Followers

Copyright

QRCode
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, June 3, 2011

அரசியல் அணிலும் , சமச்சீர் கல்வியும்




ஒரு காமெடி கும்பல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருந்து உதவி இருக்கிறோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறது ... எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,  நீங்க எப்ப தைரியமா அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தீங்க பையன் ஸார்  , இதே தேர்தல் முடிவு மாறி வந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க , எங்க அப்பா என்கிட்ட அம்மாவுக்கு ஆதரவு தர சொல்லி எவ்வளவோ கெஞ்சினாறு  ஆனால் கலைஞரின் பொற்கால ஆட்சியை எதிர்த்து என்னால் பிராசாரம் செய்ய முடியாது என்று சொன்னேன் , நான் என்றுமே கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நண்பன்தான் என்று சூடு சொரணையே இல்லாமல் பேட்டி கொடுத்திருப்பீங்க ... உண்மையில் நீங்கள் அணில் இல்லை , பச்சோந்தி .... 

இவ்வளவு காலமும் ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாய் இருந்து கொண்டு நினைத்ததை சாதித்து கொண்டு , தேர்தல் சமயத்தில் பல்டி அடித்து இப்பொழுது அம்மாவுக்கு அடிவருட தயாராகி விட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட அப்பாவும் புள்ளையும் ... ஆனால் இவர்கள் நினைப்பது என்றும் நடக்காது , மக்களும் இவர்களை மதிக்கவில்லை , இவர்கள் அடிவருடிவிட ஆவலாய் இருக்கும் அம்மாவும் இவர்களை மதிக்கவில்லை ... சூப்பர் ஸ்டாரையே கண்டுகொள்ளாத அம்மா இந்த பிஸ்கோத்துகளையா கண்டுகொள்ள போகிறார் ...


இந்த பேட்டியில் பையன் நான் அரசியலுக்கு வந்து கண்டிப்பாக  என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று உளறி தள்ளி இருக்கிறார் ..மூலையில சும்மா இருக்கிற ஆப்புல தானா ஏறி உக்காருறது இதுதான் ... மக்களே அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் அவர் அரசியலுக்கு வர போறாராம் அத அவரே ஒத்துகிட்டாறு...  இந்த தேர்தலில் ஒரு அப்பா பையனுக்கு மாம்பழத்தில் நல்லா குத்தி சிறப்பான எதிர்காலத்தை  பரிசளித்ததை போல இவர்களும்  அரசியலுக்கு வந்தவுடனே இவர்களுக்கும் நல்லா குத்து குத்துன்னு குத்தி நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் ...

இந்த காமெடி பீஸுகளுக்கு அம்மா சீக்கிரம் குச்சி மிட்டாயை வாயில் சொருகி வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்..

-------------------------------------------------------------------------

இன்றைய அரசியலின் ஹாட் டாபிக் சமச்சீர் கல்வி திட்டம்தான்... உண்மையில் சமசீர் கல்வி என்பது எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... பாடங்களில் இரண்டு வகை உண்டு .. ஒன்று நம் சொந்த புத்தியினால் மட்டுமே படிக்க முடிந்த,  புரிந்து கொள்ள முடிந்த பாடங்கள் ... கணிதம் இதற்க்கு நல்ல உதாரணம்... எவ்வளவுதான் காசு செலவு பண்ணி படித்தாலும் மண்டையில் மசாலா இல்லை என்றாள் இத்தகைய பாடங்களில் தேறுவது கடினம்தான்... கார்பரேசனில் படித்தாலும் சரி மெட்ரிகுலேசனில் படித்தாலும் சரி மூளை இல்லை என்றாள் ஒன்றும் சாதிக்க முடியாது ... வருடா வருடம் கணிதத்தில் மட்டும் அதிகம் பேர் செண்டம் அடிக்க காரணம் இது கடவுளாலேயே படைக்கபட்ட சமச்சீர் பாடம் ...


இரண்டாவது வகை தொடர்ச்சியான பிராக்டீஸ் மூலம் மட்டுமே கற்று கொள்ள முடிந்த பாடங்கள்... ஆங்கிலம் போன்ற வேற்று மொழி பாடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம் ... இந்த பாடங்களில் மட்டும்தான் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி போவார்கள் .. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மற்ற பாடங்களில் எல்லாம் 90 சதவீதத்திர்க்கும் மேல் எடுத்து விட்டு ஆங்கில பாடத்தில் வெறும் 60 , 70 என்று எடுத்திருப்பார்கள் ... காரணம் அந்த பாடத்தில் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைவான பயிற்ச்சி ... ஆனால் மெட்ரிக்குலேசன் முறையில் அவர்களின் பாடதிட்டமே ஆங்கிலத்தில் அதிக பயிற்சி அளிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும் ... 

என்னுடன் கல்லூரியில் படித்த மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பெரும்பாலானோர் சராசரிக்கும் குறைவான புத்தி கூர்மை உடையவர்களாகவே இருப்பார்கள் , ஆனால் அவர்களின் ஆங்கில புலமை நன்றாக இருக்கும் ... அதைவைத்து அவர்கள் எளிதாக நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள் .,, ஆனால் எங்களை போன்ற ஸ்டேட் போர்டு  மாணவர்கள் நல்ல திறமை இருந்தும் ஆங்கிலத்தில் திண்டாடி நல்ல வாய்ப்பை எல்லாம் கோட்டை விடுவோம் ... இதற்க்கு என்னுடய நண்பர்கள் வட்டதிலேயே எவ்வளவோ உதாரணங்களை சொல்ல முடியும்... இப்படி பாடதிட்டங்களிலும் , பயிற்சி முறைகளிலும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் கடைசியில் எங்கள் வாழ்க்கையவே மாற்றி விட்டன ... அதனால்தான் சொல்கிறேன் சமசீர் கல்வி முறை எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...


ஆனால் இந்த அருமையான திட்டத்திலும் அரசியல் கலந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த சாபம் ... திரை கூத்தாடிகளின் ஜால்ராவை கேட்டு கேட்டு புளித்து போன முன்னாள் முதல்வர் , , எப்படி இன்று இந்தியாவே காந்திக்கு , பகத் சிங்கிற்க்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறதோ அது போல வரும்கால தமிழகம் முழுவதும் தனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நினைத்து இந்த அருமையான திட்டத்தையே  கெடுத்து விட்டார் ... காமராஜர் கக்கன் போன்ற "கறைபடிந்த" ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த தமிழ்நாட்டையே  கருணாநிதி என்னும் "உத்தமபுத்திரந்தான்" காப்பாற்றினார் என்று வரலாற்றை திரித்து மாணவர்களுக்கு அறிவு அமுதோடு கொஞ்சம் நஞ்சையும் சேர்த்து ஊட்டும் வகையில் தன் அடிவருடிகளை வைத்து பாடங்களை அமைத்து இருக்கிறார் ... இலவச திட்டங்கள் மூலம் நான்தான் இனி தமிழக நிரந்தர முதலவர் என்று எண்ணி இந்த காரியத்தை துணிந்து செய்து விட்டார் .. ஆனால் அவர் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று செய்து விட்டார்கள் ...


அம்மா வந்தவுடன் இந்த காரணத்தை காட்டி , சமசீர் கல்வி முறையை தள்ளி வைத்து விட்டார் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார் ... இதனால் 200 கோடி செலவு செய்து அச்சடித்த புஸ்தகங்கள் வீணாகி விட்டன என்று எல்லாரும் புலம்பி கொண்டு இருக்கிறாராகள் .. காசு வீணாகிறது என்றுதான் புலம்புகிறார்களே தவிர யாருமே மானவர்களின் நலன் மேல் அக்கறை உள்ளதை போல பேசவில்லை .... கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அம்மா இதை தள்ளி வைத்தால் அது மிக பெரிய அயோக்கியதனம்ஆனால் ஆளும் கட்சியோ இதை ஒத்துக்கொள்ளாமல் , சமசீர் கல்வி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அமைத்து இருக்கும் பாடதிட்டங்கள் எல்லாமும் மிகவும் கீழ்மட்டமாகவே உள்ளன ... பள்ளத்தில் இருப்பவர்களையே மேலே கொண்டு வருவதற்க்கு பதில் , இவர்கள் மேலே இருப்பவர்களையே பள்ளத்தில் தள்ளும் செயலை செய்து இருக்கிறார்கள் .... நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்த பாடத்திட்டங்களை  ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் , அதனால்தான் இப்போதைக்கு இதை தள்ளி வைக்கிறோம் என்று காரணம் சொல்லுகிறார்கள் ....

எது எப்படியோ மாணவர்கள் மேல் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் இவர்கள் சில காரியங்களை செய்ய வேண்டும்

  1. இந்த பாடத்திட்டம் உண்மையிலேயே மோசமாக வடிவமைக்க பட்டு  இருந்தால் , அதற்கான காரணங்களை ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வெளிபடுத்தி, நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு (அதாவது அதை வடிவமைத்தவர்கள் , அதற்க்கு துணையாக இருந்தவர்கள்) தண்டனை வாங்கி தரவேண்டும் ... இதை வெறும் 200 கோடியாக பார்க்காமல் அதனால் விளையபோகும் பின்விழைவுகளை கருத்தில் கொண்டு அந்த தண்டனை அமையவேண்டும்

  1. எந்த கட்சி சார்பும் இல்லாத பேராசிரியர்களை கொண்டு உலக தரத்தில் புதியதாக பாடதிட்டம் வடிவமைக்க வேண்டும் .... அதை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் ...
  2. ஒருவேளை இந்த பாடதிட்டதில் கலைஞர் ஜால்ட்ராவை தவிர மற்ற அனைத்தும் உண்மையிலேயே நல்ல முறையில் வடிவமைக்கபட்டிருந்தால் இந்த அரசு அந்த ஜால்ட்ரா பக்கங்களை மட்டும் பாடதிட்டதில் இருந்து நீக்கி விட்டு இந்த கல்வி முறையை உடனே கொண்டு வரவேண்டும் சாப்பாட்டில் இருக்கும் கல்லை எடுத்து ஓரமாக ஒதுக்குவதை போல ... பரீட்சைக்கு இதில் இருந்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டால் ஒருவனும் அதை சீண்ட மாட்டான் ...

அரசியல்வாதிகளே இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா ... இது அவர்களின் பிரட்சனை... எந்த  விதமான அரசியல் காழ்புணர்ச்சியோ , பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் ... உங்கள் காழ்புணர்ச்சியை காட்ட வேறு எத்தனையோ களங்கள் உள்ளன .. அங்கு உங்கள் சண்டையை வைத்து கொள்ளுங்கள்,, இவர்களை விட்டு விடுங்கள் ...  


சமசீர் கல்வி திட்டம் போல் அடுத்து சமசீர் மதுபான திட்டம் வருமா?

Saturday, May 14, 2011

மக்கள் நாங்கள் முட்டாள்கள் இல்லை அரசியல்வியாதிகளே ......





நாம் எவ்வளவு அராஜகம் செய்தால் என்ன ,, காசு கொடுத்தால் இவர்கள் யோசிக்காமல் குத்துவார்கள் ....

மக்களுக்கு நல்லது செய்ய நம்மை தேர்ந்தெடுத்தால் நம் குடும்பத்திர்க்கு மட்டும் நல்லது செய்வோம் , எவன் என்ன செய்ய போகிறான் , காசை வீசி எறிந்தால் நம் காலில் விழ போகிறான் ....

