Followers

Copyright

QRCode

Friday, October 22, 2010

டாக்டர் ரசிகர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம்

பாவம் நம்ம டாக்டர் தம்பி ... முன்ன எல்லாம் அவரை பத்தி எஸ்.எம்.எஸ்லயும் ஈமெயிலயும்தான்ஓட்டிகிட்டுஇருந்தானுக,,, இப்ப பப்ளிக்கா டிவிலயும், அரசியல் மீட்டிங்ளையும் ஓட்ட ஆரம்பிச்சிட்டாணுக(மதுரை மீட்டிங்க்ல அம்மா என்ன ஓட்டு “ஓட்டுது ”)... அதான் நானும் என் பங்குக்கு நம்ம டாக்டர் அவர்களை ஓட்டலாமேன்னு இந்த பதிவு ... இது ஒரு மீள் பதிவுதான்... பதிவு எழுத ஆரம்பிச்ச காலகட்டத்துல எழுதுனது.... அத கொஞ்சம் டிங்கரிங் வேலை பாத்து இங்க திரும்ப போடுறேன் ...


தன்னுடைய அடுத்த  படத்துக்காக விஜய் கதை கேட்டுகொண்டிருப்பதை கேள்விப்பட்டு நம்முடைய கோடம்பாக்கத்து மசாலா பேக்டரிகள் மசாலா அரைக்க அவரை தேடி செல்கின்றனர்.... கூடவே நம்ம அண்ணன் கவுண்டமணியும் இருக்காரு...


முதல் ஆளா  நம்ம அண்ணன் பேரரசு வராரு ....

பேரரசு: கவலைபடாதீங்க விஜய் உங்க படத்த உலகமே கொண்டாடுற மாதிரி எடுத்துருவோம்...

கவுண்டமணி: அடேயப்பா இவரு பெரிய ஸ்பீல்பெர்க்கு இவரு படம் எடுத்தா உலகமே கொண்டடபோது... நீ ஒரு மொள்ளமாரி, அவன் ஒரு முடிச்சவிக்கி... டேய் உன் ரேஞ் என்னவோ அதுக்கு ஏத்தமாதிரி  மட்டும் பேசு...

பேரரசு: நீங்க அமெரிக்கால அணுகுண்டு தயாரிச்சிட்டு இருக்கீங்க...

கௌண்டர்: யாரு இவனா? ஏன்டா உனக்கு கோலிகுண்டாவது செய்ய தெரியுமா? அணுகுண்ட கண்ணால பாதுருக்கயா? அது என்னனாவது உனக்கு தெரியுமா? அதுளா என்ன மாதிரி scientist பண்ற வேலைடா ஜாங்கிரி தலையா.... இவனுக்கு தெரிஞ்ச ஒரே அணுகுண்டு சாப்ட பின்னாடி போடுவாங்களே அது மட்டுந்தான்....

பேரரசு: உங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி அவள நீங்க ஈராக்குல கட்டி கொடுகிறீங்க.... அங்க இருக்குற தீவிரவாதிகலால உங்க தங்கட்சிக்கு பிரச்சன வருது.... உடனே நீங்க ஈராக்குக்கு போய் அங்க இருக்குற டெர்ரரிஸ்ட்கள எல்லாம் பஞ்ச் டையலாக் பேசியே கொள்ளுறீங்க....

கௌண்டர்: ஏண்டா இவன் பஞ்ச் டையலாக் பேசி தமிழ்நட்டுகாரண கொன்னது பத்தாதுன்னு அமெரிக்காகாரனையும் கொல்ல போறீங்களா.... ஆண்டவா என்ன ஏன் இந்த கலுசட பயலுககூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற.... எங்க ஒரு டையலாக்எடுத்து வுடு பாப்போம்...

பேரரசு: டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல

கௌண்டர்: தம்பி கொஞ்சம் எழுதிரிசி திரும்பி நில்லு... (பேரரசு எழுதிரிசி நிக்க கௌண்டர் தன் ஸ்டைலில் அவரை எத்தி மிதிக்கிறார்) ( விஜையை பார்த்து)  இவனுககூடலம் சேந்த உன்ன உச்சி வெயில்ல பழநிமலை அடிவாரத்துல பிச்ச எடுக்க வுட்டுருவானுக,, இப்ப இருக்குற நெலமைல நீ போன அங்க இருக்குற 
பிச்சகாரன் கூட உன்ன சேத்துக்க மாட்டான்....

