Saturday, April 18, 2009

எனக்கு பிடித்த கவிதைகள்




அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மௌனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.


யாராவது

ஏதாவது

அதிர்ச்சியான செய்தி சொன்னால்

அச்சச்சோ என்று

நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்


என்னை உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள்

நீ...........


என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று விடுகிறாய்?

என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்

கண்ணாடியை

எங்கு பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.

உன்னைப் பார்க்க

உனக்கே அவ்வளவு

ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளவு இருக்கும்..

No comments:

Post a Comment

write something about your view on this post...