Followers

Copyright

QRCode
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்



முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   



கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?






Sunday, December 19, 2010

2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை

ஆமா இவரு பெரிய மணிரத்தினம்  இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...

அதுக்கு  முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...

கேள்விக்கு போகலாமா?\

கேள்வி 1 :

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
    a) பரிமளா
    b) சியாமளா  
    c) விமலா  

கேள்வி 2

நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?

   a) கறுப்பு
   b) வெள்ளை
   c) செறுப்பே அணியவில்லை

மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க


2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :


2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )

  1. களவாணி இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
  2. பாஸ் என்கிற பாஸ்கரன் சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
  3. மைனா எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
  4. எந்திரன் ரஜினியின் வில்லத்தனம்
  5. ஆயிரத்தில் ஒருவன் விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்


சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும்  கடைசி ஒருமுறையும்  தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)

அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...



தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற  விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல


தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்

மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
  1. சுறா உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
  2. பையா  பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்... 
  3. தில்லாலங்கடி வடிவேலு மட்டும் இல்லைனா  இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்  
  4. மதராசபட்டினம் டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது  பயங்கர தலைவலி ...
  5. குட்டி இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
  6. மாத்தியோசி தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
  
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

  1. காதல் அணுக்கள் எந்திரன்
      ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...  

  1. இதுவரை கோவா
      யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...



விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என்  மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...


வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்

  1. அஞ்சா நெஞ்சன் விருது சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச  காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
  2. நினைத்ததை முடிப்பவன் விருது ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
  3. வெள்ளி விழா நாயகன் விருது இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
  4. நான் உண்மையிலேயே ஏழைங்கோ  விருது கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
  5. நானும் ரௌடிதான் விருது  ஜாக்குவார் தங்கம்  (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
  6. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )

கொஞ்சம் சீரியஸ் விருதுகள்

கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...

அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின்  அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...

சிறந்த இசை என்றாள்  ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான  சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...

சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான்   ....  

இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...

சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)

இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில்  உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள்  நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...

யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா

என்ன பண்ண விஜய் ...வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...  


சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி  விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...

               தீயா வேல பாக்கணும் பாஸ் ...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ  இயர் வாழ்த்துக்கள்  

Monday, December 6, 2010

நந்தலாலா- இவர்கள் நடித்திருந்தால்


இப்ப தமிழ் கூ(நா)றும்  பதிவுலகத்தில சூடான பேச்சு மிஸ்கினின் நந்தலாலாவை பற்றித்தான்... ஆனந்த விகடன் பத்திரிகையில் மிஸ்கின் ஒருமுறை இப்படி கூறி இருந்தார் .. "இந்த கதையை நான் பல ஹீரோக்களிடம் சொன்னேன் .. ஆனால் அவர்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்போல என்று சொல்லி நடிக்க பயந்தார்கள் .. அதனால்தான் நானே நடித்து விட்டேன்" .. இது வழக்கமாய் ஹீரோவா நடிக்க வர்ற எல்லா இயக்குனர்களும் சொல்லுரதுதான்னாலும் நான் இத கொஞ்சம் சீரியஸா எடுத்து ஒரு வேலை அந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டிருந்தாள் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தேன் ... அதன் விளைவுதான் இந்த பதிவு ...


முதலில் நம்ம தளபதி விஜய் அவர்கள் ...


2011 முதல் விஜய் உலகபடங்களில் நடிக்க போகிறார் என்று அவர் தந்தை திருவாய் மலர்ந்திருந்தார் அல்லவா .. அது இந்த நந்தலாலாதான்...




மிஸ்கின் : சார் படத்தோட ஆரம்பத்துல நீங்க மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறீங்க ..



எஸ்.ஏ.சி: நிறுத்து நிறுத்து .. என் பையன மென்டலா நடிக்க சொல்லுறியா?