நான்தான் தமிழகம் எனக்கு அடிவருடுபவனே தமிழன் , என்னை எதிர்த்தால் அவன் இல்லாமல் போவான் ... எலும்புக்கு வாலாட்டும் நாயை போல நான் போடும் பணத்திர்க்கு வாலாட்டும் இந்த மக்கள் இருக்கும் வரை நான்தான் தமிழக சர்வாதிகாரி

நாங்கள் காட்டுவதுதான் படம் , நாங்கள் போடுவதுதான் செய்தி , நாங்கள் எதை காட்டினாலும் அதை நம்புவான் இந்த தமிழன் ... நாங்கள் ஒருவனை குடிகாரன் என்று குதர்க்கமாக காட்டினால் அதை அப்படியே நம்பும் மூளை இல்லாதவனே தமிழன் ...

தமிழனை மயக்க நல்லது செய்ய தேவை இல்லை , சினிமா கவர்ச்சி போதும் , படித்த பட்டதாரிகளையோ இல்லை அனுபவமிக்க அரசியல்வாதிகளையோ பேச சொன்னால் இந்த தமிழன் கேட்க மாட்டான் , அவனுக்கு கவர்சிக்கு குஷ்பூவும் , கெட்ட  வார்த்தைக்கு வடிவேலுவும் போதும் , இவர்கள் பேச்சில் மயங்கி அந்த மயக்கம் தெளியாமலேயே ஓட்டை நமக்குதான் குத்துவான்..



இப்படி எங்களை ஏதோ புத்தியில்லாத நாய்களை போல எண்ணிதானே  எப்படி எல்லாம் ஓட்டு கேட்க கூடாதோ அப்படியெல்லாம் ஓட்டு கேட்டு வந்தீர்கள் ..

கேரளாவிற்க்கு அடுத்து அதிகம் படித்த மக்களை கொண்டு இருக்கும் தமிழனாகிய எங்களை எவ்வளவு கேவலமாக நினத்திருந்தால் குஷ்பூவையும் , வடிவேளையும் அனுப்பி எங்களை உங்களுக்கு ஓட்டு போட சொல்லியிருப்பீர்கள் ... அவர்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்ததும் மக்கள் இன்னும் மாக்களாய்தான் இருக்கிறோம் என்று சந்தோசபட்டு வெற்றிகளிப்பில் மிதந்திருப்பீர்கள் ... இப்பொழுது தெரிந்திருக்கும் கூடிய கூட்டம் சும்மா பொழுதை போக்குவதற்க்குதான் என்று... பொழுதுபோக்கிற்க்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லை இந்த தமிழன் ...


நாங்கள் சாரை சாரையாய் அணிவகுத்து வந்து ஓட்டு போட்டதும் கொடுத்த காசுக்கு மேல கூவுராங்களே கொய்யாலே என்று உங்கள் மனம் குதூகளித்திர்க்கும் .. ஆனால் கூட்டமாய் வந்தது வாங்கிய காசுக்கு கூவ இல்லை , எங்களை புத்தியில்லாதவர்களாய் நினைத்திருக்கும் உங்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் என்று இப்பொழுது புரிந்திருக்கும் ...

எத்தனை நாளுக்குத்தான் குட்ட குட்ட குனிந்து கொண்டு இருப்போம் , இதோ நிமிர்ந்து விட்டோம் ... தமிழன் காசுக்காக சோரம் போகும் ஈன கூட்டம்  இல்லை என்று நிரூபித்து விட்டோம் ....

இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ... நீங்களாவது தமிழனை ஏமாளி என்று எண்ணி முன்பு போலவே இஷ்டம் போல ஆடி ,பிற்காலத்தில் நீங்களும்  ஏமாறாமல் இருங்கள்...

நாங்கள் முழித்து கொண்டோம் ... நீங்களும் முழித்து கொள்ளுங்கள் ...

பணபலம் , மீடியா பலம் , ரௌடியிசம் , சினிமா கவர்ச்சி என்று எல்லாம் இருந்தும் ஏமாறாமல் தன்னை ஏமாற்றியவர்களை விரட்டி அடித்த தமிழனை பார்க்கும் போது  ஊழல் அற்ற நல்லாட்சி புரியும் அரசாங்கத்தை அவன் உருவாக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை துளிர்க்கிறது ...

பணத்திர்க்கு விலை போகும் ஈன கூட்டம் இல்லை நாங்கள் என்று இந்த தேர்தலின் மூலம் உலகத்திர்க்கு உரக்க சொல்லி இருக்கும் தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட்


  


Monday, December 27, 2010

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்




நாம் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதார்க்காக எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் ... நாம் செய்யும் பணிக்காக தூக்கத்தை துறந்து , சாப்பாட்டை துறந்து , குடும்பத்தை மறந்து , யார் யாரிடமோ திட்டு வாங்கி , யார் யாருக்கோ தன்மானத்தை விட்டு சொம்பு  தூக்கி இப்படி நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடுபட்டு கொண்டிருக்கிறோம்... இவ்வளவு கஷ்டபட்டு சம்பாதித்தாலும் அதில் வரும் கணிசமான தொகையை நம் நாட்டிற்க்காய் வரி பணமாக கொடுக்கிறோம் .. வாங்கும் சம்பளம் தொடங்கி வண்டிக்கு போடும்  பெட்ரோல் வரைக்கும் நிறைய பணம் வரியாக   கட்டி கொண்டு இருக்கிறோம் .. எல்லாம் எதற்க்காக நம்மை போல நம் சமூதாயமும் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டுமே ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊருக்கு ரோடு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு மதியம் இலவசமாக சத்துணவு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் குடிநீர் வினியோகம் சிறப்பாக நடக்கும் .. இப்படி நமக்கான வசதி வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதானே வரி கட்டி கொண்டு இருக்கிறோம் ...


ஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா? ... நாம் இரவும் பகலும் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சில மொள்ளமாரி முடிச்சவிக்கி நாதாரி முண்டங்கள் அரசியல் , பதவி என்ற பெயரில் மொத்தமாக கொள்ளை அடித்து போகிறார்களே ... நாம் கட்டிய வரிப்பணம் முழுவதும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சொகுசு வாழ்க்கை வாழ பயன்பட போகிறதே ... இங்கே நாம் குண்டும் குழியுமான சாலையில் பயணித்து  சம்பாத்தித்த காசை வைத்து அந்த நாதாரி முண்டங்கள் சொந்தமாக சொகுசு வானூர்திகள் வாங்கி பயணம் செய்கிறார்களே ... சரி போகிறது இந்த பிணம் தின்னி கழுகுகள் அவர்கள் தின்றது போக மீதி இருக்கும் சொற்ப பணத்தையாவது ஒழுங்காக மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்களா?

அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பாருங்கள் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ , அவர்கள் நம்மிடம் இருக்கும் மீதி பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து லவட்டி கொண்டு போக நன்றாக பயன்படுகின்றன ... ஒரு சின்ன உதாரணம் , ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ... மேலோட்டமாக பார்த்தால் அது ஏழைகளுக்கான திட்டமாக தெரியும் , ஆனால் உண்மையில் அது பயன்படுவது கொழுத்த முதலாளிகளுக்கே ... அந்த ஒரு ரூபாய் அரிசியை மக்களை ஏமாற்றி கொஞ்சம் அதிக விலை கொடுத்து(மூன்று முதல் ஐந்து ரூபாய் ) வாங்கி , அதையே திரும்பி மக்களிடம் இன்னும் அதிக விலைக்கு விர்க்கிறார்கள் ... இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி அதையே கொஞ்சம் பாலிஷ் செய்து இருபது ரூபாய்க்கு விர்க்கிறான் ... பெரிய பெரிய ஹோட்டல் முதலாளிகளுக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி பெரிய வரபிரசாதம் ... இப்படி வெறும் ஒரு ரூபாய் செலவு பண்ணி நம் காசு பதினெட்டு ரூபாய்யை நம்மிடம் இருந்து பறித்து அவர்கள் தங்கள்  சொத்தில் சேர்த்து கொள்கிறார்கள் ... வரி பணம் கட்டுவதோடு இல்லாமல் இப்படி பொருட்களை நமக்கே தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்கி நம் காசை நாமே அவர்களுக்கு தூர்வாரி கொண்டு இருக்கிறோம் ...

இன்னொரு திட்டம் இருநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ... இந்த திட்டத்தில் பயன் பெரும் கிராம மக்கள் அனைவரும் மறைமுகமாக ஏதோ ஒரு முதலாளிக்குதான் அரசாங்கத்தின் செலவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .... எங்கள்  ஊரில் சமீபத்தில்  இப்படி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் சாலை பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் ... அந்த சாலை போடுவதர்க்கு அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனத்திர்க்கு டெண்டர் விட்டு இருந்தது ... அவன் செய்ய வேண்டிய வேலை ... வேலை செய்பவர்களுக்கு அவன்தான் காசு தர வேண்டும் ஆனால் அரசாங்கத்தின் செலவில் அதாவது நம் வரி பணத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் தந்து கொண்டு இருந்தார்கள் இந்த திட்டத்தின் மூலம் ... சரி அப்படியாவது அவனுக்கு டெண்டர் காசு கம்மியாகிறதா என்று பார்த்தால் அவன் இதற்க்கு முன்னர் எவ்வளவு சொல்லி இருந்தானோ அதே காசுதான் ... அதாவது இந்த கூலி தொழிலாளிகளுக்கும் அவனே சம்பளம் தருவதை போல கணக்கு காட்டுகிறார்கள் .. எல்லாம் யார் பணம் நீங்களும் நானும் கஷ்டபட்டு சம்பாதித்த காசு ... நம் காசில் நாம் போயி வர ரோடு போடுவதில் கூட ஏதோ ஒரு நாதாரி நம் காசை பிடுங்கி தின்கிறான் ...

இன்று செல்போனே பயன்படுத்தாத ஆளே கிடையாது .. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது செல்லில் பேசுகிறோம் ... லோக்கல் கால் என்றாள் அம்பது பைசா , STD என்றாள் ஒரு ரூபாய் .. வெளிநாடுகளுக்கு என்றாள் ஐந்து ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள் ... சரி இவர்களுக்கு அப்படி என்ன செலவு இருக்கிறது ... நாம் கொடுக்கும் வரிபணத்தில் அரசாங்கம் செயர்க்கை கோள் ஒன்றை செய்து விண்ணில் ஏவுகிறது ... அதில்  இங்கு இருக்கும் செல் கம்பனிகள் ஏலத்தில் அவர்களுக்கு தேவையான அலைவரிசையை வாங்கி கொள்கிறார்கள் ... அந்த ஏல தொகைதான் அவர்கள் போடும்  முதல்...  அதை தவிர்த்து ஊர் ஊருக்கு டவர் அமைத்தல் , அதை பராமரித்தல் என்று சில செலவுகள் உண்டு ... ஆனால் இது எல்லாம் இவர்கள் சம்பாதிக்கும் பணதிர்க்கு  முன்னாள் பிஸ்கோத்து காசு ...



