Followers

Copyright

QRCode

Monday, February 21, 2011

நடு நிசி நாய்கள்- ஒரே சிரிப்பு சிரிப்பா வருது .....


நண்பர்களுக்கு வணக்கம் .. பதிவு எழுதி நிறைய நாட்கள் ஆகி விட்டது .... காரணம் எனது திருமணம் .... சென்ற வாரம் புதன்கிழமை தென்காசி அருகே இருக்கும் புளியங்குடியில் இனிதே நடந்து முடிந்தது ... திருமணத்தை பற்றிய பதிவை நான் எழுதி அதை பதிவிட முடியாமல் ட்ராஃப்ட்டில் வைத்திருந்தேன் , ஆனால் நேரம் கிடைக்காமல் போய்விட்டபடியால் அதை கடைசி வரை பதிவில் ஏற்றவே  முடியவில்லை... என் எழுத்தின் மூலம் கிடைத்த நண்பர்களை என் மனவிழாவிற்க்கு அழைக்க முடியாமல் போனதர்க்கு வருந்துகிறேன் .. பதிவுலகில் இருந்து நண்பர் பாலா மட்டும் வந்திருந்தார் ... அவர் தன்னுடய தளத்தில் இந்த பதிவில் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லி இருந்தார் ... அவருக்கும் அதில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள் .... முன்னரே பதிவில் தெரிவிக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமே .... 

 நாய்கள் :

நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் அவல நிலை எனக்கு நேற்று நேர்ந்தது .. நல்ல வேலை என் மனைவியை அழைத்து செல்லவில்லை .. அவளுக்கு படம் பார்க்கவே பிடிக்காதாம் .... பேசாமால் நானும் அப்படியே இருந்திருக்கலாம், இந்த மாதிரியான மரண மொக்கைகளை பார்க்காமல் மூன்று மணிநேரம் ரண வேதனையை  அனுபவிக்காமல்  இருந்திருக்கலாம்...  

சின்ன வயசில் பேய் கதை நிறைய கேட்டு இருந்திருப்போம் ... அதில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு சூனியக்கார கிழவி இருப்பாள் , அவளுக்கு அடிமையாக அவள் சொல்லுவதை எல்லாம் கேட்டு நடக்க ஒரு பூதம் கூடவே இருக்கும் .. அந்த சூனியக்காரி தனக்கு மாயமந்திர சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஊரில் இருக்கும் அழகான கன்னி பெண்களை எல்லாம் பூதத்தை கொண்டு கடத்தி வந்து நரபலி கொடுப்பாள் ... ஆனால் கதாநாயகி மட்டும் கடைசியில் தப்பி விடுவாள்... இதெல்லாம் நான் சின்ன பையனாக இருந்த போது வழக்கில் இருந்த திகில் கதைகள் ...இந்த கதையை saw hostel , Friday the 13 என்று தினந்தோறும் எச்பிஓ வில் பார்த்து கொண்டு இருக்கும்  இந்த காலத்து  சின்ன பசங்ககிட்ட சொன்னா அவன்கூட  பயப்பட மாட்டான் .. ஆனா இதே கதையை கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து , மல்டிபில் பேர்சொனாலிட்டி சாயம் பூசி முழு படமா எடுத்திருக்கார் நம்ம கௌதம் ... திகில் படம்னு நினைத்து எடுத்திருக்கிறார் ஆனால் பார்க்கும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ... அதுவும் கடத்தி/வசியம் செய்து  கொண்டு போகும்  பெண்களை ஹீரோ  என்ன செய்கிறார் என்பது படத்தின் உட்சபட்ச காமெடி ...  இயக்குனர் இந்த வகையான saw hostel போன்ற படங்கள் எல்லாம் பார்த்ததில்லை போல(மிஷ்கினிடம் இந்த மாதிரியான படங்களின் DVD கலெக்ஷன் இருக்கும் கேட்டு வாங்கி பாருங்கள் கௌதம்).

