Followers

Copyright

QRCode

Wednesday, August 5, 2009

கணினி வீரன்

நம்ம கம்பெனி பெஞ்சுல பருத்தி வீரனும் செவ்வாளையும் ஒக்காந்துட்டு இருக்காங்க. அந்த இடத்துல நம்ம டக்லஸ் அண்ணன் புதுசா சாப்ட்வேர் இன்ஜினியரா செர்த்துருக்கார். அங்க நடக்குற ஒரு நிகழ்ச்சி:
மேனேஜர் (பருத்தி வீரன் செவ்வாளையை பார்த்து): ஏண்டா இப்பிடி வெட்டியாவே பெஞ்ச தேச்சுட்டு இருக்கிங்களே.. போயி ஒழுங்கா எதாச்சும் புராஜெக்ட் பண்ணுங்கடா... எண்டா செவ்வாள கூடயே சுத்துரையே நீயாது அவனுக்கு கோடிங் எழுத சொல்லி தர கூடாது....
செவ்வாளை: எங்க சார் கேக்குறான்? கண்ட நாய்ங்க எல்லாம் புத்தி சொல்லும் வாடா, கோடிங் எழுதலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான் . இதோ இப்போ நீங்க சொல்லிட்டிங்கள்ள....
மேனேஜர்: 'ஏண்டா நக்கலா? ஒழுங்கா ஒரு ப்ராஜக்ட தேடி பிடுச்சு வேலைய பாருங்க டா!'
செவ்வாளை(டக்லஸ் அண்ணனை கைகாட்டி): அத மேனேஜர சொல்ல சொல்லுயா
மேனேஜர்: யார்ரா மேனேஜரு?
செவ்வாளை: இதோ நம்ம டக்லஸ் அண்ணே தான்
மேனேஜர் (டக்லஸ் அண்ணன பார்த்து ): ஏண்டா உன்ன நேத்து தான் ப்ராஜெக்ட்ல சேர்த்தேன். நீயா மேனேஜரு?
செவ்வாளை (மேனேஜர பார்த்து ): யோவ் மரியாதையா பேசு யா .. அவரே உன்ன பாவம்னு ப்ராஜக்ட்ல செதுருக்காரு. வெரட்டி விட்டுட போறாரு
மேனேஜர்: இந்த வெண்ண என்ன டா என்ன வெரட்டி விட ... (டக்லஸ் அண்ணன பார்த்து ) ஏண்டா பெஞ்சு பசங்க கிட்ட இப்டித்தான் சொல்லிட்டு திருஞ்சுட்டு இருக்கியா? கெளம்புடா மொதல்ல ப்ராஜக்ட்ல இருந்து ...
டக்லஸ் அண்ணன் (செவ்வாளையை பார்த்து ): சந்தோசமா?
செவ்வாளை: அப்பா நீ மேனேஜர் இல்லையா? (மேனேஜரிடம்) அவன் அப்பிடிதாங்க சொன்னான். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல இருக்கு ....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails