Followers

Copyright

QRCode
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Sunday, November 28, 2010

16 வயதினிலே முதல் ரஜினி படங்களும் நானும்


நண்பர் பாலா இந்த தொடர்பதிவிர்க்கு என்னை அழைத்திருந்தார் ... ஏற்கனவே ஒரு பதிவில் ரஜினியை பற்றி நான் எழுதியதில் எனக்கும் அவருக்கும் பின்னூட்டத்தில் பெரிய கருத்து யுத்தமே நடந்திருந்தது ...அவர் ரஜினிக்கு ஆதரவாய் நான் எதிரியாய் ... ஆனால் சண்டை ரஜினியின் படங்களை பற்றி இல்லை நிஜ ரஜினியின் சில சறுக்கல்களை பற்றி ... ஆனால் ரஜினியின் படங்கள் எனக்கு பிடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்ததினால் என்னை இப்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .. அவர் புரிதலுக்கு நன்றி ...

தான் நடிக்கும் எல்லா படங்களையும் மக்களுக்கு பிடிக்கும் படி நடிக்க முடியுமா ... இல்லை குறைந்தபட்சம் வெகுஜன மக்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவரின் ரசிகர்களையாவது வெறித்தனமாக ரசிக்க வைக்கும் படங்களை தர முடியுமா? முடியும் ரஜினியால் மட்டுமே ... காரணம் கதையில் அவர் காட்டும் அக்கறை ,அதைவிட பெரிய காரணம் வில்லன் கதாபாத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை படத்தில் தன கதாபாத்திரத்துக்கு இணையாக இடம் கொடுப்பது ... பாட்சா ரகுவரன் , படையப்பா ரம்யா கிருஷ்ணன் , சந்திரமுகி ஜோதிகா , தில்லு முள்ளு தேங்காய் சீனிவாசன் ஏன் இப்ப வந்த என்திரனில் ரஜினியே வில்லனாய் இப்படி அவரின் மிக பெரிய வெற்றி படங்களை எடுத்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாய் புரியும் ... சிங்கம் சிங்கத்தோடு மோதினால்தான் சுவாரஷ்யம் , சிங்கம் பூனைகுட்டிகளோடு மோதினால் அது நகைசுவை என்பதை தெளிவாய் புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி ... இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் சறுக்குவது இதில்தான் ...

start music

 பதினாறு வயதினிலே


ரஜினி வில்லனாக பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்... அந்த பத்த வச்சிட்டெயே பரட்ட , இது எப்படி இருக்கு வசனங்கள் இப்பொழுதும் பிரபலமான வசனங்கள்...


 தாய் மீது சத்தியம்

1978ல் வெளிவந்த கௌபாய் டைப் தமிழ் படம்... பழிவாங்கும் கதைதான் ஆனால் சுவாரஷ்யாமாக கொடுத்திருப்பார்கள்.. ரஜினி துப்பாக்கியை கையில் வைத்து சுத்தும் ஸ்டைல் இப்ப பார்த்தாலும் பிரபிப்பாய் இருக்கும்....

 பில்லா

ரஜினி நடித்ததிலேயே ரொம்பவும் electrifying ஆன படம் இதுதான் ... ரஜினி இதன் பின்னர் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் .... இதில் பெண்மை கலந்த ஒரு ஆண் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்... மை நேம் இஸ் பில்லா பாடல் இப்பவும் கேட்டால் நரம்பில் மின்சாரம் பாயும் உணர்வை கொடுக்கும் ...

 நெற்றிக்கண்

ரஜினி வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த இன்னொரு படம் ... எக்ஸ்ரே கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சரிதாவை பார்க்கும்போது ரஜினி காட்டும் முகபாவனைகள் அவரால் மட்டுமே முடியும் .... அதில் வரும் மாப்பிளைக்கு மாமன் மனசு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

 வேலைக்காரன்

ரஜினி இயல்பான நகைசுவையால் பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ... பின்னாளில் வந்த பல ரஜினி படங்களுக்கு முன்னோட்டமாய் இருந்த படம் .. இதே கதையில் ரஜினி பல வருடங்களுக்கு பின்னால் முத்து என்ற படம் எடுத்தார் ,, அதுவும் சூப்பர் ஹிட் ... இந்த அதிசயம் ரஜினியாள் மட்டுமே சாத்தியம் ...


