Followers

Copyright

QRCode

Saturday, July 31, 2010

தல., தளபதி அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்......

நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் ... சூப்பர் ஸ்டார் பேசுன வசனம் , அவருக்கு அப்புறம் இந்த வசனம் சரியா பொருந்தும்னா அது தல அஜித்துக்கு மட்டும்தான் ... சில பேரு வரிசையா நாலு படம் ஹிட் ஆனா பரபரப்பா பேசபடுவார்கள் , சில பேரு படத்துல ஏதாவது வித்தியாசமா பண்ணி பரபரப்பை உருவாக்குவாங்க , சில பேரு சன் டிவி புண்ணியத்துல அடிக்கடி பேட்டி கொடுத்தோ இல்ல ஏதாவது விளம்பரம் தேடிகிட்டோ பரபரப்பை உண்டு பண்ணுவார்கள் ,  ஆனா தமிழ் சினிமால ரெண்டே ரெண்டு பேருதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த படத்த பத்தின பரபரப்ப உண்டு பண்ணிருவாங்க ... அதுவும் அவங்களா உண்டு பண்ண மாட்டாங்க அதுவா பிரபலம் ஆகிரும் ... அதுல முதலாமவர் நம்ம சூப்பர் ஸ்டார் , அவர் எது பண்ணுனாலும் பரபரப்புதான் .. இங்க மட்டும் இல்ல ஜப்பானே பரபரப்பாகும் அவர் பட வேலைகளை ஆரம்பிச்சா ... அவருக்கு அடுத்து நம்ம தலைதான் ... 


அவர் சாதாரணமா ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பல வதந்திகள் அந்த படத்த பத்தி கெளம்பும் ... இப்ப அவர் பண்ண போறது அவரோட அம்பதாவது படம் ... சும்மா விடுவாங்களா , அவருக்கே தெரியாத பல விசயங்கள இவங்க இஸ்டத்துக்கு கிளப்பி விட்டார்கள் ... தயாநிதி அழகிரி அவரோட அம்பதாவது படத்த தயாரிக்க போறாருன்னு சொன்ன வுடனே ஆரம்பிச்சிடுச்சி இந்த மங்காத்தா ஆட்டம் , பல இயக்குனர்கள் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு போய் விட்டார்கள் ..... கௌதம் மேனன் ஒரு போலீஸ் கதையோட தயாரா இருந்தாரு ஆனா தல அப்ப ரேஸ்ல பிசி .... படம் தள்ளி போச்சி ... உடனே கௌதம் மேனனுக்கும் அஜித்துக்கும் மனகசப்பு கௌதம் அஜித் படத்திலிருந்து விலகி விட்டாருன்னு ஒரு வதந்தி .... ஆனா கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்... அஜித் எப்ப வராரோ அப்பத்தான் படம் ஆரம்பிக்கணும்னு தயாநிதி உறுதியா சொல்ல , இடைப்பட்ட நாட்களை வீணாக்க விரும்பாமல் கௌதம் நடுநிசி நாய்கள் படத்த ஆரம்பிக்க போய் விட்டார் , அவரின் கணக்கு அஜித் படம் ஆரம்பிக்க அக்டோபர் மாதம் ஆகும் அதற்குள்ளாக இந்த படத்தை இயக்கி முடித்து விடலாம் என்பதே .. ஆனால் அஜித்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது , அவர் ரேசை முடித்து விட்டு ஜூலை மாதமே வந்து விட , படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை .... கௌதம் கால்ஷீட் அக்டோபர் மாதமே இருக்க , அவரால் அஜித்தின் அம்பதாவது படத்தை இயக்க முடியவில்லை ... ஆனால் தயாநிதி இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை
அஜித்தின் அம்பத்தி ஒன்றாவது படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம் .. அந்த படம் டிசம்பர் ,மாதம் ஆரம்பிக்கும் இதே கூட்டணியுடன் ...


அம்பதாவது படம் கௌதம் இல்லை என்று முடிவானவுடன் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க தயாநிதி முடிவு செய்தார் , அவரின் மனதில் இருந்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் .. ஆனால் அவரின் வாய்கொழுப்பு அவருக்கு இந்த அருமையான வாய்ப்பை கைநழுவி போக செய்தது ... இந்த நிலைமையில் அஜித்தின் மனதில் தோன்றியவர்தான் அவரின் சினிமா உலக ரசிகரும் அவரின் நண்பருமான வெங்கட் பிரபு ,,, அஜித்திற்கு என்று ஒரு ராசி உண்டு அவர் சினிமாவில் கொஞ்சம் சறுக்கிய பொழுதெல்லாம் அவரி மீண்டும் வெற்றி படி ஏற்றியவர்கள் அவரின் நண்பர்களே(அகத்தியன் ,சரண் , S.J.சூரியா , K.S.ரவிக்குமார் ) ... இதற்க்கு முன்பு அந்த பணியை சரியாக செய்து வந்தவர் சரண் ஆனால் சமீப காலமாய் அவர் கற்பனை வறச்சியில் இருப்பதால் அவருக்கு மாற்றாக அஜித்துக்கு ஒரு இயக்குனர் தேவைபட்டார்.. உடனே அவரின் மனதில் வந்தவர்தான் இந்த வெங்கட் பிரபு... அஜித் படம் இயக்குவது என்றால் யாருக்குதான் கசக்கும் ... தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் சரி அவர் மக்களிடம் இருந்து அதிகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் கேள்விகள் ரெண்டே ரெண்டுதான் ... ஒன்று எப்ப நீங்க சூப்பர் ஸ்டார இயக்க போறீங்க? இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க? என்பதுவே இதுதான் அவர்களின் மாஸ் ... கௌதம் மேனனே இதை பல பெட்டிகளில் கூறி இருக்கிறார்... அப்படி ஒரு வாய்ப்பு வந்தவுடன் வெங்கட்டும் தலைக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் அவரின் ஸ்டைல் முல்டி ஸ்டார் வகை கதை ஒன்றை கூற அது எல்லாருக்கும் பிடித்து போக , படம் முடிவாகி விட்டது ... ஒன்னாம் வகுப்புக்கு போற சின்ன கொழந்தைக்கு கூட தெரியும் அந்த படத்தோட பேரு மங்காத்தா என்பது .... எனக்கு தலை படங்களில் மிகவும் பிடித்த படம் தீனா , அதில் தலையும் சுரேஷ் கோபியும் ரணகளபடுத்தி இருப்பார்கள் அதே போல மங்காத்தாவில் தலையும் நாகர்ஜூனாவும் இணைகிறார்கள் ... 


ஆனால் அஜித் கௌதம் மேனனை விட்டு வேறு இயக்குனருடன் இணைவது அவரின் ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை ... ஆனால் என்னை பொறுத்தவரை தல எடுத்திருக்கும் முடிவு மிக சரியான முடிவே ... கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள் ... மூன்றும் கொஞ்சமேனும் தப்பித்ததிர்க்கு காரணம் பாடல்களே ... தலையை வைத்து இப்படி ஏதாவது மொக்கை படம் கொடுத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் ... எங்களுக்கு தேவை musical hit album இல்லை ஒரு மரண மாஸ் படமே வெங்கட் பிரபு அதை சரியாக கொடுப்பார் என்று நம்புவோம் , மேலும் கௌதம் அடுத்து அஜித்துடன் இணைவது உறுதி ஆகிவிட்டது , அதில் அவர் வேட்டையாடு விளையாடு போல ஒரு "மாஸ் பிளஸ் கிளாஸ்" படம் கண்டிப்பாக கொடுப்பார் ... 


இப்படி அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட படங்கள் பற்றிய செய்திகளில் சந்தோசத்தின் உச்சியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு அதைவிட இனிப்பான ஒரு செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது ... அஜித்தின் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா .. ரஜினி பண்ணிய ஒரு படத்தை அவர் நடித்து கொண்டு இருக்கும் பொழுதே அதுவும் அவர் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடித்து அதில் கொஞ்சம் கூட ரஜினியை பின்பற்றாமல் தன்னுடைய பாணியில் நடித்து அதை வெற்றியும் பெற செய்வது சாதாரணமான விஷயம் இல்லை ... அந்த வெற்றியில் அஜித்துக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன் ... இருவரும் மீண்டும் இணைகிறார்கள் ... இது சென்ற வருடமே ஆரம்பிக்க பட வேண்டிய படம் ... சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வந்து கொண்டு இருந்தது இப்பொழுது அது விஷ்ணுவரதனால் உறுதி செய்ய பட்டு விட்டது ... ஆம் தல மீண்டும் பில்லாவாக நடிக்க போகிறார் மிரட்டலாக .... தலையின் அம்பத்தி மூன்றாவது படமாக இது அமையும் .... 


இப்படி அடுத்தடுத்து மூன்று மெகா கூட்டணி படங்கள் எங்களை இப்பொழுதே கண்ணா பின்னாவென்று எதிர்பார்க்க வைத்து விட்டது ... கண்டிப்பாக ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது நாங்கள் ஒரு மினி தீபாவளியே நடத்தி காட்டுவோம் .... 


அஜித் என்றாலே அவருக்கு போட்டியாக ஞாபகம் வரும் நடிகர் விஜய் ... அவரும் சமீப காலமாய் சொதப்பி கொண்டு இருந்தார் ... தல தளபதி போட்டி இல்லாமல் தமிழ் சினிமா கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பங்களாதேஷ் கென்யா டெஸ்ட் மேட்ச் போல மந்தமாக போய் கொண்டு இருந்தது ... இப்பொழுது அவரும் முழித்து கொண்டு விட்டார் ... அவரின் அடுத்த மூன்று படங்கள் ராஜா , லிங்குசாமி , சங்கரை வைத்து எடுக்க போகிறாராம் .... ஆக அடுத்த இரண்டு வருடங்களில் இந்த இரண்டு குதிரைகளும் போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க போகின்றன ... மீண்டும் தல தளபதி போட்டி தமிழ் சினிமாவில் ஆரம்பிக்க போகிறது ... அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் தமிழ் நாட்டில் ... இந்த ஆட்டம் உலக கிண்ண கால்பந்தை விட பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ...

Monday, July 26, 2010

முரளிதரன் - சாதனைகளும் சோதனைகளும்


முரளிதரன் இன்றைய கிரிக்கெட் உலகின் மிக தலைசிறந்த ஒரு வீரர் ... கிரிக்கெட் என்பதே டெஸ்ட் போட்டிகள்தான் .. அதில்தான் வீரர்களின் உறுதித்தன்மை வெளிப்படும் , அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர் என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது ... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பாய் நாடு , இனம் கடந்து அவரை நேசிப்பார்கள் ... நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவரை நினைத்து பெருமைப்படலாம் ... காரணம் அவரும் ஒரு தமிழர் என்பதே ... உலகில் பல கோடி மக்களால விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் தமிழன் ஒருவன் சாதனை படைத்து உள்ளான்  என்பதே நாம் என்றென்றும் நினைத்து பெருமைபடகூடிய விசயம்தான் .... தமிழர்களின் திறமைக்கு இவர் ஒரு சோற்று பதம் .... இந்த சாதனை கோட்டையை அவர் ஒன்றும் சாதாரணமாக கட்டிவிடவில்லை ... வார்னேவின் சாதனைகளை ஒரு ஆசியன் உடைத்துவிடகூடது என்பதற்காக ஆஷ்திறேளியர்கள் அவருக்கு கொடுத்த டார்செர்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை .... பந்தை எறிகிறார் இவற்றின் மணிக்கட்டு சுழற்சியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்களின் வெறியை காட்டி அவர் மனஉறுதியை சீர்குலைக்க பார்த்தார்கள் ... கீழே உள்ள படத்தை பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு சாதனைகள் படைத்த ஒரு சிறந்த வீரனை அவமானபடுத்துகிரார்களே , அவர் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று அவருக்காக வருந்தியிருக்கிறேன் ... 


ஆனால் அவர் அதையும் சிரிப்புடனே ஏற்றுகொண்டார் .... அந்த சிரிப்பின் அர்த்தத்தை தன சிகரம் தாண்டிய சாதனைகள் மூலம் அவரை அவமானபடுத்தியவர்களுக்கு  உணர்த்தியும் விட்டார் ... அவரை குறை கூறியவர்கள் எல்லாரும் இன்று வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்கள் ... 