அந்த படங்களை போல இல்லை என்றதும்  நம் மக்களுக்கு ஏற்றது போல படத்தை எடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் , நீங்கள் பெரிய முட்டாளாக மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது ... படத்தில் வரும் பாலியல் வன் புணர்வு காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா உலகில் காண கிடைக்காதது .... அதுவும் ஒரே ஆண் பல பெண்களுடன் வண்புணர்வு செய்கிறான் ... ஒவ்வொன்றையும் கேமேரா நீண்ட நேரத்திர்க்கு ரொம்ப கவனமாக பதிவு செய்திருக்கிறது ... வேட்டையாடு விளையாடுவில் இவருக்கு பிடித்த காம காய்ச்சல் இந்த படத்தில் ஜூரமாக வெடித்திருக்கிறது ...தயவு செய்து குடும்பத்துடன் சென்று விடாதீர்கள் .... 


சின்ன குழந்தைகளை கூட்டி சென்று அவர்கள் கெட்டு  போக நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் ... அதுவும் ஹீரோ சின்ன வயது பையனாக காட்டபடும் காட்சிகள் ஆபாசத்தின் உட்சம்... எல்லா உறவுகளையும் கேவலபடுத்தி ஆகி விட்டது ...உருப்படியாக இருப்பது பெற்றோர் பிள்ளை உறவுதான் ... அதையும் கவுதம் இந்த படத்தில் சீரழித்து விட்டார் ... ஒருவன் எதனால் சைக்கோ ஆகிறான் என்று காட்ட வேறு வழியே தோன்றவில்லையா உங்களுக்கு? .... ஏதோ ஒன்றை வக்கிரமாக காட்டி மக்களை ரசிக்க வைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் .... பார்க்கும் போது சகிக்க முடியவில்லை ... 


அதுவும் ஹீரோ ஒரு பெண்ணுடன் ஒரு காட்சியில் உறவு கொள்கிறான் . அடுத்த காட்சியில் அவளை “மீனாட்சி அம்மா “(அவள் பெயர் மீனாட்சி ) என்று கூப்பிடுகிறான் .. கருமம்டா சாமி ... சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை ...


சிவப்பு ரோஜாக்கள் போல ஒரு படம் தரவேண்டும் என்ற இயக்குனரின் ஆசையில் தவரே இல்லை ... ஆனால் அதர்க்கு ஏற்றார் போல நல்ல சரக்குடன் இறங்கி இருந்தால் பாராட்டி இருக்கலாம் ... இரண்டாம் பாதி பெரிய மொக்கை ... இயக்குனர் ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்திருக்கும் ஸீன்களில் எல்லாம் அரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் கேட்கிறது ... ஹீரோ பேசும் மாடுலேசன் பயங்கர காமெடி ... அதுவும் அவர் இரண்டு குரல்களில் மாற்றி மாற்றி பேசுவதெல்லாம் அன்னியனிலேயே பாத்தாச்சி ....  

எனக்கு சைக்கோ படம் எடுக்கும் இயக்குனர்களிடம் ஒரு கேள்வி .. சைக்கோ என்றாள் பெண்களை கடத்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்பவனாகத்தான் இருப்பானா? ஏன் உலகத்தில் வேறு மாதிரியான சைக்கோகளே இல்லையா? அந்த மாதிரியான சைக்கோ படங்கள் ஏன் எடுக்க மாட்டேங்கிறீங்க? கிளுகிளுப்பா எதுவும் காட்ட முடியாது என்ற பயமா? இதுக்கு பேசாம நீங்க ஷகீலாவ வச்சி ஒரு பிட்டு படம் எடுத்து ஓட்டலாம்... என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டும் ஒண்ணுதான் ...  


நடுநிசி நாய்கள் : தலைப்பில் நாய் என்று குறிப்பிடபட்டு இருப்பது இயக்குனரையோ என்ற சந்தேகம் படம் பார்த்ததும் எனக்கு வந்து விட்டது... 



