Followers

Copyright

QRCode
Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Monday, April 18, 2011

தேர்தல் ஆணையமும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் .....

ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது .... தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் அனைத்தும் தலையில் தூக்கி வைத்து கொண்டுடாடுகின்றன ... ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் ... பாம்பு வேட்டைக்கு போயி தவக்களைய பிடித்து வந்தது போல எல்லாத்தையும் ஒழுங்கா பண்ணிய கமிஷன் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியவில்லை .. எங்கள் ஊரில் தெனாவட்டாக தேர்தலுக்கு முந்தின நாள் இரவு மின்சாரத்தை நிறுத்தி விட்டு வீடு வீடாக சென்று பணம் கொடுத்தார்கள் ... தேர்தல் நடக்க இருந்த பூத் இருந்த தெருவில்  இந்த கமிஷன் நியமித்த போலீஸ்காரர்கள் கண் முன்னாலயே பணம் விநியோகம் செய்யபட்டது ... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை .... அதற்க்கு முந்தின நாள் இரவு வேறு ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இதே போல மின்சாரத்தை நிறுத்தி விட்டு பணம் பட்டுவாடா செய்தனர் ...அவர்கள் அதோடு நிறுத்து இருந்தால் பரவாயில்லை ... தேர்தல் முடிந்ததும் ஒருவாரதிர்க்குள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் மிக்ஸி ஒன்று தரப்படும் என்று வீடு வீடாக சென்று வாக்குறுதி கொடுத்து சென்றனர் .. இதை கேள்விபட்ட இன்னொரு கட்சியை சேர்ந்த கும்பல் அடுத்த நாள் வீடு வீடாக சென்று அவர்கள் மிக்ஸி கொடுப்பதற்க்கு முன்னரே உங்கள் வீட்டில் கிரைண்டர் இறக்கி வைக்கப்படும் என்று எதிர்வாக்கு கொடுத்து சென்றனர் ...


இவர்கள் சொன்னதையும் நம்பி தேர்தல் முடிந்த நாளில் இருந்து இன்று வரை இரவு எங்கள் ஊரில் மின்சாரம் எப்பொழுதாவது தடைபட்டால் மக்கள் கதவை திறந்து வைத்து கொண்டு மிக்ஸிக்கும் கிரைண்டருக்கும் காத்து கிடக்கிறார்கள்....  இதை பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கொள்ளை கும்பல் ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் தங்கள் கைவரிசையை காட்டி சென்றது .... மக்கள் எப்பொழுதுதான் திருந்தபோகிறார்களோ?  


(இவர்கள் மிக்சி கிரைண்டர் , கட்டில் மெத்தை , வாஷிங் மெசின் என்று கொடுப்பதை விட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு UPS INVERTOR வாங்கி கொடுத்தால் வெற்றி நிச்சயம்.... இப்ப எல்லாம் கரண்ட பாக்குறதுதான் கடவுள பாக்குற மாதிரி இருக்கு )


ரஜினி நின்னா மாஸ் , நடந்த மாஸ் , உக்காந்தா மாஸ் , படுத்தா மாஸ் , சாயா குடிச்சா மாஸ் , கக்கூஸ் போனா மாஸ் , இப்ப ஓட்டு போட்டாலும் மாஸ் .... அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை தெளிவாய் படம் பிடித்து காட்டி விட்டார்கள் .... மீடியாகாரர்கள் செய்தது பெரும் தவறுதான் என்றாலும் இதில் ரஜினிக்கும் , தேர்தல் கமிசனுக்கும் பங்கு இருக்கிறது ... கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரஜினியும் கமலும் கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்தனர் அல்லது இருக்க வைக்கபட்டனர் ... ஆனாலும் உள்ளுக்குள் இரண்டு பேருமே அவர் மேல் வெறுப்பில்தான் இருந்தனர் என்பது அனைவரின் கணிப்பு ... எனவே இந்த தேர்தலில் அவர்கள் ஓட்டு யாருக்கு என்பதை அறிய மக்கள்  ஆர்வமாக இருந்தனர்... கமல் எப்பொழுதும் போல அமைதியாகவே இருந்து விட்டார் ... ரஜினியும் தன்னை சந்தித்த எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும்  வாழ்த்து சொல்லி விட்டு நடுநிலையுடன்தான் இருந்தார் தேர்தல் நடக்கும் நாள் வரைக்கும் ... ஆனால் தேர்தல் அன்று அவருக்கு சனி உச்சத்தில் இருந்திருக்கிறது .... கேமராவை தன் தலைக்கு மேலே ஒருத்தன் தூக்கி பிடித்திருக்கும் போது பட்டனை அழுத்தி விட்டார் , அது கேமராவில் பதிவாகி விட்டது ... கமலை போல இவரும் அவர்கள் வெளியேறும் வரைக்கும் கையை கட்டி கொண்டு சும்மா இருந்திருக்கலாம் ,  செய்யாததால் பாவம் இன்று கேலிக்குரிய விஷயமாக ஆகிவிட்டது இது ....


