Followers

Copyright

QRCode

Monday, May 28, 2012

நம்ம தல தோனிக்கு பெரிய சங்கு ஊதுங்க...



வழக்கத்தை விட இந்த முறை ஐ‌பி‌எல் கொஞ்சமல்ல அதிகமாகவே பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது.. இந்த முறை மைதானத்தை விட மைதானதுக்கு வெளியேதான் நிறைய சுவாரஷ்யமான நிகழ்வுகள் நடந்தேறியது.. ஒரு வீரர் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்யததில் இருந்து அணியின் உரிமையாளர் குடித்து விட்டு சண்டித்தனம் பண்ணியது வரை அத்துணை அசிங்கங்களும் அரங்கேறியது... இவைகளுக்கு நடுவில்தான் மைதானத்தில் கிரிக்கெட் பொம்மலாட்டமும் ரசிகர்களுக்கு காட்டப்பட்டு வந்தது... யாரோ வெளியில் இருந்து ஆட்டுவிக்க அதற்க்கு ஏற்றார் போல உள்ளே வீரர்கள் அடித்தார்கள் , லட்டு போல பந்து வீசினார்கள் , மொக்கை பந்திலும் போல்ட் ஆனார்கள் , கைக்குள் வந்து விழும் பந்துகளையும் நழுவ விட்டு நடித்தார்கள்... கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட சில அணிகள் மொக்கை போட்டிகளில் தோற்கடிக்கபட்டு வெளியேற்றபட்டன , இந்த முறை தேராது என்று கணிக்கப்பட்ட அல்லது ஐ‌பி‌எல் நிர்வாகிகளால் அவ்வாறு மறைமுகமாக விளம்பரபடுத்தபட்ட அணிகள் ஆரம்பத்தில் நொண்டியடித்து தமிழ் பட ஹீரோக்களை போல கடைசியில் வீறு கொண்டு எழுந்தன. அதுவும் பிளே ஆஃப் சுற்றும், இறுதி போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதற்காக மூன்று அணிகளை வலுகட்டாயமாக தோற்கடித்து சென்னையை உள்ளே நுழைத்த சாமர்த்தியம் சபாஷ் ...ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த தந்திரம் அது , ஜெயித்து கொண்டிருந்த அணிகளை கடைசியில் தோற்கடித்து பெட்டிங்கில் பணம் அள்ளியது ,சென்னை என்று பெயர்  வைத்துவிட்டதால் அதை ஆதரித்தால்தான் நாம் தமிழன் இல்லையென்றால் நாம் தமிழனே கிடையாது என்று நம்பிக்கொண்டிருக்கும் மற தமிழர்களை கூட்டம் கூட்டமாக மைதானதுக்கு வர வைத்து காசு பார்த்தது என்று என்று ராஜதந்திரத்தின் உச்சம் தொட்டது நம் பி‌சி‌சி‌ஐ...




தகுதி சுற்றில் பல ஆட்டங்களில் எதிரணியின் ஒரே ஒரு வீரர் அடித்த ஓட்டங்களை கூட மொத்த வீரர்களும் சேர்ந்து அடிக்காத சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றில் சுத்தி சுத்தி அடிக்கவிட்டு இறுதி போட்டிக்கு ஒரு பெரிய பரபரப்பை உருவாக்கினார்கள்.. அப்பொழுதுதானே நம் தமிழர்கள் நாம் தமிழர் என்ற பாசத்தோடு கூட்டம் கூட்டமாக போட்டியை பார்க்க வருவார்கள்.. (பிளே ஆஃப் சுற்றில் மூன்றாவது போட்டியில் டெல்லி அணி வீரர்கள் விட்ட கேட்ச்களை பார்த்தும் ஐ‌பி‌எல்ளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் நாம்  இளிச்சவாயர்கள் என்ற பட்டத்துக்கு  முற்றிலும் பொருத்தமானவர்கள்)



அப்படி நாம் தமிழர் பற்றோடு இறுதி போட்டியை பார்த்த தமிழனுக்கு பொம்மலாட்டத்தின் முடிவு என்னமோ பெரிய ஏமாற்றமாகத்தான் அமைந்தது. ஒரு பிரமாண்டமான மசாலா படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருந்தால் படம் வெள்ளிவிழா கொண்டாடுமோ அதே போலவே விறுவிறுப்பாக இயக்கபட்டிருந்தது இந்த ஐ‌பி‌எல்ளின் கிளைமாக்ஸும்... ஆட்டத்தின் முதல் பாதி முடிந்ததும் சென்னை அணி எளிதில் வென்று விடும் என்று எனக்கு தெரிந்த  பல சுத்த தமிழர்கள் அப்பொழுதே தமிழகத்தின் வெற்றியை கொண்டாடும் மனநிலைக்கு வந்திருந்தார்கள்... ஐ‌பி‌எல் போட்டியின் கடைசி பந்து வரைக்கும் அதை நடத்துபவர்களுக்கு  பணம் மழை பொழியும் என்ற சின்ன விஷயம் கூட அவர்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்கிறார்களா என்று எனக்கு புரியவில்லை... 






