Followers

Copyright

QRCode

Monday, June 7, 2010

கவிதை கார்னெர் - I

புதுமை பெண்கள்


பள்ளிக்கு தினமும் சைக்கிளில் அழைத்து சென்ற
பக்கத்து வீட்டு தோழியின் அண்ணன் ;

பள்ளியில் ஆசிரியரின் பாடங்கள் அறுவை ஆகும் போது
சீட்டு அனுப்பி விளையாடிய பள்ளி நண்பன்;

டியூஷன் முடிந்து வீடு செல்லும் இரவுகளில்  ரோட்டோர "ரேமொகளின்"
கிண்டல்களிலிருந்து காப்பாற்ற கூட வரும் பக்கத்து தெரு சிநேகிதன்;

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு இரவெல்லாம் கண் முழித்து
அலாரம் வைத்து உதவிய ஒருதலை காதலன்;

பொது தேர்வு விடுமுறை நாட்களில் ஊர் சுற்றி காட்டிய
தூரத்து உறவு அத்தை மகன்;

கல்லூரி நாட்களில் பொழுது போகா மாலை  வேளைகளில்
தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி விளையாடிய வெட்டி பசங்க;

இறுதி ஆண்டு நாட்களில் தினமும் பைக்க்கும் வாரம் ஒருமுறை ஊட்டிக்கும்
அழைத்து சென்ற காதலன் ;

இவர்கள் எல்லோரையும் மறைத்து விட்டு தன் கணவனிடம் சொன்னாள்
"நான் காதலிக்கவில்லை.. .. காரணம் ஆண்கள் எல்லாம் அயோக்கியர்கள்";

அவனும் வெகுளியாய் கேட்டு கொண்டான்; பின்னாளில் தானும் அந்த
 லிஸ்டில் சேர்வோம் என்பதை அறியாமலே...


கவிதை போட்டி 

கவிதை போட்டியாம் 
கவிதை வேண்டுமாம் 
ஓவிய போட்டி என்றால் 
உன்னை வரைந்து அனுப்பளாம் 
காவிய போட்டி என்றால் 
நம் காதல் கதை அனுப்பளாம்


கவிதை போட்டிக்கு 
உன் பெயரை அனுப்பலாமா?
வேண்டாம் உன்னை அனுப்புகிறேன் 
போய் கொஞ்சும் உன் குரலில் 
""அச்சச்சோ!"
"ஊஹூம்…"
"
ம்க்கும்!"
"
ப்ச்..ப்ச்.."
"
ஹேய்…"
   என்று சொல் 
பரிசு உனக்குத்தான்...

கவிதையடி நீ

கவிதை என்று

எழுதினால்

என் பேனா

உன் பெயரை

எழுதுகிறது....

எழுத்து பிழை

என்று அழித்தால்
ரப்பரில் ரத்தம்

கொட்டுகிறது ....
எழுத்துக்கும் உயிர்

வருகிறது உன்னால்...


கொல்லும் புன்னகை


              மணிக்கணக்கில் பேசி

முடித்ததும்

கேட்பாய் நான்

போகட்டுமா என்று...

உலகம் அழியும்

கடைசி நொடியை விட

கொடுமையாய் இருக்கும்

எனக்கு அந்த நொடி...



அடுத்து எப்ப

பாக்கலாம் என்ற

கேள்விக்கு பதில் சொல்லாமல்

சென்று விடுவாய் புன்னைகையை

மட்டும் உதிர்த்து விட்டு...

குருதி வடியும் புண்ணில்

பாய்ந்த குண்டு போல்

உன்னை காணும் வரை

அந்த புன்னைகை

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை


கொன்று கொண்டு இருக்கும்


2 comments:

Yoganathan.N said...

நல்லா இருக்கு.

//மணிக்கணக்கில் பேசி
முடித்ததும்
கேட்பாய் நான்
போகட்டுமா என்று...
உலகம் அழியும்
கடைசி நொடியை விட
கொடுமையாய் இருக்கும்
எனக்கு அந்த நொடி... //

படுத்துகிட்டு யோசிப்பீங்களோ... :P :)

Yoganathan.N said...

Btw, படங்கள் அசத்தலா இருக்கு, குறிப்பாக பாவனாவின் படங்கள் :)

LinkWithin

Related Posts with Thumbnails