அரசாங்கம் அந்த ஏலத்தை மட்டும் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் நேர்மையாக நடத்தி இருந்தால் இன்று லோக்கல் கட்டணம் வெறும் ஒரு பைசாவாக இருந்திருக்கும் , STD பத்து பைசாவில் பேசி இருக்கலாம் ... இன்று மாதம் ஆயிரம் ரூபாய் மொபைல் பில் கட்டும் ஒருவர் வெறும் நூறு ரூபாய்க்குள் முடித்து கொள்ளலாம் ... ஆனால் இவர்கள் அநியாய விலைக்கு ஏலம் விட , அதை எடுத்த முதலாளிகள் அந்த காசை நம்மிடம் கறந்து விடுகின்றனர் ..ஆக மொத்தம் அந்த செயற்கை கோள் தாயாரிக்கபட்டதும் நம் காசில் ... அது விண்ணில் ஏவபட்டதும் நம் காசில்...ஆனால் அதை பயன்படுத்த நாம் அநியாய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது ... அதை பயன்படுத்தி எவன் எவனோ சம்பாதிக்கிறான் ..

நீங்கள் ஒரு பசு மாட்டை  உங்கள் சொந்த பணத்தில் வாங்கி , அதர்க்கு நல்ல தீவனம் போட்டு வளர்க்கிறீர்கள் ... அந்த மாட்டில் பால் கரக்க ஒரு வேலை ஆளை நியமனம் செய்கிறீர்கள் .. அவன் உங்கள் மாட்டிலேயே பால் கறந்து உங்களிடமே அதை ஐந்து மடங்கு விலைக்கு விற்றால் என்ன செய்வீர்கள்?   போடா நாயே என்று அவனை அடித்து விரட்ட மாட்டீர்கள் .. நான் மேலே சொன்ன விஷயமும் கிட்டதட்ட இதே மாதிரிதான் ஆனால் இங்கே நாம் வெறுமனே கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் ...

நம்மை சொல்லி குற்றம் இல்லை .. முதலில் வீடு கட்டுவதில் ஊழல் என்றார்கள் , அந்த பிரசனை முடிவதற்க்குள் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்றார்கள் , சரி இதிலாவது ஏதாவது தண்டனை வாங்கி தருவார்கள் என்று நினைத்து முடிப்பதற்க்குள் காமென்வெல்த் போட்டிகளில் ஊழல் என்றார்கள் , அடுத்து அதை விட பெரிய அளவில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்து விட்டது ..


காய்ச்சல் அடிக்கிறது என்று ஊசி போட போனவனை டாக்டர் பரிசோதித்து விட்டு உனக்கு டைபாய்டு என்று சொல்ல , அதர்க்கு ட்ரீட்மெண்ட் எடுக்க அதை விட பெரிய டாக்டரிடம் போனால் அவர் பரிசோதித்து விட்டு உனக்கு கேன்சர் என்று சொல்ல , சரி என்று கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட் எடுக்க போயி அவர் தம்பி உனக்கு எய்ட்ஸ் என்று குண்டை தூக்கி போட்டால் அவன் சாகுறது சாக போறோம் இருக்குற வரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழுவோம் என்ற மனநிலைக்கு வந்து விடுவான் ... நம் அரசியல்வாதிகள் இன்று நம்மை இந்த மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் ...  ஊழலை சகித்து வாழ கற்று கொண்டு விட்டோம் நாம் ...

சரி இதற்க்கு தீர்வே கிடையாதா? என்றாள் கண்டிப்பாக இருக்கும் ... பெரிய பெரிய சர்வாதிகாரிகளையே மண்ணோடு மண்ணாக மக்கி போக செய்யும் வல்லமை படைத்தது காலம் ... இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ... ஆனால் அது ஒரே நாளில் நடந்து விடாது .. மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புரட்சி வெடிக்கும் , எல்லாமும் மாறும் ... புரட்சி ஒரு காட்டு தீயை போன்றது ... காட்டை சாம்பலாக்கும் தீயை போல ஒரு நாட்டையே மாற்றி போடும்  சக்தி அதர்க்கு உண்டு ..  அந்த காட்டு தீ தொடங்குவது ஒரு சின்ன பொறியில்தான் ... அதே போல் புரட்சியும் ஏதோ ஒரு சின்ன பொறியில்தான் தொடங்கும் ...நாம் காலகட்டத்தில் அந்த சின்ன பொறியையாவது இந்த சமூகத்தில் உண்டாக்குவோம் ... நம் சந்ததிகள் அதை அழிக்கும் அனலாக  மாற்றி காட்டுவார்கள்...

அவர்கள் காலத்திலாவது இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக இருக்கட்டும் ...       


Wednesday, December 8, 2010

பிரபலங்களின் பயோடேட்டா

குமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க  நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...

இது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும்  அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...

முதலில் அம்மா

பெயர் : அம்மா

புனை பெயர் : அதுவும் அம்மா

சமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது

நீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது


நண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்

எதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும் 

அடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்

நம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்

நம்பாதது : அன்னையை


விரும்புவது : மக்களின் மறதி

வெறுப்பது : மக்களின் பணத்தாசை

சமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்

நீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது

சமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்

நீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக  ஒட்டு 
போடுவது


அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்


பெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்

புனைபெயர் : ரஜினிகாந்த்

பிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்

பழையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்

புதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது  மேடைகளில்

நண்பர்கள் : இமயமலை ஞானிகள்

எதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்

ரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்

சமீபத்திய கடவுள் : பால்தாக்ரே

நீண்டகால கடவுள் : பாபா

பிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்

பிடிக்காதது :  கேள்வி கேட்கும் ரசிகன்

சமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்

நீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்  

சமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்

நீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...

சமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்

நீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்


அடுத்து நம்ம இளையதளபதி விஜய்


பெயர் : ஜோசப் விஜய்

பிடித்த பெயர் : இளையதளபதி

விரும்பும் பெயர் : முதல்வர் விஜய்

நண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே

எதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே

பிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்

பிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்

நம்புவது : நடிகைகளின் சதையை

நம்பாதது : இயக்குனரின் கதையை

பிடித்த விசயம் : ரீமேக் 

பிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது 

சமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது

நீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது

சமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது

நீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது

சமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது

நீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது

ஆக விரும்புவது : ரஜினியாக

ஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக

சமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது  

சமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது  

                                                                                                                   --- (தொடரும்)

Tuesday, November 2, 2010

சுறாவும் பாட்ஷாவும் பின்னே நானும்....







வருடம் 1996, பாட்சா என்ற மாபெரும் வெற்றி பெற்ற திரைபடத்தின் வெள்ளி விழா ... தமிழ் நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகிறார் ... வரிக்கு வரி அனல் பறக்கிறது , அன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதாவிர்க்கு சவால் விடும் பேச்சு அது ... காரணம் அந்த காலகட்டத்தில் தமிழகம் எங்கும் நடந்து  கொண்டு இருந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்... இவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பயப்படாமல் நேருக்கு நேராய் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார் .. அந்த பேச்சில் ஒரு உண்மை இருந்தது , தமிழ்நாட்டின் மேலும் தமிழ் மக்கள் மேலும் அவருக்கு இருந்த ஒரு அக்கறை தெரிந்தது , குறிப்பாய் சுயநலம் இல்லாத பொதுநலம் அந்த பேச்சில் தெரிந்தது ... அந்த பேச்சை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதில் ஒரு மாற்றம் ... அந்த மாற்றம் அடுத்த தேர்தலில் எதிரொலித்தது .. ஜெயலலிதா மக்களால் தோற்கடிக்கபட்டார் ... அதுவும் படுபயங்கரமான தோல்வி ... எப்படி  என்றால் அவரால் கூட  பர்கூர் தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை ... அவரின் இந்த அதல பாதாள வீழ்ச்சிக்கு ரஜினியின் அந்த பேச்சும்  மிக பெரிய காரணம் ... ஆனால் ரஜினி தனக்கு இருக்கும் இந்த மாஸை பயன்படுத்தி   அரசியலில் இறங்கி முதல்வர் பதிவியை பிடிக்க வேண்டும் என்று ஆசைபடவில்லை  .... அன்றய சூழ்நிலையில் அவர் நினைத்திருந்தாள் ஒரு கட்சி ஆரம்பித்து இன்றைக்கு தமிழக  அரசியலில்  ஒரு அசைக்க முடியாத சக்தியாக ஏன் தமிழகத்தை ஆளும் சக்தியாக கூட இருந்திருக்கலாம்.... ஆனால் சுயநலத்திர்க்காக அரசியலில் இறங்குபவர் இல்லை அவர் என்பதை  அழுத்தமாக் நிரூபித்தார் ....தன் சக்தியை கொண்டு வேறு ஒருவரை ஜெயிக்க வைத்தார் (பின்னாளில் அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்தது வேறு கதை... இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதால் அதை பற்றி எழுதவில்லை  )...   

ஆனால் இன்று ஒரு சில நடிகன்கள் அடிக்கிற கூத்துகளை பார்க்கும்  பொழுது கடவுள் ரஜினியை மட்டும் ஏன் அவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்தான் என்பது நமக்கு விளங்கும் .. அவர் அதை ஒரு போதும் தவறாக உபயோகிக்க மாட்டார் என்று தெரிந்துதான்  இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை அவர் பின்னாளில் வர வைத்தான் போல ...  அவருக்கு இருக்கும் புகழில் கால் தூசி கூட இல்லாத இருவரை  பற்றிய பதிவுதான் இது ...

முதலில் விஜயகாந்த் இன்று தமிழக அரசியலில் இருக்கும் ஒரு விஷ கிருமி... ரசிக படையை வைத்து சினிமாவில் சம்பாதிப்பதை விட அரசியலில் பல மடங்கு அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் என்று வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர் ....  தோட்டத்தில் இருக்கும் களை செடி  அவர் கட்சி ... தானும் வாளராது அடுத்தவனையும் வளர விடாது ...  கலைஞர்  காசு தருகிறார் என்பதற்காய் தனித்து நிர்க்கிறேன் என்று அம்மாவிர்க்கு விழும் ஓட்டுகளை பிரித்து கொண்டு இருக்கிறார் ... போன நாடாளுமன்ற தேர்தலிலேயே எந்திரன் பட்ஜெட்டை விட ரெண்டு மடங்கு  அதிகமான பணம் அவருக்கு கொடுக்கபட்டதாக பேச்சு... இந்த முறை ரெண்டு பெரிய தலைகளிடமும் மாறி மாறி பேரம் பேசி வருகிறாராம் ... யார் அதிகமாக கல்லாவை நிரப்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறாராம் ... அய்யா கொடுத்தால்  வழக்கம் போல தனித்து நிற்பது ... அம்மா கொடுத்தால் அவருடன் கூட்டணி என்பது முடிவாம் .. ஆக மொத்தம் மக்களுக்கோ  இல்லை அவரின் ரசிகர்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை, எல்லாம் டப்புக்காக மட்டும்தான் ...  ரஜினியின் மாஸில் கால்வாசிக்கூட இல்லாத இவரே இவ்வளவு சம்பாதிக்கும் பொழுது ரஜினி நினைத்தால் தமிழ்நாட்டையே எழுதி வாங்கலாம்,,,