 
அதன் பின்னர் ஒரு ஆங்கில தொலைகாட்சி நிருபரை தனியாக அவர் வீட்டுக்கு அழைத்து ஆளுங்கட்சியை மறைமுகமாக எதிர்த்து ஒரு பேட்டி கொடுத்தார் ...  1996 இல் இந்த அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் ஆட்சியில் இருக்கும் போதே அறிக்கை விட்ட ரஜினியா இது? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது ... அன்று அம்மாவை தைரியமாக எதிர்த்த ரஜினியால் இன்று அய்யாவை அப்படி எதிர்க்க முடியாமல் போக காரணம் என்ன? அம்மா என்றால்  ஜெயித்தாலும் அதன் பின்னர் இவரை கண்டு கொள்ளவே மாட்டார் ,. ஆனால் அய்யா அப்படி இல்லையே , கல்யாண மண்டபம் இடிந்து விழும் , கர்நாடகாவில் இருக்கும் நிலங்கள் ஆக்கிரமிக்கபடும் , படம் எடுத்து அதை வெளியிட முடியாமல் அல்லாட வேண்டி இருக்கும் .... இப்படி பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும் அதனால்தான் அய்யாவை தைரியமாக எதிர்க்க பயப்படுகிறார் .... உண்மையிலேயே மக்கள் மேல் தமிழகத்தின் மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் 1996 இல் வெளிப்படையாக ஆளுங்கட்சியை எதிர்த்தது போல இப்பொழுது எதிர்திருக்கலாம் ரௌடிகளின் வன்முறை தேர்தலில் ஜெயிக்க பணம் என்று தமிழகம் அப்பொழுதை விட இப்பொழுது ரொம்ப கேவலமான நிலையிலேயே இருக்கிறது .... அன்று ஒரு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போல கம்பீரமாக தெரிந்த ரஜினி இன்று பயணங்கள் பிரித்திவிராஜ்  போல பரிதாபமாக தெரிகிறார் ... 

இந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ பரவாயில்லை .... அவர் 1996 ரஜினியை போல சிங்கமாக கர்ஜனை செய்யவில்லை என்றாலும் செம்பரி ஆட்டை போல மே மே என்றாவது (சுயநலத்திர்க்காகவாது )ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து விட்டார் ... ஆனால் பாவம் கருணாநிதி திரும்பவும் ஜெயித்து வந்து விட்டால் இந்த ஆடு கோபாலபுரத்தில் பிரியாணி ஆகுமா இல்லை மட்டன்  சுக்காவாகுமா தெரியவில்லை....  


 
ரஜினி ரசிகர்கள் சொல்லுவதை போல அவர் ஒரு நடிகர் அவரை அவர் தொழிலை நிம்மதியாக செய்ய விடுங்கள் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .. அவர் அவருடைய  தொழிலை மட்டும் பார்த்து கொண்டு இருந்திருந்தால் அவரை பற்றி இப்படியான விமர்சனங்கள் வந்தே இருக்காதே .... தெரிந்தோ தெரியாமலோ ரஜினி இந்த அரசியல் சாக்கடைக்குள் கால் வைத்து விட்டார் .... அந்த சாக்கடை கண்டிப்பாக அவரை அவரே விரும்பாவிட்டாலும் உள்ளே இழுத்து விடத்தான் செய்யும் ....

