Followers

Copyright

QRCode

Friday, March 2, 2012

திராவிட குடி(தமிழ் )நாடும் , டோனி சேவாக் மங்காத்தாவும்



இனிமேல் குடித்து விட்டு   வண்டி ஓட்டினால் நான்கு வருடம் சிறைதண்டனையாம், மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும்போது இந்த சட்டம் செயல்படுத்தபடுமாம். மேலும் குடித்து விட்டு வண்டி ஒட்டுபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதமும் மூன்று மடங்கு அதிகமாகுமாம். இதன் மூலம் விபத்தில் உயிரழப்பவர்கள் மற்றும் படு காயமடைபவர்களுக்கு தரப்படும் இழப்பீடு அதிகரிக்கப்படுமாம்.  எல்லாம் சரிதான் , இதனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் , அவர்களின் பிழையால் ரோட்டில் எதிரில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் கொடுமைகளும் குறையும். ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ,மத்திய அரசு கொண்டு வரப்போகும் இந்த திட்டம் "திராவிட" தமிழ்நாட்டில் அமலாக்கப்படுமா? அப்படி அமலாக்கபட்டால் குடிப்பதே தவறு என்றால் வீதிக்கு வீதி கடையை விரித்து வைத்து மக்களுக்கு சாராயம் சப்ளை  செய்யும் அரசாங்கத்துக்கு என்ன தண்டனை கொடுக்கபோகிறது ? தமிழ் நாட்டில் பொதுவாக ஒரு எழுதபடாத சட்டம் இருக்கிறது அது என்னவென்றால் குடிப்பது தவறு இல்லை. ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு ... குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டுபவனுக்கே தண்டனை அதிகம் என்று சொல்லுகிறது நம் சட்டம் , அப்படி என்றால் குடிப்பவனை விட அவனுக்கு ஊத்தி கொடுக்கும்(நன்றி கேப்டன்)  நம் அரசாங்கத்துக்குதானே  அதிக தண்டனை கொடுக்க வேண்டும். அதற்க்கு மத்திய அரசு ஏதாவது சட்டம் கொண்டு வருமா? 

சரி குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளில் வண்டி நிறுத்த பார்க்கிங் வசதி இருக்ககூடாது , யாராவது வண்டியில் வந்து சரக்கு கேட்டால் தரக்கூடாது , மீறி அவனுக்கு சரக்கு கொடுத்தால் அந்த ஊழியருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று இப்படி ஏதாவது உருப்படியான சட்டமாவது கொண்டு வருமா? ஏனென்றால் குடுத்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு என்று அறிவுறுத்தப்படும் நம் ஊரில்தான் எல்லா டாஸ்மாக் பார்களிலும் வண்டியை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதியும் கூடவே  இருக்கும் .கேரளாவில் சில இடங்களில் நீங்கள் வண்டியில் வந்தால் பிரைவேட் பாரில் கூட உங்களுக்கு சரக்கு தரமாட்டார்கள். அதே போல இந்த சட்டங்கள் எல்லாம் கொண்டு வருவது மக்களை தண்டிக்கவா? இல்லை அவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் காசு புடுங்கவா? இல்லை அவர்களை திருத்தவா? கண்டிப்பாக திருத்த மட்டும் இல்லை என்பது நம்மூர்  குடிமக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நம்மூரில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரங்களிலும் எல்லா டாஸ்மாக் கடைகளின் அருகிலும் காக்கிசட்டைகாரர்களை மப்டியில் பார்க்கலாம். அவர்கள் வேலையே எவனாவது அந்த கடைக்குள் வண்டியோடு நுழைகிறானா என்று நோட்டம் விட்டு சரியாக அவன் கடையை விட்டு வெளியே வரும்போது போதையோடு அவனை அமுக்குவதுதான். அவர்களுக்கு தேவை அந்த மாத கணக்கிற்கு ஒரு கேஸ். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே மக்களை திருத்துவதுதான் என்றால் நான் மேலே சொல்லியதை போல வண்டியில் வரும் யாருக்கும் சரக்கு தரக்கூடாது என்று திருத்தம் கொண்டுவரலாம் , இல்லை கடைக்கு பக்கத்தில் நிற்கும் காக்கிசட்டைகள் , யாராவது வண்டியோடு கடைக்குள் நுழைந்தால் அப்பொழுதே அவனை அமுக்கி திருப்பி அனுப்பிவைக்கலாம். அதைவிட்டு விட்டு அவன் நன்றாக குடித்து விட்டு வரும்பொழுது அவனை பிடித்து பைன் போடுவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. நீங்களே சரக்கும் விப்பீங்கலாம் , நீங்களே அங்க பைக் நிறுத்த இடமும் கொடுப்பீங்கலாம் , குடித்து விட்டு    பைக்குள வந்தா நீங்களே அபராதமும் போடுவீங்கலாம்.. என்ன கொடுமை போலீஸ்கார் இது? 