அடுத்து நம்ம நடன புயல் பிரபு தேவா வாராரு 

பிரபு: சார் என்கிட்டே ஒரு அருமையான கதை ஒன்னு இருக்கு ... சரிஞ்சி போய் இருக்கிற உங்க மார்கெட்ட தூக்கி நிறுத்திற  மாதிரியான காதல் கதை இது ... உங்கள பூவே உனக்காக காலத்து விஜய்யா மாத்திற கதை சார் இது...

கவுண்டர்: டேய் தாடிகார கேடி .. இந்த மூஞ்ச பாருடா (விஜய் மூஞ்சை காட்டுகிறார்) நல்லா சுகர் வந்த @@@@@ கனக்கா இருக்கு ... இத திரும்ப யூத் மாதிரி காட்ட போறியா? இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க காட்டாதடி...

விஜய்: அண்ணன் கொஞ்சம் சும்மா இருங்கண்ணே... நீங்க சொல்லுங்க பிரபு ...

பிரபு: சார் இந்த படத்துல  உயிருக்குயிரா காதலிக்கிற ஒரு காதல் ஜோடிய சேத்து வைக்கிற கேரக்டர்ல நடிக்கிறீங்க ... படத்தோட ஆரம்பத்துல உங்க லவ்வர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்டுறாங்க ... அதனால நீங்க ரொம்ப மனசு ஒடிஞ்சி வாழ்கையே வெறுத்து போறீங்க ... அப்பத்தான் நீங்க ஒரு காதல் ஜோடிய சந்திக்க வேண்டி வருது ... அவங்க ரெண்டு பெரும் உயிருக்குயிரான காதலர்கள் ... ஆனா அவங்க ரெண்டு பேரும் வாழ்கையில ஒன்னு சேருவதற்கு நிறைய தடைகள் வருது ... அவனுக்கு அவனோட முதல் மனைவியின் மூலமா ... அவளுக்கு அவளோட முன்னாள் காதலன் மூலமா... அவங்க ரெண்டு பேரும் ஊருலயே பெரிய ரௌடிங்க ... அவங்ககிட்ட இருந்து ரெண்டு பேரையும் காப்பாத்தி அவங்கள ஒன்னு சேத்து வைக்கிறீங்க ... இதுதான் படத்தோட கதை  இதுல அந்த காதலர்கள் கேரக்டேர்ல நானும் நயன்தாராவும் நடிக்கிறோம் ... உங்களுக்கு ஜோடியா சிம்ரன போட்டிடுவோம் ... நம்ம கவுண்டர் அண்ணனுக்கு கூட ஒரு கேரக்ட்டர் இருக்கு இந்த படத்துல 

கவுண்டர்: அந்த சொம்பு பையன் கேரக்டர எனக்கு குடுப்பா ... லிப் டு லிப் கிஸ் சீன்லாம் வரும் ... நானும் இப்படி குஜாலா நடிச்சி ரொம்ப நாள் ஆச்சி  ...

விஜய்: சும்மா இருக்கண்ணே .. நானே அப்படி நடிச்சி ரொம்ப நாள் ஆச்சி ... சுறா வேட்டைன்னு நடிச்சதுக்கு பதிலா எங்க அப்பாவ வச்சி ரெண்டு பிட்டு படம் எடுத்து ஓட்டிருக்கலாம்...   ஓகே பிரபு உங்க கதை கொஞ்சம் நல்லா இருக்கு ... ஆனா இன்னும் கொஞ்சம் மாத்தினா நல்லா இத விட பெட்டரா இருக்கும்னு நெனைக்கிறேன் ... நீங்களும் நயன்தாராவும் லவ் பண்ணுறீங்க ... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வரேன் இது வரைக்கும் ஓகே.. அப்பறம் என்ன ஆகுதுன்னா என்னோட பெர்சனாலிட்டி , மக்களுக்கு நல்லது பண்ற என்னோட நல்ல  குணம் இதை எல்லாம் பாத்திட்டு நயன்தாராவுக்கு என் மேல லவ் வந்திடுது ... நீங்களும் அவங்க லவ்வ புரிஞ்சிகிட்டு அவங்களை எனக்கு விட்டு கொடுத்திடுறீங்க .. இப்படி கதையை மாத்துங்க .. நான் நடிச்சி கொடுக்கிறேன் ...