மிஸ்கின் : சார் உங்க பையன் மென்டலா நடிக்கவே வேண்டாம் சார் .. அவர் எப்பவும் ங்ங்ங்கண்ணா போட்டு பேசுவாரே அதே மாதிரி பேச சொல்லுங்க போதும் ... அப்பறம் பாருங்க உங்க வீட்டுக்கு தேசிய விருதே தேடி வரும் ...



எஸ்.ஏ.சி:  நீ என் பையனோட மாஸ் தெரியாம பேசுற ... என் பையன மட்டும் மென்டலா காட்டுன தமிழ்நாடு மட்டும் இல்ல கேரளாவும் சேந்து எரியும் ...நீ கேரளாகாரன்தான பேசாம நான் சொல்லுற மாதிரி கதைய மாத்து , உன்ன விஜய் ஆரம்பிக்க போற வி.மு.காவோட கேரளா மாநில கொள்கை பரப்பு செயலாளரா ஆக்கி என் பையனை கும்புட்டு நிக்கிறமாதிரி என் பையனோட செலை பக்கத்துல உனக்கு ஒரு செலை வச்சிருவோம்...

விஜய்: நைனா நீ கொஞ்சம் கம்முண்ணு கெட .. ங்ங்ண்ணா... நீங்க முழு கதையையும் சொல்லுங்க்ண்ணா ...


(மிஷ்கின் முழு கதையையும் சொல்லி முடிக்கிறார்...)

விஜய்: கதை ஓ.கே.. எங்கப்பா சின்ன சின்ன சேஞ்ச் சொல்லுவாறு ... அத கொஞ்சம் திருத்திக்கிட்டீங்கன்னா .. படத்த ஆரம்பிச்சிடலாம்னா...

எஸ்.ஏ.சி : மொத இந்த படத்துல விஜய் மெண்டல் கிடையாது ... அவர் சின்ன வயசுல அவங்க ஊருள ஏழைகளை கொடுமபடுத்திர பண்ணையார போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போராறு ... ஜெயிலில இருக்கும் போது அவரு அம்மா ஞாபகம் வர , அவங்க அம்மாவ பாக்கணும்னு ஜெயில விட்டு தப்பிக்கிராறு .. அப்பதான் அந்த சின்ன பையன வழியில பாக்குராறு... அவனும் அவங்க அம்மாவ பாக்க போய்கிட்டு இருக்கான் .. விஜய் போர ஊரு திருப்பாச்சி .. பையன் போர ஊரு சிவகாசி ... ரெண்டுமே கேரளா பார்டெர்ல இருக்கு... அந்த பையன் கேரக்டெர்ல நம்ம குட்டி தளபதி சஞ்சய்தான் நடிக்கிராறு ... அவருக்கு ஓபெனிங்க் சீனே தூள் பரக்கணும் ... அவர் கால மொதல்ல காட்டி அப்படியே தமிழ்நாடு  மேப் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து அவர் காலடியில விழனும்... பின்னாடி 2030 அப்படின்னு எழுத்து போடனும் .. 2030ல அவர்தான் தமிழக முதல்வர் அப்படிங்கிரத சிம்பாலிக்கா காட்டனும் ..

மிஷ்கின் : ஸார் இது அவார்ட் படம் ..

எஸ் ஏ சி : யோவ் அவார்ட் படம் எடுத்தா வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது .. நான் சொல்ற மாதிரி படம் எடு அடுத்த விஜய் கவர்ன்மெண்ட்ல நீதான் கலை மற்றும் ஊடக துறை அமைச்சர்... உன் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கலாம்...

மிஷ்கின்: ஸார் நான் இலக்கிய புஸ்தகத்த மட்டும்தான் வாசிப்பேன் .. உங்களுக்கெல்லாம் வாசிக்க மாட்டேன் ...

கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் மிஷ்கின்...