(தலைவா ஒண்ணு முழுசா அரசியலுக்குள் எறங்கி ஒரு கை பாருங்க , இல்லையா மொத்தமா அத விட்டு வெளிய வந்து உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க .. அதை விட்டு இப்படி அரைகுறையா எதையும் பண்ணி உங்களை நீங்களே அசிங்கபடுத்தி கொள்ளாதீர்கள் ... )

Monday, April 4, 2011

கப்பு எனக்கு ஆப்பு உனக்கு - பைனல் போட்டோ கமெண்ட்ஸ்












(சச்சின் அவுட் ஆனதும் ரஜினியின் முகபாவனை)




















என்னை பொறுத்தவரை இந்த உலககோப்பையில் இந்தியாவின் டாப் 5 ஆட்டக்காரர்கள் அதே வரிசையில்

1. ஜாகீர் கான் 
2. கௌதம் கம்பீர் 
3. யுவ்ராஜ் சிங்
4. சச்சின் டெண்டுல்கர்
5. மற்ற அனைவரும்






எங்கள் கனவை நனவாக்கிய உங்கள் அனைவருக்கும் ஒரு ரசிகனாக எங்கள் நன்றிகளும் வாழ்துக்களும்.... 





Wednesday, December 8, 2010

பிரபலங்களின் பயோடேட்டா

குமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க  நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...

இது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும்  அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...

முதலில் அம்மா

பெயர் : அம்மா

புனை பெயர் : அதுவும் அம்மா

சமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது

நீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது


நண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்

எதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும் 

அடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்

நம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்

நம்பாதது : அன்னையை


விரும்புவது : மக்களின் மறதி

வெறுப்பது : மக்களின் பணத்தாசை

சமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்

நீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது

சமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்

நீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக  ஒட்டு 
போடுவது


அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்


பெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்

புனைபெயர் : ரஜினிகாந்த்

பிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்

பழையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்

புதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது  மேடைகளில்

நண்பர்கள் : இமயமலை ஞானிகள்

எதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்

ரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்

சமீபத்திய கடவுள் : பால்தாக்ரே

நீண்டகால கடவுள் : பாபா

பிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்

பிடிக்காதது :  கேள்வி கேட்கும் ரசிகன்

சமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்

நீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்  

சமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்

நீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...

சமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்

நீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்


அடுத்து நம்ம இளையதளபதி விஜய்


பெயர் : ஜோசப் விஜய்

பிடித்த பெயர் : இளையதளபதி

விரும்பும் பெயர் : முதல்வர் விஜய்

நண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே

எதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே

பிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்

பிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்

நம்புவது : நடிகைகளின் சதையை

நம்பாதது : இயக்குனரின் கதையை

பிடித்த விசயம் : ரீமேக் 

பிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது 

சமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது

நீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது

சமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது

நீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது

சமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது

நீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது

ஆக விரும்புவது : ரஜினியாக

ஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக

சமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது  

சமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது  

                                                                                                                   --- (தொடரும்)

Sunday, November 28, 2010

16 வயதினிலே முதல் ரஜினி படங்களும் நானும்


நண்பர் பாலா இந்த தொடர்பதிவிர்க்கு என்னை அழைத்திருந்தார் ... ஏற்கனவே ஒரு பதிவில் ரஜினியை பற்றி நான் எழுதியதில் எனக்கும் அவருக்கும் பின்னூட்டத்தில் பெரிய கருத்து யுத்தமே நடந்திருந்தது ...அவர் ரஜினிக்கு ஆதரவாய் நான் எதிரியாய் ... ஆனால் சண்டை ரஜினியின் படங்களை பற்றி இல்லை நிஜ ரஜினியின் சில சறுக்கல்களை பற்றி ... ஆனால் ரஜினியின் படங்கள் எனக்கு பிடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்ததினால் என்னை இப்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .. அவர் புரிதலுக்கு நன்றி ...

