
நேற்று விஜய் டிவி காபி வித் அனுவில் ஆண்ட்ரியா மற்றும் G.V.பிரகாஷின் பேட்டி.... வழக்கம் போல கல கலப்பாக இருந்தது நிகழ்ச்சி. மாலை நேரம் பாடலை பதிவு செய்த விதம் பற்றி பிரகாஷ் கூறினார், ஆண்ட்ரியாவின் தமிழ் மொழி புலமையை பற்றி அவர் கூற ஆண்ட்ரியாவும் சிரித்து கொண்டே தமிழை உச்சரிக்க தான் பட்ட கஷ்டங்களை கூறினார். நிகழ்ச்சியில் அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஸ்கிரிப்ட் படபிடிப்பின் கடைசி வரை செல்வராகவனுக்கு மட்டுமே தெரியும் என்றும் நடிகர்கள் யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்... படத்தில் எல்லாருடைய நடிப்பை பார்த்தல் அவ்வாறு தெரியவில்லை...

தலயின் அசல் எப்ப ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை... ரசிகர்கள் எல்லாம் மிகுந்த ஆவலுடன் உள்ளோம்.. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே தலயின் வசூல் வேட்டை ஆரம்பம் ஆகி விட்டது. எங்கள் ஊரில் அசல் படம் திரையிடுவதற்கு இரண்டு தியேட்டர்களுக்கு இடையே பெரிய போட்டியே நடந்தது... அதில் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே 15 லட்சம் முன்பணம் கொடுத்து படத்தை புக் செய்து விட்டார். ஆனால் தற்போது இன்னொருவர் அதை விட பெரிய அமௌன்ட் கொடுத்து பட பெட்டியை வாங்கி விட்டார். அது மட்டும் இல்லை ஏற்கனவே புக் செய்து வைத்து இருந்தவருக்கு நஷ்ட ஈடாக மட்டும் 5 லட்சம் கொடுத்து உள்ளாராம். சும்மா நஷ்ட ஈடாக மட்டும் 5 லட்சம் கொடுக்கிறார் என்றால் தல படங்களுக்கு எவ்வளவு லாபம் கெடைக்கும் என்று பாருங்கள். அதும் எங்கள் ஊர் 'C' சென்டர்தான். தல போல வருமா
No comments:
Post a Comment