Tuesday, June 1, 2010

மீள்பதிவு - காதல் கவிதைகள்

       அழகியல் 

சேலை கட்டினால் 
அழகு கூடும் என்றேன் 
எனக்கா? என்று ஆசையாய் 
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன் 
அழகின் உச்சத்தை 
உன் வெட்கத்தில் காட்டி 
விட்டு சென்றாய்...


ஹைக்கூ 

ஆசையாய் 
அணைத்து முத்தமிட்டதும் 
பரவியது உதட்டில் 
ஒரு வெப்பம் 
சிகரெட்...

தொலைபேசி 

உன் பிரிவில் 
துயரம் கொள்வது 
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில் 
நீ தரும் முத்தத்தில் 
சூடாகிபோன என் 
தொலைபேசியும்தான்....

     தேவதை 

குடுகுடுப்பைகாரன் 
சொல்லியதை நான் நம்பியதில்லை 
உன் வீட்டின் முன் நின்று 
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது 
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...


    இரவில் நீ 

பெண்களுக்கு 
வெட்கம்தான் அழகு 
என்று எண்ணி இருந்தேன் 
உன்னோடு நான் தங்கிய 
அந்த இரவில் 
நீ பண்ணிய அடாவடிகளை 
காணும் வரை...


     யுத்தம் 

கொடுப்பவரும் 
வாங்கியவரும் 
சுகம் காணும் 
ஒரே யுத்தம் 
முத்த யுத்தம்....


ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான் ... திரும்பவும் போட வேண்டும் என்று  தோன்றியது , அதனால் பதிவில் இன்னொரு முறை எழுதியுள்ளேன்...

2 comments:

  1. எல்லாம் சாரி, அனுஷ்கா படங்கள் ஏன்?

    //ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான் ... திரும்பவும் போட வேண்டும் என்று தோன்றியது , அதனால் பதிவில் இன்னொரு முறை எழுதியுள்ளேன்...//

    அதானே பார்த்தேன், எங்கேயோ படித்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  2. //எல்லாம் சாரி, அனுஷ்கா படங்கள் ஏன்?
    பாவனா இடத்த அனௌஷ்கா பிடிச்சிட்டாங்க தல

    ReplyDelete

write something about your view on this post...