Sunday, September 19, 2010

ஆத்தா நான் காப்பி அடிச்சிட்டேன்

 
நேற்று நான் வெளியிட்ட பதிவு வேறு ஒரு பதிவரின் காப்பி என்று சில பின்னூட்டங்கள் வந்தன ... நன்றி அவர்களுக்கு , எனக்கு இந்த கான்செப்ட் எனக்கு வந்த ஒரு மெயிலின்  மூலமே தோன்றியது  ... அந்த மெயிலில் வந்த மூன்று pointகளை மட்டுமே நான் அப்படியே பயன்படுத்தி உள்ளேன் ... மற்றபடி அனைத்துமே என்னுடைய பாணியில் நான் யோசித்து எழுதியதுதான் ... இதற்க்கு முன்னர் எனக்கு மெயில் வந்த பதிவுகளை பதிவேற்றும் போதெல்லாம் இது எனக்கு மெயிலில் வந்த பதிவு என்று சொல்லித்தான் பதிவேற்றி இருந்தேன் ... இது என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் ... இதை நான் அப்படியே பயன்படுத்தாமல் என்னுடைய சொந்த சரக்குகளையும் சேர்த்து போட்டதால் அந்த வார்த்தையை இணைக்கவில்லை ... எனக்கு இது வேறு ஒரு பதிவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதிய பதிவு என்பது தெரியாது .. தெரிந்திருந்தால் இந்த பதிவையே கைவிட்டு இருப்பேன் ...  

நான் வேறு ஒரு பதிவரின் பதிவை அப்படியே பயன்படுத்தி இருக்கும் போதெல்லாம் அவரின் லிங்க் கொடுத்துதான் பயன்படுத்துவேன் ... ஆனால் இந்த பதிவின் மூலம் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன் , நானும் பிரபல பதிவர் ஆகிவிட்டு இருந்திருக்கிறேன் என்பது , என்னுடைய பதிவிலும் நல்ல பதிவுகள் இருக்கும் என்று நிறைய பேர் வந்து படித்து   விட்டு செல்கிறார்கர் என்று தெரிந்து கொண்டேன் ... சென்ற பதிவில் நான் யாரையும் ஏமாற்றவில்லை ... அப்படி நீங்கள் நினைத்து வருந்தினால் நான் மனமார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ... 

கடைசியாக அந்த பதிவின் உண்மையான (பாதி) சொந்தகாரர்,,, அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை , உங்கள் அறிவை நான் தெரிந்தே திருடவில்லை , இருந்தாலும் சென்ற பதிவில் எனக்கு வந்த ஓட்டுகளையும் பின்னூட்டங்களையும் அவருக்கே சமர்பிக்கிறேன்... 

(எனக்கும் பதிவுலகில் ஒரு சின்ன மரியாதை உருவாகி விட்டது என்று புரிய வைத்த நண்பர்களுக்கு நன்றி ...    நான் தெரிந்தே இந்த தவறை செய்யவில்லை , நான் இப்படியெல்லாம் சொல்வதினால் இந்த பதிவு முழுக்க முழுக்க வேறு ஒருவரின் பதிவும் கிடையாது , இதில் முக்கால்வாசிக்கும் மேல் என்னுடைய சொந்த கற்பனையும் உள்ளது ... )

6 comments:

  1. மன்னிக்கறவன் மனுசன்...மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன்....

    ReplyDelete
  2. அட..விடுங்க..பாஸு அரசியல்ல இதல்லாம் சாதாரணம்.இதெல்லாம் வரலாறுல வரும்.படிப்பாங்க..

    ReplyDelete
  3. ராஜா மிக நல்ல பதிவு.... எதை பற்றி சொல்கிறேன் என்று தங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  4. //மன்னிக்கறவன் மனுசன்...மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன்...

    தல எனக்கும் தெரியும் படைப்பை திருடினால் எவ்வளவு கோபம் வரும் என்று ... ஆனால் நான் எழுதிய எல்லா பதிவுகளுமே காப்பி என்று அவர் சொன்னதுதான் எனக்கு கொஞ்சம் கோபம் , இருந்தாலும் தவறு என்மேல் என்பதால் அதுவும் போய் விட்டது .

    //அட..விடுங்க..பாஸு அரசியல்ல இதல்லாம் சாதாரணம்.இதெல்லாம் வரலாறுல வரும்.படிப்பாங்க.

    ஹை நானும் வரலாற்று நாயகானாக ஆகிவிட்டேனா?

    //ராஜா மிக நல்ல பதிவு.... எதை பற்றி சொல்கிறேன் என்று தங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்..

    தல ஒரு வார்த்தைதான் சொல்ல தோணுது "நன்பேண்டா" (கொஞ்சம் மரியாதை குறைவாக இருந்தால் மன்னிக்கவும் )

    ReplyDelete
  5. Anna neengal unmaiyil sirantha manithar....

    ReplyDelete
  6. @ Jeyamaran

    நன்றி தம்பி

    ReplyDelete

write something about your view on this post...