Followers

Copyright

QRCode
Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Friday, June 3, 2011

அரசியல் அணிலும் , சமச்சீர் கல்வியும்




ஒரு காமெடி கும்பல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருந்து உதவி இருக்கிறோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறது ... எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,  நீங்க எப்ப தைரியமா அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தீங்க பையன் ஸார்  , இதே தேர்தல் முடிவு மாறி வந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க , எங்க அப்பா என்கிட்ட அம்மாவுக்கு ஆதரவு தர சொல்லி எவ்வளவோ கெஞ்சினாறு  ஆனால் கலைஞரின் பொற்கால ஆட்சியை எதிர்த்து என்னால் பிராசாரம் செய்ய முடியாது என்று சொன்னேன் , நான் என்றுமே கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நண்பன்தான் என்று சூடு சொரணையே இல்லாமல் பேட்டி கொடுத்திருப்பீங்க ... உண்மையில் நீங்கள் அணில் இல்லை , பச்சோந்தி .... 

இவ்வளவு காலமும் ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாய் இருந்து கொண்டு நினைத்ததை சாதித்து கொண்டு , தேர்தல் சமயத்தில் பல்டி அடித்து இப்பொழுது அம்மாவுக்கு அடிவருட தயாராகி விட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட அப்பாவும் புள்ளையும் ... ஆனால் இவர்கள் நினைப்பது என்றும் நடக்காது , மக்களும் இவர்களை மதிக்கவில்லை , இவர்கள் அடிவருடிவிட ஆவலாய் இருக்கும் அம்மாவும் இவர்களை மதிக்கவில்லை ... சூப்பர் ஸ்டாரையே கண்டுகொள்ளாத அம்மா இந்த பிஸ்கோத்துகளையா கண்டுகொள்ள போகிறார் ...


இந்த பேட்டியில் பையன் நான் அரசியலுக்கு வந்து கண்டிப்பாக  என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று உளறி தள்ளி இருக்கிறார் ..மூலையில சும்மா இருக்கிற ஆப்புல தானா ஏறி உக்காருறது இதுதான் ... மக்களே அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் அவர் அரசியலுக்கு வர போறாராம் அத அவரே ஒத்துகிட்டாறு...  இந்த தேர்தலில் ஒரு அப்பா பையனுக்கு மாம்பழத்தில் நல்லா குத்தி சிறப்பான எதிர்காலத்தை  பரிசளித்ததை போல இவர்களும்  அரசியலுக்கு வந்தவுடனே இவர்களுக்கும் நல்லா குத்து குத்துன்னு குத்தி நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் ...

இந்த காமெடி பீஸுகளுக்கு அம்மா சீக்கிரம் குச்சி மிட்டாயை வாயில் சொருகி வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்..

-------------------------------------------------------------------------

இன்றைய அரசியலின் ஹாட் டாபிக் சமச்சீர் கல்வி திட்டம்தான்... உண்மையில் சமசீர் கல்வி என்பது எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... பாடங்களில் இரண்டு வகை உண்டு .. ஒன்று நம் சொந்த புத்தியினால் மட்டுமே படிக்க முடிந்த,  புரிந்து கொள்ள முடிந்த பாடங்கள் ... கணிதம் இதற்க்கு நல்ல உதாரணம்... எவ்வளவுதான் காசு செலவு பண்ணி படித்தாலும் மண்டையில் மசாலா இல்லை என்றாள் இத்தகைய பாடங்களில் தேறுவது கடினம்தான்... கார்பரேசனில் படித்தாலும் சரி மெட்ரிகுலேசனில் படித்தாலும் சரி மூளை இல்லை என்றாள் ஒன்றும் சாதிக்க முடியாது ... வருடா வருடம் கணிதத்தில் மட்டும் அதிகம் பேர் செண்டம் அடிக்க காரணம் இது கடவுளாலேயே படைக்கபட்ட சமச்சீர் பாடம் ...


இரண்டாவது வகை தொடர்ச்சியான பிராக்டீஸ் மூலம் மட்டுமே கற்று கொள்ள முடிந்த பாடங்கள்... ஆங்கிலம் போன்ற வேற்று மொழி பாடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம் ... இந்த பாடங்களில் மட்டும்தான் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி போவார்கள் .. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மற்ற பாடங்களில் எல்லாம் 90 சதவீதத்திர்க்கும் மேல் எடுத்து விட்டு ஆங்கில பாடத்தில் வெறும் 60 , 70 என்று எடுத்திருப்பார்கள் ... காரணம் அந்த பாடத்தில் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைவான பயிற்ச்சி ... ஆனால் மெட்ரிக்குலேசன் முறையில் அவர்களின் பாடதிட்டமே ஆங்கிலத்தில் அதிக பயிற்சி அளிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும் ... 

