Followers

Copyright

QRCode

Thursday, February 11, 2010

கடவுளும் ஒரு நாள் கட்டாயம் வருவார்..




என்னை ஊர் கிறுக்கன் என்றது...

நீ நடந்து

விட்டு சென்ற

உன் பாதசுவடுகளுக்கு

குடை பிடிதேனாம்....

அவர்களுக்கு எங்கே தெரியும்

உன் பாதம் பட்டால்

மண்ணும் உயிர் பெரும் என்று...

உன் விழி பட்டு

உயிர் பெற்ற

என் இதயத்திற்கு தானே

அது தெரியும்......



காற்றில் ஆடும்

உன் கலைந்த

முடியில்

ஊசல்ஆடியது என் இதயம்....

நீ அழகாய் அதை

உன் கையால்

உன்னோடு இழுத்து

கொண்ட போது

முடியோடு சேர்ந்து

உன்னோடு வந்து விட்டது

என் இதயமும் ........




நீ சோம்பல் முறித்தால்

சோம்பல் குறைகிறதோ

இல்லையோ...

உன் அழகு கூடுகிறது...


கேளுங்கள் தரப்படும்

என்ற கடவுளிடம்

என்ன கேட்டு

வங்கி கொண்டாய்

இவ்வளவு அழகை....


நீ வாரம்

தவறாமல் செல்லும்

ஆலயத்திற்கு

நானும் வாரம் தவறாமல்

வருகிறேன்...

உன்னை பார்க்க அல்ல...

கடவுளை பார்க்கும் ஆசையோடு....

நீ கண்மூடி ஜெபிக்கும்

அழகை பார்க்க

கடவுளும் ஒரு நாள்

கட்டாயம் வருவார்....




உலகில் உள்ள சில புனிதமான உணர்வுகளில் காதலும் ஒன்று.... எவராலும் மாற்ற முடியாத பல விசயங்களை நொடியில் மாற்றி போடும் சக்தி அதற்க்கு உண்டு. எதோ ஒருவகையில் பண்டமாற்று முறையை போல் மாறி விட்ட பல உறவுகளுக்கு நடுவே எதையும் எதிர்பார்க்காமல் எல்லாமும் தரும் உறவு அது. மனதோடு மனது உரசினால் வரும் தீ அது. காம தீயை அடக்கும் குளிர்ச்சியும் அதே,  அவள் தரும் உதட்டு முத்தம் என்றுமே காம தீயை உருவாக்குவதில்லை , அது காதல் தீயவே மேலும் கொழுந்து விட்டு எரிய செய்யும் நம் மனதிற்குள். காதல் செய்தால் பசி உறக்கம் மறக்குமோ இல்லையோ கண்டிப்பாய் அது வரை நம்முள் கொழுந்து விட்டு எரியும் காமம் கண்டிப்பாய் மறந்து விடும், பெண்களை அவர் உணர்வுகளை மதிக்கும் குணம் நம்முள் வந்து விடும். பெண்கள் மனம் ஒரு புரியாத புதிர், அதை புரிந்து கொள்ள ஒரே வழி காதல்.... ஆண்கள் மனம் சீறி பாயும் காட்டாறு, அதை ஒழுங்கு படுத்தும் ஒரே வழி காதல்.... 
காதல் செய்யும் காதலர்களுக்கெல்லாம் காதல் செய்யும் எல்லா நாளுமே காதலர் தினம்தான் என்றாலும் , காதல் மட்டுமே செய்யும் இந்த சிறப்பு காதலர் தினத்தில் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ... 



4 comments:

ஆர்வா said...

கலக்கிட்டீங்க பாஸ்

"ராஜா" said...

என்னுடைய கன்னி முயற்சிக்கு பாராட்டு அளித்ததற்கு நன்றி....

Om Santhosh said...

very nice line.
beautiful meaning of the kadhal kavidhai

"ராஜா" said...

tanx om santhosh....

LinkWithin

Related Posts with Thumbnails