Followers

Copyright

QRCode

Monday, October 10, 2011

சினிக்கூத்து 10-10-2011





ரா-ஒன்னில் ரஜினி ... இதுதான் இப்போதைக்கு தமிழ் சினிமா உலகில் ஹாட் டாபிக்... ஷாருக்கான் ரஜினியை தேடி போய் இந்த படத்தில் நடிக்க அழைத்ததால் ரஜினி நடித்து கொடுத்திருக்கிறார்... ஆனால் இது சம்பந்தமாய் பதிவுகளில் ரஜினி ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை... ஏதோ ரா ஒன் படம் ஒரு குப்பை படம் போலவும் , ஷாருக் நடித்திருப்பதால் அது ஓடவே ஓடாதும் என்றும் இப்பொழுது ரஜினி ஒரு காட்சியில் நடித்து விட்டதால் , இந்தியா முழுவதும்  அந்த படம் வசூலை வாரி குவித்து விடும் என்றும் வழக்கம் போல  றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... ரஜினி நடித்திருப்பது படத்திற்க்கு கூடுதல் மதிப்புதான் இல்லை என்று சொல்லவில்லை , ஆனால் அது மட்டுமே படத்தை மிக பெரிய வெற்றி அடையசெய்து விடும் என்று சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது... படம் வந்து பெரிய ஹிட் ஆகிவிட்டால் இவர்கள் ரஜினியால்தான் ஓடியது என்று சொல்லுவார்கள் , மீறி ஓடாவிட்டால் குசேலன் கதைதான்... இந்திய சினிமாவின் ஒரே உச்ச நட்சத்திரம் ரஜினிதான்  , ஆனால் அதற்காக அவர் நடித்தால் மட்டுமே எந்த படமும் ஓடும் , இல்லை என்றாள் ஓடாது என்று சொல்லுவதெல்லாம் முடியல சாமீ .. கண்ண கட்டுது ....  முன்னொரு காலத்தில் ரஜினிக்கு பலமாக இருந்த அவர் ரசிகர்கள் ஏனோ இப்பொழுது அவருக்கு பலவீனமாக மாறிவிட்டார்கள்.... ஆனால் ஒன்று உறுதி ரா-ஒன் மூலம் ஷாருக் தென்னிந்தியாவிலும் , ரஜினி வட இந்தியாவிலும் தங்கள் மார்க்கெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ளுவார்கள்... இது இருவருக்குமே தங்கள் அடுத்தடுத்த ப்ராஜக்ட்டில் பணம் சம்பாதிக்க உதவும்...

 ----------------------------------------------------------------------


7 ஆம் அறிவு படம் வெளி வந்ததும்  700 வருஷ பாரம்பரியம் மட்டுமே இருக்கும் அமெரிக்காகாரன் முன்னேறிய அளவுக்கு பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் கொண்ட தமிழன் முன்னேற முடியாமல் போன காரணம் தமிழனுக்கு புரியும்... படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நான் தமிழன் என்னும் கர்வம் பிறக்கும் இப்படி ஏதோ ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி லெவலுக்கு மேலே பேசி இருப்பவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்...

எனக்கு என்னமோ அவனுங்க அவதார் எடுத்துட்டே அமைதியா இருக்கும்போது நாம  7 ஆம் அறிவுக்கே இப்படி ஓவரா பேசுறதுதான் தமிழன் முன்னேறாம இருக்க காரணம்னு தோணுது  ... அது சரி இதே படத்தை தெலுங்குளையும் , ஹிந்திளையும் ரீமேக் பண்ணும் போது என்ன வசனம் பேசுவீங்க?

----------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளிக்கு வேலாயுதம் ரிலீஸ் ஆகுதாம் , விஜய் படம் ரிலீஸ் ஆகுதுனாலே கண்டிப்பா அந்த சமயம் அவரை கேலி செய்து பல எஸ்‌எம்‌எஸ்ள் உலாவரும் , வேலாயுதத்தை சும்மா விட்டுவிடுவார்களா? இதோ எனக்கு வந்த சில அணில் புகழ் பரப்பும் எஸ்‌எம்‌எஸ்கள்...  

வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா காமெடி ரீ-மேக்.

சின்ன டாகுடர் விஜய் : அப்பா  போதும் 50 படம் ஃபிளாப் கொடுத்தாச்சு..

எஸ்‌ஏ‌சி  : டேய் நல்லா எண்ணிப் பாருடா 49 தான்டா ஃபிளாப் கொடுத்திருக்கே..

சின்ன டாகுடர் விஜய் : நடிச்ச எனக்குத் தெரியாதா 50 படம் ஃபிளாப்னு?

எஸ்‌ஏ‌சி: டேய் படம் பார்த்த எனக்குத் தெரியாதா 49 படம் ஃபிளாப்னு?