ஆனால் இப்படியெல்லாம் அவரின் சாதனைகளை நினைத்து பெருமை பட்டு கொண்டு இருந்தாலும் என் அடி மனதில் முரளியை பற்றிய பிம்பம் ஒன்று ஆழமாய் பதிந்து விட்டது .. அது அவர் சாதனைகளுக்காக தன முதுகெலும்பை அடமானம் வைத்துவிட்டாரோ என்று? 

ஹென்றி ஒளங்கோ என்று ஒரு பந்துவீச்சாளர் இருந்தார் ஜிம்பாபே அணியில் ஞாபகம் இருக்கிறதா? சிறு வயதில் அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது ... காரணம் அவர் ஒரு போட்டியில் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவரை சைகையால் கேலி செய்தார் என்பதற்காக ... அது அறியா பருவம் ... அவர் அணியில் விளையாடி வந்த காலகட்டம் ஜிம்பாபே அரசியலில்  பெரிய புயல் வீசிய நேரம் ... வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் புரச்சி செய்து ஆட்சியை பிடித்து கொண்டு வெள்ளையர்கள் மேல்   இனவாத தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த காலகட்டம் ... ஒளங்கோ ஒரு கறுப்பர் .... நடப்பது அவர் இன ஆட்சி ... கொள்ளபடுபவர்கள் அவர் இணைத்தை ஒரு காலத்தில் கொடுமைபடுத்தி வந்த வெள்ளையர்கள் ... அவர் அப்பொழுதுதான் ஒரு நல்ல பந்து வீச்சாளராக வளர்ந்து கொண்டு இருந்தார் .... அவர் நினைத்திருந்தால் ஆளும் அவர் இன தலைவர்களுக்கு சொம்பு அடித்து அணியில் நிரந்திர இடம் பிடித்து இருந்திருக்கலாம் ... அவர்மேல் யாரும் குற்றம் சொல்ல போவதில்லை ... காரணம் அவரும் ஒரு கறுப்பர் ... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை .. மாறாக என் நாட்டில் நடக்கும் கொடுமைகள் என்னால் கொஞ்சமேனும் வெளி உலகிற்கு தெரிய வேண்டும் .... நான் இந்த போட்டி முழுவதும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட போகிறேன் ... இதன் மூலம் என் நாட்டில் சிறிதேனும் மாற்றம் வந்தால் அதுவே எனக்கு போதும் என்று தன சக ஆட்டக்காரர் ஆண்டி பிளவருடன் இணைந்து ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் அறிக்கை விட்டார் ...

அவருக்கு தெரியும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை ... உலகில் பல கோடி பேர் விரும்பி பார்க்கும் கூர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் .... நல்ல விசயங்களை இந்த கிரிக்கெட் மூலம் நாம் உலகிற்கு பரப்ப முடியும் என்பது ... சத்தியமாக சொல்கிறேன் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் எனக்கு சிம்பாபேயில் இப்படி இன படுகொலைகள் நடக்கிறது என்பதே தெரியும் .... எனக்கு அது தெரிவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை .. ஆனால் என்னை போல பல கோடி பேர்களுக்கு அந்த படுகொலைகள் தெரிய வந்து இருந்திருக்குமே ... அதனால் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்றாலும் மாற்றத்தின் முதல்படியாய் அந்த விஷயம் இருந்திருக்குமே .... வெள்ளையர்கள் துரத்தி அடிக்க பட்ட அந்த அணியில் இன்று மீண்டும் கொஞ்சம் வெள்ளை தலைகள் தென்படுவதற்கு ஓலைங்கோவின் அந்த செயலும் ஒரு காரணமே ... சரி அதனால் மாற்றமே இல்லாமல் போனாலுமே பணத்திற்கும் புகழுக்கும்  அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டின் சாதனை கல்வெட்டில்  தன பெயரை பொறிக்காமல் போனாலும் மனிதநேயமிக்க ஒரு மனிதனாய் அந்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ...

இவரை நினைத்து பார்க்கும் பொழுது முரளியை என்னால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியவில்லை .... தன இனமக்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிக்க பட்டு கொண்டு இருக்க படும் பொழுது இவர் அவர்களுக்காக குரல் கொடுக்ககூட முன்வரவில்லை... இவர் ஆதரவாக குரல்கூட கொடுத்திருக்க வேண்டாம் , ஏதேனும் ஒரு பேட்டியிலையாவது ஒரு வருத்தமாவது தெரிவித்து இருக்கிறாரா என்றால் இல்லை ... கேட்டால் அவரின் ஆதரவாளர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள் ... ஏன் விளையாட்டு வீர்கள் தான் சார்ந்த சமுதாயத்திற்கு  எதுவும் நல்லது செய்ய கூடாதா , இல்லை இதுவரை யாரும் செய்ததில்லையா? இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே? முரளி குரல் கொடுத்து இருந்தால் தெரிந்திருக்கும் அவர் சாதாரணமான ஆளா இல்லையா என்று?

சரி போர் நடக்கும் பொழுதுதான் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.... மீறி செய்தால் தேச குற்றம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ... போர் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மீதி இருக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளிலாவது அவர் ஆர்வம் காட்டினாரா? இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய்  எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே...  நானும் அந்த இனத்தை  சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம்  இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ? அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ? அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ? என்று .... 

எது எப்படியோ , இதுவரை முரளியை ஒரு தமிழனாக பார்த்து கொண்டு இருந்தேன் ,,, ஆனால் நம் மனதில் உருவகபடுத்த பட்டுள்ள தமிழர்கள் வேறு அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலை வேறு என்று அவர்களே சொல்லி விட்டார்கள் ... அதனால் அதிகமாக எதிர்பார்த்தது என் தவறுதான் என்பதால் , முரளியின் 800 க்கு வாழ்த்துகள் சொல்லி விட்டு , இன்று போல என்றும் நிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டி பதிவை முடித்து கொள்கிறேன்... 

Friday, July 23, 2010

வேலாயுதம் --- ஈ அடிச்சான் காப்பியின் உச்சம்

( DISC1 : இது விஜயை மட்டும் ஓட்டுவதற்கு எழுதிய பதிவு இல்லை )

ஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...
ஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...
ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய  போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...



(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )




(இயக்குனர்  ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...

போட்டோகிராபர் :  இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது 
)

சினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக  ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி....  நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா? ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....
பின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...

நான் போக்கிரி காப்பி  பாத்திருக்கேன் 
சந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன் 
ப்ரு காப்பி பாத்திருக்கேன் 
பில்ட்டேர் காப்பி பாத்திருக்கேன் 
ஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன் 
ஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....

Thursday, July 22, 2010

வேண்டா வெறுப்புக்கு பூஜை போட்டு காவல்காரன்னு பேரு வச்சாங்களாம்...


நம்ம இளைய தளபதிக்கு இப்ப சனி உச்சத்துல இருக்குப்பா... பின்ன ரெண்டாயிரத்து பதினோண்ணுல பிரதமர் ஆக வேண்டியவர் அவரு விதி வெளையாடி ஒரு வார்டு கவுன்சிலராக கூட முடியாத நிலைமையில இப்ப இருக்காரு.... மக்கள் திலகம் பாணியில வேட்டைகாரனு பேரு வச்சி தமிழ் நாட்ட வேட்டையாடிடலாம்னு நெனச்சாப்புல, ஆனா பாவம் வேட்டைபுலியா பாய வேண்டிய படம் டையர்ல மாட்டுன எலியா நசுங்கி போய்டுச்சி... 

ஆனா நாங்க எல்லாம் சிங்கமுல்ல .. நொண்டி அடிச்சாலும் செத்தத நோண்டி திங்க மாட்டோம்ல ... நல்ல கதையில பில்ட் அப்பே இல்லாம நடிக்க நாங்க என்ன உன்னை போல் ஒருவன் கமலா , இல்ல அடுத்தவன் படத்துல ஒரு ஓரமா வந்து நடிச்சிட்டு போக குசேலன் ரஜினியா?சந்திரமுகிக்கே சவால் விட்ட சச்சின்ல அவரு ... வேட்டையில விட்டத புடிக்க சுராவுக்கு வல வீசுனாப்புல ... மக்கள் திலகம் படத்தோட பேர வச்சாதான் படம் ஓட மாட்டேங்கிது ... அவர் கதையவே ஆட்டைய போட்டா அவரு மாதிரியே மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அதுல பெவிக்கால் ஒட்டி நிரந்தரமா உக்காந்திரளாம்னு கணக்கு போட்டாப்புல .... பாவம் கடலுல கம்பீரமா நீச்சல் அடிக்க வேண்டிய சுறா , சீக்கிரமே சீக்கு வந்து செத்து போய் கர ஒதுங்கிடுச்சி... 

வரிசையா ஐந்து படம் ... எல்லாம் உங்க ஊத்து எங்க ஊத்து இல்ல .. கொக்காமக்கா ஊத்து (நன்றி பேரரசு : சிவகாசி) ... பெட்டி பெட்டியா பணத்த வாங்கிட்டு குடும்பம் பிளஸ் குட்டி(கள்)யோட அமேரிக்கா , மலேசியான்னு சந்தோசமா சுத்திகிட்டு இருந்தவருக்கு வச்சான் அந்த பண்ணி சீ பன்னீர் செல்வம் ஆப்பு...கேடி பையன் கோடி கோடியா காசு கொடு இல்லைனா கடைசி வர வீட்டுலையே ரெஸ்ட்டு எடுன்னு .... தலைவரு வரிசையா படம் ஊத்துணப்ப கூட இம்புட்டு கவலைபடல... காசகுடுடான்னு கேட்டவுடனே சும்மா பதறி அடிச்சி ஓடி வந்தாரு ... வழக்கம் போல வெட்டி பயலுக கூட்டம்லாம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்தானுக ... அடுத்த படத்துல வர்ற லாபத்த வச்சி இந்த நட்டத்த விஜய் சரி கட்டுவாருன்னு ...... முடிவுக்கு காரணம் அது விஜய் படம்கிறதுனால இல்ல .. அந்த படத்தோட இயக்குனர் சித்திக் ... அவர நம்பித்தான் இந்த முடிவையே எடுத்தானுக .... 

வழக்கமா எந்த படத்தோட பூஜையையும் பிரமாண்டமா பண்ணுற விஜய் கோஸ்டி வேண்டா வெறுப்பா இந்த படத்துக்கு பூஜை போட்டாங்க... அப்பவே என் மனசுல உசார்பத்தினி ரெய்டு வந்துச்சி... என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு... படம் ஓடுனாலும் நமக்கு லாபம் இல்லைங்கிறத நல்லா புரிஞ்சிக்கிட்டுதான் இந்த படத்துல வேண்டா வெறுப்பா நடிக்கவே ஆரம்பிச்சாரு தளபதி... அவரு கடைசி வரைக்கும் படத்துக்கு பேரே வைக்கவில்லை... அதுவும் இந்த படம் பாடிகார்ட் அப்படிங்கிற மலையாள படத்தோட ரீமேக்காம்... அட்டு கதைய படமா எடுத்தசுறா இயக்குனரே, இந்த கதைய படமா எடுத்தா படம் ஓடாதுங்கிறத சரியா சொல்லிடுவாரு ... அவ்ளோ அருமையான கதை .. இருந்தும் விஜய் அவரோட ரசிகர்கள் இருக்கிற தைரியத்துல (எத காட்டுனாலும் ரசிப்பானுகள்ள) நடிச்சிக்கிட்டு இருந்தார் ... ஆனா அவர் ஆசையில மண்ணை அள்ளி கொட்டிருச்சி இந்த அசின் பொண்ணு ... அதுபாட்டுக்க இலங்கைக்கு போய் அதிபர் குடும்பத்தோட கொஞ்சி குலாவிகிட்டு திரிய .. விஷயம் பயங்கரமா வெடிக்க ஆரம்பிச்சிருச்சி... கொஞ்ச நாளா எந்த வேலையும் இல்லாம சும்மா கெடந்த நடிகர் சங்கம் ... ஆகா பெரிய பீசு மாட்டிகிடுச்சி .. அதுவும் கொஞ்சம் அழகான பீசு வேற , மெரட்டி பாப்போம் , ஏதாவது கெடைக்கும் அப்படின்னு அசினிக்கு தடை விதிக்க ஆளா பறக்குராணுக... இது போதாதுன்னு அசின் சல்மான் கான் கூட நடிக்க ஹிந்தி பட வாய்ப்பு வந்ததும் , காவல்காரன அம்போன்னு விட்டுட்டு சல்மான்காக் கூட டூயேட் பாட கெளம்பிடுச்சி...

