Followers

Copyright

QRCode

Thursday, November 22, 2012

முதல் அனுபவம்




ரொம்ப நாளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலேஷ் படத்தை இன்றுதான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. தல நான்கே நன்கு நிமிடம்தான் வருவார் என்றாலும்  இந்த படத்தை  பார்த்தே ஆகவேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தேன் இன்றுதான் கைகூடியது ... படத்தில் தல தன்னுடைய தமிழை பற்றி பேசும் வசனம் ...வாவ் i just mad about you thala ... இந்த படத்தில் "முதல் முறைதான் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா அதுதான் எப்பவும் திரும்ப வாராது" என்று ஒரு வசனம் , தல பேசுவது போல வரும்... அந்த வசனத்தை கேட்ட பிறகு கொஞ்ச நேரம்  நானும் என் வாழ்க்கையை திரும்பி பார்க்க ஆரம்பித்தேன் , சந்தோசம் , சோகம் , காதல் , அவமானம் என்று எல்லாமும் முதல் முறை ஏற்படும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் வேறு எப்பொழுதும் கண்டிப்பாக கிடைக்காது ... அப்படி என்னுடைய மறக்க முடியாத முதல் முறை அனுபவங்களே இந்த பதிவு ... இது ஒரு சுயசொரிதலாக  கூட இருக்கலாம் , எனவே பிடிக்காதவர்கள் இப்படியே கிளம்பி விடவும்  ...


1. முதல் அடி 

   எனக்கு நினைவு தெரிந்து நான் வாங்கிய முதல் அடி என்னுடைய மாமாவிடம் இருந்துதான் , நான்கு வயதில் ஒரு பொம்மை கேட்டு அடம்பிடித்து வாங்கிய அடி ,  அடி வாங்கி கோபத்தில் இரவில் வீட்டை விட்டு வெளியேறி எங்கு போவது என்று தெரியாமல் எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு சுடுகாட்டுக்கு  அருகே ஆலமரத்தில் எந்த பயமும் இல்லாமல் உக்கார்ந்திருந்த என்னை பார்த்துதான் உண்மையில் என் மாமா மிரண்டு விட்டார் ...  (அந்த வயதில் சுடுகாட்டை பற்றி நமக்கு என்ன தெரியும் )

2. முதல் நண்பன் 


என்னுடைய பெரியப்பா பையன்தான் , ஆனால் என்னைவிட வயதில் சிறியவன் , மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே ஒரே பீடியை ஒன்றாக வழிக்கும்  அளவுக்கு எங்கள் நட்பு ரொம்ப ஸ்ட்ரோங் , ஆனால் அது வீட்டுக்கு தெரிந்து அடி வாங்கிய  பிறகு பீடியை பார்த்தாலே பயம்தான் வரும் , இருந்தாலும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது  எனக்கு சிகரெட் பழக்கத்தை அறிமுகபடுத்தியவனும் அவன்தான்,  சிகரெட் பழகிய ஆரம்ப நாட்களில் வீட்டுக்கு தெரியாமல் மறைந்து இருந்து அடிக்க நானும் அவனும் காடு மேடாக சுற்றியது இப்பொழுது நினைத்தாலும் ஏங்க வைக்கும் நினைவுகள் .... 