தான் நடிக்கும் எல்லா படங்களையும் மக்களுக்கு பிடிக்கும் படி நடிக்க முடியுமா ... இல்லை குறைந்தபட்சம் வெகுஜன மக்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவரின் ரசிகர்களையாவது வெறித்தனமாக ரசிக்க வைக்கும் படங்களை தர முடியுமா? முடியும் ரஜினியால் மட்டுமே ... காரணம் கதையில் அவர் காட்டும் அக்கறை ,அதைவிட பெரிய காரணம் வில்லன் கதாபாத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை படத்தில் தன கதாபாத்திரத்துக்கு இணையாக இடம் கொடுப்பது ... பாட்சா ரகுவரன் , படையப்பா ரம்யா கிருஷ்ணன் , சந்திரமுகி ஜோதிகா , தில்லு முள்ளு தேங்காய் சீனிவாசன் ஏன் இப்ப வந்த என்திரனில் ரஜினியே வில்லனாய் இப்படி அவரின் மிக பெரிய வெற்றி படங்களை எடுத்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாய் புரியும் ... சிங்கம் சிங்கத்தோடு மோதினால்தான் சுவாரஷ்யம் , சிங்கம் பூனைகுட்டிகளோடு மோதினால் அது நகைசுவை என்பதை தெளிவாய் புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி ... இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் சறுக்குவது இதில்தான் ...

start music

 பதினாறு வயதினிலே


ரஜினி வில்லனாக பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்... அந்த பத்த வச்சிட்டெயே பரட்ட , இது எப்படி இருக்கு வசனங்கள் இப்பொழுதும் பிரபலமான வசனங்கள்...


 தாய் மீது சத்தியம்

1978ல் வெளிவந்த கௌபாய் டைப் தமிழ் படம்... பழிவாங்கும் கதைதான் ஆனால் சுவாரஷ்யாமாக கொடுத்திருப்பார்கள்.. ரஜினி துப்பாக்கியை கையில் வைத்து சுத்தும் ஸ்டைல் இப்ப பார்த்தாலும் பிரபிப்பாய் இருக்கும்....

 பில்லா

ரஜினி நடித்ததிலேயே ரொம்பவும் electrifying ஆன படம் இதுதான் ... ரஜினி இதன் பின்னர் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் .... இதில் பெண்மை கலந்த ஒரு ஆண் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்... மை நேம் இஸ் பில்லா பாடல் இப்பவும் கேட்டால் நரம்பில் மின்சாரம் பாயும் உணர்வை கொடுக்கும் ...

 நெற்றிக்கண்

ரஜினி வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த இன்னொரு படம் ... எக்ஸ்ரே கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சரிதாவை பார்க்கும்போது ரஜினி காட்டும் முகபாவனைகள் அவரால் மட்டுமே முடியும் .... அதில் வரும் மாப்பிளைக்கு மாமன் மனசு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

 வேலைக்காரன்

ரஜினி இயல்பான நகைசுவையால் பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ... பின்னாளில் வந்த பல ரஜினி படங்களுக்கு முன்னோட்டமாய் இருந்த படம் .. இதே கதையில் ரஜினி பல வருடங்களுக்கு பின்னால் முத்து என்ற படம் எடுத்தார் ,, அதுவும் சூப்பர் ஹிட் ... இந்த அதிசயம் ரஜினியாள் மட்டுமே சாத்தியம் ...


 அண்ணாமலை

தமிழ் சினிமாவின் மைல்கல் என்று பல படங்களை கூறலாம் ... அதில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் இடம்பெற்று இருக்கும் என்றால் அது இந்த படம் மட்டுமே... ரஜினிக்கு என்று ஒரு திரைக்கதையை உருவாக்கிய படம் இது... ஒரே பாட்டில் பணக்காரனாவது , பன்ச் வசனங்கள் பேசுவது போன்ற தமிழ் சினிமாவை கெடுத்த ஆனால் ஹீரோகளை வாழ வைத்த பல விசயங்கள் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யபட்டன ... ரஜினி தொடையை தட்டி சவால் விடும் காட்சி அப்பொழுது பெரிய ஹிட் ...