நடுவுல இந்த R.M.வீரப்பன் வேற காவல்காரன்கிற பேர இந்த படத்துக்கு வைக்ககூடதுன்னு புகார் பண்ண , விஜய் கோஷ்டி முப்பது லட்சம் தரோம்னு காச அள்ளி எறச்சி பாத்தும் , எம்.ஜி .யார் பட தலைப்பு மேல இருக்கிற மரியாதையை விட்டு கொடுக்க அவர் முன் வரல.. முக்குக்கு முக்கு வேட்டைக்காரன் போஸ்டர் மேல அடிச்சி இருந்த சாணிய பாத்து இருப்பார் போல ... படத்தோட தலைப்பும் போச்சி... இப்ப வேற ஏதோ தலைப்பு வச்சிருக்காரு "காவல் காதல்ன்னு"... படம் கண்டிப்பா கேரளாவுல பிச்சிகிட்டு போகும் .... பின்ன ஷகீலா படத்துக்குகூட இப்படி ஒரு tempting தலைப்பு இதுவரைக்கும் அமைந்ததில்லை.... 


ஆனா ஒன்னு விஜய் இந்த படத்த ரொம்ப எதிர்பார்கிராரோ இல்லையோ அவர் ரசிகர்கள் நிறைய நம்பி இருக்காங்க இந்த படத்த ... பின்ன ஏரியாக்குள்ள தலை நிமிர்ந்து நடந்து பல வருஷம் ஆச்சுல்ல ... இதுவாது ஓடி அவனுங்க தலைய நிமித்தனும்... ஆனா விஜய்க்குன்னு ஒரு எக்குதப்பான செண்டிமெண்ட் இருக்கு .. அது படி பாத்தா இந்த படம் படு பயங்கரமான ப்ளாப் ஆகும்.. அது என்னன்னு கேக்குறீங்களா?


காதலுக்கு மரியாதை - கண்ணுக்குள் நிலவு -சுறா 
கில்லி - குருவி 
போக்கிரி - வில்லு 
நினைத்தேன் வந்தாய் - வசீகரா 


மேல இருக்கிற லிஸ்ட் பாத்தா ஒன்னு தெளிவா புரியும் ... விஜய் முதல் படத்துல ஒரு இயக்குனர்கிட்ட ஹிட் படம் கொடுத்திருந்தா , அடுத்த தடவ அதே கூட்டணி அமையும் பொழுது படம் பப்படம் ஆகிடும்... விஜய் இயக்குனர் மட்டும் இல்லை விஜய் - தயாரிப்பாளர் கூட்டணியும் அப்படித்தான் ... உதாரணம் சங்கலி முருகன் ....


அப்படி பார்த்தால் பிரண்ட்ஸ் - காவல் காதல் என்னவாகும் ??????? விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா? இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம் காவல் காதல் ரிலீஸ் ஆச்சுனா?

இருந்தாலும் முந்தய செண்டிமெண்ட்களை எல்லாம் உடைத்து காவல் காதல் புது சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள் 

Saturday, July 17, 2010

நானும் கிரிக்கெட்டும் ....




சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா? எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல  காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா? கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா? உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு  இருக்கீங்களா? வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை  தண்ணியில குளிச்சிருக்கீங்களா?  மொட்ட வெயிலுல மரம்  ஏறி  புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி  நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா? நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா? இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுகம்... கிராமத்து வாழ்கையில மட்டுமே கிடைக்கிற சொர்க்க சுகங்கள் ... எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போறது மாதிரி பெரிய சந்தோசம் வேற எதுவுமே கிடையாது .. காரணம் எந்த வேலையும் செய்யாம மதிய சாப்பாடு கெடைக்கும் ... சாப்பாட்டோட சேத்து முட்டையும் கெடைக்கும் .. மதிய சப்பாட்டுகாகவே பள்ளிக்கூடம் வந்து நல்லா படிச்சி வாழ்கையில நல்ல நிலைமைக்கு வந்த பல பேரு இருக்கானுக ...  நகரங்களுள பசங்க வெளையாட எடமே இல்லை.. ஆனா எங்களுக்கு எங்க ஊரே மைதானம்தான்... திருடன் போலிஸ் வெளையாட்டுல நாங்க எந்த வீட்டுக்குள்ள வேணும்னாலும் போய் ஒளிஞ்சிகுவோம்... யாரும் திட்ட மாட்டார்கள் ... நாங்க  போற நேரம் சாப்பாட்டு நேரமா இருந்தா அந்தவேளை சாப்பாடு எங்களுக்கு அந்த வீட்டுலதான்... எங்களுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வெளையாட்டு... கொஞ்ச நாள் பம்பரம் விட்டுகிட்டு திரிவோம் , அடுத்து பட்டம் பறக்க விடுவோம் , கோழி குண்டு  அடிப்போம், கில்லி தாண்டா வெளையாடுவோம் . எந்த வெளையாட்ட இருந்தாலும் எங்களுக்கு அது மான பிரச்சனை... கரெக்டா சொல்லி வச்ச மாதிரி அத்தன பசங்களும் காலயில ஒன்னு சேந்திடுவோம்  .... எப்பவுமே எங்களுக்குள ரெண்டு டீம் இருக்கு ... ஒரு டீம் வெள்ளாளர் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக .. இன்னொரு டீம் நாடார் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக ... எங்க ஊருல அந்த ரெண்டு பள்ளிகூடம்தான் இருக்கு... தோக்குற பள்ளிகூடத்து பசங்க ஜெயக்கிற பசங்களுக்கு அடுத்த ஒரு வாரம் காலையிலயும் , மதியமும் எங்க ஊரு கெழவி கடையில  பருத்தி பால் வாங்கி தரனும் .. இதுதான் எப்பவும் பெட்... எங்க வீட்டுல எனக்கு டெய்லி ஒரு ரூபா செலவுக்கு கொடுத்து விடுவாங்க ... அது போக நானும் அப்பப்ப வீட்டுல ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு ஆட்டைய போட்டு பசங்களுக்கு அப்பளம் , முறுக்குன்னு வாங்கி தருவேன் , அதனால எங்க டீமுக்கு எப்பவும் நான்தான் தலைவன்.... தோத்தா நான்தான்  செலவு பண்ணுவேன் ... அதுக்கு பரிகாரமா  திருட்டுத்தனமா  எங்க பசங்க புளியங்கா , கொய்யாப்பழம், இளநி பறிக்க போனா மொத படையல் எனக்குதான்...

கொஞ்சம் பெரிய பையனா ஆனா பின்னாடி எங்க மொத்த வாழ்க்கையையும் கிரிக்கெட்டுக்கே அர்பணித்து  விட்டோம்... மொத மொத நாங்க கிரிக்கெட் விளையாடினது உஜாலா பாட்டுல பந்தாவும் , சின்ன மரக்கட்டைய பேட்டாவும் வச்சிதான்... எங்க பள்ளிகூடத்து மைதானத்துல விளையாடுவோம் ... எங்க கூட அந்த பள்ளிகூட பசங்களும் விளையாடுவானுக ... இது எங்க பள்ளிகூடத்து head masterக்கு பிடிக்கல , மைதானத்த சுத்தி கம்பி வேலி போட்டு, ஒரு வாட்ச்மேன்னையும் காவலுக்கு போட்டுட்டாரு.... எங்க கிரிகெட் வாழ்க்கைக்கு விழுந்த முதல் தடை அது... எங்களுக்கு விளையாட  ஒரு மைதானம் தேவை பட்டது ...எங்க கண்ணுல விழுந்த ஒரே எடம் எங்க ஊரு நந்தவனம் ...




அங்க எங்களோட அண்ணன்மார்கள் வெளையாடிக்கிட்டு இருப்பானுக.... எங்களை ஆட்டையில செத்துகவே மாட்டானுக .. மொத்த கிரௌன்டையும் அவனுகளே ஆக்கிரமிச்சிகிடுவாணுக... நாங்க ஒரு ஓரமா வழக்கம் போல உஜாலா தப்பாவ வச்சி வெளையாடிக்கிட்டு இருப்போம் ... அப்ப எனக்கெல்லாம் அவனுக கூட விளையாடனும்கிறது பெரிய கனவு ... அந்த கனவு ஒரு வருஷம் கழிச்சி பலித்தது ...யாரோ ஒருத்தன் அடிச்ச பந்து சீறி பாஞ்சி வந்துகிட்டு இருந்தது என்னை நோக்கி ... எல்லாரும் டேய் தள்ளுடா பந்து அடிச்சிசுனா ஏதாவது ஆகிட போகுதுன்னு கத்துனாணுக, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கார்க் பால் வச்சி ஒருத்தன் மண்டைய பொளந்து அவன ஆஸ்பத்திரியில படுக்க வச்சி அவன் அம்மாகிட்ட நார வசவு வாங்கி இருந்தானுக  ... நான் கொஞ்சம் கூட பயப்படாம என் நெஞ்சுக்கு நேர வந்த பந்த ஒத்த கையாள கேட்ச் பிடிச்சி நிறுத்தினேன் ... எல்லாருக்கும் பயங்கர ஷாக் ... அப்பத்தான் அவனுகளே கார்க் பால் வச்சி விளையாட ஆரம்பிச்சி இருந்தானுக .. அதுனால அவனுகளே பந்த பிடிக்க பயந்துகிட்டு இருந்தானுக சின்ன பையன் நான் பந்த பயமே இல்லாமே பிடிச்சிட்டேன் ... அன்னைக்கி மேட்ச் முடிஞ்சி நடந்த ஆலமரத்தடி அரட்டை கச்சேரில இந்த விசயம்தான் மெயின் டாபிக்... பையன் பயம் இல்லாம இருக்கான்டா அவன நம்ம டீம்ல சேத்துக்கலாம்டான்னு  ஒரு குரூப் எனக்கு சப்போர்ட் பண்ணுச்சி , இல்லடா ஏதோ பயத்துல கைய நீட்டிட்டான் பந்தும் அவன் கையில மாட்டிகிடிச்சி அவ்ளோதாண்டா , இத போய் திறமைநேல்லாம்  சொல்ல முடியாதுன்னு ஒரு குரூப் என்னக்கு எதிரா கால வாற பத்தாணுக
.



கடைசியில என்னோட திறமைய டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவு பண்ணுனாணுக... இடம் அதே நந்தவனம் .. டெஸ்ட் நான் பழனி அண்ணனோட பந்துவீச்சுல ஒரு ஓவர் பேட்டிங் பிடிக்கணும் , ஒரு பாலுக்கு கூட பயப்படகூடாது , உடம்புல அடிவாங்கிரகூடது, ஆறு பாலையும் பயப்படாம உடம்புல அடிபடாம விளையாண்டு முடிச்சிட்டா இவன டீம்ல சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுக , பழனி அண்ணன் அவர்தான் எங்க சுத்து வட்டாரத்துளையே பெரிய பௌலேர்... அவர் பந்து வீச பவுண்டரி லைன்ல இருந்து  ஓடி வர்ற வேகத்த பாத்தாலே பேட்ஸ்மேனுக்கு அடி வயிறு கலங்கும்.. அவர் வீசுற பந்தால  காலுல அடி வாங்கி ரெண்டு மாசமா நடக்க முடியாம முட்ட பத்து போட்டுக்கிட்டு நொண்டிகிட்டு திரிஞ்ச பல பேர் இருக்கானுக ஊருக்குள்ள .. எனக்கு மனசுக்குள்ள பயமா இருந்தாலும் , எங்க ஊர் டீம்ல சேர இதுதான் நல்ல வாய்ப்புங்கிரதுனால ஒத்துகிட்டேன் ...