3. முதல் பிரிவு 

எனக்கு தெரிந்து நான் என்னுடைய அப்பா அம்மாவை பிரிந்து இருந்ததே இல்லை , கல்லூரியில் இருந்து வெளிநாட்டு டூர் ஒன்று சென்ற பொழுது இரண்டு வாரங்கள் பிரிந்து இருந்ததுதான்  அதிகம் , இரண்டு நாட்களுக்கு மேல் என்னால் என் வீட்டை விட்டு பிரிந்து  இருக்க முடியாது , இந்த வயதிலேயே இப்படியென்றால் என் சிறுவயதில் சொல்லவே வேண்டாம் , ஒரு முறை காலாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட  மதுரையில் இருக்கும் என்னுடைய மாமா வீட்டுக்கு செல்ல நேர்ந்தது , அப்பொழுதெல்லாம் எனக்கு மதுரை என்றால் அமேரிக்கா போல , கிராமத்துக்குள்ளே இருந்த எனக்கு அவ்வளவு பெரிய சிட்டியில் ஒரு வாரம் இருக்க போகிறோம் , அங்க கேபிள் டிவி வரும் தினமும் படம் பாக்கலாம் , ஹோடேலில் விதவிதமாக சாப்பிடலாம் என்ற பால்ய பருவத்து ஆசைகளோடு குசியாக கிளம்பினேன் , ஆனால் அதெல்லாம் அங்கெ போய் சேரும் வரைதான் , பஸ்ஸில் அதற்க்கு முன்னாள் நான் அவ்வளவு தூரம் சென்றதில்லை என்பதால் ஏதோ என்னுடைய வீட்டை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டதை போல ஒரு பயம் மனதில்  ஒட்டி கொண்டது , அங்கெ இருந்த என்னுடைய அம்மா போட்டாவை பார்த்து அழ ஆரம்பித்து விட்டேன் , அடுத்த நாளே என்னுடைய அப்பா வந்து என்னை கூப்பிட்டு சென்று விட்டார் , வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது ..

4. முதல் பள்ளி 


முதுகலை படிப்பு வரை எவ்வளவோ கல்வி நிறுவனங்களில் படித்திருந்தாலும் நான் ஆரம்ப கல்வி கற்ற புலியூரான் நாடார் நடுநிலை பள்ளிதான் என் மனதுக்கு நெருக்கமானது , காரணம்அங்கெ எனக்கு இருந்த கட்டற்ற சுதந்திரம் , என்னுடைய தாத்தா தலைமை ஆசிரியர் , அன்னுடைய ஆச்சி மற்றும் ஐயம்மா இருவருமே அங்கெ ஆசிரியர்கள் , எனக்கு மொத்தத்தில் அது ஒரு சொந்த வீடு போலத்தான் , அங்கெ எனக்கு ஒரு நண்பன் இருந்தான் , அவன் எல்லா நாளும் ஏதாவது ஒரு படம்  பார்த்து விட்டு அடுத்த நாள் எங்களுக்கு கதை சொல்லுவான் , அவன் கதை சொல்லும் விதமே தனி , ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருந்து சொல்லுவான் , ஒரு காட்சியில் எத்தனை போலீஸ்காரன் இருந்தான் , யார் யார் கையிலெல்லாம் துப்பாக்கி இருந்தது , ஹீரோயின் என்ன கலர் தாவணி கட்டியிருந்தால் என்று எல்லாவற்றையும் துல்லியமாக சொல்லுவான் , அவன் சொல்ல சொல்ல  நாமே மனதுக்குள் அந்த படத்தை ஓட்டி பார்த்து கொள்ளலாம் ... கருமேட்டு கருவாயன் படம் இன்று வரை நான் பார்த்ததில்லை , ஆனால் அந்த படத்தின் காட்சிகள் ஒன்று விடாமல் எனக்கு தெரியும் , காரணம் அவன் தீவிர விஜயகாந்த் ரசிகன் , எந்த படமும் பார்க்காத நாளில் திரும்ப திரும்ப கருமேட்டு கருவாயன்தான் .. எப்படியும் ஒரு அம்பது முறையாவது அந்த படத்தின் காட்சிகளை நான் கேட்டிருப்பேன் ... 


அவனுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நாள் வரை  இது தொடர்ந்தது . அதன் பிறகு இன்று வரை அவனை நான் பார்த்ததே இல்லை ... நான் ஐந்தாவது முடிக்கும் பொது என்னுடைய தாத்தாவுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஏதோ பிரச்சனை எழ , நான் அந்த பள்ளியில் இருந்து வெளியேறி அருப்புகோட்டையில் ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கப்பட்டேன் ... அதோடு என் பள்ளி பருவத்து பசுமையான நாட்களும் முடிவுக்கு வந்து விட்டது , அதன் பிறகு இன்று வரை நான் அந்த பள்ளிகூடத்துகுள்  சென்றதே இல்லை , ஆனால் அந்த பள்ளி தந்த இனிமையான நினைவுகள் இன்னமும் என் மனதில் ஈரம் கசியாமல் அப்படியே இருக்கிறது ..