அடுத்த வாரம்  ஆனந்த விகடனில் பேட்டி

மிஷ்கின் : தமிழ் சினிமா நடிகர்களுக்கு சுத்தமாக ரசனை இல்லை ,, ரெண்டு மூணு பிட்டு படம் பார்த்து விட்டு நடிகனாக வேண்டும் என்று சினிமாவிர்க்குல் நுழைந்து விடுகிறார்கள்... சிறந்த நடிப்பை வெளிபடுத்த திரிஷாக்களுடன் நூறு முறை அமெரிக்காவில் டேட்டிங்க் போன அனுபவம்  மட்டும் போதாது .. இயக்குனர்களை மதிக்க தெரிய வேண்டும் ...

(அடுத்து மிஷ்கின் நம்ம தல வீட்டிர்க்கு கதை சொல்ல போகிறார்) ...



மிஷ்கின் : ஸார் இந்த படத்துல நடிக்க தகுதியான ஒரே ஆளு நீங்கதான்... கமலுக்கு அப்புறம்  இந்த கேரக்டர் நீங்க மட்டும்தான் சரியா பண்ண முடியும் ...

தல : எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?

மிஷ்கின் : நீங்க கதைக்கு   சம்பந்தமே இல்லாம எல்லா படத்துளையும் நடந்துகிட்டே இருப்பீங்க ... இந்த படத்துல கதை படியே நீங்க எப்பவும் நடந்துகிட்டேதான் இருக்கணும் ... அதான் சொன்னேன் ... நீங்க நடந்தா ச்சீ நடிச்சா படத்துக்கு பொருத்தமா இருக்கும்...

தல: ஏலே  .. இனிமே நா நடக்க மாட்டேன் .. என் படம்தான் ஓடும்...

மிஷ்கின்: (ஆகா பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சிட்டாரே... ) இந்த கதையை நான் உங்ககிட்ட சொல்ல வந்ததுக்கு உங்களுக்கு பையன் இல்லாததும் இன்னொரு காரணம். .... ஏற்கனவே ஒரு குடும்பமே ஒண்ணு சேந்து என் கதையை கொல்ல  பாத்தானுக ... நீங்க தனி ஆள் தல அதான் தைரியமா வந்தேன்...

தல : ஏலே நான் தனி ஆள் இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ...

மிஷ்கின் : (நைசா பின்னாடி எட்டி பாத்து) தல உங்க பின்னாடி குப்பைகூடைதான் இருக்கு ...

தல : நீ ரொம்ப பேசுர ... கதையை என் பிஆர்ஓகிட்ட சொல்லிட்டு போ .. எனக்கு அடுத்த வாரம் தேனிக்கு பக்கத்துல அத்திபட்டில ரேக்லா ரேஸ் இருக்கு .. அத முடிச்சிட்டு உன்னை கூப்புடுறேன்...

அடுத்த வாரம் ஆனந்த விகடன்..

கேள்வி: நீங்களும் அஜித்தும் சேந்து பண்ண போற படம் என்னாச்சு?

மிஷ்கின் : நான் தலைக்கு மேல மயிரு இருக்கிறவங்ககிட்ட மட்டும்தான் வேலை செய்வேன்... மீசைக்கு கீழ மயிர் இருந்தா எனக்கு பிடிக்காது .. பாருங்க நானே அத எடுத்திட்டேன்...


இதற்க்கு அஜித்தின் பதில் என்ன என்று கேட்க எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு அவரை சந்திக்க முயல .. தல ரொம்ப கூலாக  வெங்கட் பிரபுவை வைத்து எங்காத்தா எடுக்க கிளம்பி விடுகிறார் ...  நான்கு மாதம் கழித்து மிஷ்கினுக்கு  பதில் சொல்லுகிறார்

நான் இல்லாம அவர் மூணு மொக்கை போட்டுட்டார் .. அவர் இல்லாம நான் இருபது மொக்கை போட்டுட்டேன் ...யாருக்கும் யாரும் தேவை இல்லை


பெரிய நடிகர்களை நம்பி பயன் இல்லை என்று மிஷ்கின் அடுத்து நம்ம டீ.ஆரை தேடி போகிறார்


டீ ஆர்: வாங்க மிஷ்கின் ... தலைக்கு மேல மயிர் இருக்கிறவாங்கக்கூட மட்டும்தான் வேலை செய்வேண்ணு சொல்லிட்டு இப்ப உடம்பு முலுசும் மயிர் இருக்கிற என்ன தேடி வாரீங்கா...