(அடுத்த பதிவுல மீதி)



Thursday, July 15, 2010

வருங்கால சந்ததிகளையாவது வாழ விடுவோம்....

நம்முடைய வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம் ... கடவுள் இருக்கிறா இல்லையா என்ற வாதம் எனக்கு பிடிக்காத ஒன்று ... ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று கண்டிப்பாக இந்த உலகில் உண்டு .. நாம் கருவாக  உருவாவதில் இருந்து நம் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போவது வரை எல்லாமே அந்த சக்தியின்  செயல்தான் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு .... நாம் யார்? இங்கே ஏன் வந்தோம்? ... இதற்க்கு பின் எங்கே செல்ல போகிறோம்? .... நாம் இருக்கும் இந்த உலகம் எங்கே இருக்கிறது? ... எப்படி உருவானது ?, இந்த அகண்ட அண்ட வெளியின் ஆரம்பம் எது? முடிவு எது? இப்படி விடை தெரியாத இல்லை விடையே இல்லாத கேள்விகள் நிரம்ப உண்டு இந்த உலகில் ... நம் மனதின் ஆரம்பம் எது முடிவு எது என்பதுகூட நமக்கு தெரியாது ... இப்படி பல விசித்திரங்கள் நிறைந்த வாழ்வையே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ...   

எந்தவித குறையும் இல்லாமல் நாம் படைக்கபட்டு இருக்கிறோம் என்பதே பெரிய வரம்தான் நமக்கு ... நேற்று என் சொந்தகார பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது ... குழந்தைக்கு இரண்டு கையும் இல்லை ... அந்த அழகான குழந்தையை , அதன் பால் வடியும் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது என்னையும் அறியாமல் அழுது விட்டேன் .. இந்த குழைந்தையை இந்த சமூகம் என்ன பாடு படுத்த போகிறது என்று எண்ணி பார்க்கும் பொழுது ... அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய வரம் வாங்கி வந்திருக்கிறோம் என்று ... கடவுள் மனிதனுக்கு கொடுத்தது ஆரோக்கியமான உடல் மற்றும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு மட்டும்தான் ... அது மட்டுமே போதும் இந்த உலகில் மனிதன் சந்தோசமாக வாழ ... அவனுக்கு தேவையான அனைத்தையும் படைத்திருக்கிறான் அவன் ... ஆனால் நாம்தான் நாகரீகம் என்ற பெயரில் நம்மை சிதைத்து கொண்டு உள்ளோம் ... 

இன்று என்னதான் அறிவியல் வளர்ச்சி கண்டு இருந்தாலும் , அந்த ஆதி மனிதன் அனுபவித்து வந்த சந்தோசத்தை நம் தலைமுறை இழந்துதான் விட்டது ... நாம் நம்மை கெடுத்து கொண்டது மட்டும் இல்லாமல் இந்த பூமியையும் கெடுத்து விட்டோம் .. நான் அறிவியல் வளர்ச்சியை குறை கூறவில்லை ... ஆனால் இந்த வளர்ச்சி மனிதனுக்குள் பண ஆசையைத்தான் வளர்திருக்கிறதே தவிர கடவுள் நமக்கு கொடுத்த அன்பு என்னும் உன்னதமான உணர்வை குறைத்து விட்டதே ..

. நமக்குள் இன்று விஸ்வரூபம் கொண்டு வளர்ந்திருக்கும் பண ஆசையை விட சக மனிதர்கள் மேல் காட்டும் அன்புணர்ச்சி அதிகமாக வளர்ந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல்   போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும்  விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோடீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா? மிக குறைந்த நாளிலேயே தெரிந்து விடும் அந்த பணத்தை கொண்டு நாம் கடவுள் கொடுத்த சந்தோசத்தை வாங்கி விட முடியாது என்பதை ....

 நான் படித்த காலத்தில் என் அப்பா நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்தால்தான் உலகம் உன்னை மதிக்கும் , நீ சந்தோசமாக வாழ முடியும் என்று கூறினார் ... அவர் சொல்லியதை வேத வாக்காக நினைத்து என் இல வயது சந்தோசங்களை எல்லாம் புஸ்தக மூட்டை என்னும் பொதிக்குள் தொலைத்து விட்டு படித்தேன் ... இன்று கை நிறைய சம்பாதித்தாலும்  அவர் சொன்ன அந்த சந்தோசம் மட்டும் முழுவதும் கிடைக்கவிலையே ... நான் தெரியாத்தனமாக இந்த போட்டி உலகத்திற்குள் நுழைந்து விட்டேன் .... நான் இங்கு வாழ வேண்டுமானால் கடைசி வரை போராடித்தான் ஆக வேண்டி உள்ளது .... ஆனால் இறுதியில் நான் வெற்றி பெற்றாலும் வாழ்கையை திரும்பி பார்க்கும் பொழுது நான் பல சந்தோசங்களை இழந்து விட்டு வந்திருப்பது கண்டிப்பாக தெரியும் ... இது எனக்கு மட்டும் இல்லை , பொதுவாக எல்லாருக்கும் இது பொருந்தும் .. 

கடவுள் இந்த வாழ்கையை முழுவதும் எனக்காக மட்டுமே படைத்து இருக்கிறார் ... ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழும் நேரம் மிகவும் குறைவே ... யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்கவே நான் வாழுகிறேன் ... இல்லை நானே முதலாளி ஆனாலும் கடைசி வரை என் பெரும்பாலான நேரத்தை செலவழித்து நான் சம்பாதித்த இந்த பணத்தை கொண்டு சந்தோசமாக வாழ எனக்கு நேரம் கிடைப்பதில்லை ... ஏன் என்றால் இது போட்டி உலகமாம் ... நாம் ஓய்வு எடுக்க சென்று விட்டால் உலகம் நம்மை மறந்து விடுமாம் .. நான் இறுதி வரை போட்டி போட்டு கொண்டே இருந்தால் இந்த வாழ்கையை நான் வாழ்ந்து என்ன பயன்? 

பொதுநலன் என்னும் சொல் பணம் என்ற மாய வலையால் விழுங்க பட்டு விட்டதா ? பணம் மனிதனுக்குள் சுயநலத்தை அல்லவா வளர்த்து விட்டது ... ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து கொண்டும் ... ஒரு சாரர் சாப்பிடகூட வழி இல்லாமல் செத்து  கொண்டு இருப்பதற்கும் காரணம் இந்த பணம் வளர்த்து விட்ட சுய நலம்தானே .... கடவுள் படைத்த இந்த உலகம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தம்தானே .. அதில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொதுதான் .. கடவுள் பணக்காரனுக்கு வருடம் முழுவதும் மழையையும் ஏழைகளுக்கு மாதம் ஒரு முறை மழையையும் கொடுக்க வில்லையே .. எல்லாருக்கும் ஒரே மழையைதானே கொடுக்கிறார் ... அப்படி இருக்க இந்த நிலம் எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று கூறு  போட்டு பங்கு போடும் உரிமையை யார் கொடுத்தது நமக்கு?

 மனிதனுக்குள் ஏற்ற தாழ்வை விதைக்கத்தானே இந்த பணம் உதவி இருக்கிறது? யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம்? இருந்தாலும் இன்னமும் நாம் அதன் பின்னால்தான் ஓடி கொண்டு இருக்கிறோம் ... ஏன் என்று தெரியாமலே .. ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் புரியும் .. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கை என்னும் வரத்தை இந்த பணம் என்னும் சாத்தான்  முழுவதும்  விழுங்கி கொண்டு இருக்கிறது என்பது ... நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த சாபத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் , அன்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவோம் .... கடவுள் கொடுக்கும் வரத்தை முழுவதும் அவர்களாவது அனுபவிக்கட்டும் ....  கடவுள் என்றாவது இந்த வரத்தை நிறுத்தி விட யோசிக்கும் முன் நாம் முந்திகொள்ளுவோம்... 

Wednesday, July 14, 2010

ஆர்குட் படுத்தும் பாடு!!!! திருந்துங்கப்பா!!!


நம்ம பசங்களுக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா வரும்னே தெரிய மாட்டேங்கிது.... ஒரு பொண்ண மடக்குறதுக்கு அவனுக எப்படி எல்லாம் யோசிக்கிராணுக பாருங்களேன்...  ஒரு பையன் காலேஜ்ல சேர்ந்த உடனே பண்ணுற முதல் வேலை என்னவா இருக்கும் தெரியுமா? படிக்க தேவையான புஸ்தகம் வாங்குறதோ ,குலசாமி கோயிலுக்கு நடை பயணமா போயி  மொட்ட போடுறதோ  இல்லை... ஜிமெயில் அக்கௌன்ட் கிரியேட் பண்ணி ஆர்குட்ல கடலை போடுறதுதான் .. இன்னும் சில பேர் ரொம்ப ஸ்பீடா இருக்கானுக ... எங்க எதிர்த்த வீட்டு பையன் ஒருத்தன் இந்த வருசம்தான் ஐந்தாம் வகுப்பு போறான் .. அண்ணா உங்க ஜிமெயில் ஐடி கொடுங்கன்னான்னு கேட்டான் ... சின்ன பையன் இவன் எதுக்கு நம்ம ஜிமெயில் ஐடி கேக்குறன்னு குழப்பமா பாத்துகிட்டு இருந்தேன் ... அண்ணா உங்க ஆர்குட்டுக்கு நான் friend request அனுப்புறேன் .. மறக்காம accept பண்ணிடுங்க அப்படின்னான் ...  பயபுள்ள ஏதோ ஆர்வகோளாறுல engineering படிக்கிற அவன் அண்ணன்கிட்ட சொல்லி ஆர்குட் profile create பண்ணி வச்சிருக்கும் , கடலை போடுறதுன்னா என்னனே தெரியாது  , இவனுக்கெல்லாம் யாரு பிரண்டா இருக்க போறாங்கன்னு அவன் profile ஒப்பேன் பண்ணி பாத்தா , எல்லாம் ஒரே பொண்ணுங்க .... அதும் அவன் ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி elementry school பொண்ணுங்க ... பையன் scrap book முழுதும் பொண்ணுங்க அனுப்புன scrapதான் ... அப்படியே என்னோட scrap book ஒப்பேன் பண்ணி பாத்தேன் ... ஒரு பொண்ணு கூட இல்ல ... எல்லாம் பசங்கதான் .... 

இப்படி ஆளாளுக்கு ஆர்குட் profile create பண்ணி வச்சிக்கிட்டு பண்ணுற இம்சை தாங்க முடியாது ... எனக்கெல்லாம்  ஆர்குட்ல தேவையில்லாம வழிய போய் பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு விடுற பார்டிகள பாத்தாலே புடிக்காது ... ஏதாவது பண்ணி அவனுகள காலி பண்ணுன பின்னாடிதான் அந்த எடத்த விட்டே நான் காலி பண்ணுவேன் .. அவ்ளோ நல்ல மனசு எனக்கு 

ஒரு பொண்ணோட போட்டோ கமெண்ட்ல ஒருத்தன் இப்படி கமெண்ட் போட்டிருந்தான் ... hi nice pictures .. u on tat saree .. try wearing white or red saree ... u will be luking amazing... bye .. tc...  நான் அதுக்கு இப்படி reply பண்ணுனேன் "ஆமா இவரு பெரிய fashion designer .. பேச்ச குறைங்கடா ... டேய்.." அதுக்கப்புறம் பயபுள்ள ஆளையே காணோம் ... 

அடுத்து ஒருத்தன் அதே போட்டோவுக்கு கிறுக்குத்தனமா ஒரு கமெண்ட் போட்டிருந்தான்... "hi u look like a traditional angel in this photo.. i just hav crossed your profile... u r such a amazing person to share friendship.. can you be part of a friend circle?  " என்ன பண்ணுனாலும் திருந்த மாட்டீங்களாடான்னு மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டேன் "டேய் பன்னாட ... முன்ன பின்ன நீ ஏஞ்சல பாத்திருக்கயா? அது என்ன traditional angel ? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சி விடுறது... அப்புறம் அது என்ன சர்கிள், ரவுண்டுடுன்னு கத வுட்டுகிட்டு இருக்க ... இன்னொரு தடவ இந்த ஏரியா பக்கம் வந்த உன் அக்கௌன்ட் டெலிட் ஆகிடும் படவா"... அதுக்கப்புறம் அந்த பொண்ணு சர்ச்சைக்குரிய அந்த போட்டோவ டெலிட் பண்ணிட்டு ஆர்குட்ட க்ளோஸ் பண்ணிட்டு ஏரியாவ காலி பண்ணிட்டு ஓடிடுச்சி...