Friday, February 4, 2011

டவுட் கார்னெர்- சில செய்திகளும், என் சந்தேககங்களும்




கருணாநிதி : ஒருவரை சிபிஐ கைது செய்வதை மட்டும் வைத்து அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது

டவுட்டு : அடுத்து என்ன சொல்ல போறீங்கண்ணு தெரியும் .. ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்ததாலேயே அவர் குற்றவாளி என்று ஒத்து கொள்ள முடியாது அப்படிதான சொல்ல போறீங்க ... விட்டா ஒருவர் அரசாங்க பணத்தை திருடியதாலேயே அவரை ஊழல்வாதி என்று சொல்லமுடியாதுண்ணு சொல்லுவீங்க போல ...


விஜய் : அன்று மோகன்தாஸ் என்னும் மனிதனை ரயிலில் இருந்து தள்ளி விட்டார்கள் .... அந்த பிளாட்பாரத்தில் நம் நாட்டுக்கு காந்தி என்னும் மகான் கிடைத்தார் ... இன்று என் காவலன் படம் வெளிவர தடை செய்கிறார்கள் .. நாளை ?

டவுட்டு : கருப்பா இருந்தா நீ காந்தி ஆகிடுவியா? தென்ஆபிரிக்காவுள அவர  டிரைன்இருந்து தள்ளி விட்டா அவர் மகான் ஆனாறு ... உன்னை  அப்படி தள்ளிவிட்டா பிளாட்பார்ம்பிச்சைதான் எடுக்கணும் ...  யோவ் உன் ரசிகர்களை உசுப்பேத்தி அரசியல்ல இறங்கி காசு பாக்கணும்னா , சின்ன எம்ஜிஆர் கறுப்பு எம்ஜிஆர் மாதிரி நீயும் கரடி எம்ஜிஆர்  அப்படின்னு சொல்லி ஓட்டு பிச்சை எடு , ஓட்டு விழலையா மறுபடியும் சங்கவிய கூப்பிட்டு போயி சோப்பு போடு ... அத விட்டுட்டு காந்திய பத்தியெல்லாம் பேசாத... பாவம் அந்த மனுஷன் அவர ஏன் அசிங்கபடுத்திக்கிட்டு ... மக்களே இந்த  மாதிரி ஆளுங்க இப்படி பேசுரதை தடுத்து நிறுத்த ஏதாவது பண்ணுங்களேன்  ...

 


இவங்க ரெண்டு பெரும் ஒண்ணா ?




ராமதாஸ் : தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்றாள் நான் முதல்வர் ஆனால்தான் உண்டு ...

டவுட்டு : முதல்வர் ஆகணும்னா குறைந்தது 130 தொகுதிளையாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் ... அப்படினா 130 தொகுதிளையாவது போட்டி போட 130 வேட்பாளர்கள் வேண்டும் .. அவ்வளவு ஆட்கள் உங்க கட்சியில இருக்காங்களா ஐயா?


எடியூரப்பா : குற்றம் நிரூபிக்க பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்

டவுட்டு : நல்ல விஷயம் ... பில்லி சூனியம் வச்சா இப்படியெல்லாம் பேச தோணுமா .. அப்படினா இவருக்கு பில்லி சூனியம் வச்ச புண்ணியவாங்களை தமிழ் நாட்டுக்கு கூப்பிட்டு வாங்கப்பா ... குற்றம் நிரூபிக்க பட்டால் கூட அவர் குற்றவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படின்னு உளறிக்கிட்டு இருக்கிற நெறைய பேருக்கு பில்லி சூனியம் வைக்க வேண்டி இருக்கு ...


கருணாநிதி : பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய செல்போன் சேவையை இன்று ஏழை எளிய மக்களும் பயன்படுத்த உதவியதர்க்காக சிறை சென்ற ராசாவை பாராட்டுகிறேன்

டவுட்டு : அதான பணக்காரணுக மட்டும் பயன்படுத்துற சேவையா இருந்தா கனெக்ஷன் கம்மியாதான் இருக்கும் அதுல லச்சக்கணக்குலதான் ஊழல் பண்ண முடியும் ...  நாட்டுல எல்லாரும் பயன்படுத்துற மாதிரி கோடிக்கணக்குல கனெக்ஷன் கொண்டுவந்தாத்தான 1.76 லட்சம் கோடிக்கு உலகமகா ஊழல் பண்ண  முடியும் ... இதர்க்காக உதவிய ராசாவை தலைவர் பாராட்டுவதில் தவரே இல்லை ...