மிஷ்கின் : எல்லாம் நேரம்தான்... சரி நான் கதைய சொல்லி முடிக்கிறேன் அப்பறம் நாம பேசிக்கலாம் ...

(கதையை சொல்லி முடிக்கிறார்)

டீ ஆர் :  நீ சொன்ன கதை டாப்பு
            ஆனா நான் இதுல நடிச்சா மக்கள் வப்பான் ஆப்பு
            நான் சொல்லுறேன் சில சேஞ்சு
            அத நீ செய்யி துணிஞ்சு
            அப்பால  எகிறும்பாறு உன் ரேஞ்சு
            யே டண்டனக்கா யே டனக்குனக்கா

டீ ஆர் படம்னா தமிழ்நாடு  மட்டும் இல்ல ... இந்தியாவே எதிர்பார்க்கும் ... படத்துல ஹீரோவா  நான் நடிக்கிறேன் ... அந்த பையன் கேரக்டர்ல என் பையன் குறள் நடிப்பான் ...

"யாருக்கும் அடிபணியாது எங்கட்சி .. டீ ஆரோட பலமே தங்கச்சி"....  குரலரசனோட  நான் அவன் அம்மாவ தேடி போறேன் .. அவங்க அம்மாவ பாக்குற நான் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறேன் ... காரணம் அது நான் சின்ன வயசுல ரொம்ப பாசமா வளத்த என் தங்கச்சி... அந்த சீன்ல நான் போடுறேன் பாருங்க பேக்ரவுண்ட் ம்யூசிக் ஆ சிம்ஸக் சீம்ஸக் .. டுமுக்கு டுமுக்கு சிம்ஜ்க்க் சிஜக்க் ... டுப்பு டுப்பு ... (வாயிலேயே ம்யூசிக் போட்டு காட்டுகிறார் )அப்படியே ஆடியன்ஸ் கண்ணுல தண்ணி வர தியேட்டர்ல உக்காந்து இருப்பான் ... அப்பதான் ஒரு பிளாஷ் பேக் காட்டுறோம் சின்ன வயசுல முள் குத்தி அவ கால்ல வந்த  ரத்தத்த பாத்துதான் பாசத்துல அதிர்ச்சியாகி நான் மெண்டலாவே  ஆகிறேன்...
அப்படிபட தங்கச்சி ஏன் இப்படி ஆனா? அவங்க ஊரு எம்எல்ஏ பையன் அவளை ஏமாத்தி கெடுத்திரான்.. அவனுக்கும் அவளுக்கும் பொறந்த பையந்தான் குறள் ... இவங்க ரெண்டு பேரையும் அவங்க அப்பனோட சேத்து  வைக்க நான் எம்எல்ஏ வோட போராடுறேன் ... இதுதான் கதை ... படத்துல எனக்கு  ஜோடியா மும்தாஜ் நடிப்பாங்க ...

ஏற்கனவே என் பையன் சிம்புவ "லிட்டில் சூப்பர் ஸ்டார்" ஆக்கி ரஜினியோட கொட்டத்தை அடக்கியாச்சி ... இப்ப கமல்தான் என் குறி அதனால டைட்டில் போடும்  போது என் பையன் குரலரசன் பேருக்கு முன்னாடி லிட்டில் உலக நாயகன் அப்படின்னு போடனும் ... இந்த படத்த பாத்து கமல் உங்களை இவ்வளவு நாள் மதிக்காம போனது என் தப்புதான்னு என் கால்ல விழுந்து கதற கதற மன்னிப்பு கேக்கணும்... கேக்க வைப்பான் ஸார் என் பையன் ... கேக்க வப்பான் ...அவன் புலிக்கு போறந்தவன் ஸார்...