கவுண்டர்: அட்ராசக்க .. கதைய மாத்துறேன்னு சொல்லி அடிமனசுல இருக்கிற ஆசையை அப்படியே வெளிய எடுத்து விடுது பாரு ... டேய் தாடி கதை சொல்லுரப்பவே உன் காதல பிரிக்க ப்ளான் பண்ணுறான் ... இவன வச்சி படம் எடுத்த அந்த சொம்பு பையன் மாதிரி நீயும் புலம்ப வேண்டி வந்திடும் .. பாத்துக்கோ...

பிரபு : நயன்தாரா என் உயிர் சார் ... அவ இல்லாம நான் இல்ல ... நான் இல்லாம அவ இல்ல .. அவளை யாருக்காகவும் நான் விட்டு கொடுக்க மாட்டேன் ... (கண்களில் நீர்  வர அழுது கொண்டே இடத்தை காலி பண்ணுகிறார் பிரபுதேவா)


அடுத்து நம்ம தரணி கத சொல்ல வராரு

தரணி: விஜய் இந்த படம் வந்த பின்னாடி அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்குற உங்க ரசிகர்கள் எல்லாம் உங்கள அடுத்த பிரதமர்னு சொல்ல அரம்பிட்சிடுவாங்க... அப்டி ஒரு பவர்புல் கத இது....

கௌண்டர்: என்னது அடுத்த பிரதமரா? உலக மகா பில்ட்டப்புடா சாமீ....

தரணி: நம்ம நாட்டோட பிரதமர பின்லேடன் கடத்திட்டு போயிடுறான்.. அப்ப ஆப்கானிஷ்தானுக்கு கபடி விளையாட போயிருந்த நீங்க பின்லேடன அடிச்சி போட்டுடு நம்ம பிரதமர கூப்பிட்டு ஆப்கானிஷ்தானுல ரோட் ரோட அலையுறீங்க... ....

கௌண்டர்: ஐயய்யோ.... ஏண்டா பின்லேடன என்ன உங்க வீட்டுல பேப்பெர்போடுற பையன்னு நெனசியா.... அமெரிக்கால அணுகுண்டு போடுறவன்டாஆனானப்பட்ட அமெரிகாகரனே அவன ராக்கெட்டு விட்டு தேடியும் கெடைக்க மாட்டேன்றான்.... இந்த பேரிக்கா தலையன் கண்டுபுடிசிடுவானா? எழுந்திரிச்சி வந்தேன் ஏறி மிதிச்சிடுவேன்... ஓடி போய்டு ....(விஜயை பாத்து) இன்னொரு தடவ கத கேட்டு சொல்லுங்கன்னேனு இந்த மாதிரி பசங்கள கூப்டுடு வந்த தெரு நாய விட்டு கடிச்சி கொதறி புடுவேன்....

விஜய்: சரிங்கண்ணா அப்டினா நீங்களே நல்ல கதையா சொல்லுங்க...

கௌண்டர்: அப்டி கேளுடா... இதுக்குதான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆள் அழகு ராஜா வேணும்கிறது.... நீ என்ன பண்ற செந்தில் நடிச்ச படத்தையெல்லாம் வங்கி பாக்குற... அடுத்த படத்துல இருந்து நீதான் எனக்கு செந்தில்... அவன் ஹீரோவா நடிக்க போனதுல இருந்து அடிக்க ஆள் இல்லாம எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு....
விஜய் : யார பாத்து என்ன சொல்லுற? தமிழ் நாட்டுல என்ன பாத்து காமெடியனா நடிக்க சொன்ன மொத ஆளு நீதான்...

