட ஆரம்பிச்சிடீங்கன்னா அதுதான் உங்க முழு நேர வேலையா இருக்கனும் ப்ரோக்ராம் எழுதுறதும் , மெசின் துடைகிறதும் மற்ற பல ஆணிகள் புடுங்கிறதும் சைடுலதான் பண்ணனும் ... அவ எப்பவாது கடலை போட விருப்பபட்டு உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து நீங்க வேலை பிஸில அப்புறம் பேசலாம்னு சொல்லிடீங்க , அவ்ளோதான் அப்புறம் கடைசி வரை ஆணி மட்டுந்தான் புடுங்கனும் , அடுத்து நீங்களா போய் ஏன் செல்லம் ரெண்டு நாளா பேசவே இல்லைன்னு கேட்டாலும் இல்லடா நீ பிஸியா இருப்பனுதான் உன்ன தொந்தரவு பண்ண வேணாமேன்னு கால் பண்ணலைன்னு பழிய உங்க மேல தூக்கி போட்டுடுவா...அப்புறம் அவள கூல் பண்ண தியேட்டர் , பீச் , ஷோப்பிங்க்னு அவள கூப்பிட்டுட்டு போய் சில பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி வரும் (கடலை கொஞ்சம் காஸ்ட்லிதான் தலைவா)

அப்புறம் நீங்க தேவ இல்லாம அவள தொந்தரவு பண்ணகூடாது , அவ எப்ப கூப்புடுராளோ அப்ப மட்டும்தான் கடலை போடணும் ... (மொத்ததுல அடிமையா இருக்கணும் )


அவகிட்ட நேர்ல பேசும்போது அவ கண்ண பாத்து பேசுங்க .. கழுத்துக்கு கீழ பாத்தீங்க அவ்ளோதான் .... பேச்சு நின்னு போய் வெறும் மூச்சிதான் வரும்... (நெறைய பேரு இதுலதான் மாட்டிக்குவாணுக ஜாக்கிரதை)

அவள கிண்டல் பண்ணி மொக்கை போடதீங்க , அவளுக்கு பிடிக்காத பொண்ணுங்கள நல்லா ஓட்டுங்க... அவ சொல்லுற மொக்க ஜோக்ஸ்க்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரியுங்க.. அடிக்கடி ஆக்சிவலி, ஸோ நைஸ்... போன்ற ஆங்கில வார்த்தையை யூஸ் பண்ணுங்க ...அது உங்கள இங்கிலிஷ் பட ஹீரோவா அவளை நினைக்க வைக்கும்....(பேசுறதுக்கு முன்னாடி அவளுக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு தெரிஞ்சிகோங்க)

அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் , அப்பப்ப அவளை புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்கணும்... அவ போட்டுக்கிட்டு வர்ற கேவலமான டிரஸ்சகூட ஸ்ரேயா சிவாஜில போட்டது மாதிரியே இருக்குன்னு கூசாம சொல்லணும் ... ஆனா அதுவே ரொம்ப ஓவரா போய்டகூடாது , அவ கண்டிபிடிக்காத அளவுக்கு பொய் சொல்லி புகழ்ந்தா போதும் ... (ஓவர் பில்ட் அப் கடலைக்கு ஆகாது தலைவா)


ஆனா உங்களை பத்தி பெருமையா பேசிறாதீங்க, அது அவளுக்கு பொறாமைய கெளப்பி விட்டு கடலை கட் ஆகுற அளவுக்கு கொண்டு போய் விட்டுடும்... (நம்ம அளவுக்கு அவங்களுக்கு பறந்து விரிஞ்ச மனசு கெடையாது பாருங்க (நான் உள்ள இருக்கிற மனச சொன்னேன்))