மிஷ்கின் : (மனதிர்க்குல் கரடிக்கு பிறந்தவண்ணு சொல்லு கரெக்டா இருக்கும் )அப்ப உங்க வீட்டுல எல்லாமே புலிதானா? நீங்க வெறும் டம்மி பீசா? ...

"இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்... நீங்க யாருமே வேணாம் நானே நடிக்கிறேன் ஹீரோவா..."

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் மிஷ்கின் ...


இந்த படம் வெளிவந்த பின்னர் படத்தை பற்றி கருத்து கூறுமாறு விஜயின் தந்தை எஸ்ஆசியிடம் கேட்கபட்டது ..

எஸ்ஏசி: ஸார் மிஷ்கின் இவ்வளவு பெரிய திருடனா இருக்க கூடாது ஸார்? கதைய திருடலாம் தப்பில்லை ஆனா டைட்டில் கார்ட்ல அந்த ஒரிஜினல் படத்தோட பேரையாவது போட்டு இருக்கலாம்... ஒரு கிரியேட்டரா என் மனசு ரொம்ப கஷ்டபடுது ஸார்? நானும் என் மகனும் ரொம்ப கஷ்டபட்டு சங்கவியோட டேட்ஸ் வாங்கி எடுத்த படம் ஸார் விஷ்ணு .. அந்த படத்த அப்படியே ஆட்டைய போட்டிருக்காரு ஸார் இவர்... அதுல விஜயும் சங்கவியும் காடு மலைண்ணு நடந்தே சங்கவியோட கிராமத்துக்கு பயணம் போவாங்க... அவங்க பயணத்தோட நடுவுல நெஞ்ச குத்துற மாதிரி(சங்கவி நெஞ்சை விஜய்)  எத்தன சீன் கஷ்டபட்டு யோசிச்சி எடுத்தேன் தெரியுமா ஸார்? மிஷ்கின் கொஞ்சம் கூட சொரணையே  இல்லாமல் என் கதையை கொஞ்சம் மாத்தி எடுத்து தமிழ் சினிமாவில் நெஞ்சை தைக்கிற மாதிரியான படம் அப்படின்னு பேர் எடுத்துட்டாறு... எனக்கு நன்றினு ஒரு சிலைடு கூட போடலேண்ணுதான் எனக்கு வருத்தமா இருக்கு...


இந்த பேட்டியை கேட்டு ஒரு இயக்குனர் அடுத்த நாள் சூசைட் பண்ணி கொள்கிறார்.. அவர் வேறு யாரும் இல்லை நந்தலாலாவின் ஒரிஜினல் கிகுஜிரோவின் இயக்குனர் டகேஷி கிடோனா


போனஸ் :

எனக்கு வந்த ஒரு விஜய் எஸ்எம்எஸ்

கஸ்டமர் : இந்த டீவீ என்ன விலை?

சேல்ஸ்மேன்: 2 லட்சம்

கஸ்டமர் : அப்படி என்ன இருக்கு இந்த டிவியில?

சேல்ஸ்மேன்: விஜய் படம் வந்தா அதுவா ஆஃப் ஆகிக்கிடும்..

கஸ்டமர் : அப்ப உயிர காக்கிற டிவியிண்ணு சொல்லுங்க.. 

(அப்ப தல படம் வந்தா டிவி கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிடுமாண்ணு பின்னூட்டம் போட நினைப்பவர்கள் கடையில் காவலன் படத்தில் விஜய் பேசி இருக்கும் அத்துணை பஞ்ச் டயலாக்க்குகளும் பின்னூட்டதில் போடபட்டு வைரஸ் அட்டாக் நடத்தி கடை காலி செய்யபடும்)



LinkWithin

Related Posts with Thumbnails