கௌண்டர்: அது என்னடா எதுகேடுதாலும் ஒரு பஞ்ச் டையலாக்கு.... நீ நடிச்ச படத்த எல்லாம் பாதுருக்கயடா?

விஜய் : இல்லனா அந்த ரிஸ்கெல்லாம் எடுக்குறது கெடையாதுனா... நடிகிரதோட மட்டும்தாண்ணா,, அதையெல்லாம் பாக்குறது கெடையதுனா?

கௌண்டர்: என்னது நடிக்கிறயா?  நீ பண்றதெல்லாம் நடிகிரதுனா அப்ப நம்ம நடிகர் திலகம் பன்னுனதேல்லாம்....ஆம்மா உண்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கனும்னு நெனசிருந்தான்.... புதிய கீதைனு ஒரு படம் நடிச்சையே அந்த படத்தோட கத என்னடா?

விஜய்: எண்னனா இப்டி கேக்குறீங்க.. ஊருக்கு நல்லது பண்ண நமக்கு நல்லது தானா நடக்கும் இதுதான்னா அந்த படத்தோட கத....

கௌண்டர் : அதுல என்னடா பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுகுற.. இந்தியாலேயே பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுந்த ஒரே ஹீரோ நீ மட்டுந்தாண்டா...

விஜய்: அதெல்லாம் வித்தியாசமா இருக்கட்டுமேனு வட்சதுன்னே...
கௌண்டர்: சரி விடு எதாவது ஒரு படதுலையது கெட் - அப் மாத்தி நடிசிருக்கயா

விஜய்: என்னன்னா இப்டி கேட்டுடீங்க... அந்த படத்துல ஆறு விரல் வச்சி நடிசிருப்பேனே பாக்கலையா நீங்க....

கௌண்டர்: ஒன்ன எல்லாம் காமெடியனா நடிக்க கூப்டதுல தப்பே இல்லடா...
அது சரி ஏன் எப்ப பாத்தாலும் உயரமான எடத்துல இருந் கீழ விழற மாதிரியே நடிக்கிற , சினிமாலயும் நீ மேல இருந்து கீழ விழுந்துகிட்டு இருக்கங்கிரத  சிம்பாலிக்கா காட்டுரயா?சரி சரி நீ உன் படத்துக்கு சுறான்னு பேரு வச்சதுல இருந்து கடல்ல இருக்குற சுறா மீனெல்லாம் தற்கொல பண்ணிகிடுசாமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி...

விஜய்: (கோபமாக) சாமிகிட்ட மட்டுந்தான் சாந்தமா பேசுவேன் உன்ன மாதிரி சாக்கடகிட்ட எல்லாம் இல்ல...

கௌண்டர்: உனகெல்லாம் கௌண்டமணி உத பத்தாதுடா வேற வேற பின்லேடன் படதாண்டா  வேணும்.... சீ இவனுக கூட  சேந்து  எனக்கும் பஞ்ச்  டயலாக் பத்திகிடுசே... இனிமே இவனுக கூட எல்லாம் சவகாசமே வச்சிக்க கூடாதுடா சாமி... 
ஷோவை அவசர அவசரமாக முடித்து கொண்டு பின்வாசல் வழியே ஓடுகிறார்
கௌண்டர்

BONUS: 


எனக்கு வந்த சில விஜய் SMS

ரஜினி : உங்களுக்கு தெரிஞ்ச ஒரு software பேரு சொல்லுங்க ...

சூரியா : MS-WORD

விக்ரம் : MS-EXCEL

தனுஷ் : MS-POWER POINT

சிம்பு : MS-PAINT

விஜய் : (சிறிது நேரம் யோசித்து விட்டு ) MS. தோணி 

டாக்டர் .விஜய் S.S.L.C rocks...


சென்னையில் ஒரு வேலைவாய்ப்பு 

இடம் : AVM studio வாசல் 

படிப்பு : தேவை இல்லை 

சம்பளம் : மாதம் ரூ.30,000

வேலை : நம்ம டாக்டர் சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும் ...