5. முதல் காதல் 


முதல் முதாலாக ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியம் பிடித்ததை போல அலைந்த அனுபவம் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது ... அவள் எங்கள் சர்ச்க்கு வாரம் தவறாமல் வரும் பெண் , சிறுவயதில் இருந்தே அவளுடன் நன்றாக பேசியிருந்தாலும்,  சரியாக மீசை முளைக்க ஆரம்பித்த பருவத்தில் இருந்து  நான் சர்ச் செல்லும் பழக்கத்தையே விட்டு விட்டேன் , மூன்று வருடங்கள் நான் அந்த பக்கமே செல்லவில்லை , ஒரு நாள் சாயங்காலம் பள்ளியில் இருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த பொழுது யாரோ ஒரு பெண் எங்கள் வீட்டு டிவியில் படம் பார்த்து கொண்டிருந்தாள் , என் அம்மாவிடம் யார் என்று கேட்டபிறகுதான் அவள் என்றே எனக்கு தெரியவந்தது , இருந்தாலும் பேசவில்லை , எந்த பெண்ணிடமும் பேசியிருக்காத வயது , கூச்சம் அதிகம் , இருந்தாலும் ஆசைகளும் அதிகம் இருந்த வயது , சாப்பிடும் பொழுதுதான் அவள் முதல் முறையாக என்னை பார்த்து "எப்படி இருக்க" என்று கேட்டாள் .. அந்த குரலின் இனிமை என்னை ஏதேதோ செய்ய ஆரம்பித்தது ... எவ்வளவு சரக்கடித்தாலும் கிடைக்காத போதையை அப்பொழுது அனுபவித்தேன் ...  எல்லையில்லா ஆனந்தம் என்னுள் பரவ ஆரம்பித்து , ஆனால் பாவம் அப்பொழுது இருந்தே அவளுக்கு சனியன் சடை பின்ன ஆரம்பித்து விட்டான் ... அன்று முதல் எங்கள் நட்பை மீண்டும் புதுபித்து கொண்டோம் , வாரம் தவறாமல் சர்ச்க்கு செல்ல ஆரம்பித்தேன் , ஞாயிறு வந்தாலே குஷிதான் , மதியம் குறைந்தது ஒரு மணிநேரமாவது அவளுடன்  பேசாமல் இருக்க முடியாது .

ஆனால் இதெல்லாம் ஒரு வருடம்தான் நான் என் காதலை சொல்லும்வரை ... நான் செய்த பெரிய தவறு காதலை அவளிடம் நேரடியாக சொல்லாதது , அவளின் ரியாக்சனை என்னால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை , அவளும் அதற்க்கு பிறகு என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டாள் , ஆனால் நான் விடாமல் காலையும் மாலையும் அவள் கல்லூரி செல்லும் பொழுது அவளை மறைவாக நின்று பார்ப்பது , என் சித்தி பெண்ணிடம் ஏதாவது கடிதம் கொடுத்து விடுவது என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்து கொண்டே இருந்தேன் , ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த என்னிடம் பொறுக்க முடியாமல் "எத்தனை பேருடா என்னை தொந்தரவு பண்ணுவீங்க , உன்னோட அண்ணனை(பெரியப்பா பையன் என்னை விட ஆறு மாதம் மூத்தவன் ) நான் பிடிக்கவில்லைன்னு சொன்னதுக்கு உன்னை வச்சி பழிவாங்குரானா? ரெண்டு பெரும் சேர்ந்துகிட்டு என்னை ஏண்டா டார்ச்சர் பண்ணுறீங்க" என்று கோபமாக கேட்டுவிட்டாள் ...எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகுதான் நான் நின்று கொண்டிருந்த இடத்து சற்று அருகே ஒரு டீக்கடைக்குள் இருந்து அவன் வெளியே வந்தான் , அவனும் அவளை தினமும் பாலோவ் செய்திருக்கிறான் , எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவன் அப்ளிகேசன் போட்டுவிட்டானாம் , இது தெரியாமல் நானும் அவளை துரத்த அவனும் துரத்த அவளோ நாங்கள் ரெண்டு பெரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு  அவளை டார்ச்சர் செய்கிறோம் என்று நினைத்து விட்டாள் ... என் அண்ணனோ டேய் நான் அவளை ரொம்ப லவ் பண்றேண்டா அவள் இல்லாமல் என்னால கண்டிப்பா இருக்க முடியாதுடா நீ குறுக்க வந்து காரியத்தை கேடுத்துடாதடா என்று அழும் நிலைமையில் கேட்க , டேய் எனக்கும் அதே நிலமைதாண்டா என்று அவனிடம் சொல்லமுடியாமல் வந்து விட்டேன் .