அதே போல இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் , டாஸ்மாக் கடைகள் இருக்கும் சாலைகளில் ஒளிந்து நிற்கும் காக்கிசட்டைகளை , தனியார் நடத்தும் உயர்ரக மதுக்கடைகள் இருக்கும் சாலைகளில் பார்க்கவே முடியாது. இன்னும் சில ஊர்களில் சில தனியார் கடைகளில் குடித்து விட்டு காக்கி சட்டையிடம் மாட்டினால் நீங்கள் அந்த கடைகளில் கட்டிய பில்லை காட்டினால் காக்கிசட்டை கேஸ் பதிவதில்லை , மாறாக அம்பதோ நூறோ வாங்கிவிட்டு உங்களை அனுப்பிவிடுவார்கள்.அவர்கள் கடையில் மட்டும் சாராயத்தில் ஆல்கஹாலுக்கு பதில் சந்தனம் கலந்திருக்கும் போல. அதே போல இந்த குடித்து விட்டு  வண்டி ஓட்டுவது என்பது நம்மை போன்ற பைக்கில் போகும் நடுத்தவர்க மக்களுக்கு மட்டுமே  குற்ற செயல் போல , எவனாவது குடித்து விட்டு காரை ஒட்டி சென்றால் அவனை நிறுத்தி பரிசோதிப்பது கூட கிடையாது.வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன் என்பது போல கார் வச்சிருக்குறவன் குடிக்க மாட்டன் என்று நம்மூர் காக்கி சட்டை நம்பிவிடுகிறது போல.  எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட கோட்பாட்டின் அடிப்படையாம், ஆனால் அந்த திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்ட தமிழ்நாட்டின் "குடிமக்களிடையே" இத்தனை ஏற்றதாழ்வுகள். வாழ்க திராவிடம்..... வளர்க திராவிட கட்சிகள்....

டோனி vs சேவாக் 


இந்திய அணி வீரர்கள் எதிரணியோடு மோதும்போது கூட நாம்தான் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியோடு மோதுவார்களோ இல்லையோ , தங்களுக்குள் கோஸ்டி சண்டை போடும்போது மட்டும் தான் தான் பெரிய ஆள் என்று நிரூபித்தாக வேண்டும் என்ற வெறியோடு எப்போதும் இருப்பார்கள் , வாய்ப்பு கிடைக்கும்போது அந்த வெறியை தீர்த்து கொள்வார்கள். கவாஸ்கர் காலத்திலிருந்து கங்குலி வரைக்கும் இதுதான் நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது டோனி காலம். இம்முறை தோனியின் ஈகோவில் பலியாகியிருப்பது சேவாக் மட்டும் இல்லை இந்திய அணியின் எதிர்காலமும்தான். இந்திய அணியின் எதிர்காலம் கருதி அணிக்குள் சுழற்சி முறை கொண்டுவருகிறேன் என்று டோனி ஆரம்பித்து வைத்ததுதான் அணிக்குள் நடந்து வரும் மங்காத்தா ஆட்டத்தின் ஆரம்பம். மூத்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆட்டத்தில் ஓய்வு அளித்து அவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று அதற்க்கு சப்பை கட்டு கட்டினார் தோனி. அதற்க்கு அவர் எடுத்து வைத்த காரணம் காமெடியின் உச்சம். மூத்த வீரர்கள் யாருக்கும் ஒழுங்காக பில்டிங் செய்ய தெரியவில்லை , அவர்களால் ஒவ்வொரு ஆட்டத்திலும் இருபது ஓட்டங்கள் அதிகம் சென்று விடுகிறது என்று. 

இப்படி சொன்னால் யாருக்குதான் கோபம் வராது , அதுவும் சாதனை வீரர்கள் சச்சினையும் சேவாக்கையும் அப்படி கூறினால் கிரிகெட் கிரௌண்டில்  திரியும் நாய்க்கு கூட கோபம் வரும். சேவாக் தன கோபத்தை  மறைமுகமாக வெளிபடுத்த , இன்று ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து வெளியேற்றபட்டார். இது குறித்து ஒன்றும் சொல்லாத சச்சின் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பிடித்து விட்டார். சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் அவர் போர்மில் இல்லை என்பதுதான் என்றால் சச்சின் , டோனி உட்பட ஒழுங்காக விளையாடாத அத்துணை வீரர்களும் நீக்கப்பட வேண்டுமே. பொதுவாக ஆசிய அணிகளுக்கு எதிராக   மிக சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர் சேவாக் , தொனிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் பனிபோருக்காக மட்டும் அவரை  அணியில் இருந்து நீக்கினால்  அது அணிக்கும் தோனிக்குமே நஷ்டம் . டோனி உண்மையிலேயே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால்  அவர் உடனே  செய்ய வேண்டிய    விஷயம் கேப்டன்   பதவியில்  இருந்து உடனே விலகுவதுதான். 


