Followers

Copyright

QRCode

Thursday, February 14, 2013

விஸ்வரூபம்



இணையம் எங்கும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக விவாதிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயம் விஸ்வரூபம்தான் ... ரஜினி ரசிகர்கள் கூட தங்கள் தலைவரை துதி பாடுவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்து விட்டு , விஸ்வரூபத்துக்கு ஆடிட்டர் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , தங்களுக்கு தாங்களே விஸ்வரூபத்தை மட்டம் தட்டி கொண்டு தங்கள் வயிற்று வழி(லி)யை தீர்க்க வழிதேடுகிறார்கள் (அது தீராத வலி என்பதை எப்பொழுது உணருவார்களோ?) ... இவர்களின் வயிற்று வழியை பார்க்கும் பொழுதுதான் கமலின் வீச்சு தெரிகிறது .. எந்திரன் படம் வந்த சமயம்,  படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் வெகுளியாக சொல்லும் போதெல்லாம் என்னை போன்ற கமல் ரசிகர்கள் கோபம் கொள்ளாமல் அவர்களின் வெகுளி தனத்தை எண்ணி ஒற்றை சிரிப்போடு நகர்ந்து கொண்டோம் .. விஸ்வரூபத்தை அப்படி கடந்து போகமுடியாதல்லவா? அதான் கல்லெறிகிறார்கள் ... 

சரி படம் எப்படி? என்னுடைய பார்வையில் இயக்குனர் கமல் எடுத்திருக்கும்  அதிரி புதிரி விஸ்வரூபம்தான் இந்த விஸ்வரூபம்.. உலக படங்களை பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை ... ஆஸ்கார் வாங்கும் படங்கள் எல்லாம் உலக படங்கள் என்று சொல்லும் தகுதி உடையவைகள் என்று பல அறிவு ஜீவிகள் சொல்ல கேட்டிருக்கிறேன் , அந்த வகையில் slumdog millionarie ஒரு ஓலக படம்தானே ... அந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் அந்த படத்துக்கு எந்த வகையிலும் குறையாத ஏன் அதை விட உருவாக்கம் , காட்சியமைப்பு என்று பல விதங்களில் சிறந்த இந்த விஸ்வரூபம் ஒரு ஓலக படம்தான் ... இளம் ஜிகாத் ஒருவன் ஊஞ்சலில் ஆடும் அந்த ஒரு காட்சி போதும் , கிலோ கணக்கில் ஆஸ்காரை கமல் காலடியில் கொண்டு வந்து கொட்டலாம்... இந்த படத்திலேயே ஆக சிறந்த பகுதி அந்த தலிபான்கள் சம்பந்தப்பட்ட பகுதிதான்... போராளிகளின் வாழ்க்கையை யாரும் இவ்வளவு நெருக்கமாக தைரியமாக காட்டியதில்லை , கலைஞனுக்கு ஆண்மை வேண்டும் என்று சொல்லுவார்கள் , படத்தில் பெண்மை கலந்த பாத்திரத்தில் கலக்கும் கமலுக்கு நிஜ வாழ்க்கையில் அது அதிகாமாகவே இருக்கிறது... வேறு எந்த இயக்குனராலாவது இந்த விஷயத்தை இவ்வளவு நேர்மையாக காட்டியிருக்க முடியுமா? உடனே கமலுக்கு  இலங்கை பிரச்சனையை பற்றி படம் எடுக்கும் தைரியம் இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள் , பத்து வருடங்களுக்கு முன்னதாகவே தெனாலி என்ற நகைசுவை படத்தில் ஒரு இலங்கை பெண்ணின் அவலத்தை  காட்டியிருக்கும் கமலுக்கு அந்த தைரியம் ரொம்பவே இருக்கிறது , கேள்வி கேட்கும் உங்களுக்குதான் பொறுமை வேண்டும் கமல் அப்படியான படைப்பை பிரசவிக்கும் வரை ...