அன்று  அவனை விட அவள் என்னை தவறாக எண்ணி விட்டாள் என்பதுதான் பெரிய வலியாக இருந்தது , அன்று இரவு முழுவதும் யோசித்து பார்த்ததில் இது வேண்டாம் விட்டுடு என்று உள்மனது சொல்லியது , அவள் என்னிடம் பேசாவிட்டாலும் அவளை தினமும் இரண்டு முறை பார்ப்பது , அவளை பற்றி என் நண்பர்களிடம் பேசுவது , அவளை நினைத்து நோட்டு புஸ்தகங்களில் கவிதை எழுதுவது என்று சந்தோசமாக போய்கொண்டிருந்தது வாழ்க்கை , ஆனால் அதற்கும் அன்றிலிருந்து ஆப்பு , ஆறு மாத காலம் பிடித்தது நான் அதில் இருந்து முழுமையாக வெளியே வர , அவள் இரண்டு  வருடங்களுக்கு பிறகு அவளுடன்  ஒன்றாக படித்த ஒரு ஹிந்து பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்...  இப்பொழுதும் சர்ச்சில் எப்பொழுதாவது அவளை பார்க்க நேரிடும் , இன்னமும் அந்த படபடப்பு அவளை பார்க்கும் போதெல்லாம் வந்துகொண்டுதான் இருக்கிறது , அவளை இன்னமும் கள்ள பார்வையால் ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்...  அவ்வபொழுது நான் என் அண்ணனுடன் சேர்ந்து உன்னை தொல்லை கொடுக்கவரவில்லை , உண்மையிலேயே உன்னை காதலித்தேன் என்று சொல்ல நினைப்பேன் ஆனால் இதுவரை சொல்லவில்லை , என்  டீன் ஏஜ் பருவத்தை வசந்தமாக்கிய தேவதை அவள்... அவள் பேரிலேயே சுகம் இருப்பதாலோ என்னவோ இன்னமும் அவள் நினைவுகள் சுகமாகவே இருக்கின்றன...

(முதல் போதை , முதல் முத்தம் , முதல் தல படம் , முதல் சம்பளம் இன்னும் சில முதல்கள் அடுத்த பதிவில்)


Thursday, November 15, 2012

குற்றாலமும் , போடா போடியும் பின்னே முருகதாஸும் ....