மன்மோகன் : அருணாசலம் இந்திய மாநிலமே ... சீனா அதை தன் வரைபடத்தில் இணைப்பதால் மட்டுமே அது சீனாவுக்கு சொந்தம் என்று ஆகிவிடாது


டவுட்டு : அதான சீன அரசே வரைபடத்துல இணைத்தால் மட்டும் போதுமா? அப்படின்னு இவரு கேக்குரத பாத்துமா உங்களுக்கு புரியலை ... இவருகிட்ட கேட்டு இத்தாலி அம்மையாரின் சுவிஸ் பாங்க் அக்கவுண்ட் நம்பர் வாங்கி ஒரு 1000 கோடி அமெரிக்க டாலரை அதுல போடுங்க ... அருணாசல பிரதேசம் உங்களுக்கு பட்டா எழுதிவைக்கபடும் ...

வீரமணி : அன்று கோவலனுக்கு நடந்தது இன்று ராசாவிர்க்கு நடந்துள்ளது...

டவுட்டு : கோவலனுக்கு பிரச்சனை மாதவியால  வந்தது .. இவருக்கு பிரச்சனை எந்த பெண்ணால வந்ததுண்ணு ஊருக்கே தெரியும் ... அப்ப அவங்கள மாதவிண்ணு சொல்லுறீங்களா? (நான் நீரா ராடியாவ சொன்னேன்) ... (அப்பாடா வீட்டுக்கு ஆட்டோ வராது)

நவரச நாயகன் கார்த்திக் : அம்மா முதல்வராவதர்க்கு என் உயிரையும் கொடுப்பேன் ...

டவுட்டு :  நீ உயிர எல்லாம் கொடுக்கவேணாம் , பிரச்சாரதுக்கு மட்டும் வராம இருந்தா போதும்னு அம்மா சொன்னாங்கலாமே உண்மையா? அது சரி அம்மா கடத்துனா அம்மாவுக்கு ஆதரவா பேசுவீங்க , இந்த தடவ அழகிரி கடத்துனா என்னா பண்ணுவீங்க?

நமீதா : சூரியாவோடு நடிக்க ஆசைதான் ஆனால் உயரம்தான் இடிக்கிறது ...

டவுட்டு : இது உள்குத்தா இல்லை வெளிக்குத்தாண்ணு தெரியல .. ஆனா உலகமகா குத்துடா சாமி... அந்த குள்ளனோட எல்லாம் நடிக்க முடியாதுண்ணு எவ்வளவு நாசூக்கா சொல்லுது அக்கா ... கலைஞர் கைபட்டா (ஆசீர்வாதம் பண்ணங்க) நமீதா கூட நக்கலா பேச ஆரம்பிக்கிது  ...

எக்ஸ்ட்ரா :



எது எதுலதான் ஊழல் பண்றதுண்ணு ஒரு விவஸ்தை இல்லையா? படிக்கிற பிள்ளைக சாப்பிடுர சத்துணவு எந்த நாதாரியோ ஊழல் பண்ண போயி  , சாப்பாடு  கிடைக்காம பள்ளிக்கூடத்து பிள்ளைக  பக்கத்துல இருக்கிற கோவில் அன்னதானத்துல வாங்கி சாப்பிடுர காட்சிதான் மேல இருக்கிற படம் ....  இப்படி இவங்க சாப்பாட்ட ஆட்டைய போட்டு உடம்ப வளக்குறதுக்கு பேசாம விஜய் ஆரம்பிக்க போர கட்சியில எம்எல்ஏ சீட்டு வாங்கி தேர்தலுல போட்டி போடலாம் (கேரளாவுக்கு அடிமாடாய் போய்டலாம்னு சொல்லி சொல்லி எனக்கே போர் அடிக்கிது அதான் மாத்திக்கிட்டேன்)

LinkWithin

Related Posts with Thumbnails