Followers

Copyright

QRCode

Saturday, August 29, 2009

வாரான் வாரான் பூச்சாண்டி



ஒரு வீடு இரு திருடர்கள்
அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.


இந்த கவிதையை எழுதியது இலங்கை பிரச்ச்சனைகாய் உயிர் நீத்த முத்துகுமார்




Wednesday, August 26, 2009

நம்ம ஹீரோகளுக்கு புடிச்ச வடிவேலு டையலாக்குகள்

ரஜினி: பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மட்டம் வீக்கு

கமல்: ரிஸ்க் எடுகுரதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரி

அஜித்: பிகினிங் எல்லாம் உண்ட நல்லாதான்யா இருக்கு, ஆனா பினிசிங் சரி இல்லையே

விஜய்: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய் விட்டதே...

விக்ரம : இப்டி உசுபேத்தி விட்டு உசுபேத்தி விட்டு உடம்ப ரணகள படுத்திரானுகளே...

சூர்யா: ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து விட்டாயடா....

விஜயகாந்த்: என்ன இதுவரைக்கும் யாரும் அடிச்சதில்ல ... அது இந்த மாசம் நான் சொன்னது போன மாசம்

கார்த்திக்: வேணாம் விட்டுடு வலிக்கிது அழுதிடுவேன்

சரத் குமார்: மாப்பு வட்சிடாண்டா ஆப்பு

சிம்பு: இது வாலிப வயசு...

தனுஷ்: இது அண்ணன் கிழிச்ச கோடு... தாண்ட படாது...

ஜே. கே. ரித்தீஷ்: போங்க தம்பி போங்க எங்கள அடிச்சி அருவா கம்பு எல்லாம் டையர்டு ஆகி போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்குதுக நீங்க என்ன அடிச்சி பெரிய ரௌடினு பேரு வாங்க போறேங்கலாக்கும்...

சேரன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடானுகடா

நம்ம அரசியல்வாதிக,

மன்மோகன் சிங்: இவனுக மத்தியில உயிர் வாழ்றதே நமக்கு பெரிய வேலையா போட்சே...

கருணாநிதி : இன்னுமாடா இவங்க நம்மள நம்புராங்கே....

ஜெயலலிதா: மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்....

ராமதாஸ்: போட்சா.. போட்சா... போட்சா....

அழகிரி: சூனா பானா... போ..போ.. போய்டே இரு ... நம்மள எவனும் ஒன்னும் பண்ண முடியாது ...

வை.கோ: ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்

LinkWithin

Related Posts with Thumbnails