சின்ன டாகுடர் விஜய் : முடியாது...முடியாது... நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க.. எல்லா டைரக்டர்களையும் கூப்பிடுங்க.. நான் மறுபடியும் நடிக்கிறேன்..

எஸ்‌ஏ‌சி : மறுபடியுமா????????????????????????????


 **************************************************************************************


தளபதி: அண்ணே ஒரு காப்பி எவ்வளவு?

கவுண்டர் : ஒரு காப்பி 7 ரூபாய்..

தளபதி : பக்கத்து கடைக்காரன் ஒரு காப்பி 50 பைசாதான்னு எழுதி ஒட்டியிருக்கான் , நீ 7 ரூபாய் சொல்லுற , யார ஏமாத்த பாக்குற...

கவுண்டர் : டேய் காரசட்டி மண்டையா .. அந்த பீஸ் போன ரெண்டு கண்ணையும் நல்லா தொறந்து வச்சி படிச்சி பாரு ... அது ஜெராக்ஸ் காப்பி , இது ஃபில்டர் காப்பி .. நடிக்கவும் தெரியல , படிக்கவும் தெரியல ...


கவுண்டமணி : சரி அதவிடு உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....

விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....

விஜய் : அண்ணா அதுலயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...

கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...

விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....

விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ??????

கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...

கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற 

விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா

கவுண்டமணி : ஏன்டா ஒன்னலாம் யாருடா நடிக்க கூப்பிட்டா ஓடி போயிரு 


(நம்ம பிளாக்ல நம்ம வாசகர்  ஒருவர் முதல் முறையா என்னையும் ஒரு பிரபல பதிவருன்னு மதிச்சி அவர் பின்னூட்டத்தை ஒரு பதிவா போட சொன்னாரு ... அவர் எனதுஎண்ணங்கள்  என்னும் பெயரில் பின்னூட்டம் இடும் நண்பர் ... அவர் எழுதிய பின்னூட்டம்தான் மேலே இருக்கும் ஜோக் ..எனவே இதை படித்து யாராவது கோபபட்டால்  அவரிடம் சென்று  சண்டையிடவும்...)

 **************************************************************************************

இதெல்லாம் பரவாயில்லை பேஸ்புக்ல விஜய் ரசிகர்கள்னு சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் இருக்கு, அவனுங்க பண்ணுற இம்ஸைக்கு அளவே இல்லை...  அவனுங்க பேஸ்புக்ல இருந்து எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாணுக..  

"Hi Raja,

Vinoth invited you to VELAYUTHAM FIRST DAY FIRST SHOW- DEEWALI MASS 

RELEASE.VELAYUTHAM FIRST DAY FIRST SHOW- DEEWALI MASS RELEASEWednesday, October 26 at

 6:00amLocation: ANY THEATRE ACROSS THE WORLDAre you attending? Yes - No - MaybeRemove from My 

EventsThanks,The Facebook Team...."


 இந்த மெயில படிக்கிறப்ப எனக்கு எமன் எதிர நின்னு பாசக்கயிர வீசுர மாதிரியே இருந்தது... அண்ணே வினோத் , சாவுரதுன்னா தனியா போய் சாக வேண்டியதுதான , அது ஏண் துணைக்கு என்னையும் கூப்பிடுறீங்க? உங்க அளவுக்கு எனக்கு மனதைரியம் கிடையாதுன்னே  ... மக்களே இந்த மரண அழைப்பிதழ் உங்களுக்கும் வரலாம் ... பாத்து சூதானமா இருந்துக்கோங்க ... 

4 comments:

K.s.s.Rajh said...

பாஸ் ரஜனி மேட்டரைவிட டாகுத்தர் ஜோக் சூப்பரோ சூப்பர் சிரிச்சி சிரிச்சி...............முடியலை..........

Enathu Ennangal said...

ரொம்ப நன்றி தல...என்னுடைய பின்னுட்டத்தை பதிவில் போட்டதற்கு....
கவலையே படாதிங்க நீங்க பிரபல பதிவர்தான்.அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்...

Karthikeyan said...

உங்களுக்கு எல்லாம் டாக்டருன்னாலே இளப்பமா போச்சு.. அடுத்த படத்துல இன்னும் வித்யாசமா ஏதாவது பன்னி.. ச்சீ பண்ணி உங்க மூஞ்சில கரி பூசுவாரு பாருங்க.. (என் வீட்டம்மா புலம்பியது)

பிரபலம்னாலே பிராப்ளம்தானே.. இல்ல ராஜா..!!

"ராஜா" said...

//பிரபலம்னாலே பிராப்ளம்தானே.. இல்ல ராஜா..!!

நீங்க யாரை சொல்லுறீங்க? என்னை வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணிறளையே? ஹி ஹி ஹி

LinkWithin

Related Posts with Thumbnails