இவர விடுங்க அடுத்தவர் ,,, தொடர்ந்து ஆறு அடிவாங்கின படங்களை கொடுத்து,,, அவர் ரசிகர்களே கண்டுகொள்ளாமல் இருக்கும் காவலன் என்னும் படத்தில் நடித்து கொண்டு ,,, கூடிய விரைவில் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேரும் அபாயம் நிறைந்த ஒரு ஜீவன்,,,, தளபதி என்று அவருக்கு அவரே பெயர் சூட்டி கொண்டு அந்த வார்த்தையவே அசிங்கபடுத்திய விஜய. காவலன் சூட்டிங்க்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காராம்.. “கோவையில் சிறு குழந்தையை கடத்தி கொன்றவர்கள் தண்டிக்கபட  வேண்டியவர்கள் ... தமிழகம் முழுவதும்  இப்படிப்பட்ட செயல்கள் நடந்து கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது...தமிழகம் இப்பொழுது எங்கே சென்று  கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை அப்படின்னு ரொம்ப அக்கறையா ஒரு பேட்டி .... தமிழ்நாட்டு மேல யாரு அக்கறைபடுராங்கண்ணு பாத்தீங்களா? ஆரம்ப காலத்தில எப்படியாவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட நடிப்பு வராத தானும் சின்னதா ஒரு இடத்த பிடிச்சிரனும்னு சங்கவியையும், சுவாதியையும் வச்சி பலான படமா தன்னோட அப்பாவ வச்சி எடுத்து டெவளப் ஆன ஒரு நடிகன்.. இவ்வளவு கஷ்டபட்டு மாமியார் முதுகுக்கு  சோப்பெல்லாம் போட்டு அவர் நடிகனா டெவளப் ஆனது எதுக்கு பின்னால கட்சி ஆரம்பிச்சி மக்களுக்கு நல்லது செய்யவா? இல்ல தமிழ் சினிமாவை ஆஸ்கார்  உயரத்திர்க்கு  கொண்டு போகவா? டப்புக்காக மட்டும்தான்... சினிமா ஒரு தொழில் அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்து சம்பாதிக்கலாம் ... ஆனால் அடுத்த கட்டமாக கட்சி என்று அவர்கள் இறங்கும் பொழுதுதான்  நம் அடிமனதில் கோபம் கரை புரண்டு ஓடுகிறது... நாட்டுல எவ்வளவோ நல்லவனுக எல்லாம் அமைதியா இருக்கும் போது , இவரு ஏன் இப்படி தமிழ் நாட்டு மக்களை நினைத்து நீலி கண்ணீர் விடுகிறார் என்று தெரியவில்லை? இவர் கொடுத்த இந்த பேட்டியை பாத்தா ஒரு சின்ன கொழந்தகூட சரியா சொல்லிடும் எலி அம்மணமா ஆடுறது  விஜயகாந்த் மாதிரி அரசியலில் இறங்கி காசு பார்க்கத்தான் என்று .... நல்ல வேலை இன்றய இளைங்கர்கள் கொஞ்சம் உஷார் ... அதனாலத்தான் எஸ்எம்எஸ் . இ – மெயில் என்று இவரை கிழி கிழி என்று கிழித்து இவர ஒரு காமெடி பீஷா மாத்திட்டாணுக்க... ஆனால் இன்னமும் மனசுக்குள் தன்னை ஒரு ரஜினியாக நினைத்து கொண்டு இவர் பண்ணுகிற கூத்துகளை பார்க்கும் பொழுது ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடுப்பாக இருக்கிறது .. ரஜினி பேசுவதர்க்கு ஒரு மதிப்பு இங்கு மக்கள் தருகிறார்கள் என்றால் காரணம் அதில் எப்பொழுதும் சுயநலம் இருக்காது , அப்படிப்பட்ட அவரே ஒரு முறை ராமதாஸை பழி தீர்க்க ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்டு மூக்குடைபட்டார்... ஆனால் தன் ஒவ்வொரு செயலிலும் சுயநலமாகவே செயல்படும் விஜய் இன்னமும் இப்படி உதார் விட்டு கொண்டு இருப்பது பார்பதர்க்கு காமெடியாக இருக்கிறது...

யார் இதை எல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்... அவரும் அவர் அப்பாவும் வேண்டுமானால் இவரின் இந்த பேட்டியை பெரிய விஷயமாக நினைக்கலாம் .. மற்றபடி யாரும் இவரின் இது போன்ற செயல்களை பெரியதாய் எடுத்து கொள்ளுவதே இல்லை .. இதை எழுதும் என்னை போன்ற ஒன்றிரண்டு பேரும் அவரை நக்கல் அடித்துதான் எழுதுகிறார்கள்..  மக்கள் ஒண்ணும் ஏமாளிகள் இல்லை ... இப்படி அதிகமா ஆசபட்டு பின்னாடி ஆப்பு வாங்குறதுக்கு பதிலா   போயி உருப்படியா நல்ல கதையா செலக்ட் பண்ணி நடிங்க ... அதிலயாவது நாலு காசு பாக்குறீங்க அதிகமா ஆசபட்டு இதையும் விட்டுடாதீங்க....

(, படிப்பு , சமூக தொண்டு இப்படி எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவின் மூலம் ஏமாற்றி மக்கள் மனதில் புகுந்து பஞ்ச் டயலாக் பேசி அது மூலமா ஒரு கூட்டம் தனக்கு பின்னாடி வந்தவுடனே பெரிய அப்பாடக்கரை போல (நன்றி சந்தானம் )  வாய்க்கு வந்தபடி பேசும் இவரை போன்ற நடிகர்களை பார்க்கும் பொழுது எனக்கு எப்பவும் ஒரு காண்டு வரும் .. இன்று தினமலரில் இவரின் இந்த பேட்டியை பார்த்த பொழுதும பயங்கர கோபம் வந்தது அதனால் தான் இந்த பதிவு) 

Thursday, May 27, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

இன்னைக்கு நாட்டுல நடக்கிற,, நடந்து முடிஞ்ச சில விசயங்கள பாக்குறப்ப எனக்கு இந்த வசனம் ஞாபகம் வருது... "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" ,, என்னோட சந்தேகங்களை எல்லாம் நான் சொல்லுறேன் ... பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க



1. நான் கைவிட்டு விட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் , பிரபுதேவா உருக்கம்


எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நயன்தாரா அவ்வளவு நல்லவரா? இல்ல அவர இந்த அளவுக்கு நம்புற பிரபுதேவா ஒரு அரலூசா? பல பேரு கைவிட்டுதான் கடைசில இவரு கையில வந்து விழுந்துச்சி அந்த பீசு... இவரு விட்டா பிடிக்க இன்னொரு மடையன் மாட்டாமலா போய்டுவான்?..