என்னுடன் கல்லூரியில் படித்த மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பெரும்பாலானோர் சராசரிக்கும் குறைவான புத்தி கூர்மை உடையவர்களாகவே இருப்பார்கள் , ஆனால் அவர்களின் ஆங்கில புலமை நன்றாக இருக்கும் ... அதைவைத்து அவர்கள் எளிதாக நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள் .,, ஆனால் எங்களை போன்ற ஸ்டேட் போர்டு  மாணவர்கள் நல்ல திறமை இருந்தும் ஆங்கிலத்தில் திண்டாடி நல்ல வாய்ப்பை எல்லாம் கோட்டை விடுவோம் ... இதற்க்கு என்னுடய நண்பர்கள் வட்டதிலேயே எவ்வளவோ உதாரணங்களை சொல்ல முடியும்... இப்படி பாடதிட்டங்களிலும் , பயிற்சி முறைகளிலும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் கடைசியில் எங்கள் வாழ்க்கையவே மாற்றி விட்டன ... அதனால்தான் சொல்கிறேன் சமசீர் கல்வி முறை எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...


ஆனால் இந்த அருமையான திட்டத்திலும் அரசியல் கலந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த சாபம் ... திரை கூத்தாடிகளின் ஜால்ராவை கேட்டு கேட்டு புளித்து போன முன்னாள் முதல்வர் , , எப்படி இன்று இந்தியாவே காந்திக்கு , பகத் சிங்கிற்க்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறதோ அது போல வரும்கால தமிழகம் முழுவதும் தனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நினைத்து இந்த அருமையான திட்டத்தையே  கெடுத்து விட்டார் ... காமராஜர் கக்கன் போன்ற "கறைபடிந்த" ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த தமிழ்நாட்டையே  கருணாநிதி என்னும் "உத்தமபுத்திரந்தான்" காப்பாற்றினார் என்று வரலாற்றை திரித்து மாணவர்களுக்கு அறிவு அமுதோடு கொஞ்சம் நஞ்சையும் சேர்த்து ஊட்டும் வகையில் தன் அடிவருடிகளை வைத்து பாடங்களை அமைத்து இருக்கிறார் ... இலவச திட்டங்கள் மூலம் நான்தான் இனி தமிழக நிரந்தர முதலவர் என்று எண்ணி இந்த காரியத்தை துணிந்து செய்து விட்டார் .. ஆனால் அவர் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று செய்து விட்டார்கள் ...


அம்மா வந்தவுடன் இந்த காரணத்தை காட்டி , சமசீர் கல்வி முறையை தள்ளி வைத்து விட்டார் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார் ... இதனால் 200 கோடி செலவு செய்து அச்சடித்த புஸ்தகங்கள் வீணாகி விட்டன என்று எல்லாரும் புலம்பி கொண்டு இருக்கிறாராகள் .. காசு வீணாகிறது என்றுதான் புலம்புகிறார்களே தவிர யாருமே மானவர்களின் நலன் மேல் அக்கறை உள்ளதை போல பேசவில்லை .... கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அம்மா இதை தள்ளி வைத்தால் அது மிக பெரிய அயோக்கியதனம்ஆனால் ஆளும் கட்சியோ இதை ஒத்துக்கொள்ளாமல் , சமசீர் கல்வி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அமைத்து இருக்கும் பாடதிட்டங்கள் எல்லாமும் மிகவும் கீழ்மட்டமாகவே உள்ளன ... பள்ளத்தில் இருப்பவர்களையே மேலே கொண்டு வருவதற்க்கு பதில் , இவர்கள் மேலே இருப்பவர்களையே பள்ளத்தில் தள்ளும் செயலை செய்து இருக்கிறார்கள் .... நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்த பாடத்திட்டங்களை  ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் , அதனால்தான் இப்போதைக்கு இதை தள்ளி வைக்கிறோம் என்று காரணம் சொல்லுகிறார்கள் ....

எது எப்படியோ மாணவர்கள் மேல் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் இவர்கள் சில காரியங்களை செய்ய வேண்டும்

  1. இந்த பாடத்திட்டம் உண்மையிலேயே மோசமாக வடிவமைக்க பட்டு  இருந்தால் , அதற்கான காரணங்களை ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வெளிபடுத்தி, நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு (அதாவது அதை வடிவமைத்தவர்கள் , அதற்க்கு துணையாக இருந்தவர்கள்) தண்டனை வாங்கி தரவேண்டும் ... இதை வெறும் 200 கோடியாக பார்க்காமல் அதனால் விளையபோகும் பின்விழைவுகளை கருத்தில் கொண்டு அந்த தண்டனை அமையவேண்டும்

  1. எந்த கட்சி சார்பும் இல்லாத பேராசிரியர்களை கொண்டு உலக தரத்தில் புதியதாக பாடதிட்டம் வடிவமைக்க வேண்டும் .... அதை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் ...
  2. ஒருவேளை இந்த பாடதிட்டதில் கலைஞர் ஜால்ட்ராவை தவிர மற்ற அனைத்தும் உண்மையிலேயே நல்ல முறையில் வடிவமைக்கபட்டிருந்தால் இந்த அரசு அந்த ஜால்ட்ரா பக்கங்களை மட்டும் பாடதிட்டதில் இருந்து நீக்கி விட்டு இந்த கல்வி முறையை உடனே கொண்டு வரவேண்டும் சாப்பாட்டில் இருக்கும் கல்லை எடுத்து ஓரமாக ஒதுக்குவதை போல ... பரீட்சைக்கு இதில் இருந்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டால் ஒருவனும் அதை சீண்ட மாட்டான் ...

