Followers

Copyright

QRCode
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 7, 2010

கவிதை கார்னெர் - I

புதுமை பெண்கள்


பள்ளிக்கு தினமும் சைக்கிளில் அழைத்து சென்ற
பக்கத்து வீட்டு தோழியின் அண்ணன் ;

பள்ளியில் ஆசிரியரின் பாடங்கள் அறுவை ஆகும் போது
சீட்டு அனுப்பி விளையாடிய பள்ளி நண்பன்;

டியூஷன் முடிந்து வீடு செல்லும் இரவுகளில்  ரோட்டோர "ரேமொகளின்"
கிண்டல்களிலிருந்து காப்பாற்ற கூட வரும் பக்கத்து தெரு சிநேகிதன்;

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு இரவெல்லாம் கண் முழித்து
அலாரம் வைத்து உதவிய ஒருதலை காதலன்;

பொது தேர்வு விடுமுறை நாட்களில் ஊர் சுற்றி காட்டிய
தூரத்து உறவு அத்தை மகன்;

கல்லூரி நாட்களில் பொழுது போகா மாலை  வேளைகளில்
தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி விளையாடிய வெட்டி பசங்க;

இறுதி ஆண்டு நாட்களில் தினமும் பைக்க்கும் வாரம் ஒருமுறை ஊட்டிக்கும்
அழைத்து சென்ற காதலன் ;

இவர்கள் எல்லோரையும் மறைத்து விட்டு தன் கணவனிடம் சொன்னாள்
"நான் காதலிக்கவில்லை.. .. காரணம் ஆண்கள் எல்லாம் அயோக்கியர்கள்";

அவனும் வெகுளியாய் கேட்டு கொண்டான்; பின்னாளில் தானும் அந்த
 லிஸ்டில் சேர்வோம் என்பதை அறியாமலே...


கவிதை போட்டி 

கவிதை போட்டியாம் 
கவிதை வேண்டுமாம் 
ஓவிய போட்டி என்றால் 
உன்னை வரைந்து அனுப்பளாம் 
காவிய போட்டி என்றால் 
நம் காதல் கதை அனுப்பளாம்


கவிதை போட்டிக்கு 
உன் பெயரை அனுப்பலாமா?
வேண்டாம் உன்னை அனுப்புகிறேன் 
போய் கொஞ்சும் உன் குரலில் 
""அச்சச்சோ!"
"ஊஹூம்…"
"
ம்க்கும்!"
"
ப்ச்..ப்ச்.."
"
ஹேய்…"
   என்று சொல் 
பரிசு உனக்குத்தான்...

கவிதையடி நீ

கவிதை என்று

எழுதினால்

என் பேனா

உன் பெயரை

எழுதுகிறது....

எழுத்து பிழை

என்று அழித்தால்
ரப்பரில் ரத்தம்

கொட்டுகிறது ....
எழுத்துக்கும் உயிர்

வருகிறது உன்னால்...


கொல்லும் புன்னகை


              மணிக்கணக்கில் பேசி

முடித்ததும்

கேட்பாய் நான்

போகட்டுமா என்று...

உலகம் அழியும்

கடைசி நொடியை விட

கொடுமையாய் இருக்கும்

எனக்கு அந்த நொடி...



அடுத்து எப்ப

பாக்கலாம் என்ற

கேள்விக்கு பதில் சொல்லாமல்

சென்று விடுவாய் புன்னைகையை

மட்டும் உதிர்த்து விட்டு...

குருதி வடியும் புண்ணில்

பாய்ந்த குண்டு போல்

உன்னை காணும் வரை

அந்த புன்னைகை

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை


கொன்று கொண்டு இருக்கும்


Wednesday, April 28, 2010

தல பிறந்தநாள் கவிதை - happy b'day thala





அன்பு தலைக்கு அர்ப்பணம்
தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பான நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடிப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படையிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தடைகள் 
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!

ஒரு அஜித் ரசிகர் எழுதிய கவிதை இது .... தலையின் பிறந்தநாளுக்கு அன்பு பரிசாய் அவர் ரசிகர்களுக்கு இதை சமர்பிக்கிறேன்....

Thursday, April 22, 2010

காதலித்து பார்... இப்படில்லாம் மொக்க போட வரும்...


       அழகியல் 

சேலை கட்டினால் 
அழகு கூடும் என்றேன் 
எனக்கா? என்று ஆசையாய் 
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன் 
அழகின் உச்சத்தை 
உன் வெட்கத்தில் காட்டி 
விட்டு சென்றாய்...


ஹைக்கூ 

ஆசையாய் 
அணைத்து முத்தமிட்டதும் 
பரவியது உதட்டில் 
ஒரு வெப்பம் 
சிகரெட்...

தொலைபேசி 

உன் பிரிவில் 
துயரம் கொள்வது 
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில் 
நீ தரும் முத்தத்தில் 
சூடாகிபோன என் 
தொலைபேசியும்தான்....

     தேவதை 

குடுகுடுப்பைகாரன் 
சொல்லியதை நான் நம்பியதில்லை 
உன் வீட்டின் முன் நின்று 
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது 
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...


    இரவில் நீ 

பெண்களுக்கு 
வெட்கம்தான் அழகு 
என்று எண்ணி இருந்தேன் 
உன்னோடு நான் தங்கிய 
அந்த இரவில் 
நீ பண்ணிய அடாவடிகளை 
காணும் வரை...


     யுத்தம் 

கொடுப்பவரும் 
வாங்கியவரும் 
சுகம் காணும் 
ஒரே யுத்தம் 
முத்த யுத்தம்....




கவிதை எழுதி ரொம்ப நாலு ஆச்சேன்னு நேத்து ரொம்ப பீல் பண்ணி எழுதின 
கவிதை இதெல்லாம் ....பிடிச்சிருந்தா கமெண்ட் போடுங்க... மொக்கையா இருந்தா திட்டியாவது போடுங்க.... யாருப்பா அது சொல்லிக்கிட்டு இருக்கும்போதே க்ளோஸ் பட்டன  அமுக்குறது... ஒரு ஓட்டயாது போட்டுட்டு போகலாம்ல....


LinkWithin

Related Posts with Thumbnails