இன்னும் சில பேரு பண்ணுற scraps பாத்தா பயங்கர காமடியா  இருக்கும் ... 

"hi tis is mani frm sennai ....int in bein ma frand.. just scrab me"
மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் .. இந்த டாக்குகேல்லாம் ஆர்குட் ஒரு கேடா? 

"hello .. am a engineering student who ignoring books and and trying to orkut with you how about you?"
டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்க .. உனக்கு சங்குதாண்டி 

"hai you are so cute.. more if you are in my friend list!!!! wat do u say?"
அடடா என்ன ஒரு அறிவாளித்தனம்... இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனுஷனுக்கு ஆகாதுடா?

"அன்னைக்கி ரவியோட பிறந்தநாள் பார்டியில ராஜாவோட வந்த நவீனாவோட தங்கையோட பக்கத்து வீட்டு பொண்ணோட பிரண்டுதான நீ" 
டேய் மானங்கெட்டவனே இப்படியெல்லாம் அவசியம் கடலை போடணுமா நீ?

"hey spain has won the FIFA world cup... come on lets be a friend"
மக்களே நீங்களே சொல்லுங்க இத பாத்ததுக்கு பின்னாடியும் பொறுமையா இருக்க முடியுமா? 

கடைசியா  உங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசபடுறேன் .... 

"மண்ணு விழுந்த கண்ணும் 
பொண்ணு விழுந்த மனசும் 
இருட்டாகிடும்"

தயவு செஞ்சி திருந்துங்கடா?


Friday, July 9, 2010

உலக படம் - 13 going on 30

13 going on 30 , 2004 ஆம் வருடம் அமெரிக்காவில் வெளிவந்த romaantic comedy fantasy வகை படம் ... ஒரு பெண்ணின் ஆவி இரு வேறு உடலில் வாழும் கதைதான் இது ... இயக்கியவர்கள் Josh கோல்ட்ஸ்மித் & Cathy Yuspa . இதற்க்கு
 முன்னர் same plotல் சில படங்கள் வந்து இருக்கின்றன (wish upon a star, freaky
friday)... 1988இல் வெளிவந்த 14 Going on 30படமும் இதே கதைதான் ...



ஜென்னா ரிக் பதிமூன்று வயது பெண் ... பள்ளியில் அவளுக்கு இருக்கிற ஒரே ஒரு   friend matt மட்டுமே ... ஷ்கூல்லுல எல்லாரும் ஜோடியா சுத்திகிட்டு இருக்கிறப்ப அவ மட்டும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி தனியா இருப்பா ,.. அவ ஸ்கூல்ல ஒரு ரவுடி கும்பல் ஒன்னு இருக்கு .. பேரு six chicks , அதுல ஏழாவது chick கா சேர இவளுக்கு ஆசை ... காரணம் அவங்களுக்கு நெறைய பாய் பிரண்ட்ஸ் ... அதுல ஒருத்தன்தான் dyan , அவன்மேல் இவளுக்கு ஒருதலை காதல் ... அப்பத்தான் அவளுக்கு பிறந்தநாள் வருது ... அத கொண்டாட six chick கோஷ்டியையும் , dyan னையும் வீட்டுக்கு கூப்ட்டிட்டு போறா.. அங்க அவ பிரண்ட் matt அவளுக்கு தானே செய்த அவளோட கனவு வீட்டு மாடல் ஒன்றை பரிசாக தருகிறான் ... அதை ஒரு அறைக்குள் சென்று வைக்கிறாள் ... இதற்குள் பார்ட்டிக்கு வந்திருந்த six chixks குழுவை சேர்ந்த ஒருத்தி அவளுக்கு ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறாள் ... அவளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு , அங்கு இருக்கும் உணவு பொருட்களை எல்லாம்
எடுத்து சென்று விடுகிறார்கள் .. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் matt பூட்டியிருக்கும் கதவை திறந்து அவளை விடுவிக்கிறான் ... யாரும் பார்ட்டியில் இல்லாததை கண்டு கோபப்படும் அவள் , எல்லாத்துக்கும் காரணம் நீதான், அவர்களை ஏதாவது சொல்லி நீதான் விரட்டி இருப்பாய்  என்று சொல்லி அவனை திட்டி வெளியே அனுப்பி விடுகிறாள் ... பின்னர் அந்த அறைக்குள் சென்று நான் சிறு பெண்ணாக இருப்பதால்தான் யாரையும் என்னால் கவர முடியவில்லை  எனக்கு மார்பகங்கள் சிறிதாய் இருக்கு , எடுப்பான உடல் அமைப்பு இல்லை , dyan என்னை விரும்பாததற்கு காரணம் இதுதான் .. நான் உடனே முப்பது வயது பெண்ணாக மாற வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கி விடுகிறாள் ...




மறு நாள் காலை எழுந்து பார்த்தால் முப்பது வயது பெண்ணாக இருக்கிறாள் .. வீடு புதிதாக இருக்கிறது ... அவளுடன் வேறு ஒரு ஆண் தங்கி இருக்கிறான் ... அவளின் பெற்றோர்கள் அவளுடன் இல்லை .. அவளுக்கு என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை ... அவளுக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அவள் கொண்டாடிய பிறந்த நாள் விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ... 
 
ஒருவழியாக அவளுடன் இருக்கும் ஆண் dyan என்றும் .. அவள் அவளுக்கு மிகவும் பிடித்த poise magazine அலுவலகத்தில் chief editorஆக வேலை செய்கிறாள் , அங்கே அவளின் நெருங்கிய தோழி six chicks குழுவின் தலைவி lizy என்றும் தெரிந்து கொள்கிறாள் ... ஆனால் அலுவலகத்தில் அவளை யாரும் மதிக்கவில்லை ... காரணம் அவளுக்கும் lizy யின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது ... மேலும் அவள் போட்டி பத்திரிகை sparkle உடன் கள்ள தனமாக தொடர்பு வைத்து இங்கு இருக்கும் செய்திகளை அங்கே சொல்லி பணம் சம்பாதித்து கொண்டு இருந்திருக்கிறாள் ... அதனால் சில முறை வேலையை விட்டு தற்காலிகமாக நீக்கவும்பட்டிருக்கிறாள்.... மேலும் தன பெற்றோர் சம்மதம்

இல்லாம் dyan உடன் கல்யாணம் ஆகாமல் வாழ்வதால் அவர்களும் இவளுடன் பேசுவதில்லை ... இப்படி அவள் ஆசைப்பட்ட ஆண் , தோழிகள் , வேலை என்று எல்லாம் இருந்தும் தான் யாரிடமும் நல்ல பேர் வாங்கவில்லை என்று வருத்தபடுகிறாள் ...
 
 


தன் நண்பன் matt எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை .. அவனை தேடி கண்டுபிடிக்கிறாள் .. நம் நட்பு இன்னமும் தொடர்கிறதா என்று அவனிடம் கேட்கிறாள் ... அவன் அந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு பிறகு நீ என்னுடன் பேசவே இல்லை .. நானும் வேறு பள்ளிக்கு மாறி சென்று விட்டேன் .. அதன் பிறகு இப்பொழுதுதான் உன்னை சந்திக்கிறேன் என்று சொல்கிறான் ... இனிமேல் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று மீண்டும் அவனின் நட்பு வட்டத்திற்குள் வருகிறாள் ...


 இந்நிலையில் அவள் அலுவலகத்தில் ஒரு பிரட்சனை... magazine circulation குறைந்து விடுகிறது ...  magazine parkle இவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது ... இதனால் magazine circulationஐ பெருக்க வேண்டி redesign செய்ய சொல்கிறார் முதலாளி .. அந்த பொறுப்பு இவளுக்கும் , அவளின் தோழி lizyக்கும் கொடுக்க படுகிறது ... matt ஒரு புகைப்பட கலைஞன்.. அவனுடன் சேர்ந்து ஒரு நல்ல டிசைன் ஒன்றை ரெடி பண்ணுகிறாள் ... lizy கொண்டு வரும் டிசைன் நிராகரிக்கப்பட்டு இவளின் டிசைன்ஐ ஓகே செய்கிறார் முதலாளி ... இதனால் கோபம் கொண்ட lizy அந்த டிசைன்ஐ sparkle கம்பனிக்கு திருடி விற்று விடுகிறாள் ... ஜென்னாவிருக்கும் sparkle கம்பனிக்கும் ஏற்கனவே இருக்கும் தொடர்பை வைத்து   lizy திருட்டு பட்டத்தை இவள் மேல் கட்டி விடுகிறாள் ... மேலும் இவளை பற்றி mattடிடம் தவறாக போட்டு கொடுக்கிறாள் .. matt இவளை விட்டு பிரிகிறான் ... வேலையை விட்டு தூக்க படுகிறாள் ... dyan வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறான்... யாரும் இல்லாமல் அனாதையாக நிற்கிறாள் ... இந்நிலையில் matt திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறாள் .. அங்கே matt டின் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது அவனிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகிறாள் ... அவன் இவளை நம்பவில்லை ... அவளை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறான் ... இவள் அந்த வீட்டின் ஒரு அறைக்குள் சென்று அழுகிறாள் .. அங்கே matt அவளுடைய பதிமூன்றாவது பிறந்தநாளில் பரிசாக தந்த அந்த வீடு இருக்கிறது .. அதை பார்த்தவுடன் அவளுக்கு அழுகை பீறிடுகிறது ... நான் மீண்டும் பதிமூன்று வயது பெண்ணாகவே மாற வேண்டும் என்று சொல்லி அழுகிறாள் ...அடுத்த காட்சியில் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறாள் .. அங்கே பதிமூன்று வயது matt நான் எந்த தவறும் செய்யவில்லை , அவர்கள்தான் பார்ட்டி முடியும் முன்னரே சென்று விட்டார்கள் என்று அவளிடம் மன்னிப்பு கேட்கிறான் ... அவள் எதுவும் சொல்லாமல் அவனை கட்டி பிடித்து கொள்கிறாள் ... படமும் அத்துடன் முடிந்து விடும் ...

படத்தோட ரெண்டாவது சீன்ல ஹீரோயின் அவ வீட்டுக்கு வருவா... உடனே அவங்க அம்மா , அந்த பேப்பேர எல்லாம் எடுத்து வெளிய போடுன்னு சொல்லுவாங்க ... நான்கூட வீட்ட கூட்டி சுத்தம் பண்ண சொல்லுறாங்க போல இருக்குன்னு நெனச்சா , அந்த பொண்ணு சட்டுன்னு அவ போட்டிருக்குற பணியன்குள்ள கையவுட்டு பேப்பெரா எடுத்து வெளிய போடும் .. நான் அதுக்கு முந்தின சீன்லதான் ஆகா எவ்வளவு பெருசா இருக்குன்னு ரசிசிக்கிட்டு இருந்தேன் ... அப்புறம்தான் தெரிஞ்சது நாம இவ்வளவு நேரம் பேப்பர பாத்து ஜொள்ளு விட்டிருக்கோம் அப்படின்னு... நம்ம ஊருலயும் பெருசா காட்டுறது எல்லாம் இப்படிதான் இருக்குமோ? எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ?,  நம்ம குஷ் , நமீ, சிம்ரன் ஆண்டிகளுக்குதான் வெளிச்சம் ....


திடீர்னு பெரிய மனுசியா மாறுன ஹீரோயின் கண்ணாடில தன்னோட முகத்த பாத்து பீதி ஆகி குப்புற விழுந்துடுவா .. விழுந்திட்டு அவளோட மார்பகங்களை பாப்பா , ரெண்டும் பெருசா இருக்கும் ... உடனே சந்தோசத்துல ரெண்டையும் கையாள பிடிச்சி அளந்து பாத்து சந்தோசபடுவா.... இப்படி படம் முழுவதும் அப்பப்ப மனசு விட்டு சிரிக்கிற மாதிரி ஜாலியா கொண்டு பொய் இருப்பாரு இயக்குனர் ...