குற்றாலம் 



 எனக்கு தீபாவளி பண்டிகை  மற்ற தினங்களை போல ஒரு சாதாரண நாள்தான் , தல படங்கள் வந்தால் மட்டுமே தீபாவளி களைகட்டும் , இப்பொழுதெல்லாம் தல படம் வந்தாலே அது தீபாவளிதான் என்பதால் எனக்கு தீபாவளிக்கு தனியாக  ஸ்பெஷல் என்று எதுவும் கிடையாது . வழக்கம் போல இந்த முறையும் குடும்பத்தோடு குற்றாலம் சென்றிருந்தேன் , அங்கே எங்கள் சர்ச் தலைமை இயக்கத்தால் ஒரு விசேஷ ஜெபகூட்டம் ஒன்று நடந்தது , முன்பெல்லாம் என்னுடைய அப்பாவை சமாளித்து எளிதாக அதில் இருந்து தப்பிவிடுவேன் , ஆனால் இம்முறை என்னை அங்கே இழுத்து செல்லும் பொறுப்பு என் மனைவியிடம் கொடுக்கப்பட்டதால்  எளிதாக  தப்ப முடியவில்லை. என்னை மிரட்டி எங்கே அழைத்து சென்றது மட்டுமில்லாமல் மாலை ஐந்து மணிவரை கூட்டம் நடக்கும் , அதுவரை அங்கேதான் இருக்க வேண்டும் வேறு எங்கும் குறிப்பாக அருவிக்கு குளிக்க செல்ல கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் வேறு , ஆனால்  வழக்கம் போல மதியத்தோடு டிமிக்கி கொடுத்து அருவிக்கு சென்று குளித்தது தனி சுகம் என்றால் மாலை என் வீட்டுக்காரியிடம் அடிவாங்கியது ஆனந்த அனுபவம் ... வழக்கமாக இந்த சீசனில்  ரொம்பவும் கூலாக இருக்கும் குற்றாலம் அன்று மட்டும் ரொம்ப ஹாட்டாக இருந்தது , ஆனால் அந்த வெயிலில் அருவியில் குளித்த சுகமே தனி.. அனேகமாக சிகரெட் சினிமா இல்லாமல் நான் கடந்து வந்த முதல் தீபாவளி இதுவாகத்தான் இருக்கும் ... இதற்க்கெல்லாம் சேர்த்து வரும்  பொங்கலில் மொத்தமாக ஆடி தீர்த்து விட வேண்டியதுதான்... 

போஸ்டர் 



முன்பெல்லாம் வருடா வருடம் தீபாவளி அன்று எங்கள் ஊரில் கண்டிப்பாக ஒரு போஸ்டர் கண்ணில் படும் , அது கமல் ரசிகர்களால் அடிக்கப்படும் கருப்பு தீபாவளி என்னும் போஸ்டர்தான் ... இப்பொழுது இந்த விளையாட்டில் தல ரசிகர்களும் சேர்ந்து விட்டார்கள் . எங்கள் ஊரில் கண்ணில் பட்ட ஒரு போஸ்டரில் இருந்த வாசகம் "தீபாவளிக்கு படம் ரிலீஸ் பண்றது காக்கா ஸ்டைல் ... படம் ரிலீசையே தீபாவளியாக்குறது எங்க தல ஸ்டைல்" , இதில் காக்கா என்று யாரை சொல்லியிருக்கிறார்கள் என்று சத்தியமாக தெரியவில்லை. ரசிகர் மன்றமே வேணாம்டா போய் உங்க வேலையை பாருங்கடா என்று தல தண்ணி தெளித்து விட்ட பிறகும் இவனுங்க பண்ற அளப்பரையை இருக்கே .... 