 அண்ணாமலை

தமிழ் சினிமாவின் மைல்கல் என்று பல படங்களை கூறலாம் ... அதில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் இடம்பெற்று இருக்கும் என்றால் அது இந்த படம் மட்டுமே... ரஜினிக்கு என்று ஒரு திரைக்கதையை உருவாக்கிய படம் இது... ஒரே பாட்டில் பணக்காரனாவது , பன்ச் வசனங்கள் பேசுவது போன்ற தமிழ் சினிமாவை கெடுத்த ஆனால் ஹீரோகளை வாழ வைத்த பல விசயங்கள் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யபட்டன ... ரஜினி தொடையை தட்டி சவால் விடும் காட்சி அப்பொழுது பெரிய ஹிட் ...

 பாட்ஷா

நான் மேலே சொன்ன படங்கள் எதையும் நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை ... நான் முதல் முதல் தியேட்டரில் சென்று பார்த்த ரஜினி படம் பணக்காரன் .. அதன் பிறகு நான் பார்த்த படம் இது ... பரபர திரைக்கதையால் படத்தை வேகமாக கொண்டு சென்று இருப்பார்கள் .. மாணிக்கமாக வரும் ரஜினி வில்லனிடம் (ஆனந்தராஜ்) கரண்ட் கம்பத்தில் அடிவாங்கும் போது நான் அழுதே விட்டேன் ..பின்னர் ரஜினி அவனை அதே கம்பத்தில் கட்டி அடிக்கும் போது ஏதோ நானே அவனை கட்டி அடித்ததை போல என்னுள் அப்படி ஒரு வெறி ... அதை படத்தின் கடைசி வரை மெயிண்டேயின் பண்ணி இருப்பார்கள் .. வீட்டில் அழுது அடம்பிடித்து அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நான் பார்த்த படம் ...

 படையப்பா

நான் தனியாக சென்று தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் ... எனக்கு மிகவும் பிடித்த ரஜினியின் படமும் இதுதான் .. கே.எஸ் .ரவிக்குமார் இயக்கம் அப்படி .. மனிதர் ரஜினியை வைத்து சும்மா விளையாடி இருப்பார்... அந்த ஊஞ்சல் ஸீன் ரஜினியின் ஆல் டைம் பெஸ்ட் மாஸ் ... வயதான ரஜினியை அதிக நேரம் படத்தில் காட்டி இருப்பார் ... ஆனால் அது ஒரு குறையாகவே தெரியாமல் எடுக்க கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும் .... இந்த படத்தில்தான் முதல் முறையாக வில்லனே ஹீரோவை புகழ்ந்து பேசுவதை போன்ற வசனங்கள் இடம் பெற்றது ...(வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உண்ண விட்டு போகவே இல்லை) இன்று நம் டாக்குடர் படங்களில் இப்படிப்பட்ட வசனங்கள் வந்து நம் உயிரை வாங்குவது தனி சோக கதை ...

 சந்திரமுகி

நான் மேலே சொன்ன படங்கள் எல்லாம் சினிமா பற்றிய என்னுடய புரிதல் எனக்குள் வருவதர்க்கு முன்னரே நான் ரசித்த படங்கள் ... ஆனால் அந்த புரிதல் வந்த பின்னர் நான் கண்டு ரசித்த ஒரே ரஜினி படம் இந்த சந்திரமுகி... முதல் பாதி காமெடி மற்றும் காதல் இரண்டாம் பாதி கொஞ்சம் குணச்சித்திரம் கடைசியில் வில்லதனம் என்று ரஜினி கலவையாக நடித்த படம் ... இதற்க்கு முன்னர் ஒரே ஒரு ஹிட் கொடுத்த (கில்லி ) டாக்குடரே அப்பொழுது ஒரு படத்தில் முழுக்க முழுக்க தன் புகழ் பாடிக்கொண்டு இருந்த பொழுது(சச்சின் ), நூறு ஹிட்டுகளை வரிசையாக கொடுத்து இந்த படத்தில் அடக்கியே வாசித்தார் சூப்பர் ஸ்டார்... ஜோதிகாவின் நடிப்பும் இந்த படத்திற்க்கு பெரிய பலம்.. இந்த படத்தில் வந்த மறக்க முடியாத ஒரு வசனம் “என்ன கொடும சரவணன் இது” .. சத்தியமாய் இந்த வசனம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று அதை பேசும் போது பிரபு கண்டிப்பாய் நினைத்திருக்க மாட்டார்... 



இந்த பதிவை ஏற்கனவே பதிவுலகில் அனைவரும் அடித்து துவைத்து காயபோட்டுவிட்டபடியால் நான் அழைப்பது 

“குண்டு” ராஜகோபால் மற்றும் “சுடுசோறு” ம.தி. சுதா.... 