படத்தோட கதைய படிச்சிட்டு இதுல நெறைய ஷகீலா மேட்டர் இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுறாதீங்க... படத்துல அந்த மாதிரி சீனே கெடையாது .. ரெண்டே ரெண்டு லிப் டு லிப் கிஸ் அவ்வளவுதான் (ஒரு இங்கிலீஷ் படத்துல இது கூட இல்லைனா எப்படிங்க?) ...

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நகைசுவையாகவே எழுதி இருப்பார் இயக்குனர் ... கதாநாயகி லிப்டுக்குள் சந்திக்கும் சிறுமி , அவளுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் தோழியின் கணவன் இப்படி ஒரே ஒரு சீன் வரும் நடிகர்கள் கூட நம்மை சிரிக்க வைக்கிறார்கள் ... அதே போல் படம் கிளைமாக்ஸ் சீன் வரும் வரை நமக்கு குழப்பமாகவே இருக்கும் , இவள் ஏன் பெரிய மனுசியாக மாறினால் , இடையில் என்ன நடந்தது , இவளுக்கு ஏன் எல்லாம் மறந்தது என்று ... ஆனால் இயக்குனர் ரொம்ப கூலா இதெல்லாம் கனவு மச்சி , கனவு அப்படின்னு கிளைமாக்சுல நமக்கு அல்வா குடுத்திருப்பாரு... ஆனா அந்த அல்வாவும் டேஸ்ட்டாத்தான் இருக்கு...

படத்தோட மைய கரு இவ்ளோதான் ... நாம எடுக்கிற முடிவுகள் .. நம்மளோட ஆசைகள் எப்பவுமே சரியா இருக்காது... நாமதான் எது உண்மை .. எது சரி அப்டிங்கிறத சரியா புரிஞ்சிகிட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும் .. ஒரு தடவை தப்பு பண்ணிட்டா அத சரி பண்ண வாழ்க்கை நம்ம அனுமதிக்காது... இத சீரியஸா சொல்லாம ரொம்ப காமெடியா சொல்லி இருக்கிறாரு இயக்குனர் ...



மெசேஜ் சொல்லுறேன்னு பயங்கர சீரியஸா படம் எடுக்குற இல்லைனா காமெடி படத்துல மெசேஜ் சொல்ல முடியாதுன்னு லாஜிக்கே இல்லாம படம் எடுக்கிற நம்ம ஊரு இயக்குனர்களே .. ஒரு நல்ல மெசேஜ்ஜ எப்படி காமெடியா சொல்லுறதுன்னு இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க....


இந்த படமும் நம் இயக்குனர்களால் சுடப்பட்டுள்ளது ... நியூ படம் பாத்தவங்களுக்கு புரியும்...


இந்த மாதிரி ஒரு ஹீரோயின் oriented subject நம்ம ஊருல வருமா? வந்தாலும் நம்ம மக்கள் ரசிப்பாங்களா?

Thursday, July 8, 2010

உலக படம் - My Little Bride




பதிவுலகம் வந்து நான் கற்று கொண்ட நல்ல விசயங்களில் ஒன்று உலக படங்கள் பார்க்க கற்று கொண்டது .... முதலில் இங்கு எல்லாரும் உலக படங்களை சிறந்த படங்கள் என்றும் நம் ஊர் படங்களை இன்னும் வளர வேண்டும் என்றும் எழுதியதை பார்க்கும் பொழுது அக்கரை பச்சை என்ற மன நிலையில் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் ... பின்னர் என் நண்பர் ஒருவரின் மூலம் சில உலக படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது .. அவர் ஒரு ஹோரர் பட ரசிகர் , அவர் கொடுத்த படங்கள் அனைத்தும் அந்த வகையை சேர்ந்த படங்களே... ஆனா நான் ரொம்ப இளகிய மனசுக்காரன் .. ஒற்றன் அப்படின்னு ஒரு அர்ஜுன் படம் வந்தது ஞாபகம் இருக்கா? அந்த படத்துல வில்லன் ஒருத்தனோட கை விரல மடக்கி ஒடுச்சிடுவான் , அந்த காட்சிய பாத்துட்டே நாலு நாலு சோறு தண்ணி உள்ள எறங்காம ஜன்னி வந்து படுத்திருந்தேன் .. அப்படி பட்ட என்ன saw , hostel , wrong turn ன்னு தன் கால தானே அறுக்குறது, கண்ண நோண்டி சாவிய எடுக்கிறதுன்னு கொடூரமான காட்சிகளா பாக்க வச்சி கிட்டத்தட்ட என்னையும் ஒரு சைக்கோ மன நிலைக்கு கொண்டு வந்துட்டாரு அந்த நண்பர் ... ஒரே ரத்தமா பாத்து பாத்து எனக்கே வெறுப்பா இருந்த நேரத்துல , ஏதாவது ஒரு ரொமாண்டிக் காதல் கதையுடன் கூடிய ஜாலியான படம் கெடைக்காதான்னு மனசு ஏங்கிகிட்டு இருந்த நேரத்துல, ஒரு தோழியின் மூலமாக இந்த படம் எனக்கு கிடைத்தது..

இந்த படத்தை பார்த்த பின்னர்தான் உண்மையிலேயே நம் ஊர்காரர்கள் இன்னும் சினிமாவில் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிந்தது. கதை நம் ஊர் படங்களில் பார்த்து பார்த்து அலுத்து போன  ஒரு களம்தான்.. பிடிக்காத இருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது , அதன் பின்னர் அவர்கள் வாழ்கையில் நடக்கும் விசயங்களை,, எப்படி அவர்களுக்குள் காதல் பிறக்கிறது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருப்பார்கள் ... கதை ரொம்ப பழசான கதைதான் ..அதை எடுத்த விதத்தில்தான்  நம் இயக்குனர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் Ho-joon Kim .



படத்தின் நாயகின் பெயர் beuon ... பதினைந்தே வயது ஆகும் அவள் ஒரு பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி .. படத்தின் நாயகன் பெயர் sangmin ... ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற இளைஞன் ... beuon படிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவள் .. sangmin நேர் எதிர் , பெண்களின் மேல் ஈடுபாடு உடையவன் ... இவனை beuounக்கு சுத்தமாக பிடிக்காது .இருவருமே தங்கள் தாத்தாவின் மேல் மிகுந்த பாசம் உடையவர்கள் .. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் ... திருமணத்திற்கு பின்னர் beuon தன் பள்ளியில் யாரிடம்மும்  தான் திருமணம் ஆனவள் என்பதை சொல்ல பயப்படுகிறாள் ... எல்லோரும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று . அவளுக்கு பள்ளியில் jungwoo என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகிறது , இவன்தான் தன் காதலன் என்று நம்புகிறாள் ...இந்த விஷயம் சங்க்மின்க்கும் தெரிய வருகிறது  . இந்நிலையில் sangmin அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வருகிறான் ... அதன் பின்னர் நடக்கும் கலாட்டாக்களை சுவாரசியமாகவும் இறுதியில் மனதை தொடும் முடிவோடும் இயக்கி இருப்பார் இயக்குனர் ...

இந்த கதையை படித்தவுடன் எங்கயோ கேள்விபட்டது போல்  இருக்கா? அப்படினா நீங்க ஸ்ரீகாந்த் , மீரா ஜாஸ்மின் நடிச்ச மெர்குரி பூக்கள் படம் பாத்திருப்பீங்க.. நம்ம ஆளுக சாதாரணமான ஆளுக கிடையாது .. உலகத்துல எந்த மூலையில நல்ல படம் வந்தாலும் தேடி பிடிச்சி காப்பி அடிச்சிடுவாணுக ... ஆனா மெர்குரி பூக்கள் படத்த Ho-joon Kim பாத்தாருனா அந்த இயக்குணர நாலு வார்த்த கேவலமா கெட்ட  வார்த்தையில திட்டிட்டு தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிகிவாறு ... தன்னோட கதையை இப்படி நாரடிச்சிட்டானுகளேன்கிற துக்கத்துல...

படத்தோட மிக பெரிய பலமே beoun கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற Moon Geun Youngதான்.. ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணோட முகத்த அப்படியே வெளிபடுத்தி இருக்கும் பொண்ணு  ... திருமணம் நடக்கும் நாள் அன்று தன் அம்மாவிடம் அழும் காட்சி , தேனிலவுக்கு தன் கணவனை மட்டும் தனியாக அனுப்பி விட்டு தன் பாய் பிரண்டுடன் மழையில் சுற்றும் காட்சி , இரவில் தன் அருகில் படுக்க வரும் தன் கணவனை பென்சில் கொண்டு தாக்கும் காட்சி , மறு நாள் காலையில் அவனின் ஜட்டியை கழட்டி விட்டு நிர்வாணமாக இருக்கும் அவனை பார்த்து குழைந்தையை போல சிரிக்கும் காட்சி , கடைசியில் தன் கணவன் மேல் இருக்கும் உண்மையான காதலை புரிந்து கொண்டு அவனிடம் அழுது கொண்டே தன் காதலை வெளி படுத்தும் காட்சி என்று
படம் முழுக்க பட்டைய கிளப்பி   எல்லாரையும் ஈசியா பின்னுக்கி தள்ளி நம்ம மனச முழுசா அள்ளிடும்   இந்த குட்டி பொண்ணு...

படத்தின் நாயகன் Kim Rae Won ... தன மனைவிக்காக பள்ளி ஆண்டு விழா மேடையில் ஓவியம் வரையும் பொழுது தன்னையும் அறியாமல் சிறு வயதில் அவளுடன் ஊஞ்சல் ஆடும் படத்தை வரைந்து விட்டு அதை பார்த்து கண்ணீர் விடும் பொழுது நம் மனதை அள்ளுகிறார்... தன் மனைவி வேறு ஒருவனுடன் ஊர் சுற்றுகிறாள் என்பதை அறிந்திருந்தும் இரவு லேட்டாக வீட்டுக்கு வரும் அவளை கோபபடாமல் அன்பாக அறிவுரை சொல்லும் ஒற்றை காட்சியிலேயே  அவர் காதலை நமக்கு புரிய வைத்து இருப்பார் இயக்குனர்  ., படத்தில் இந்த மாதிரியான கதையோடு ஒட்டி வரக்கூடிய காட்சிகள் அதிகம்...

பின்னணி இசை நம் ரகுமானை நினைவு படுத்துகிறது ... இதில் மட்டும் நம் இளையராஜாவை அடித்து கொள்ள யாரும் கிடையாதோ? இல்லை எனக்கு அப்படி தோன்றுகிறதோ?

படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்ற ஆரம்பித்து விடுவீர்கள் , படம் முடியும் பொழுது மீண்டும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு கட்டாயம் தோன்றும் ... அதுதான் அந்த இயக்குனரின் வெற்றி .. இதை போல பீல் குட் படங்கள் நம் ஊரிலும் எடுக்க ட்ரை பண்ணுகிறார்கள் , ஆனால் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் காட்சி அமைப்பில் சொதப்பி விடுகிறார்கள்  ... இப்பொழுது இருக்கும் இயக்குனர்களில் இந்த படத்த தமிழில் ரீமேக் செய்ய தகுதி யுடைய இயக்குனர் செல்வராகவன் மட்டுமே ... நாயனாக தனுசும் , நாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்ளியும் நடிக்கலாம் ...

இப்படி ஒரு படம் நம் ஊரில் வராதா  என்று என்னை ஏங்க  வைத்து விட்டது இந்த "My Little Bride"

இந்த வரிசையில் அடுத்த உலக சினிமா "My sindrella story"... விரைவில் அந்த படத்தின் விமர்சனத்தோடு சந்திக்கிறேன் ...



