Followers

Copyright

QRCode

Friday, January 29, 2010

சில்வண்டு சிக்கும் ... சிறுத்த சிக்காதுலே...



இப்போது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருப்பது IPL ஏலம்தான்.இந்த தடவை நடந்த ஏலத்தில் பாக்கிஸ்தான் வீரர்கள் யாரையுமே எந்த அணியும் எடுக்கவில்லை.உடனே இது இந்திய அரசின் சதி செயல் , பாக்கிஸ்தானை கேவலபடுத்தும் செயல் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் கொட்டி தீர்த்து விட்டது. இவ்வளவுக்கும் பாக்கிஸ்தாந்தான் இப்போதைய உலக சாம்பியன், அந்த அணி வீரர்கள் எல்லோருமே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் நல்ல போர்ம்மில் உள்ளனர், இருந்தும் அவ்வணி வீரர்கள் யாருமே ஏலத்தில் எடுக்கபடாததர்க்கு காரணம் அவர்கள் இந்தியா வருவதற்கு உள்ள சிக்கல்கள்தான்.. மும்பை குண்டு வெடிப்பிற்கு பின்னர் பாக்கிஸ்தானில் இருந்து இந்திய வருவதற்கு விசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன ... போட்டிகள் தொடங்குவதற்கு மிக குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் அவர்களுக்கு அதற்குள் விசா கிடைத்து விடுமா என்பதே சந்தேகம்தான். எனவே எந்த ஒரு அணியும் அவர்களை ஏலத்தில் எடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் அதிகம் பாதிக்க பட்டு இருப்பது அந்த அணி வீரர்களே.. பின்ன கோடிகணக்கில் அவர்களுக்கு பணம் நட்டம் இதனால்... IPL பொறுத்தவரை ஒரு அணி ஒரு வருடத்தில் அதிகபட்சம் இருபது போட்டிகளில்தான் விளையாடும் அதற்கு இவ்வளவு பணம் என்றால் யாருக்குதான் ஆசை வராது? அது கிடைக்கவில்லை என்றவுடன் இப்போது தேச பிரச்சனை ஆக்கிவிட்டார்கள்.

இது அவர்களுக்கு கிரிக்கெட் மேல் உள்ள ஆசையை வெளிபடுத்துகிறது என்றும் எடுத்து கொள்ள முடியவில்லை. காரணம் உண்மையிலேயே அவர்கள் தங்களால் இந்தியாவில் வந்து விளையாட முடியவில்லை என்ற வருததினால்தான் இப்டி பேசினார்கள் என்றால் இதற்கு முன் பல தடவை இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட பொழுது இவர்கள் இவ்வாறு கூப்பாடு போட்டதில்லை, அமைதியாகத்தானே இருந்தார்கள் பணம் போட்சே என்ற வருததினால்தான் இப்படி இந்தியா மேல் அபாண்டமாக பழி போடுகிறார்கள் , IPL நிர்வாகமும் வெட்கமே இல்லாமல் அடுத்த முறை வாய்ப்பு தருகிறோம் என்று அவர்களை சமாதான படுத்துகிறார்கள். அடுத்த முறை அவர்கள் சும்மா இருந்தாலும் இவர்களே போய் எங்ககூட சண்டைக்கு வரேன்னு சொன்னேங்க வரவே இல்லைன்னு கேப்பானுக போல, அந்த அளவுக்கு இதனால் IPLலுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்து விட்டது. கூடிய விரைவில் நமக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் ஆசையை கெடுத்து விடுவார்கள் போல .




சமீபத்தில் தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது.. வேட்டைக்காரனின் மாபெரும் வெற்றியை??? தொடர்ந்து சுராவையும் sun picture வாங்கி விட்டது என்று.. இவர்களுக்கு வெற்றி என்றால் என்னனு சொல்லி கொடுங்கப்பா? ஆனால் பாவம் விஜய் வேட்டைக்காரனின் இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமே sun picture தான், sun TV ஒரு பொருளை அதிகமா விளம்பரபடுதுனாலே நமக்கு புரிஞ்சிடும் அது நொண்டி குதிரைன்னு , அதும் அந்த பொருளுக்கு இலவசமா ஏதாவது தந்தானுகண்ணா சின்ன கொழந்தைக்கு கூட புரியும் அது விக்காத சரக்கு , நம்மள ஏமாத்தி நம்ம தலையில கட்ட பாக்குறானுகன்னு (இலவசத்த நம்பி குங்குமம் வாங்கி அப்புறம் பத்திரிக்கை படிக்கிற பழக்கத்த விட்டவங்க பல பேர் நம்ம தமிழ்நாட்டுல ).இந்த ஜோசியம்தான் வேட்டைகாரனையும் குப்பற கவுத்திடுசி... இப்ப மறுபடியும் அவங்ககிட்டயே மாட்டுறாரு தளபதி .. பாவம் அவர் ரசிகர்கள்....

தலயின் அம்பதாவது படத்த தயாநிதி அழகிரி தயாரிக்க போறார்னு ஒரு நியூஸ் கசியித்து... அப்படி ஏதாவது நடந்ததுனா தலைக்கு அது போதாத காலமாதான் அமையும், வாரம் ஒருதடவ அவர் கலைஞர் டீவீக்கு பேட்டி தரனும், தயாநிதி வீட்டு விழாக்களுக்கு எல்லாம் போய் கலந்துகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும், முதல்வர் கலைஞர் எழுதி தர்ற வசனத்த பேசி நடிக்கணும், அதுகூட பரவா இல்ல அவர வாரம் ஒரு தடவ பாராட்டி பேசணும் , மதுர புல்லா அழகிரிக்கு நன்றி சொல்லி போஸ்ட்டர் ஓட்டனும், ஆனா தல மாட்டாதுன்னுதன் நெனைக்கிறேன் ஏன்னா "சில்வண்டு சிக்கும் ... சிறுத்த சிக்காதுலே... "

1 comment:

Yoganathan.N said...

Hi. Regarding Thala in Azagiri's production:

கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கிறது தான் முக்கியம்... ஹிஹிஹி

LinkWithin

Related Posts with Thumbnails