Thursday, November 25, 2010

பாட்டு கேட்கவா - தொடர் பதிவு

நேற்றும் இன்றும் என் இரண்டு பதிவுலக நண்பர்கள் என்னை இருவேறு தொடர்பதிவிர்க்கு அழைத்திருந்தார்கள் .. ஒருவர் நண்பர் பாலா , சூப்பர் ஸ்டாரின் பிடித்த பத்து படங்களை பற்றி எழுத சொல்லி இருந்தார் .. இன்னொரு நண்பர் நிலவின் மடியில் வினோ ... பெண்களின் குரலில் வந்த பத்து பாடல்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்...  ரஜினி சாரின் படங்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது ... அதர்க்காக  நான்  நிறைய விசயங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் ... நாளை அந்த பதிவை எழுதி முடித்து விடுவேன் ....   எனக்கு பிடித்த பெண்கள் குரலில் வந்த பத்து பாடல்களை இன்று இந்த பதிவில் வரிசைபடுத்தி உள்ளேன் .... 

எனக்கு எப்போதும் மனதிர்க்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு விசயங்கள் ஒன்று இசை ... இன்னொன்று பெண்களின் இனிமையான குரல் .. அதுவும் ஏதாவது ஒரு பெண் கோபமாகவோ , நட்போடோ , காதலோடோ , பாசத்தோடோ பயத்தோடோ இல்லை கெஞ்சலாகவோ    நம்மிடம் பேசினால் அவளின் குரலும் நன்றாக இருந்துவிட்டால் அவளின் அந்த பேச்சை ரசிக்காத ஆண்களே இருக்க முடியாது ...  இந்த இரண்டும் தனிதனியாகவே என்னை கவர்ந்த விசயங்கள் ... அப்படி இருக்க  இவை இரண்டும் இணைந்து வந்தால் , என்னை பொறுத்தவரை அது சொர்க்கத்தில் இருந்தால் நம் மனநிலை எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படிப்பட்ட சந்தோசத்தை கொடுக்கக்கூடிய விஷயம் ... இதோ எனக்கு பிடித்த அந்த மாதிரியான பத்து பாடல்கள் ...

  1. மனம் விரும்புதே உன்னை
                         படம் : நேருக்கு நேர்
                         இசை : தேவா
                         பாடியவர் : ஹரிணி

ஒரு பெண் தன் காதலனின்  மேல் தனக்கு இருக்கும் அன்பை , அந்த அன்பு தனக்குள் உருவான விதத்தை பற்றி  பாடுவது போல இருக்கும் பாடல் ...
  
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
  அழகாய்த்தான் ஒரு புன்னைகை பூத்தாய்
  அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியதே

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா  என்னுள்ளம்

சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சொடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பளையே

இப்படி ஒரு பெண்ணின் காதலை அவளே வெளிபடுத்துவது போல இருக்கும் பாடல் ... இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இப்படி ஒரு காதலி நமக்கு கிடைத்தாள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் என் நெஞ்சம் ஏங்கும் ....

ஹரினியின் குரல் பாடலுக்கு கூடுதல் பலம்...

  1. வா மன்னவா ...
                       படம் : தாளம்
                       இசை : ஏ.ஆர்.ரகுமான்
                       பாடியவர் : சுஜாதா


நாயகனே என் நாயகனே
என் கைவளை நழுவும் முன்னே
என் கண்ணீர் உடையும் முன்னே
என் உயிர் துளி வற்றும் முன்னே
என் ஒரு விரல் தொட்டால் என்ன?

கை படாத பாகம் தொடாது போனால்
 விடாது சாபம் வா வா வா

இந்த வரிகளை படிக்கும் போதே தெரியும் தன் கற்பனை காதலனை தனக்கு வர போகும் எதிர்கால துணையை நினைத்து அவனை சீக்கிரம் வாடா என்று ஒரு பெண் அழைப்பதை  போன்ற பாடல் இது ... காதல் யோகி என்ற புயலுக்கு முன்னாள் காணாமல் போன தென்றல் இது .. ஆனால் ஒரு முறை கேட்டு பார்த்தால் நம் மனதில் ஒரு ஓரத்திலாவது தங்கி விடும் இந்த பாடல் ....


  1. பூ பூக்கும் மாசம் தை மாசம்
                        படம் : வருஷம் 16
                       இசை : இளையராஜா
                       பாடியவர் : சித்ரா 

தன்னுடய காதல் கைகூடியதும் ஒரு பெண்  சந்தோஷமாக பாடுவதை போன்ற பாடல்  இது ...

புஞ்சையும் நஞ்சையும்
  இந்த பூமியும் சாமியும்
  இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

வாய்க்காளையும் வயற்காற்றையும்
 படைத்தாள் எனக்கென
 காதல் தேவதை

கேட்டு பாருங்கள் இளையராஜா புல் பார்மில் இருக்கும் போது போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று ....