போடா போடி 



தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என்பதால் போடா போடி திரைப்படம் பார்க்க நேர்ந்தது .. எனக்கு வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்று நடப்பதற்கு முன்னாள் இப்படி ஒரு படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக இடைவேளையோடு எழுந்து வந்திருப்பேன் , ஆனால் இப்பொழுது இந்த படத்தை மிகவும் ரசித்து பார்க்கும்படி நிலைமை தலைகீழாக மாறி விட்டது , கல்யாணம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாத்துது பாத்தீங்களா பாஸ்? என்னுடைய அம்மா தபால் துறையிலும் , என் மாமியார் ஆசிரியராகவும் வேலை பார்த்தாலும் அதெல்லாம் அவர்களுக்கு பார்ட் டைம்தான் , அவர்களின் முழு நேர வேலையே எனக்கும் என் மனைவிக்கும் வரும் சண்டைகளை தீர்த்து வைப்பதுதான்... இது எனக்கு மட்டும் இல்லை பெரும்பாலான வீட்டில் நடப்பதுதான் , இதைதான் போடா போடியில் ஹை டெக்காக காட்டியிருக்கிறார்கள் , படம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது கொஞ்சம் போர் அடிப்பது போல இருந்தாலும் சில காட்சிகளில் நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கிறார்கள் , ஹீரோயினுக்கு பிரசவம் நடக்கும் காட்சி , சிம்புவின் மேல் இருக்கும் கோபத்தில் வரலட்சுமி அவர் போட்ட மோதிரத்தை கழட்டி டாய்லெட்டில் எரிந்து விட்டு கொஞ்ச நேரத்திலேயே மனது மாறி அதற்குள் கையை விட்டு மோதிரத்தை எடுக்கும் காட்சி என்று பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் , ஆனால் சில சீரியஸ் ஆன காட்சிகளில் சிம்பு சின்னபுள்ளத்தனமாக பேசும் வசனங்களை குறைத்திருக்கலாம் சில இடங்களில் அது அந்த காட்சியின் வீரியத்தை நீர்த்து போக செய்கிறது குறிப்பாக குழந்தை இறந்த பிறகு சிம்பு வரலட்சுமியின் வீட்டிற்கு வந்து அவரை கூப்பிடும் காட்சியில் வசனங்களை இன்னும் கொஞ்சம் பெட்டராக வைத்திருக்கலாம்... படத்தின் மிக பெரிய பலமே பாடல்கள்தான் , சிம்புவுக்கும் மட்டும் எப்படி இப்படியான பாடல்கள் அமைகிறது என்று தெரியவில்லை , ஒஸ்தி பாடல்களே எனக்கு இன்னமும் அலுக்கவில்லை அதற்குள் போடா போடி , படம் புதுசா கல்யாணமான மக்களுக்கு மிகவும் பிடிக்கும் மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம்... 

துப்பாக்கி 



கடைசியாக அண்ணன் தமிழகத்தின் ஒரே அறிவாளி இயக்குனர் முருக்குதாஸ் சாரி முருகதாஸ் அவர்கள் இயக்கிய ஒரு படம் இந்த தீபாவளிக்கு வெளிவந்திருக்கிறது , அண்ணனிடம் கேட்பதற்கு எனக்கு பல கேள்விகள் உண்டு , (நான் உங்கள் படத்தை இடைவேளை வரைக்கும்தான் பார்த்தேன் அதற்க்கு மேல் என்னால் பொறுமையாக உக்கார முடியவில்லை ... உங்கள் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது அண்ணே , அதனால் உங்கள் அறிவுதிறமையின் செழுமையால் விளைந்த முத்தான காட்சிகளை என்னால் ஜீரணம் செய்ய இயலவில்லை அண்ணே... மன்னிச்சிகோங்க ,  ஆனால் முழுவதும் பார்த்த நண்பர்கள் சிலர் சொல்லிய விசயங்களில் இருந்து எனக்கு தோன்றிய சந்தேகங்கள் அண்ணே இதெல்லாம்) முதலில் என்ன காரணத்துக்காக இந்த படத்தை ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்தீர்கள்?தமிழ் நாட்டில் உங்களை போல பல பேர் இந்த டகால்டி வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் , காவல் துறைக்கு சமர்பிக்கிறேன் , ஊனமுற்றவர்களுக்கு சமர்பிக்கிறேன் இல்லை கூலி தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் என்று வருடா வருடம் யாராவது ஒருவர் கிளம்பி விடுகிறீர்கள்.. சமர்ப்பணம் என்று எந்த அர்த்தத்தில் சொல்லுகிறீர்கள் ?ஹீரோ ராணுவ வீரனாக இருப்பதால் இந்த சமர்பணமா (அப்படியானால் நான் ஈ படத்தை ராஜ மௌலி ஈக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கலாம் ,) இல்லை  உங்கள் படத்தின் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் அப்படியே ராணுவத்துக்கு அள்ளி தந்து விட போகிறீர்களே அதற்காக இந்த சமர்ப்பணமா?