2. கட்சியில் இருந்து ஒரு உருப்பினரைகூட இழக்க விருப்பம் இல்லை , ஜெயலலிதா கண்ணீர்



அம்மாவுக்கு எல்லாம் கைமீறி போன பின்னாடிதான் கட்சின்னு ஒன்னு இருக்கிறதே ஞாபகம் வருது ... எனக்கு என்னா சந்தேகம்னா,, யாரையும் இழக்க விரும்பவில்லை என்று அன்று திருநாவுக்கரசு ஆரம்பித்து சாத்தூர் ராமச்சந்திரன், மாதவன், அரங்கநாயகம், ராஜாராம், ராம. வீரப்பன், கருப்பசாமி பாண்டியன், செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் என சத்தியமூர்த்தி வரை(நான் குறிப்பட்டது சிலர் மட்டுமே, ஆனால் இந்த பட்டியலில் ஆயிரத்துக்கு அதிகமானோர் உள்ளனர்) எல்லாரையும் இழந்துவிட்டீர்களே... இனியும் கட்சிய விட்டு வெளிய போக அங்க ஆளு இருக்கா ? உங்களையும் உங்க உடன்பிறவா சகோதரியையும் தவிர...



3. விஜய் படங்கள் வசூல் வரவில்லை , திரை அரங்க உரிமையாளர்கள் பலத்த நட்டத்தை சந்தித்து உள்ளனர் ... நட்டத்தை சரிகட்டாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட்-- திரை அரங்க உரிமையாளர்கள் சங்கம் மிரட்டல்



ஏனுங்கண்ணா விசை ... படத்துல மட்டும்தான் சூப்பர் ஸ்டார காப்பி அடிப்பீன்களான்னா? அவர மாதிரியே பஞ்ச் அடிக்கிறீங்க .. அரசியலுக்கு வர போறேன்னு உங்க அடிபொடிகள உசுப்பி விடுறீங்க... சம்பாதிச்ச காசுல கல்யாண மண்டபமா கட்டுறீங்க... நிஜ வாழகையில அவருக்கு இருக்கிற நேர்மைய follow பண்ண  மாட்டேங்கிறீங்க? ஒரு வார்தைக்காகவது காச திருப்பி தரேன்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே ... அத விடுங்க அடுத்த படத்துல உங்க நஷ்டத்த ஈடுகட்டிருவேன்னு வாய் சவாடலாவது விடலாம்ல... ஏனுங்கண்ணா உங்க படம் மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா?


அப்புறம் அவரோட ரசிக கண்மணிகளுக்கு .. வசூல் சக்கரவர்த்தி ... அடுத்த ரஜினி , எங்க தளபதியால யாருமே நட்ட பட்டதில்ல அப்படி இப்படின்னு கைக்கு வந்ததெல்லாம் பதிவுல எழுதிகிட்டு இருந்தீங்களே ... இப்ப இப்படி ஆகி போச்சே? சொல்ல வேண்டியவங்களே உங்க தளபதியோட வசூல் வரலாற கிழிச்சி தொங்க விட்டாங்க.. இனிமே எப்படி உங்க பதிவுகளுள அவர பத்தி சப்ப கட்டு கட்டுவீங்க? ? இனிமேலாவது உண்மைய ஒத்துக்குவீங்களா இல்ல ஆப்ரிக்காவில் சுறா வசூல் சாதனை... நெல்சன் மண்டேலா விஜயின் செல்வாக்கை பார்த்து நடுக்கம் , அப்படின்னு ஏதாவது பதிவு போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடுவீங்களா உங்க காமெடிய?



4. மங்களூரு விமான விபத்துக்கு காரணம் இன்னும் தெரியவில்லை , கருப்பு பெட்டியை ஆராய்ந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும்



என்ன காரணமா இந்த விபத்து நிகழ்ந்து இருந்தாலும் போன உயிர்கள் திரும்ப வராது... அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது ... எனக்கு என்ன சந்தேகம்னா அந்த காரணத்தையாவது சரியா விசாரிச்சி கண்டுபிடிச்சி , மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணி இனிமேல் இந்த மாதிரி விபத்து நடைபெறாமல் தடுப்பீர்களா? இல்லை விமானிதான் இறந்துட்டாரே , அவர் மேலே பழிய தூக்கி போட்டுட்டுவோம்னு , விமானியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என்று விசாரணையை இழுத்து மூடி விடுவீர்களா? ( உலகில் விமானி இறந்த எந்த விமான விபத்துக்கும், விமானியின் கவன குறைவே காரணமாக இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி)



எனக்கு இன்னொரு கேணத்தனமான சந்தேகமும் வருது .. எவவளவு பெரிய விபத்து நடந்தாலும் விமானத்தோட கருப்பு பெட்டி மட்டும் அழியாதாம்.. கூட கொஞ்சம் செலவு பண்ணி மொத்த விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி மாதிரியே தயாரிச்சா உயிரிழப்புகள் குறைய வாய்ப்புகள் வருமா? ( சுறா படம் பாத்ததில இருந்து  எனக்கு ஏன் இப்படிலாம் யோசனை வருது? )


பிடிச்சிருந்தா வோட்டு போடுங்க ...

LinkWithin

Related Posts with Thumbnails