பழங்கால இந்தியாவை பற்றிய ஒரு புகைப்பட தொகுப்பு எனக்கு மெயிலில் வந்தது... அதை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்...
ஒரு இந்திய மகாராஜாவின் பன்னிரண்டு வயது மகள் அவளே வேட்டையாடிய சிறுத்தையின் மேல் அமர்திருக்கும் புகைப்படம்...
ஒரு இந்திய பிரஜை ஆங்கிலேய அதிகாரியின் கால் நகங்களை சுத்தபடுத்தும் புகைப்படம்...
கொல்கத்தாவையும் காபூலையும் இணைக்கும் கிராண்ட் டிரங் ரூட்.... 1880இல்
அரசவை நடன பெண்மணிகள் அலங்காரத்துடன்...
இந்தியா இங்கிலாந்து நடுவே இயக்கப்பட்ட இம்பெரல் ஏர்வேய்ஸ்...
மாகாத்மாவை வரவேற்கும் இந்திய தேசிய ராணுவம்... இடம்: ஹரிஜன் காலனி , டெல்லி ,
சுதந்திரத்திற்கு முன்பாக நேரு நடத்திய பிரஸ் மீட்...
ஜின்னாஹ் , முஸ்லிம் கட்சியின் ஊர்வலத்தில்...
பாட்டியாலா மாகாணத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காக நடந்த பேச்சு வார்த்தையில் சர்தார் படேலும் , பாட்டியாலா மகாராஜாவும்
காந்தியும் ஜின்னாவும் .
கடைசியாக மெக்கலே ( இப்பொழுது நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தியவர்) நம் பண்டைய கல்வி முறை மற்றும் நம் இந்திய மக்களை பற்றி பெருமையாக பிரிட்டிஷ் மகாராணிக்கு எழுதிய கடிதம்.. . கூடவே அவரின் குள்ளநரி தனமும் கடிதத்தில் உள்ளது... இந்த கடிதமும் அதில் அவர் கூறி இருக்கும் விசயங்களும் உண்மையாக இருந்தால்???? , நாம் எவ்வளவு பெரிய சூழ்ச்சிக்குள் சிக்கி இருக்கிறோம்?
மேலே இருக்கும் இந்த புகைப்படம்தான் என்னை இந்த பதிவை போட தூண்டியது... எப்படி இருந்த நம் இந்திய தேசம் இன்று அந்நிய மோகத்தால் சீரழிந்து கிடக்கிறது... பிச்சைகாரர்களே இல்லாத தேசம் என்று அந்நிய நாட்டுகாரன் அதிசயப்பட்ட நாடு இன்று ஒரு இனமே அடுத்த வேலை சோறு கிடைக்காமல் அல்லாடி கொண்டு இருக்கிறது... சிறந்த கல்விமுறை என்று அடுத்தவனால் புகழப்பட்ட நம் நாட்டில் இன்று ஆங்கிலேயவன் கொண்டு வந்த கல்வி திட்டம்... வெறும் மனப்பாட திறமையை மட்டும் வளர்க்க மீறி போனால் அவர்களுக்கு அடிமையாய் வேலை பார்க்க நமக்கு புகுத்தப்பட்ட கல்வி... அந்நிய மோகத்தால் நாம் இழந்தது நம் பாரம்பரிய அடையாளங்கள் மட்டும் இல்லை நம் தன்மானத்தையும்தான்... யார் கண்டது ஒரு வேலை நாம் நம் சொந்த கல்விமுறையவே இன்றும் தொடர்ந்து இருந்தால் இன்று நாமும் ஒரு வல்லரசு ஆகி இருந்திருக்கலாமோ?