 வாகை சூட வா என்று ஒரு படம் , அந்த படத்தின் இறுதியில் இது ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்று போட்டிருந்தால் திரையரங்கமே எழுந்து கைதட்டியிருக்கும் ,   ஆனால் அந்த படத்தின் இயக்குனர் அந்த முட்டாள்தனத்தை செய்யவில்லை , ஒருவேளை அவர் நிறைகுடமாக இருக்கலாம்.. அண்ணே அதுக்காக உங்களை குறைகுடம் என்று சொல்லவில்லை ... உங்களின் முதல் படமான தீனாவை போல அடுத்து தமிழ் சினிமாவில் காதலையும் ஆக்சனையும் சரி விகிதத்தில் கலந்து ஒருவராலும் ஒரு படம் கொடுக்க முடியவில்லை , அந்த திறமை தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு பேரிடம்தான் இருக்கிறது ஒன்று சரண் இன்னொன்று நீங்கள் , ஆனால் நீங்கள் தமிழனை தூக்கி பிடிக்கிறேன் , ராணுவத்தை ரவுண்டு கட்டி அடிக்கிறேன் என்று உங்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் , என்னுடைய இரண்டாவது சந்தேகம் இதுதான் அண்ணே நீங்க எப்படி  வேண்டுமானாலும் படம் எடுங்கள் அது உங்கள் மற்றும் உங்கள் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயம் , ஆனால் தயவு செய்து தமிழனை பெருமை பட வைக்க போறேன் , ராணுவத்துக்கு மரியாதை செலுத்த போறேன் என்று வியாக்கியானம் பேசிவிட்டு  சாதாரண மொக்கை மசாலா படங்களை எடுத்து தள்ளாதீர்கள் ... சாதாரண பொழுதுபோக்கு மசாலா படம் என்று சொல்லிவிட்டு நீங்கள் படம் எடுத்தால் உங்கள் படத்தில் யாரும் லாஜிக் பார்க்க போவதில்லை , ஆனால் வீணாக வாய் சவாடல் விட்டுவிட்டு சின்ன புள்ளத்தனமாக நீங்கள் படம் எடுப்பதை பார்க்கும் பொழுது கடுப்படிக்குதுண்ணே .... பத்து வருடங்களுக்கு முன்னாள் உங்கள் ரமணா படத்தை தமிழன் ரசித்து விட்டான் என்பதற்காக அவனை அடிமுட்டாள் என்று நினைத்து கொண்டு  இன்றும் 7 ஆம் அறிவும் துப்பாக்கியும் எடுத்து அடுத்த மணிரத்தினமாக நீங்கள் மாற நினைப்பதை பார்க்கும் பொழுது உங்கள் மேல் பரிதாபம்தான் வருதுண்ணே ... தயவு செய்து ரமணாவை மறந்து விடுங்கள் , தீனாதாண்ணே நமக்கு சரியானா பாதை ... 

மூன்றாவதாக என்னிடம் இருக்கும் கேள்வி தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லிம்தானா? பல நூறாண்டுகளுக்கு முன்னாள் தீவிரவாதிகளை அழிக்கும் வேலையை தமிழ் சினிமாவில் செய்து கொண்டிருந்த நம்ம கேப்டன் கூட தீவிரவாதிகளை பாக்கிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து எல்லையில் ஊருடுவி காஷ்மீரிலோ இல்லை லடாக்கிலோ ஒரு கூடாரம் போட்டு பொட்டி  பொட்டியாக நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சர்வதேச குற்றவாளியாகவே காட்டி வந்தார் , ஆனால் நீங்கள் நம்ம பக்கத்து தெரு அப்துல்லாவையும் , இப்ராஹிமையும் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் , இது வெறும் படம்தாண்டா படத்தை படமாக பாருங்கடா என்று நீங்கள் சொல்லலாம் , நாங்களும் இதை வெறும் படமாக பார்த்து விட்டு போயிருப்போம்  இந்தியாவுக்கு எப்படியெல்லாம் ஆபத்து வரக்கூடும்னு நான் படத்தில் காட்டியிருக்கிறேன் என்று நீங்கள் திருவாய் மலராமல் இருந்திருந்தால் ,  உங்கள் படத்துக்கு விளம்பரம் கிடைக்க இது படம் இல்லை மக்களுக்கு நான் எடுத்திருக்கும் பாடம் என்று நெஞ்சை நிமிர்த்து சொல்லும் நீங்கள் அதில் நாங்கள் குறைகள் சொல்லும் போதுமட்டும் ஏய் படத்தை படமாக பாருங்கடா என்று முதுகை திருப்பி கொண்டு ஓடுவது ஏன்? 

