Followers

Copyright

QRCode

Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்



முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   



கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?






Tuesday, January 11, 2011

கரும்பு -காவலன் - சிறுத்தை : பொங்கல் ஸ்பெஷல்

“  இனிப்பு நான்கெழுத்து
 இனிப்புக்கு பெயர் போன கரும்பு நான்கெழுத்து
 கரும்பு நிறையும் பொங்கல் நான்கெழுத்து
 பொங்கலுக்கு வெளிவரும் காவலன் நான்கெழுத்து
 காவலனுடன் போட்டி போதும் சிறுத்தை நான்கெழுத்து
 இவை எல்லாம் சிறக்க   சொல்லும் வாழ்த்து நான்கெழுத்து
 அந்த வாழ்த்தை சொல்லும் “rajaவும் நான்கெழுத்து   

அப்பாடா இனிப்பு முதல் வாழ்த்து வரை எல்லாம் நான்கு எழுத்துலயே சொல்லியாச்சி ... எல்லாரும் பாத்துக்கோ பாத்துக்கோ ....கவிதை எழுதிருக்கேன்.... கவிதை எழுதி இருக்கேன்... நானும் பிரபல பதிவர்தான் ... (என்னது ஒத்துக்க மாட்டீங்களா? என்னங்க மூண வச்சி கவிதை சொல்லி ஒருத்தர் முதலமைச்சர் ஆகிட்டாறு ... நாள வச்சி கவிதை சொன்ன நான் பிரபல பதிவர் கூட ஆக முடியாதா?)

எல்லாருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் ...


பொங்கல் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது கரும்புதான் .... பொங்கல் அன்னைக்கு  நீங்க சாப்பிடுற கரும்பு எங்க இருந்து வருதுண்ணு உங்களுக்கு தெரியுமா? யாராவது கரும்பு தோட்டத்தை அடிக்கடி பாத்திருக்கீங்களா? (கொஞ்சம் யோசிச்சி பாருங்க கண்டிப்பா பாத்திருக்க மாட்டீங்க) நம்ம மாநிலத்துல கரும்பு சாகுபடி ரொம்ப ரொம்ப கம்மி ... தமிழ்நாட்டுல கரும்பு உற்பத்தினா முதல் இடம் மதுரை அருகே இருக்கும் மேலூர்தான் ... மேலூர் கரும்புக்கு அவ்வளவு கிராக்கி இருக்கும் கரும்பு சந்தையில் .. அதற்க்கு அடுத்த இடம் எங்க ஊரு கரும்புதான் ... சந்தையில அதன் பெயர் அருப்புக்கோட்டை கரும்பு ஆனா அது விலையிர இடம் எங்கள் கிராமம்  புலியூரான்”….



மேலூர் கரும்பை விட எங்கள்  ஊரில் விலையும் கரும்பு அதிக சுவை உடையதாய் இருக்கும் காரணம் எங்கள்  ஊர் நிலத்தடி நீர் ... தூத்துக்குடி  விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யும் ஒரே ஒரு இடம் எங்கள் ஊர் மட்டுமே ... கிட்டத்தட்ட 500  ஏக்கர் நிலத்தில் வருடா வருடம் கரும்பு சாகுபடி செய்யபடும் ... ஒரு ஏக்கருக்கு 300 முதல் 500 கட்டு  கரும்பு விளையும் ... (கரும்பை எப்பொழுதும் கட்டு கட்டாகத்தான் விற்பனை செய்வார்கள்) ஒரு கட்டு என்பது பதினாறு கரும்புகள் ... நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள் எவ்வளவு கரும்பு எங்கள் ஊரில் மட்டும் விளைகிறது  என்று... இந்த பொங்கலுக்கு நீங்கள் சுவைக்க போகும் கரும்பு எங்கள் மண்ணில் விளைந்த கரும்பாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது ...

  (எங்கள் ஊர் புகைப்படம் ... பின்னால் இருப்ப்து நான் படித்த ஆரம்ப பள்ளி)

கரும்பு சாகுபடி என்பது சாதாரணமான விஷயம் கிடையாது .. தமிழில் ஒரு பழமொழி உண்டு கெட்டிக்காரன் கரும்பு எட்டு மாசம் என்று , அதன் அர்த்தம் புத்திசாலிதானமா விவசாயம் பண்ணினாலே  கரும்பு முழுவதும் விளைந்து அறுவடை செய்ய எட்டு மாதங்கள் ஆகும் என்பதே ... நீங்கள் பெரும்பாலும் பார்க்கும் விளைநிலங்களில் கம்பு , சோளம் , கடலை , சூரியகாந்தி பூ , நெல் இப்படி ஏதாவது பண பயிர்கள்தான் போட்டு இருப்பார்கள் .. காரணம் இவைகளில் வருடத்திர்க்கு மூன்று முதல் நான்கு போகம் விளைச்சல் எடுக்கலாம் ... ஆனால் கரும்பு போட்டால் வருடத்திர்க்கு ஒரே ஒரே அருவடைதான் .. அது விளைந்து முடிக்கவே பத்து மாதங்கள் ஆகும் ... பிறகு இரண்டு மாதம் மண்ணை காய போட வேண்டும் ... இப்படி வருடத்திர்க்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்து பணம் பார்க்க முடியும் இதில் ... மேலும் இதற்க்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .. வானம் பார்த்த பூமிகளில் இது முடியாது ... நீங்கள் சொந்தமாக மோட்டார் பம்ப் வைத்திருக்க வேண்டும் ... அப்படி இருந்தால் மட்டுமே அமோக விளைச்சலை அடைய முடியும் ... இதனாலேயே பெரும்பாலானோர் கரும்பு விவசாயத்தில் இறங்குவதில்லை .. ஆனால் எங்கள் ஊரில் பொங்கலுக்கு பொங்கல் அமோக கரும்பு அறுவடை நடக்கும் ... இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ... வருடம் வருடம் பொங்கல் வந்தால் இதை கொஞ்சம் பெருமையாக நினைத்து கொள்வேன் ...