NOTE (???): நான் தலைப்பிலேயே சொல்லி விட்டேன் நம்ம டாக்டர் ரசிகர்கள் யாரும் இதை படிக்க வேண்டாம் என்று மீறி படித்து டென்ஷன் ஆகி இருந்தால் அது என்னுடைய தவறு கிடையாது ...

20 comments:

Unknown said...

பாவம் அந்த பய புள்ளை விட்டுருங்க தம்பி..

Yoganathan.N said...

சிவகுமார் தவப் புதல்வனைப் பற்றி எழுதுவது தான் இப்போ latest. நீங்க ரொம்ப outdated-ஆ இருக்கீங்ளே...

பாலா said...

ரணகளம்...டோட்டல் டேமேஜ்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன ஒரு கோல வெறி...

எஸ்.கே said...

செம காமெடி!!

Jeyamaran said...

sirippu thanga mudiyala anna asathal......................

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

என்ன குச்சின்னு சொல்லவே இல்லை.

ரஹீம் கஸ்ஸாலி said...

super. vijay patri thampi haja oru pathivu pottrukkaar. athaiyum padiyunga..http://nkshajamydeen.blogspot.com/2010/10/blog-post_22.html

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

NaSo said...

நல்லாருக்கு. இத அப்படியே தொடருங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிகளா... இனி ஆண்டவனே வந்தாலும் டாகுடர காப்பாத்த முடியாது போலிருக்கே? நடக்கட்டும் நடக்கட்டும்..... யாரங்கே டாகுடர் விஜய் ரசிகன் என்று யார் வந்தாலும் தூக்கி பாதாளச்சிறையில் அடையுங்கள் (அதுக்கு டாகுடர் படம் பாக்குறதே மேல்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரு படம் ஓடுதோ இல்லியோ, மத்ததெல்லாம் நல்லா ஓடுது!

எப்பூடி.. said...

ஆனாலும் விஜயை இப்படியா கலாய்க்கிறது :-) அதுவும் அந்த M.S.தோனி மேட்டர் சூப்பர்.

"ராஜா" said...

@ கே.ஆர்.பி.செந்தில்

அண்ணன் நம்ம டாக்டர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு ,,, ரொம்ப நல்லவருன்னே அவரு

@ Yoganathan.N

விடுங்க தல கூடிய விரைவில் அந்த கோஷ்டிய ஓட்டி ஒரு பதிவு போட்டிடுவோம்

@ பாலா

நன்றி நண்பரே நம்ம டாக்டர் அவர்களை ஓட்டனும்னு நெனச்சாலே நம்ம மூளை சுருசுருப்பா இயங்க ஆரம்பிச்சிடுது

"ராஜா" said...

நன்றி வெறும்பய ...

நன்றி s.k

நன்றி ஜெயராமன் தம்பி

@ ஜெகதீஸ்வரன்.

அவர் ஈர்க்குச்சி இல்லையாம் தீக்குச்சியாம் .... ஆனா அவர வெரட்ட குச்சிஎல்லாம் தேவ இல்ல சுறா பட டிவிடிய காட்டுங்க அவரே ஓடிருவாரு

"ராஜா" said...

@ ரஹீம் கஸாலி

பாத்திடுவோம்

@ philosophy prabhakaran

நன்றி தல

@ நாகராஜசோழன் MA

டாக்டர கலாய்கிரதுல எவ்வளவு சந்தோசம் ... ட்ரை பண்றேன் தல

"ராஜா" said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

அப்படி யாரையும் இன்னும் காணோம் தல ... எல்லாம் தலைமறைவு வாழ்க்கை வாழறதா கேள்விபட்டேன் ... எப்படியும் காவலன் ரிலீசப்ப வெளிய வந்துதான் ஆகணும் ... அப்ப பாத்துகிடுவோம்

@ எப்பூடி..


அவர தவிர வேற யார இப்படி கலாய்க்க முடியும் ...
வருகைக்கு நன்றி நண்பரே

கவி அழகன் said...

அருமை அருமை

"ராஜா" said...

@ யாதவன்

நன்றி நண்பரே

LinkWithin

Related Posts with Thumbnails