  1. எங்கே எனது கவிதை
படம் : கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்
இசை ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: சித்ரா  

மேலே இருக்கும் பாடல்கள் எல்லாம் காதலோடும் , ஏக்கத்தோடும் , சந்தோசமாகவும் ஒரு பெண் பாடுவதை போன்ற பாடல்கள் , இது ஒரு பெண் தன் தோற்று போன காதலை நினைத்து பாடுவதை போல இருக்கும் பாடல் ... சோகம் என்பதற்காக அழுது ஒப்பாரி வைக்காமல் இனிமையான பழைய நினைவுகளின் மூலம் அதை வெளிபடுத்துவது பெண்களின் ஸ்பெஷல் .. இந்த பாடலும் அப்படியே

அழகிய திருமுகம் ஒருமுறை
பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் நித்தம் வேண்டும் என்று மனம் வேண்டுதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு 
குத்தும்   இன்பம் தினம் வேண்டுமே

நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ...

  1. என் வானிலே ஒரே வெண்ணிலா
                         படம் : ஜானி
                         இசை : இளையராஜா
                         பாடியவர் : ஜென்சி

  1. காற்றில் எந்தன் கீதம்
                         படம் : ஜானி
                         பாடியவர் : எஸ் .ஜானகி

ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் அதிக  பாடல்கள் பெண்கள் மட்டுமே பாடுவதை போல வருவது என்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய அதிசயம் ... ஜானி படபாடல்கள் அப்படி ஒரு அதிசயத்தை நிஜமாக்கிய பாடல்கள் ... இந்த இரண்டு பாடல்களை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு இசைஞானம் கிடையாது ... எப்பொழுதாவது வீட்டில் இரவு வேளையில் எல்லாரும் உறங்கிய பிறகு அந்த அமைதியான சூழலில் குறைந்த சத்ததில் இந்த பாடல்களை கேட்டு பாருங்கள் ... ஏன்  எல்லா இயக்குனர்களையும் விட்டு விட்டு ரஜினி மகேந்திரனை பிடிக்கும் என்று சொன்னார் என்பது புரியும் ... இளையராஜாவிடம் இருந்து இப்படிப்பட்ட பாடல்களை வாங்குவது மகேந்திரனால் மட்டுமே சாத்தியம் ..

  1. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்
                    படம் : உயிரே உனக்காக
                    இசை : லக்ஷிமிகாந்த் பியாரிலால்
                    பாடியவர் :எஸ். ஜானகி

இந்த பாடலை பற்றி தனியாக இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ... அதுவும் இதில் வரும் அந்த பெண்குரலுக்கு அடிமை நான் ...

  1. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
                    படம் : உல்லாச பறவைகள்
                    இசை : இளையராஜா
                    பாடியவர் : ஜென்சி

இளையராஜாவின் இன்னுமொரு மாஸ்டெர் பீஸ் ... பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் அதை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் ராஜாவுக்கே உரித்தான ஸ்டைல் ....

  1. மாலையில் யாரோ மனதோடு பேச
                     படம் : சத்ரியன்   
                     இசை : இளையராஜா
                     பாடியவர் : ஸ்வர்னலதா...

தனிமையில் இருக்கும் பெண் தன் விரதாபத்தை நினைத்து பாடும் பாடல் ... எனக்கு பிடித்த ஸ்வர்ணலதாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று ...

சினிமா பாட்ட பத்தி எழுதிட்டு  நம்ம தல படத்துல ஒரு பாட்டுக்கூட எழுதலேனா எப்படி ... இதோ தல படத்தில் பெண் குரலில் வந்த எனக்கு பிடித்த ஒரு பாடல்

10 செய் ஏதாவது செய்
                   படம் : பில்லா 2007
                   இசை : யுவான் ஷங்கர் ராஜா
                   பாடியவர் : நேகா & பிரீத்தி

இதுவும் ஒரு பெண்ணின் காமத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பாடல் .. யுவனின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று ... யுவனின் இசையை தவிர்த்து பாடலை பாடிய பாடகிகளின் குரலில் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு பாடலின் வெற்றிக்கு பெரிய காரணம் ...


இந்த பதிவை தொடர நான் அழைப்பது (எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு )

நண்பர் பாலா - வித்தியாசமான பாடல்கள் வரும் என்ற நம்பிக்கையில் 

தல யோகநாதன் - பாடல்களை பற்றிய உங்கள் ரசனையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் 

நண்பர் எஸ்.கே - உங்கள் ரசனையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 

நண்பர் இல்லுமிநாட்டி- பாடல்களை பற்றி உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள       

கார்க்கி - உங்க பாடல் விமர்சனம் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி சகா ...

LinkWithin

Related Posts with Thumbnails