அப்புறம் நேர பாத்து பேசுறப்ப காது கொடையுறது மூக்க நோண்டுவது , சொறியிறது மாதிரி குரங்கு சேட்டைகளை பண்ணாதீங்க , ஹோட்டலுக்கு போய் சாப்டுகிட்டே பேசுற மாதிரி இருந்தா அளவா, நீட்டா சாப்டுங்க... சோத்துல பாத்தி கட்டுறது , சைட் டிஷ மெயின் டிஷ் மாதிரி சாப்புடுறது எல்லாம் பண்ண கூடாது... பாத்தியெல்லாம் அவ போன பின்னாடி சரக்கடிச்சிட்டு மிலிடரி ஹோடேலுல கட்டிக்கலாம், அவ முன்னாடி உங்க பேமிலியே ரொம்ப டீசென்டான பேமிலி மாதிரி காட்டிகோங்க.... (அவளுக நம்ம முன்னாடி அப்படி நடிக்கிறப்ப நாமளும் நடிக்கலாம் தப்பில்ல)


அப்புறம் கடல போட ஆரம்பிச்சிடீங்கனா மாச மாசம் ஆயிரம் ரூபாயாவது மொபைல் பில் வரும் அத பத்தியெல்லாம் கவலை படகூடாது .... அவளுக விபரமா மாசம் ரெண்டாயிரம் ப்ரீ SMS  இருக்கிற மாதிரி மொபைல் டாப் அப் பண்ணிட்டு , மினிமம் பேலன்ஸ் மைண்டைன் பண்ணிக்கிட்டு மிஸ்டு கால் கொடுத்தே காலத்த ஓட்டுவாளுக ... அந்த மினிமம் பேலன்ஸ் கூட நீங்கதான் போட்டு விடனும் ... அவளுகளுக்கு பைசா செலவு இருக்காது .. ஆனா இத பத்தி நீங்க அவகிட்ட பேசிடவே கூடாது (அவளுகளுக்கு ஆயிரம் இளிச்சவாயர்கள் கெடைப்பானுக.. நமக்கு? அதனால செலவ பத்தி கவலைப்படகூடாது)

சரிங்க , இவ்ளோ சொல்லிட்டேன் ... பிடிச்சிருந்தா நீங்களும் சீக்கிரம் ஒரு பொண்ண பிடிச்சி விடிய விடிய கடலை போட்டு குஜாலா இருங்க... அப்படியே எனக்கு ஒரு வோட்டையும் போட்டுட்டு போங்க ... நாங்களும் குஜாலா சந்தோஷ படுவோம்ல ...

Tuesday, May 4, 2010

சென்னை மாநகரின் பழைய தோற்றம்


மதுரை நகரின் பழைய படங்கள் பதிவை பிரபலபடுத்திய அனைவருக்கும் எனது நன்றிகள் ... உங்களின் அந்த ஆதரவை தொடந்து இதோ சென்னை நகரின் பழைய படங்களை நெட்டில் தேடி எனக்கு கிடைத்த படங்களை இங்கே கொடுத்துள்ளேன் , இதோ அந்த படங்கள் 























இந்த படங்கள் எல்லாம் பிடிச்சிருந்தா இது பல பேரை சென்றடைய வோட்டு போடுங்க 

Saturday, May 1, 2010

சுறா - தமிழ் சினிமாவின் பேதி...

தலைப்பை பார்த்து யாரும் கான்டாக  வேண்டாம், இப்ப இப்படி தலைப்பு வக்கிறதுதான் fashion ...இது விஜய் படம் என்பதால் படம் பேர் வைக்கப்பட்ட அன்றே நான் படத்தில் பெரியதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.. கொஞ்சமேனும் ரசிக்கும்படியான ஒரு திரைகதை , குத்துபாட்டுக்கள் , தமன்னாவின் கவர்ச்சி , வழக்கமான வடிவேலுவின் காமெடி இதாவது படத்தில் இருந்தால் போதும் என்றுதான் நேற்று படம் பார்க்க சென்று இருந்தேன்... 