Wednesday, July 7, 2010

தங்க மகன் விருது




எனக்கு  பதிவுலகத்திற்கு வந்த பின்னர் கிடைக்கும் முதல் விருது , அதுவும் அருமை நண்பர் பாலாவின் கையால் பெற்ற விருது .... பாலாவின் சண்முக ச்சீ சமூக நல சிந்தனைகள் தெறிக்கும் பதிவுகளுக்கு இருக்கும் நிறைய ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவர் மூலம் இந்த விருதை நான் பெறுவது எனக்கு பெருமையே ....

இந்த விருதை தரும் பொழுதே நண்பர் கூறிய ஒரு விஷயம் நானும் எனக்கு பிடித்த நான்கு பதிவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம் ... இதோ எனக்கு பிடித்த இல்லை என்னை கவர்ந்த அந்த நான்கு பதிவர்கள் ...


நான் பதிவுலகம் என்று ஒன்று உள்ளது என்பதை அறிந்து கொண்டதே இவரின் பதிவுகள் மூலமாகத்தான்... நான் படித்த முதல் பதிவு இவருடையதுதான் ... நான் முதல் பின்னூட்டம் இட்டதும் இவருக்குத்தான் ... புதியவன் என்று ஒதுக்கி விடாமல் என்னுடைய பின்னூட்டங்களுக்கும் பதில் அளிப்பார் .... சில நேரம் சண்டையே நடந்துள்ளது எங்களிடையே ... நானும் எழுதினால் நான்கு பேராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது இவரின் தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களே ... இந்த விருதை அவருக்கு தரும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை .. ஆனால் ஆசை இருக்கிறது .. எனவே அவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன் 


பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ... தலையின் தீவிர ரசிகர் என்னை போலவே ... என்னை ஆரம்பத்தில் இருந்து ஊக்கிவித்து வரும் நண்பர் .. அவரும் நன்றாக எழுதுவார் ... ஆனால் தன்னை விளம்பரபடுத்திகொள்ள மாட்டார் .. அவரின் பதிவுகளை படித்தால் அவரின் எழுத்து திறமை புரியும் ... என்னை ஊக்குவித்த அவரை நான் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதை அவருடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் ....


இவரின் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பிடிக்கும் ....   நையாண்டி மன்னர் இவர் ...

phantom mohan 

முதலில் பருப்பு என்ற பெயரில் எழுதி கொண்டு இருந்தார் ....  நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நக்கல் நையாண்டியுடன் தன் பதிவுகளில் எழுதுபவர் ... ஒரு நையாண்டி பதிவு எப்படி எழுத வேண்டும் என்பதை நான் இவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன் ....



Tuesday, July 6, 2010

இன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ?

நேத்து வழக்கம் போல வகுப்புல பாடம் எடுத்துகிட்டு இருந்தேன் ... அது ஆராய்ச்சி கட்டுரைகள் தயார் பண்ணுவது சம்பந்தமான பாடம்... நாம எந்த ஆராய்ச்சி பண்ணுனாலும் அதை கடைசியா கணித முறையில் நிரூபணம் செய்ய வேண்டும் ... அப்படி நிரூபணம் செய்தால் மட்டுமே உன்னோட ஆராய்ச்சிய இந்த உலகம் ஒத்துகொள்ளும்,,, இல்லை என்றால் நீ கொண்டு வந்த ஆராய்ச்சி முடிவுகள் சரியானதா இருந்தாலுமே இந்த உலகம் அதை புறக்கணித்து விடும் ... தவறான ஒரு விசயத்த நீ கணித முறையில் சரி என்று காட்டினால் இந்த உலகம் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் , அதே போல உண்மையான ஒரு விசையத்தை நீ கணித முறையில் பொய் என்று நிரூபித்தாலும் அதையும் ஏற்று கொள்ளத்தான் செய்ய வேண்டும் .. இதுதான் இன்றைய நடைமுறை விதி என்று மாணவர்களிடம் கூறி கொண்டு இருந்தேன் ...

கடைசி பெஞ்சில இருந்து ஒரு சத்தம் " அப்ப எந்த விசயத்தையும் கணித முறையில் நிரூபித்தால் நீங்க ஒத்துகுவீங்க அப்படித்தான சார்?"

அதில் இருந்த நீங்க என்ற வார்த்தையும் , சத்தம் கடைசி பெஞ்சில் இருந்து வந்ததும் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகத்தை எனக்கு உண்டு பண்ணியது ....

"சந்தேகம் இருந்தா எழுந்திருச்சி நின்னு கேளு .. அப்பத்தான் பதில் சொல்லுவேன் " என்றேன் நான்..

அப்பொழுது எழுந்து நின்ற அந்த மாணவனை பார்த்த பொழுது எனக்கு சந்தேகம் உறுதி ஆகி பீதியை கிளப்பியது .. அவன் ஒரு வாரம் முன்னர்தான் என்னிடம் Exam Fees கட்ட வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான்... பயபுள்ள அதில் ஏதும் வெளையாட்டு காட்டிடுவானோ என்று .. இருந்தாலும் நம்மகிட்ட படிக்கிறவன் அந்த அளவுக்கெல்லாம் அயோக்கியனா இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில்

"என்ன விடுடா , அறிவியல் உலகமே அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் " என்றேன்

"சார் மத்தவங்கள விடுங்க , நீங்க ஒத்துக்குவீங்களா" என்று திரும்பவும் அங்கேயே வந்து நின்றான்

"ஒத்துகிடுவேண்டா" என்றேன் ஒரு வித பீதியுடன் ...

மதிய உணவு இடைவேளை ... என் அறைக்கு அந்த மாணவன் வந்தான் ...

"சார் கேட்டவுடனே பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் .. இந்தாங்க உங்க பணம்" என்று நீட்டினான்

அதை பார்த்த நான் அப்படியே shock ஆகிட்டேன் .. பையன்  கையில ஒத்த பத்து ரூபா நோட்டு..

"டேய் நான் கொடுத்த காசுக்கு வட்டியெல்லாம் வாங்க மாட்டேன் .. மொத்த பணமும் எப்ப கெடைக்குதோ அப்ப கொண்டு வா , ரெண்டு மாதம் ஆனா கூட பரவா இல்லை ... மொத்தமா கொடுடா " என்றேன்

"சார் மொத்த பணமும் இதுதான்" கூலாக சொன்னான் ...

" டேய் எனக்கு நெறைய வேலை இருக்கு.. கடுப்ப கிளப்பாத ... எடத்த காலி பண்ணு .. " டென்சனாக கத்தினேன் ..

"சார் நீங்கதான எந்த ஒரு விசயத்தையும் கணித முறையில் நிரூபணம் செய்தால் ஒத்துகுவேன்னு சொன்னீங்க " என்றான்

"ஆமாம் சொன்னேன் அதுக்கு இப்ப என்ன?"

"நான் உங்களுக்கு எவ்வளவு தரனும்"

"ஆயிரம் ரூபாய்"

"ஆயிரம் ரூபாயும் பத்து ரூபாயும் ஒண்ணுதான்னு நிரூபணம் செய்தால் ஆயிரம் ரூபாய்க்கு பதிலா இந்த பத்து ரூபாயை வாங்கிகிடுவீங்களா? " என்று கேட்டு விட்டு ஒரு பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தான் ... இரண்டு நிமிடம்தான் எழுதுவதை நிறுத்தி விட்டு அதை என்னிடம் கொடுத்தான் ...

அதுல இப்படி எழுதி இருந்தான்

To Prove 1000 Rs           =       10 Rs
Proof:


1 Rs                     =                     100 Paisas
 
                            =                    10 paisas * 10 paisas
 
                           =                     0.1 Rs * 0.1 Rs
 
                           =                    0.01 Rs
 
                           =                   1 Paisa
 
 
1 Rs is equal to 1 Paisa
 
so 1000 Rs is equal to 1000 Paisa that is 10 Rs
 
thus Proved...
 
 
நானும் இதுல ஏதாவது தப்பு இருக்குமான்னு  மணிரத்னம் படத்துல முதலாளித்துவம் இருக்கான்னு கண்ணுல வெளக்கெண்ணை விட்டு பாக்குற பதிவர்கள் மாதிரி அரைமணி நேரமா தேடி தேடி பாத்தேன் ... எதுவுமே தெரியவில்லை ..
 

 கடைசியில தோல்விய ஒத்துகிட்டு வெறும் பத்து ரூபாயை வாங்கிகிட்டு வீட்டுல போய் கதவ பூட்டிகிட்டு அரைமணி நேரமா அழுதுகிட்டு இருந்தேன் ....


பயபுள்ளைக எப்படி எல்லாம் ஏமாத்துராணுக?


இந்த இன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ?    


ஹீ ஹீ நான் உங்ககிட்ட என்ன கேக்க போறேன் .. புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்க அவ்ளோதான் ...

Monday, July 5, 2010

என்னவள் என்னும் குட்டி பிசாசு....

இந்த உலகத்துல இருக்கிற எல்லா காதலிகளும் இப்படிதானான்னு தெரியல ... ஆனால் என்னவள் என்ன படுத்துற கஷ்டம் பத்தி எழுதனும்னா இந்த ப்ளாக் பத்தாது ... கஷ்டத்த அடுத்தவங்ககிட்ட சொன்னா பாதியா குறையுமாமே .. அதனால இத படிக்கிற எல்லாரையும் கஷ்டபடுத்தலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்

(நடு நடுவுல வர சிகப்பு கலர் கமெண்ட் எல்லாம் நம்ம மைன்ட்  வாயிஸ் , கவுண்டர் மாதிரி நம்மள அப்பப்ப கால வாரும்)

கஷ்டம் நம்பர் 1 :

airtel  எப்ப புல் டால்க் டைம் ஆபர் போட்டாலும் என்னோட பர்ஸ் empty தான் ... காலையில ஒரு மெசேஜ் வரும் ... " செல்லம் என்ன திட்டக்கூடாது, இன்னைக்கு 777 ரூபாய்க்கு புல் டால்க் டைம் ஆபர் போட்டிருக்கானுக .. ப்ளீஸ் செல்லம் போட்டு விடுடா"... அப்படின்னு ... போன வாரம்தாண்டி 301 ரூபாய்க்கு போட்டு விட்டேன் அதுக்குள்ளே காலி பண்ணிடயான்னு கேட்டா அங்க இருந்து பதில் வரும்  "இருபத்திநாலு மணிநேரமும் போனுல நீயும் நானும் ஓசியாவே காசு இல்லாம பேச நீ ஒன்னும் சஞ்சய் ராமசாமியும்  இல்ல நான் அம்பானி பொண்ணும் இல்ல...   " . பேச மட்டும் தெரியுது மூடிட்டு டாப் அப் பண்ணுடான்னு நேரடியா சொல்லாம கலைஞர் மாதிரியே சுத்தி வளச்சி சொல்லுவா ... அன்னைக்கி 777  ரூபா அம்பேல் ...

( டேய் வெக்கம் இல்லாதவனே ... இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி அத ப்ளோக்ல வேற எழுதுற ... டேய் உண்மைய சொல்லுடா இதுவரைக்கும் உங்க அப்பா இல்ல அம்மா இல்ல தம்பிக்கு ஒரு பத்து ரூபாய்க்கு டாப் அப் பண்ணிருப்பயாடா? .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே! ) 

கஷ்டம் நம்பர் 2 :

அவளுக்கு பைக்ல எங்கூட ஊர் சுத்துரதுன்னா ரொம்ப பிடிக்கும் ... ஆனா என்னோட  பைக்க மட்டும் பிடிக்காது ... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பைக் வேணும் அவளுக்கு.. பொல்லாதவன் படம் பாத்துட்டு பல்சர்ல போகணும்னு சொன்னா .. நானும் ஓசி பைக்குக்கு நாயா அலைஞ்சேன் .... நம்ம பசங்க எல்லாம் ரொம்ப உசாரு .. பைக்க மட்டும் யாருக்கும் ஓசியா தரவே மாட்டானுக ... அட்லீஸ்ட் ஒரு குவாட்டேரும் கோழி பிரியாணியும் வாங்கி தரனும்  பைக் கரக்ட் பண்ண... அதோட டேங் புல் பண்ணனும் ... இப்படி கஷ்டப்பட்டு பணத்த வாரி எறச்சி வண்டிய கரக்ட் பண்ணி கொண்டு போனா ,டேய் என் பிரெண்ட் ஒருத்தி சொன்னா ஜாலியா லவ்வேரோட பைக்ல போக unicorn தான் பெஸ்ட்டாம் , அதுலதான் பின் சீட் முன் சீட்டவிட உயரமா இருக்குமாம் ...அந்த வண்டிலேயே போகலாம்டா அப்படின்னு குண்ட தூக்கி போடுவா ... unicorn owner  கொஞ்சம் காஸ்ட்லி பார்ட்டி .. five ஸ்டார் ஹோடேல்லுல பாரின் சரக்க அபேஸ் பண்ணிட்டான்... நான் பைக் ஓசி வாங்க செலவு பண்ணுன காச சேத்து வச்சிருந்தேன்னா ,என்னோட இந்த துறுபிடிச்ச CT100 வண்டிய தூக்கி போட்டுட்டு ஒரு புது காரே வாங்கியிருந்திருப்பேன்...

