Followers

Copyright

QRCode
Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Friday, April 30, 2010

மதுரை நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ..

ன்று நண்பன் ஒருவன் எனக்கு மதுரை மாநகரின் பழைய தோற்றம் பற்றிய  சில படங்களை மெயிலில் அனுப்பி வைத்து இருந்தான் ... எனக்கு மதுரை மாநகரம் மிகவும் பிடித்த ஒரு ஊர். அதற்க்கு பல காரணங்கள் உண்டு , சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த ஊரின் மேல் ஒரு பிரமிப்பு உண்டு , அது இன்னும் என்னை விட்டு அகலவில்லை... தெற்கு வாசல் , பெரியார் நிலையம் , கோரிப்பாளையம் , மாட்டுத்தாவணி , அண்ணா நகர், பசுமலை, பழங்காநத்தம் , திருப்பரங்குன்றம், காளவாசல், ஆரப்பாளையம் , புதூர் , அவனியாபுரம் என்று மதுரையில் ஊர் சுற்ற நிறைய இடங்கள் , நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு ... 

எனக்கு தெரிந்து இரவு எத்துனை மணிக்கு நீங்கள் மதுரையில் வந்து இறங்கினாலும் உங்களுக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து இருக்கும் , நீங்கள் வயிறார சாப்பிட சுவையான சாப்பாடு கிடைக்கும். இந்த பெருமை மதுரையை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த ஊருக்கும் கிடையாது...பக்தி மார்கத்திலும் மிக சிறந்த ஊர் எங்கள் மதுரை , மீனாட்சி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , பெரிய பள்ளி வாசல் , செயின்ட் மேரி கத்தோலிக்க சர்ச் என்று அனைத்து மத கடவுள்களுக்கும் பிரபலமான ஊர் எங்கள் ஊர். என்னை போன்று மதுரையை நேசிக்கும் அனைவருக்காகவும் நம் மதுரையின் பழைய தோற்றம் அடங்கிய புகைப்படங்கள் இதோ ,








புது மண்டபம் மற்றும் ஏழு கடல் தெரு



தாமரை குளம் மற்றும் ராஜ அம்மன் சன்னதிகள்  

திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதி (தற்போது மாவட்ட பதிப்பாளர் அலுவலகம் )



தெப்பகுளம் 


யானைமலை 


விளக்குத்தூண் 

வைகை கல்பாலம் 


வைகை நதி மண்டபம் 

ராணி மங்கம்மா அரண்மனை (தற்போது காந்தி மியூசியம்)



162 அடி தெற்கு கோபுரம் 


எழுகடல் தெரு - ராஜ கோபுரம் - புது மண்டபம் 


மேல இருக்கும் ஒவ்வொரு இடங்களை பற்றியும் தனித்தனியே ஒரு பதிவே போடலாம் , அவ்வளவு விஷயங்கள் உள்ளன அந்த இடங்களில், முடிந்தால் சில இடங்களை பற்றி மட்டும் எனக்கு தெரிந்த விபரங்களை இனி வரும் பதிவுகளில் தர முயற்சி செய்கிறேன்.


பிடிச்சிருந்தா இந்த புகைப்படங்கள் நிறைய பேரை சென்றடைய வோட்ட போடுங்க... 

LinkWithin

Related Posts with Thumbnails