வகுப்புல டாப் மார்க் எடுக்குற மாணவன்கிட்ட தொண்ணூறு மார்க் நூறு மார்க்  எதிர்பார்க்கலாம் , மக்கு பையன்கிட்ட அவ்ளோ  எதிர்பார்த்தா அதுநம்ம தப்புதான் ஒரு முப்பது மார்க்கோ நாற்பது மார்க்கோ எடுத்தாகூட அவன நாம பாராட்டலாம் , ஆனா அதுகூட எடுக்கலைனா நமக்கு கண்டிப்பா கடுப்புதான் வரும்... சுராவும் அப்படிதான் , நம்ம ரசனையை எவ்வளவுதான் கீழ்மட்டதுக்கு இறக்கி படத்த பார்த்தாலும் கடைசியில கடுப்புதான் மிச்சம்...

விஜயோட அறிமுக காட்சி முதல் கடுப்பு , அப்புறம் அவர் நடந்து வரும் பொது பின்னாடி சுனாமி வர்றதும் , சூரகாத்து சுத்து சுத்து அடிக்கிறது மாதிரி காட்டுற காட்சி ரெண்டாவது கடுப்பு , விஜய ரெண்டாவது தடவ பாக்கும்போதே தமன்னா காதல் வயபடுவது மூணாவது கடுப்பு... அவங்க காதல விஜய் ஏத்துக்கிற அந்த ராத்திரி சீன் நாலாவது கடுப்பு, வில்லன் தேவ் கில் வர்ற  சீன் எல்லாமே கடுப்பு , அவர் சும்மா சும்மா விஜய அழிசிடுவேன் அழிச்சிடுவேன்னு கடைசி வரைக்கும் பெசிகிட்டேதான் இருக்காரு,  அதுவும் அந்த இடைவேளை சீன் , விஜய நெருப்புக்குள்ள தூக்கி போடுறதும் , எல்லாரும் விஜய் செத்துட்டாருன்னு நம்பி வில்லன் பின்னாடி போறதும் , விஜய் நெருப்புல இருந்து தப்பி வந்து (எப்படி தப்புராருங்கிரத  திருட்டி VCD வாங்கி பாருங்க செம காமெடி) மக்களை வசனம் பேசியே திருத்துறதும் , இன்னும் எத்தன படதுலதாண்டா காட்டுவீங்க. குப்பத்து மக்கள் எல்லாம் விஜய்கிட்ட வந்து நீதான் எங்க குல தெய்வம் ,, நீதான்  ராசா எங்கள காப்பாத்தனும்னு முறையிடுற சீன பாக்கும்போது தமிழ் படத்துல வர்ற "இனிமே இப்படிதான் , இனிமே எல்லாமே இப்படிதான்" என்கிற வசனம் ஞாபகம் வராதவர்கள் எல்லாம் விஜய் ஆரம்பிக்க போகும் கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேருவதற்கான எல்லா தகுதியும் உடையவர்கள்..

இடைவேளை விடுவதற்கு முன்னாள் விஜய் தன குப்பத்தை எரித்தது வில்லன்தான் என்று கண்டு பிடித்து அவரிடம் என் குப்பத்து மக்களுக்கு நல்ல வீடு கட்டி தருகிறேன் பார் என்று சவால் விடுகிறார், வில்லன் அத நான் தடுத்து காட்டுறேன் பார் என்று எதிர் சவால் விடுகிறார்.. அப்புறம் என்ன வழக்கம் போல விஜய் ஜெய்க்க அவர் கையால் வில்லன் அடிபட்டு சாக சுபம் போடுகிறார்கள்... இந்த கருமாந்திரம் பிடிச்ச கதைய ரெண்டு மணிநேரமா எடுத்து வச்சி நம்ம உயிரை வாங்குறானுக... விஜய் என்ன சொன்னாலும் நான் திருந்த மாட்டேன் என்று அவர் ரசிகர்களுக்கு மறுபடியும் பெரிய அல்வா கொடுத்து இருக்கிறார்.. விஜயின் ரசிக கண்மணிகளே அவருக்கு இப்ப தேவை தன்னை படத்துல பாத்து ரசிக்கிற ரசிகன் இல்ல தன்னை முதல் அமைச்சர் ஆக்க தன கட்சியில் சேர்ந்து ,  அவருக்கும் அவர் அப்பாவுக்கும் கடைசி வரை உழைக்க தொண்டர்கள்தான் அவரின் இப்போதைய தேவை , அந்த வகையான மக்களை குறிவைத்தே அவர் படங்களை தருகிறார், என்றாவது ஒருநாள் அது நடக்கவே நடக்காது என்று அவரும் அவர் தந்தையும் உணருவார்கள் அப்பொழுதுதான் அவருக்கு நீங்கள் தேவைபடுவீர்கள் ,அவர் படங்களை ஓடவைக்க ... அன்றுதான் அவரின் கடைக்கண் பார்வை உங்களை போன்ற அவரின் படத்தினை மட்டும் ரசிக்கும்  ரசிகர்கள் பக்கம் விழும்.

இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி இருக்குற ஒரே ஒரு விஷயம் நான் நடந்தா அதிரடி பாட்டுல விஜய்யோட நடனம்,, ஆனா பீச்சுல சுனாமி வந்துகிட்டு இருக்குறப்ப நம்ம காதலியோட முத்தத நாம அனுபவிக்க முடியுமா? அப்படி ஆகி போச்சி அந்த பாட்டு படத்துல ... அப்புறம் வடிவேலுவோட காமெடி அப்பப்ப சிரிப்ப வரவைக்கிது...நிறைய சீன்ல மொக்கையாகி போய்டுது... கைபுள்ளைக்கு சரக்கு காலியாகிடுச்சி போல... பின்னணி இசை படு சொதப்பல் , விஜய்யை காட்டும் போதெல்லாம் ஒரு BGM கொடுக்கிறார்கள் , ஷாஜகான் படத்தில் வரும் உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்றி செய்ய  பிறந்தவன் என்ற பாட்டை அப்படியே திருப்பி அடித்துள்ளார்...  ஒளிபதிவு சுமார் , லோக்கேசன்ஸ் எல்லாம் படு கேவலமா தேர்வு செஞ்சி படம் புடிச்சி இருக்காங்க , சண்டை காட்சிகள் படு மொக்கை , இளவரசு படம் முழுவதும் விஜய் புகழ் பாடிகொண்டே இருக்கிறார், அவன் ஒரு அதிசய பிறவி என்று அவர் சொல்லும் காட்சியில் திரை அரங்கில் சிரிப்பலை, படம்  முழுவதும் எல்லாரும் விஜய் புகழ் பாடுகிறார்கள் , ஒரு காட்சியில் விஜய் தன்னை தானே இன்றைய அறிஞர் அண்ணா என்று கூறி கொள்ளுகிறார் .. ஒரு சீன்ல கலெக்டரா வர்ற ஒருத்தர் , விஜயை பார்த்து எப்ப வேணாலும் வெடிக்க போற எரிமலை என்று கூறுகிறார் , எனக்கு நூறு ரூபா கொடுத்து கட்சி மீட்டிங்க்ல உக்காந்து இருந்த மாதிரியே இருந்துச்சி ,, படத்துல விஜய் பேசுற modulation  தாங்க முடியலடா சாமி , இந்த லட்சணத்துல ஒரு சீன்ல T.Rர வேற கிண்டல் பண்ணுறாரு....சத்தியமா சொல்லுறேன் இனிமே அவர் படத்த திருட்டு VCDல கூட பாக்க மாட்டேன் ...

விஜய்யின் நடிப்பு கேரியரில் மிக பெரிய கரும்புள்ளியாக இது வரை இருந்த படங்கள் புதிய கீதை , உதயா ,  இனிமேல் சுறா அந்த இடத்தை அன்ன போஸ்டில் கைப்பற்றி விடும் ..

சரி விஜய்இனிமேலாவது  திருந்துவாரா- எனக்கு என்னமோ மாட்டாருனுதான் நினைக்கிறேன் ஏன்னா அவருக்கு பயமே இல்ல அதுக்கு வேட்டைகாரனும் சுராவும்தான் சாட்சி....

LinkWithin

Related Posts with Thumbnails