Followers

Copyright

QRCode

Wednesday, July 7, 2010

தங்க மகன் விருது




எனக்கு  பதிவுலகத்திற்கு வந்த பின்னர் கிடைக்கும் முதல் விருது , அதுவும் அருமை நண்பர் பாலாவின் கையால் பெற்ற விருது .... பாலாவின் சண்முக ச்சீ சமூக நல சிந்தனைகள் தெறிக்கும் பதிவுகளுக்கு இருக்கும் நிறைய ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவர் மூலம் இந்த விருதை நான் பெறுவது எனக்கு பெருமையே ....

இந்த விருதை தரும் பொழுதே நண்பர் கூறிய ஒரு விஷயம் நானும் எனக்கு பிடித்த நான்கு பதிவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம் ... இதோ எனக்கு பிடித்த இல்லை என்னை கவர்ந்த அந்த நான்கு பதிவர்கள் ...


நான் பதிவுலகம் என்று ஒன்று உள்ளது என்பதை அறிந்து கொண்டதே இவரின் பதிவுகள் மூலமாகத்தான்... நான் படித்த முதல் பதிவு இவருடையதுதான் ... நான் முதல் பின்னூட்டம் இட்டதும் இவருக்குத்தான் ... புதியவன் என்று ஒதுக்கி விடாமல் என்னுடைய பின்னூட்டங்களுக்கும் பதில் அளிப்பார் .... சில நேரம் சண்டையே நடந்துள்ளது எங்களிடையே ... நானும் எழுதினால் நான்கு பேராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது இவரின் தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களே ... இந்த விருதை அவருக்கு தரும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை .. ஆனால் ஆசை இருக்கிறது .. எனவே அவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன் 


பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ... தலையின் தீவிர ரசிகர் என்னை போலவே ... என்னை ஆரம்பத்தில் இருந்து ஊக்கிவித்து வரும் நண்பர் .. அவரும் நன்றாக எழுதுவார் ... ஆனால் தன்னை விளம்பரபடுத்திகொள்ள மாட்டார் .. அவரின் பதிவுகளை படித்தால் அவரின் எழுத்து திறமை புரியும் ... என்னை ஊக்குவித்த அவரை நான் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதை அவருடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் ....


இவரின் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பிடிக்கும் ....   நையாண்டி மன்னர் இவர் ...

phantom mohan 

முதலில் பருப்பு என்ற பெயரில் எழுதி கொண்டு இருந்தார் ....  நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நக்கல் நையாண்டியுடன் தன் பதிவுகளில் எழுதுபவர் ... ஒரு நையாண்டி பதிவு எப்படி எழுத வேண்டும் என்பதை நான் இவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன் ....



8 comments:

கார்க்கிபவா said...

சந்தோஷமா இருக்கு சகா...

நன்றி

pichaikaaran said...

"பிச்சைகாரன்

இவரின் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பிடிக்கும் .... நையாண்டி மன்னர் இவர் ..."

உங்கள் விருது என்னை சந்தோஷப்படுத்தவில்லை... பயம் தான் ஏற்படுகிறது...

தவறை தவறு என்று சரியை சரி என்றும் கூறும் உங்கள் நடுநிலை எனக்கு தெரியும் என்பதால் , உங்கள் அன்பை தக்க வைத்துகொள்வது பெரிய சவால் என்பதை அறிவேன்... அதனால்தான் பயம்...

தங்கள் அன்புக்கு நன்றி.... நன்றி..... நன்றி....

pinkyrose said...

aama aalaaluku viruthu kudukringa ... sari polachu ponga engalukku atleast virunthu kudukkalaamla chumma iriyaani mayyumachum pottu...

enakum solli thanga naanum viruthu kudukran..

"ராஜா" said...

வாங்க பிங்கி ரோஸ்.. மட்டன் பிரியாணியா ? கோழி பிரியாணியா ?

விருது இப்பதான் கொடுத்து முடிச்சேன் ... அடுத்து எனக்கு யாராவது தந்தா உங்களுக்கும் தரேன் ஆனா கொஞ்சம் செலவாகும் பரவா இல்லையா?

"ராஜா" said...

நன்றி பார்வையாளன் விருதை பெற்று கொண்டதற்கு ...

Rajan said...

தும் ததா!

Yoganathan.N said...

எனக்கு விருதா? உலகம் தாங்காது பா... நான் எதோ கிறுக்குவேன்... உங்களைப் போலவும் நண்பர் பாலா போலவும் எனக்கு எழுத வராது.
இருந்தாலும் கொடுத்துட்டீங்க, வாங்காமல் இருந்தால் நல்லாவா இருக்கும். என்னை மேலும் ஊக்குவித்த வண்ணமாக இதை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. :)

பி.கு நம்ம தல மாதிரி, நான் இந்த விருது நிகழ்சிகளில் எல்லாம் கலந்துகுறதில்ல பா... ஹிஹி

"ராஜா" said...

@ ராஜன்

பக்.. பக்..பக் .. டன்... டன்... டன்... டன்...

@ Yoganathan.N

நன்றி .. நன்றி .. நன்றி ...

LinkWithin

Related Posts with Thumbnails