 பாட்ஷா

நான் மேலே சொன்ன படங்கள் எதையும் நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை ... நான் முதல் முதல் தியேட்டரில் சென்று பார்த்த ரஜினி படம் பணக்காரன் .. அதன் பிறகு நான் பார்த்த படம் இது ... பரபர திரைக்கதையால் படத்தை வேகமாக கொண்டு சென்று இருப்பார்கள் .. மாணிக்கமாக வரும் ரஜினி வில்லனிடம் (ஆனந்தராஜ்) கரண்ட் கம்பத்தில் அடிவாங்கும் போது நான் அழுதே விட்டேன் ..பின்னர் ரஜினி அவனை அதே கம்பத்தில் கட்டி அடிக்கும் போது ஏதோ நானே அவனை கட்டி அடித்ததை போல என்னுள் அப்படி ஒரு வெறி ... அதை படத்தின் கடைசி வரை மெயிண்டேயின் பண்ணி இருப்பார்கள் .. வீட்டில் அழுது அடம்பிடித்து அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நான் பார்த்த படம் ...

 படையப்பா

நான் தனியாக சென்று தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் ... எனக்கு மிகவும் பிடித்த ரஜினியின் படமும் இதுதான் .. கே.எஸ் .ரவிக்குமார் இயக்கம் அப்படி .. மனிதர் ரஜினியை வைத்து சும்மா விளையாடி இருப்பார்... அந்த ஊஞ்சல் ஸீன் ரஜினியின் ஆல் டைம் பெஸ்ட் மாஸ் ... வயதான ரஜினியை அதிக நேரம் படத்தில் காட்டி இருப்பார் ... ஆனால் அது ஒரு குறையாகவே தெரியாமல் எடுக்க கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும் .... இந்த படத்தில்தான் முதல் முறையாக வில்லனே ஹீரோவை புகழ்ந்து பேசுவதை போன்ற வசனங்கள் இடம் பெற்றது ...(வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உண்ண விட்டு போகவே இல்லை) இன்று நம் டாக்குடர் படங்களில் இப்படிப்பட்ட வசனங்கள் வந்து நம் உயிரை வாங்குவது தனி சோக கதை ...

 சந்திரமுகி

நான் மேலே சொன்ன படங்கள் எல்லாம் சினிமா பற்றிய என்னுடய புரிதல் எனக்குள் வருவதர்க்கு முன்னரே நான் ரசித்த படங்கள் ... ஆனால் அந்த புரிதல் வந்த பின்னர் நான் கண்டு ரசித்த ஒரே ரஜினி படம் இந்த சந்திரமுகி... முதல் பாதி காமெடி மற்றும் காதல் இரண்டாம் பாதி கொஞ்சம் குணச்சித்திரம் கடைசியில் வில்லதனம் என்று ரஜினி கலவையாக நடித்த படம் ... இதற்க்கு முன்னர் ஒரே ஒரு ஹிட் கொடுத்த (கில்லி ) டாக்குடரே அப்பொழுது ஒரு படத்தில் முழுக்க முழுக்க தன் புகழ் பாடிக்கொண்டு இருந்த பொழுது(சச்சின் ), நூறு ஹிட்டுகளை வரிசையாக கொடுத்து இந்த படத்தில் அடக்கியே வாசித்தார் சூப்பர் ஸ்டார்... ஜோதிகாவின் நடிப்பும் இந்த படத்திற்க்கு பெரிய பலம்.. இந்த படத்தில் வந்த மறக்க முடியாத ஒரு வசனம் “என்ன கொடும சரவணன் இது” .. சத்தியமாய் இந்த வசனம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று அதை பேசும் போது பிரபு கண்டிப்பாய் நினைத்திருக்க மாட்டார்... 



இந்த பதிவை ஏற்கனவே பதிவுலகில் அனைவரும் அடித்து துவைத்து காயபோட்டுவிட்டபடியால் நான் அழைப்பது 

“குண்டு” ராஜகோபால் மற்றும் “சுடுசோறு” ம.தி. சுதா.... 



LinkWithin

Related Posts with Thumbnails