அதுபடியே போட்டியும் கிட்டதட்ட கடைசி பந்து வரைக்கும் இழுத்து கொண்டு வரப்பட்டது,அதுவும் சென்னை ஜெயிப்பது போல இருந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் கொல்கத்தா ஜெயிப்பது போல மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது... ஆனால் அங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட் விழ மீண்டும் ஆட்டம் மற தமிழன் பக்கம் சாய்ந்தது... இப்படி கடைசி வரை அங்கும் இங்கும் மாறி மாறி பயணித்த திரைக்கதை கடைசியில் கொல்கத்தா பக்கம் சாய்ந்து  மற தமிழனுக்கு ஆண்டி கிளைமாக்ஸாக மாறி விட்டது...  எத்தனை முறைதான் ஒரே அணியை ஜெயிக்க வைப்பது , பிறகு மற்ற மாநில ரசிகர்கள் வெறுப்பில் ஐ‌பி‌எல்லை ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது, அதுவும் இல்லாமல் கங்குலி வெளியேறியதில் இருந்து கொல்கத்தா ஈடன் கார்டனில் எந்த போட்டி நடந்தாலும் ஈயாடுகிறது , இந்த முறை கொல்கத்தா ஜெயித்து ஷாருக்கான் இது என்னுடைய அணியின் வெற்றி கிடையாது ஒவ்வொரு வங்காளியின் வெற்றி என்று சொல்ல வைத்து விட்டால் தமிழனுக்கு இப்பொழுது இருக்கும் அதே “நாம் தமிழன்  பற்று வங்காளிக்கும் பொத்து கொண்டு வந்து அடுத்தடுத்த ஐ‌பி‌எல்ளில் கூட்டம் கூட்டமாக ஈடன் கார்டனில் கூடுவானே... இந்த கிளைமாக்ஸ் இப்படியாக முடித்து வைக்கபட்டதற்க்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்...




என்ன இருந்தாலும் கம்பீர் வாயால் தோனிக்கு சங்கு ஊதியது போல அமைக்கபட்டிருந்த இந்த கிளைமாக்ஸ் எனக்கு பிடித்திருந்தது என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்...        

2 comments:

Karthikeyan said...

ரசித்து சிரித்து வாசித்தேன். முற்றிலும் உண்மையான கருத்துக்கள். க்ளைமேக்சில் இந்தியா சிமெண்ட் ஸ்ரீனிவாசன் மயங்குவதாக நடித்து படம் முடிந்தது. பன்னாடைகள்.

vasan said...

அர‌சிய‌ல், சினிமா, கிரிகெட் இந்த‌ மூன்றும் தான் ம‌க்க‌ளின் ப‌ல‌த்தில், ப‌ண‌த்தில் ந‌ட‌க்கும் மிக‌ப் பெரிய‌ தொழில். தாவூது, ச‌ர‌த்ப‌வார், ஃப‌ரூக் அப்த்துல்லா, அருண்ஷேட்லி, ஷாருகான், அம்பானி, சீனிவாச‌ன், ம‌ல்லையா போன்ற‌வ‌ர்க‌ளின் வருமான‌த்திற்கு ப‌லி, ஜென்டில்மென் கேம் என அழைக்க‌ப்ப‌ட்ட‌ கிரிகெட்டும், பாவ‌ப்ப‌ட்ட‌ இந்திய‌ பிர‌ஜைக‌ளும் தான். "ஃபிக்ஸ்டு கேம் தான், ஆனாலும் வேற‌ புரோக்ராம், இது மாதிரி த்ரில்ல‌ இல்லையே ம‌ச்சான்' என போகும் ம‌க்க‌ள் நான் க‌ண்ட‌ அள‌வில் அதிக‌ம். பெட்டிங் ஒவ்வொரு ப‌ந்தின் (நோ பால், சிங்கில், ட‌புள், திரி, போஃர் & சிக்ஸ்)எல்லா ப‌ரிமாண‌ங்க‌ளும், பெட்டிங் ஆட்டுவிப்ப‌வ‌ர்க‌ளுக்கு அலாவுதீன் பூத‌மாய் ப‌ண‌த்தை கொட்டிய‌து.அத‌னால் தான், அரை ம‌ற்றும் இறுதி போட்டியில் ஆட்ட‌ம் இருபுற‌மும் அலைந்து கொண்டே இருந்த‌து. டெல்லி ஜெயிக்கும் என அதிக‌ன‌ ப‌ண‌ய‌ம் இருந்தால், சென்னை ஜெயிக்கும். க‌ல்க‌த்தா மீது குறைவான‌ ப‌ணய‌மெனில், சென்னை தோற்கும். ஐபிஎல் ஆறு எப்ப‌ வ‌ரும் என காத்திருப்ப‌து அணியின‌ர் ம‌ட்டும‌ல்ல‌, "மாங்கா" ம‌க்க‌ளும் தான். //என்ன இருந்தாலும் கம்பீர் வாயால் தோனிக்கு சங்கு ஊதியது போல அமைக்கபட்டிருந்த இந்த கிளைமாக்ஸ் எனக்கு பிடித்திருந்தது என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்...//

அதுக்குத்தான் த‌னியா ஒரு அமெளண்டு வ‌ந்துருதுல‌!!, ப‌ண‌த்துக்காக‌ எது வேண்டுமானாலும் செய்ய‌ இந்த‌ மூன்று துறையும் ஆல்வேஸ் ரெடி.

LinkWithin

Related Posts with Thumbnails