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமல் கொஞ்சம் பெண்மைதானதோடு நடக்கிறார் , நடனமாடுகிறார் ... எனக்கு படத்தில் எரிச்சலை உண்டு பண்ணிய காட்சிகள் இவைகள் மட்டுமே ... கமலுக்கு இது தேவையில்லாதது ... பனிரெண்டாம் வகுப்பு மாணவன் எனக்கு மனப்பாடமாக தெரியும் , எப்படி ஒப்பிக்கிறேன் பார் என்று கண்ணை மூடி கொண்டு பெருமையாக ஒப்பித்தாள் எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த கதாபாத்திரம் ...  கமல் என்றாலே நடிப்புதானே... அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் எதற்க்கு கஷ்டப்பட வேண்டும்... இங்கே மற்ற யாரும் இன்னும் எல்‌கே‌ஜி கூட தாண்டவில்லை மிஸ்டர்.கமல்... ஆனால் கமலின் இந்த முயற்சியால் நமக்கு கிடைத்த பேரானந்தம் உன்னை காணாத பாடலும் அதற்க்கு கமல் கொடுக்கும் அபிநயங்களும்தான்  ... கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் உருவாக்கபட்ட சிறந்த நடன அமைப்பு இதுதான் .. தேசிய விருது கமிட்டி புண்ணியவாங்களே தயவு செய்து இந்த பாடலுக்கு விருது எதுவும்  கொடுத்து கேவலபடுத்தி விடாதீர்கள் , வழக்கம் போல யாரவாது கைலியை தூக்கி பிடித்து கொண்டு இரண்டு புட்டங்களையும் ஆட்டி காட்டுவார்கள் அவர்களுக்கே கொடுத்து அந்த விருதின் பெருமையை காப்பாற்றி கொள்ளுங்கள் ...  

எப்படியோ இருக்கும் ஊரில் கோவணம் கட்டியவன் பிழைக்க தெரியாதவன்  என்று சொல்வார்களே , அப்படிதான் இருக்கிறது கமலின் இன்றைய நிலமையும் ... ஆனால் ஒருகாலத்தில் அம்மணமாக இருந்த ஊரை இன்று கோவணம் கட்டும் அளவுக்காவது கொண்டு வந்ததில் கமலின் பங்கு அளப்பரியது .. இன்று விஸ்வரூபத்தில் கமல் சோக்கா பிரிட்டிஸ்காரன் மாதிரி சட்டையும் , பேண்டும் தனக்கு மாட்டி கொண்டிருக்கிறார்... இனி மற்றவர்கள் குறைந்தபட்சம் பட்டாபட்டி  அளவுக்காவது தங்களை வளர்த்து கொள்வார்கள் என்று நம்பலாம்


Friday, December 14, 2012

கமல் ஒரு சிறந்த வியாபாரியா? பாகம் 1



பத்துவருடங்களுக்கு முன்பாக எல்லாம் எந்த  புது படங்களும் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆவதில்லை , சுட சுட படம் பார்க்க வேண்டும் என்றால் இருபது கிலோமீட்டர் பயணித்து நாங்கள் விருதுநகர் சென்றுதான் பார்க்க வேண்டும்.. எங்கள் சுற்று வட்டாரத்தில் விருதுநகர்தான் A சென்டர் , எங்கள் ஊர் திரையரங்குகள் எல்லாம்  B சென்டர் , எங்கள் ஊரை சுற்றி இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகள் (டெண்டு கொட்டாய்கள் ) C சென்டர் என்று சென்டர் வாரியாக அப்பொழுது சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருந்தது , A சென்டரில் முதலில் ரிலீஸ் ஆகி அங்கு பிலிம் தேய தேய ஓடி எங்கள் ஊரில் அதே படம் திரையிடப்படும் பொழுது திரை முழுவதும் கோடுகள்தான் தெரியும் ,C  சென்டர் கதி இன்னும் கேவலம் , ஒலியும் தேய்ந்து பல படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அழுது கொண்டேதான் வசனம் பேசுவார்கள் ...  அந்தே நேரத்தில் மெல்ல மெல்ல கேபிள் டிவி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்க பழைய படங்கள் என்றாலும் தெளிவாக குறிப்பாக இலவசமாக படம் பார்க்கும் வசதி கிடைத்தவுடன் B மற்றும் C சென்டர்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது , 

சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா படங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த B & C திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்டபங்களாக மாறி , இனி சினிமா மெல்ல சாகும் என்ற நிலை வந்துகொண்டிருந்த நேரத்தில் இதற்க்கு தீர்வாக உலக நாயகன்  ஒரு பக்காவனா திட்டத்தோடு களம் இறங்கினார் , மளிகை சாமான்  போல சினிமாவும் மக்கள் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும்  A, B, C என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் எல்லா ஊர்களிலும்நேரடியாக  படங்களை ரிலீஸ் செய்வோம் ,வீட்டுக்கு பக்கத்திலேயே படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தால்  மக்கள் கண்டிப்பாக திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று புது வியாபார யுக்தியை அறிமுகபடுத்த முயற்சித்தார் , ஆனால் அதற்க்கு அப்பொழுது ஏகப்பட்ட எதிர்ப்புகள் இவர் தன்னுடைய படத்தை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்கிறார் , அவர் பேச்சை நம்பி எல்லாரும் படத்தை வாங்கி வெளியிட்டால் தயாரிப்பாளராக அவருக்கு லாபம்தான் ஆனால் திரையரங்குகள் இன்னும் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தி அதற்க்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வந்தார்கள் , ஆனால் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய வேட்டிடையாடு விளையாடு படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் கூட நேரடியாக வெளியிட்டார் , ரிசல்ட்??? தனக்கு அருகில் இருக்கும் திரையரங்கிலேயே புது படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் எல்லாரும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி நகர ஆரம்பித்தனர் . அன்று யாரெல்லாம் கமலை திட்டினார்களோ அவர்கள்தான் இன்று இதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் , ஏன் கமல் கல்லடி படும் போது அவருக்கு தோள் கொடுக்காத அவர் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டாத அவரின் சக சினிமா கதாநாயகர்கள் கூட அதன் பின்னர் இதே முறையை பின்பற்றி தங்கள் படங்களின் வியாபரத்தை பெருக்கி கொண்டார்கள் , அன்று கமல் மட்டும் வித்தியாசமாக யோசிக்காமல் இருந்திருந்தால் இருபது கோடி முப்பது கோடி என்றிருந்த தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று எழுபது கோடி எம்பது கோடி என்று  இருந்திருக்காது ... 

ஆனால் கமலை அன்று எதிர்த்த திரையரங்க உரிமையாளர்கள் அதன் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்தை பார்த்தவுடன் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி குறைந்த பார்வையாளர்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தனர் , ஆனால் இன்று அதுவே படம் பார்க்கும் நமக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது , எங்கள் ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றும் இருக்கும் , ஓளி ஒலி அமைப்பிலோ , குளிர்சாதன அமைப்பிலோ , ஏன் கழிவறை கட்டமைப்பிலோ எந்த முன்னேற்றமும் இருக்காது , ஆனால் பத்து ரூபாயாக இருந்த கட்டணம் மட்டும் இன்று நூறு ரூபாயை தாண்டி இருக்கும் , இந்த கொள்ளையை பொறுக்க  முடியாமல்தான் பலரும் இப்பொழுது திரையரங்கம் பக்கம் செல்வதே இல்லை  , படம் வந்து ஒரே வாரத்தில் ஒரு காட்சிக்கு ஐந்து பேர் பத்து பேருடன் ஓடிய பெரிய நடிகர்களின் படங்கள் ஏராளம் , முன்பெல்லாம் ஒரு ஐநூறு பேர் படம் பார்த்தால் அவன் இன்னொரு ஐநூறு பேரிடம் படத்தை பற்றி சொல்லுவான் , அதில் ஒரு இருநூறு பேராவது படம் பார்க்க வருவார்கள் , கட்டணம் குறைவாக  இருந்தாலும் வசூல் அதிகமாக இருக்கும் , ஆனால் இன்று அதிக விலை கொடுத்து பார்ப்பதே ஐம்பது பேர்தான் என்பதால் மௌத் டாக்கின் வீச்சு குறைவாகவே இருக்கும் , குடும்பத்தோடு படம் பார்க்க வருபவன் எல்லாம் திரையன்குகளின் கேவலமான கட்டமைப்பினாலும் , அதிகமான விலை கொடுக்க வேண்டியதிருப்பதாலும் ஒரு திருட்டு VCD வாங்கி அந்த குவாலிட்டியொடு திருப்திபட்டு கொள்கிறான் ... இப்படி திரையரங்கம் சென்று படம் பார்க்க பிடிக்காதவர்களின் பணமெல்லாம் ஒன்று அவர்களுக்கே மிச்சமாகிறது , இல்லையென்றால் திருட்டு VCDகாரனுக்கு சென்று விடுகிறது... தயாரிப்பாளருக்கு அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை... 

இதை எப்படி சரி செய்வது என்று எல்லாரும் (சினிமா வியாபாரிகள்) யோசித்து கொண்டிருக்கும் பொது மீண்டும் ஒரு அட்டகாசமான திட்டத்தோடு வந்திருக்கிறார் நம் உலக நாயகன் ... உலகம் உருண்டை என்று முதலில் சொன்னவர்களுக்கு கிடைத்த அதே கல்லடிதான் கமலுக்கும் , இந்த கல்லடி படம் வெளிவந்த பிறகும் தொடருமா? DTH தொழில் நுட்பம் சினிமாவுக்கு வரமா? சாபமா? என்று எனக்கு தெரிந்த சில விசயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

தொடரும் ..........

LinkWithin

Related Posts with Thumbnails