கஜினிக்கு அடுத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு படியாக இறங்கி கொண்டிருக்கும் நீங்கள் அடுத்த படத்திலாவது மேலே ஏறி உங்கள் பழைய இடத்தை பிடிப்பீர்கள் என்று உங்களின் மிக பழைய ரசிகனாக இன்னமும் நம்புகிறேன் ... உங்களின் துர்பாக்கியம் இந்த துப்பாக்கியோடு ஒழிந்து போகட்டும் ... 


 

(படத்தின் மீதியை ஒரு நண்பனின் உதவியோடு பார்த்து விட்டேன் , கலைபுலியின் ராசி இந்த படத்திலும் தொடர்கிறது , 7 ஆம் அறிவு அளவுக்கு கூட இந்த படம் வசூலிக்குமா என்பது சந்தேகமே? 7 ஆம் அறிவை சூரியாவின்  மார்கெட் கொஞ்சமேனும் காப்பாற்றியது , இந்த படத்தில் அதற்க்கு வாய்ப்பில்லை என்பதால் தப்பிப்பது கஷ்டமே , விஜயகாந்த் டைப் பட  பிரியர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம் பாஸ் போர்ட் சைஸ் போட்டோ எடுக்க பி. ஸி . ஸ்ரீராமை கூட்டி போன கதையாகவே இருக்கிறது இந்த படத்துக்கு சந்தோஷ் சிவனை ஒளிபதிவு செய்ய வைத்தது , காஜல் நாற்பது வயதில் ரம்யா கிருஷ்ணன் அடைந்த முதிர்ச்சியை தன்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே அடைந்து விட்டார் , அங்கிளுக்கு ஏத்த ஆன்டியாக சரியாக பொருந்துகிறார்.. இயக்குனரிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணே எங்கூர்ல ஐநூறு ரூபாய் காசு அடிக்கிற பிக் பாக்கெட் திருடன் கூட போலிஸ் கிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சி வந்தா  அவனோட கூட்டாளிகளை நாலு நாளைக்கு பாக்க மாட்டான் , ஆனால் மும்பையில பாம் வைக்கிற தீவிரவாதி மிலிட்டரி  ஆபிசரிடம் இருந்து தப்பி நேரே அவனுடைய கூட்டாளியை சந்திக்க போறானாம் , அவ்ளோ கூமுட்டையானே அவன், இந்த கலிகாலத்திலேயும் கம்யுனிகேசனுக்கு வேற வழியா இல்லை  ... உச்சகட்ட காமெடி என்னவென்றால் ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா என்று ஒரு மிலிட்டரி ஆபிசர் கேட்டவுடன் கருணை உள்ளத்தோடு அவுத்து விடும் தீவிரவாதியை விஜயகாந்த் கூட பார்த்திருக்க மாட்டார் ... முருகதாசுக்கு காமெடி வராது என்று ஆண்டாண்டு காலமாக வாய் கூசாமல் பேசிகொண்டிருக்கும் மூடர்களின் வாயை 12 பேர் 12 தீவிரவாதிகளை கொல்லும் காட்சியிலும் , நாயை கொண்டு மோப்பம் பிடிக்கும் காட்சியிலும் ஒரு டன் பெவிகாலை தள்ளி அடைத்து இருக்கிறார் ,...)


LinkWithin

Related Posts with Thumbnails