அரசியல்வாதிகளே இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா ... இது அவர்களின் பிரட்சனை... எந்த  விதமான அரசியல் காழ்புணர்ச்சியோ , பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் ... உங்கள் காழ்புணர்ச்சியை காட்ட வேறு எத்தனையோ களங்கள் உள்ளன .. அங்கு உங்கள் சண்டையை வைத்து கொள்ளுங்கள்,, இவர்களை விட்டு விடுங்கள் ...  


சமசீர் கல்வி திட்டம் போல் அடுத்து சமசீர் மதுபான திட்டம் வருமா?

Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்



முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   



கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?






Sunday, December 19, 2010

2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை

ஆமா இவரு பெரிய மணிரத்தினம்  இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...

அதுக்கு  முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...

கேள்விக்கு போகலாமா?\

கேள்வி 1 :

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
    a) பரிமளா
    b) சியாமளா  
    c) விமலா  

கேள்வி 2

நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?

   a) கறுப்பு
   b) வெள்ளை
   c) செறுப்பே அணியவில்லை

மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க


2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :


2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )

  1. களவாணி இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
  2. பாஸ் என்கிற பாஸ்கரன் சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
  3. மைனா எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
  4. எந்திரன் ரஜினியின் வில்லத்தனம்
  5. ஆயிரத்தில் ஒருவன் விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்


சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும்  கடைசி ஒருமுறையும்  தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)

அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...



தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற  விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல


தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்

மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
  1. சுறா உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
  2. பையா  பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்... 
  3. தில்லாலங்கடி வடிவேலு மட்டும் இல்லைனா  இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்  
  4. மதராசபட்டினம் டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது  பயங்கர தலைவலி ...
  5. குட்டி இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
  6. மாத்தியோசி தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
  
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

  1. காதல் அணுக்கள் எந்திரன்
      ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...  

  1. இதுவரை கோவா
      யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...



விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என்  மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...


வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்

  1. அஞ்சா நெஞ்சன் விருது சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச  காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
  2. நினைத்ததை முடிப்பவன் விருது ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
  3. வெள்ளி விழா நாயகன் விருது இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
  4. நான் உண்மையிலேயே ஏழைங்கோ  விருது கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
  5. நானும் ரௌடிதான் விருது  ஜாக்குவார் தங்கம்  (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
  6. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )

கொஞ்சம் சீரியஸ் விருதுகள்

கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...

அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின்  அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...

சிறந்த இசை என்றாள்  ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான  சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...

சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான்   ....  

இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...

சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)

இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில்  உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள்  நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...

யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா

என்ன பண்ண விஜய் ...வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...  


சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி  விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...

               தீயா வேல பாக்கணும் பாஸ் ...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ  இயர் வாழ்த்துக்கள்  

Wednesday, December 8, 2010

பிரபலங்களின் பயோடேட்டா

குமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க  நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...

இது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும்  அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...

முதலில் அம்மா

பெயர் : அம்மா

புனை பெயர் : அதுவும் அம்மா

சமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது

நீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது


நண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்

எதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும் 

அடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்

நம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்

நம்பாதது : அன்னையை


விரும்புவது : மக்களின் மறதி

வெறுப்பது : மக்களின் பணத்தாசை

சமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்

நீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது

சமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்

நீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக  ஒட்டு 
போடுவது


அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்


பெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்

புனைபெயர் : ரஜினிகாந்த்

பிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்

பழையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்

புதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது  மேடைகளில்

நண்பர்கள் : இமயமலை ஞானிகள்

எதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்

ரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்

சமீபத்திய கடவுள் : பால்தாக்ரே

நீண்டகால கடவுள் : பாபா

பிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்

பிடிக்காதது :  கேள்வி கேட்கும் ரசிகன்

சமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்

நீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்  

சமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்

நீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...

சமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்

நீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்


அடுத்து நம்ம இளையதளபதி விஜய்


பெயர் : ஜோசப் விஜய்

பிடித்த பெயர் : இளையதளபதி

விரும்பும் பெயர் : முதல்வர் விஜய்

நண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே

எதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே

பிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்

பிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்

நம்புவது : நடிகைகளின் சதையை

நம்பாதது : இயக்குனரின் கதையை

பிடித்த விசயம் : ரீமேக் 

பிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது 

சமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது

நீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது

சமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது

நீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது

சமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது

நீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது

ஆக விரும்புவது : ரஜினியாக

ஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக

சமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது  

சமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது  

                                                                                                                   --- (தொடரும்)

LinkWithin

Related Posts with Thumbnails