(கரும்பு சாகுபடியில் அதிக லாபம் பார்ப்பது எங்கள் ஊர் விவசாயிகளை விட கூட வரும் இடைதரகர்கள்தான்... அரசே இதை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வருடா வருடம் சொல்லி பார்க்கிறார்கள் ... செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி பயனே இல்ல ...)


காவலன் , ஆடுகளம் சிறுத்தை:

இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் சூடு கொஞ்சம் கம்மிதான் ... பெரிய நடிகரின் படம் என்று பார்த்தால் அது விஜையின் காவலன் மட்டுமே ... அதற்க்கு போட்டியாக எந்த பெரிய நடிகரின் படமும் இல்லை குறிப்பாக தல படம் ... கார்த்தியின் சிறுத்தையும் , தனுஷின் ஆடுகளமும் எந்த அளவுக்கு தளபதிக்கு போட்டி கொடுக்கும் என்று தெரியவில்லை ... இந்த தடவை முதல் ஒருவாரம் காவலனுக்கு நல்ல வேட்டைதான் ... தனியாளாக வசூல் வேட்டை நடத்துவார் தளபதி ...

காவலன்


இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்பில் இல்லை , இது படத்துக்கு நல்லதா? கெட்டதா? தெரியவில்லை.... பாடல்கள் சுமார் ரகம்... டிரைலரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை... வடிவேலுவின் நகைசுவை கைகொடுத்தாள் படம் ஹிட் ஆக வாய்ப்பு இருக்கிறது... போட்டி இல்லை என்பதால் படத்துக்கு  ஓபெனிங்க் அமோகமாக இருக்கும் ...பட விளம்பரங்களில்  விஜய் முகத்தில் தெரியும் சோகம் காவலனால் நீங்குமா? இல்லை கூடுமா? பொருத்திருந்து பார்ப்போம்..  முதல் காட்சி நண்பர்களுடன் போக வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறேன் , தளபதி கண்டிப்பாக என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில்@!!**&#


ஆடுகளம்


பொல்லாதவன் வெற்றிமாரனின் அடுத்த படைப்பு , இது மட்டும்தான் படத்திற்க்கு எதிர்பார்ப்பு தரும் ஒரே விஷயம் ... தனுஷின் சமீபத்திய தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர அவர் நம்பி இருக்கும் ஒரே ஒரு படம் இதுதான் ... ஆனால் பத்து படம் நடித்து விட்டு அவர் மேடைகளில் பேசும் ஓவர் பேச்சு கொஞ்சம் அதிகம்தான் ... இதனாலேயே எனக்கு அவரை பிடிக்காது ... பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது, இது படத்திற்க்கு பெரிய பலம்... பார்ப்போம் பொல்லாதவன் வெற்றி ராசி இதிலும் தனுசுக்கு  கை கொடுக்கிறதா என்று .. வெற்றிமாறனுக்காக கண்டிப்பாக இந்த படம் பார்ப்பேன் ...

சிறுத்தை


நண்பர் பாலா இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு சல்மான் கானின் தபாங்க் போல இருக்கிறது என்று பயங்கர பில்டப்புடன் கூறினார் .. நானும் தேடி பிடித்து டிரைலரை பார்த்தேன் ... என்ன சொல்ல தாபாங்கின் ஸ்பூஃப்   போல இருந்தது ... அதுவும் கார்த்தி பேசும் வசனம்.. அது  கெத்து வசனம்தான் ஆனால்  அதை அவர் பேசுவதுதான் காமெடியாக தெரிந்தது ... ராக்கெட் ராஜா கண்டிப்பாக இன்னொரு பருத்தி வீரனாகத்தான் இருக்கும் என்று பட்சி சொல்கிறது ... யாராவது பார்த்து விட்டு நல்லா இருக்கு என்று சொன்னால் பார்ப்பேன் ...


இதை எல்லாம் விட பெரிய சுனாமி ஒன்று பொங்கல் அன்று நம்மை தாக்க வருகிறது  .. அது நம்ம தமிழ் தாத்தா டாக்டர் கலைஞர் அவர்களின் கூரிய  வசனத்தில், மக்ஸிம் கார்க்கி அவர்களின் நாவலை காப்பி  அடித்து கதை எழுதி , தென்னகத்து அர்னால்ட் அண்ணன் பா.விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் இளைஞன்... இவரின் ஞாபகங்கள் படத்தை பார்த்த பொழுது போட்டியே இல்லாமல் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கும் அண்ணன் சாம் ஆண்டர்சன் அவர்களுக்கு இவர்தான் சரியான போட்டியாக இருப்பார் என்று தோன்றியது .. இதை இந்த படம் நிரூபிக்கும் என்று நம்புகிறேன் ...


(டிஸ்கி : பொங்களன்று சுட சுட காவலன் பட விமர்சனம் இந்த தளத்தில் கிடைக்கும் ,எனவே பலகீனமான இதயம் உடையவர்கள் பொங்கல் அன்று இந்த ரத்த பூமிக்கு வராமல் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட வேறு கடைக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள் )

LinkWithin

Related Posts with Thumbnails