(மவனே பைக்கோட போச்சேன்னு சந்தோசபடு ... நீ மட்டும் கார் வாங்கி இருந்தேன்னு வையி ... கண்பார்ம்மா நீ பிச்சைகாரன் ஆகிருப்ப .. பின்ன பைக் ஓசி வாங்கவே இவ்வளவு செலவுனா .. கார் ஓசி வாங்கணும்னா? )

கஷ்டம் நம்பர் 3  :

அவளும் தல ரசிகையா இருக்கிறதுதான் எனக்கு பெரிய கஷ்டமே... தல படத்த  முதல் நாள் நாலு ஷோவுக்கும் என் நண்பர்களோட ஆட்டம் போட்டுகிட்டே பாக்குறதுல இருக்கிற சந்தோசமே தனி ... இப்ப எல்லாம் தல படம் ரிலீஸ் ஆகுற நாள் கரக்டா போன்  பண்ணிடுவா... டேய் இன்னைக்கு தல படம் ரிலீஸ் ஆகுதுல்ல... எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துவை... நான் சரியா பத்து மணிக்கு தியேட்டர் வந்திடுவேன் .. லேட்  பண்ணிடாம வந்திடுன்னு ... பிகரோட படம் பாக்குறதும் சுகமான அனுபவம்தான் ... ஆனா கீழ என் நண்பர்கள் எல்லாம் பயங்கர குஷியா விசில் அடிச்சிகிட்டு , ஆட்டம் போட்டுக்கிட்டு படம் பாத்துகிட்டு இருக்கிறப்ப நான் பால்கனியில அவளோட அமைதியா விசில்கூட அடிக்க முடியாம தலயோட படத்த முதல் நாள்  பாக்குற கொடுமை இருக்கே .. அது தல ரசிகர்களுக்கு மட்டும்தான் பாஸ் புரியும் ...

( டேய் அதான் தளபதி படத்துக்கு க்ரூப்பா போய் கும்மி அடிக்கிறீங்களே அது போதாதா?)

கஷ்டம் நம்பர் 4 :

 அவளுக்கு சாக்லேட்னா   ரொம்ப பிடிக்கும் ... திடீர்ன்னு கால் பண்ணி டேய் சாக்லேட் சாப்பிடனும் போல இருக்குடா வாங்கி குடுடான்னு சொல்லுவா... அவ்ளோதான செல்லம் இரு பத்தே நிமிஷம் உனக்கு பிடிச்ச கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கிட்டு ஓடி வரேன் அப்படின்னு சொன்னா " எரும மாடு .. கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கணும்னா நான் வாங்கிகிட மாட்டேன் .. எனக்கு பாரின் சாக்லேட் வேணும் .. நேத்து என் பிரெண்ட் தந்தா... சூப்பெரா இருந்தது .. எனக்கு இப்ப சாப்பிடனும் போல இருக்கு வாங்கி குடு"ன்னு கொழந்ததனமா கேப்பா... எங்க ஊருல five star சாக்லேட்டே சூப்பர் ஸ்டார் மாதிரி எப்பவாதுதான் வரும் ... இதுல பாரின் சாக்லேட் எங்க போய் வாங்குறது ..எப்படியாவதுஅலைஞ்சி திரிஞ்சி நண்பனோட பாரின் ரிட்டேர்ன் சொந்த காரனை பிடிச்சி அவன் பண்ணுற அளப்பரையஎல்லாம் 
சகிச்சிகிட்டு அவன்கிட்ட ஒருமணி நேரம் மொக்க போட்டு அவன் சொல்லுற பாரின் கதைய எல்லாம் பொறுமையா கேட்டுகிட்டு ஒரு வழியா அவன தாஜா பண்ணி மேட்டர வாங்கிக்கிட்டு அவள தேடி போய் கொடுத்தா " எரும... எரும... காலையில கேட்டா சாயந்திரம்  வந்து கொடுக்கிற ,    நான் சாயங்காலத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டேன்னு தெரியாதா உனக்கு? என்ன குண்டாக்கி பாக்கனும்னு அவ்ளோ ஆசையா உனக்கு .. நீயே வச்சிக்கோ உன் சாக்லேட்ட" அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு என் முகத்த கூட பாக்காம " நான் போட்டிருக்கிற மெகந்தி எப்படி இருக்குன்னு சொல்லு" அப்படின்னு அவ கைய நீட்டுவா... அந்த மேகந்தியில இருக்கிற பெயர் தெரியாத உருவங்கள் எல்லாம் என்ன பாத்து வால் தட்டி சிரிக்கும் ...

( டேய் உன் மனச தொட்டு சொல்லு இது வரைக்கும் உன் தங்கச்சிக்கு ஒரு அம்பது பைசா ஆரஞ்சி மிட்டாயாவது வாங்கி தந்திருப்ப  ? மவனே கண்டிப்பா உனக்கு ஒருநாள் ஆப்பு கன்போர்ம்முடி  )

என்னதான் அவ என்ன இப்படி சின்ன சின்ன விசயத்துல கஷ்ட்படுத்தினாலும் ... அவ மேல எனக்கு கோபமே வர மாட்டேங்கிது பாஸ் ... பின்ன என்ன பாஸ் வாழ்கையில  கஷ்டத்தகூட சகிச்சிகிட்டு வாழ்ந்திடலாம் .. ஆனா சந்தோசமே இல்லாம வாழ முடியுமா?  நம்ம மொத்த சந்தோசமே அவதான பாஸ்....

Thursday, July 1, 2010

பதிவுலக சந்தேகங்களும் கோழைத்தனமான பதில்களும்

நண்பர் பாலா நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தார் ஆணாதிக்கம் , முதலாளித்துவம் , பார்பனீயம் , கடவுள நம்பிக்கை பற்றி ... அந்த பதிவை நன்றாக எந்த உள்நோக்கமும் இல்லாமல் படித்து பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும் , அவர் அதில் எதற்கும் ஆதரவாகவோ , எதிராகவோ எந்த வார்த்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் ... ஆணாதிக்கம் பற்றி அவர் எழுதியிருப்பதன் முக்கிய சாராம்சம் என்ன வென்றால் ஒரு பெண் ஏதேனும் தவறு செய்யும் பொழுது நாம் அவளை தட்டி கேட்டால் உடனே ஆணாதிக்க வெறியன் என்று சொல்லுகிறார்களே அது ஏன் ? என்ற கேள்விதான் ... அதற்க்கு உடனே தாங்களை பெண்சமூக காவலர்கள் என்று காட்டி கொள்ள வேண்டி சிலர் பதில் எழுதியிருக்கிறார்கள் ....

அந்த பதில்கள் படிக்க
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_4633.html  
http://pulavanpulikesi.blogspot.com/2010/07/blog-post.html

அவர்கள் பாலாவின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு பதில் , நீ எப்படி பெண்களை தம் அடிக்க கூடாது , தண்ணி அடிக்க கூடாது என்று சொல்லலாம் நீ ஒரு ஆணாதிக்க வெறியன் என்று அவரை திட்டி தீர்த்து விட்டார்கள் ... நண்பர்களே நீங்கள் ஒரு முறை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு பதில் சொல்லுங்கள் .... அவர் சொல்லியதில் என்ன தவறு உள்ளது .... ஆண் பெண் இருவருமே சமம்தான் ... ஏன் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேல்.. பழைய ரஜினி பட வசனம் போல சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் செய்யும் எல்லா வேலையும் பெண்களாலும் செய்ய முடியும் ... ஆனால் ஒரு குழைந்தையை பத்து மாதம் சுமந்து பெறுகிற பொறுமை அவர்களால் மட்டுமே முடியும் ... ஏதோ ஒரு காலத்தில் பெண்கள்  ஆண்களால் அடிமைகளாக நடத்த பட்டார்கள் .. இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது .. ஆனால் ஒரு ஆண் தவறு செய்யும் பொழுது பெண் தட்டி கேட்டால் அவளை வீரமான பொண்ணுப்பா என்று புகழ்கிறோம் .. ஆனால் ஒரு பெண் தவறு செய்யும் பொழுது ஒரு ஆண் தட்டி கேட்டால் அவனை ஆணாதிக்க வெறியன் என்று திட்டுகிறோமே ? ஏன் ....

பார்பனீயம் பற்றி அவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது ... ஏன் ஒரு விவாதம் நடக்கும் பொழுது பிராமணன் ஒருவர் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் பார்பனியன் அதான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று அவர்களின் கருத்துகளை எதிர் கொள்ள முடியாமல் அவர்களை ஜாதியின் பெயரில் அடிக்கிறீர்களே அது ஏன் என்றுதான் கேட்டார்...
ஒரு சில பிராமிணர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் ஒட்டு மொத்த பிராமினர்களையும் பார்ப்பனீய வெறியர்கள் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்டார்... உடனே தலித் மக்களை காக்க , அவர்களின் உரிமைகளை பெற்று தர தன எழுத்துகளின் மூலம் அவர்களின் கஷ்டங்களை தீர்க்க பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிலர் அதற்க்கு தரும் பதில் பிராமிணர்கள் எல்லாருமே அப்படித்தானாம்... எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் பிரமினர்களை பார்த்திருப்பார்களா இல்லை எல்லாரும் சொல்லுவதை வைத்து பிராமின் என்றால் இப்படிதான் இருப்பான் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதுகிறார்களா? நான் இப்படி எழுதினால் உடனே நானும் ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ? அதான் இப்படி எல்லாம் எழுதி அதை ஞாபகபடுத்தி கொண்டு இருக்கிறீர்களோ?


கடவுள் நம்பிக்கையை பற்றி அவர் கூறியதில் என்ன தவறு உள்ளது? உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு  ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் "பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா? " என்று ... இதுதான் உங்கள் கடவுள் எதிர்ப்பு பிரசாரத்தின் இன்றைய நிலைமை ... இங்கே கடவுள் எதிர்ப்பு என்பதை விட அந்த கடவுளை பின்பற்றுபவனை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது ... இதில் மக்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் எங்கே இருக்கிறது?

முதலாளித்துவம் என்றவுடனே உலகத்தில் இருக்கும் எல்லா முதலாளிகளும் கெட்டவர்களே என்ற எண்ணத்தில் ஏன் எழுதுகிறீர்கள்? சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு  அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான...  முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும்? ... நான் எல்லா முதலாளிகளும் நல்லவன் என்று சொல்ல வில்லை .... அதே போல் எல்லா முதலாளிகளும் கெட்டவனும் இல்லை ... தவறு செய்தால் அவனை மட்டும் குற்றம் சொல்லுங்கள் .. அவனை போல முதலாளியாக இல்லை பிராமினாக  இருக்கும் எல்லாரையும் ஏன் திட்டுகிறீர்கள்?

நண்பர் பாலாவின் எந்த கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து அவரை ஆணாதிக்க வெறியன் , பார்பனிய ஆதரவாளன் , முதலாளிகளின் கைப்பாவை என்று வழக்கம் போல மழுப்பி விட்டார்கள் ... இதற்க்கு பேர்தான் விவாதமா? அவர் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை .... எப்பொழுதும் போல திசை திருப்பும் வேலையை செய்து விட்டார்கள் ....

LinkWithin

Related Posts with Thumbnails