மற்ற வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் பில்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவர் , முதலில் தான் இதில் ஏதாவது ஒன்றையாவது ஒழுங்காக செய்கிறோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டாமா ? களத்தில் அவர் கோட்டை விடும் ஸ்டெம்பிங்களை ஒப்பிட்டால் செவாக்காலும் சச்சினாலும் எதிரணிக்கு கிடைக்கும் இருபது ரன்கள் ஜுஜூபி. அவர் எந்த பந்தையும் விடாமல் ஒழுங்காக கீப்பிங் செய்தாலே போதும் பைஸ் மூலம் எதிரணிக்கு கிடைக்கும் உதிரி எண்ணிக்கை குறையும். எனவே இது இரண்டையும் மாற்றிக்கொள்ள முடியாத அவர் அணியின் எதிர்காலம் கருதி தன்னுடைய கீப்பிங் இடத்திற்கு அணியில் சுழற்சி முறை கொண்டுவருவாரா? அதே போல பேட்டிங் ஒழுங்காக செய்யாதவர்களை  எல்லாம்  அணியில் இருந்து நீக்க  வேண்டும் என்றால் முதலில் அவர்தான்  தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்கு  ஆஸ்திரேலியா தொடரில் அவர் எடுத்த ஓட்டங்களே சாட்சி. 

அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச  வேண்டும் என்று நினைக்கும் டோனி முதலில் தனக்கும் வயதாகி விட்டது என்பதை உணர வேண்டும். இப்பொழுது இருக்கும் இந்திய அணிக்கு தோனியால் ஒரு பிரயோசனமும் இல்லை , மாறாக அவரது  ஈகோவால்  அணிக்கு பிரச்சனை  மேல்  பிரச்சனைதான்  வந்து கொண்டிருக்கிறது ... இதை டோனி உடனே உணர்ந்து தானாக விலாகாவிட்டால் மற்ற இந்திய கேப்டன்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கும்... மற்றவர்களின் திறமையால் புகழின் உச்சியை தொட காரணமாக இருந்த அவரின் அதிர்ஷ்டம் இப்பொழுது மெல்ல மெல்ல அவருக்கு குறைந்து கொண்டே வருகிறது , அது முற்றிலும் அவரை விட்டு விலகி , அடி மேல் அடி வாங்கி அவமானப்பட்டு அணியை விட்டு வெளியேறுவதை விட அந்த புகழ் கொஞ்சமேனும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே தானாக விலகுவதுதான் புத்திசாலித்தனம்.  

2 comments:

DHANS said...

super... what you said about dhoni is correct. lets see how it goes

Karthikeyan said...

கல்வியை தரவேண்டிய கவர்மெண்ட்க்கு பாவம் நேரம் இல்லை. காச்சிய சரக்குலதான் வருமானம் வருது.. இந்த வருமானத்துலதான் எல்லா செலவுகளையும் சமாளிக்க வேண்டி இருக்கு. அவுங்களும்தான் என்ன செய்வாங்க.. ஊருக்கு ஒரு சாராய பேக்டரி வச்சா நிறையா பேருக்கு வேலை குடுக்கலாம்னு அடுத்த ஐந்தாண்டு திட்டதுல இருக்காம்.. என்ன பண்ண போறீங்க..தல

அப்புறம் இந்த தோனி மேட்டருக்கு வருவோம்.. இந்த பயலை விட்டாலும் வேற ஆளு இல்லை.. அடுத்த செட்டுக்கு பசங்களை ரெடி பண்ணனும்ல.. இலங்கைல பாருங்க யாரோ சண்டிமாலாம்.. பட்டைய கிளப்புறாப்ல.. ஆஸ்திரேலியா ஆட்டத்துல கூட அவருதான் தொடர் நாயகனாம்.. அப்படி ஒரு ஆளா கோலி இருக்காரு.. ஒரு கோலி பத்தாதே.. நல்ல பவுலர் ஒரு ஆளு வேணும். இல்லாட்டி நாம எருமநாயக்கன்பட்டி டீமோட விளையாட போகலாம். அவுங்க டீசண்ட்டா தோத்துட்டு போயிகிட்டே இருப்பாங்க.. தெரியும்ல..

LinkWithin

Related Posts with Thumbnails