Monday, March 1, 2010

விண்ணை தாண்டி வருவாயா? - திரையில் ஒரு தாஜ்மஹால்




டிஸ்கி 1:  காதல் , கவிதை , பெண்களை பற்றிய வர்ணனை என்றாலே  ஆள விட்டா போதும்டா சாமி என்று ஓடுறவரா நீங்க? கண்டிப்பா இந்த படத்த பாக்காதீங்க




பைக்குள உங்க லவ்வர உக்கார வச்சி ஊரை சுத்திகாட்ட உங்களுக்கு ரொம்ப புடிக்கும்மா ? சினிமா தியேட்டேர் ஜோடி ஜோடியா உக்காந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற காதல் ஜோடிகள பாத்து உங்களுக்கு ஏக்கம் வருமா ? பீச்சில பார்க்குல ஒண்ணா சுத்திகிட்டு இருக்கிற பையனையும் பொண்ணையும் பாத்தா ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பீலிங்க்ஸ் விடுற பார்ட்டியா நீங்க ? சீக்கிரம் போங்க பாஸ் நம்ம படம் இது உடனே போய் பாருங்க படத்த....

கௌதம் மேனன் இயக்கத்துல சிம்பு நடிச்சிருக்கிற இந்த படத்துல சிம்புவுக்கு ஜோடியா நம்ம த்ரிஷா நடிச்சிருக்காங்க இல்ல இல்ல வாழ்ந்து இருக்காங்க... கண்டிப்பா த்ரிஷாவுக்கு இது life time படம்... கதையெல்லாம் படத்துல கெடையாது படம் முழுவதும் காதல் காதல் காதல் மட்டும்...
த்ரிஷாவ தேடி சிம்பு கேரளா போற சீன்ல அவர சர்ச்சில சிம்பு பாத்தவுடனே சிம்புவோட சேந்து நாமளும் சந்தோசத்துல துள்ளி குதிக்கிறோம் .... அப்படி உங்களுக்கு சந்தோசம் வரலையா? பாஸ் உங்களுக்கு வயசாயிடுச்சி.... சிம்புவும் த்ரிஷாவும் ட்ரைன்ல ஒண்ணா சென்னை வர்ற சீன்... சிம்புவோட காதல ஏத்துக்கவும் முடியாம அத ஒதுக்கி தள்ளவும் முடியாம சிம்பு கொடுக்கிற முத்தங்களை எல்லாம் சந்தோசமா ஏத்துகிட்டு கடைசியில அவர பாத்து மொறைக்கிற த்ரிஷா அப்படியே இந்த காலத்து பொண்ணுங்களோட மன நிலைய பிரதிபலிசிருக்காங்க.... நின்னு போன கல்யாண வீட்டுல நைட் சிம்புவும் த்ரிஷாவும் பேசுற சீன் ஒரு கவிதை .... வாரணம் ஆயிரம் படத்துல காதல செயற்கையா சொல்லி மண்ணை கவ்வுன கௌதம் இந்த படத்துல அத யதார்த்தமா காட்டி பாக்குற நம்மையும் அத அனுபவிக்க வச்சிருக்காரு ...

சிம்பு இந்த படத்துல ரொம்ப அமைதியா வராரு... ஆனா நமக்கு சிம்புனாலே ஞாபகத்துக்கு வர்றது அவரோட ஓவரான பில்ட் அப்கள்தான்.. அமைதியான பையனா சிம்பு நம்ம மனசுல ஓட்ட மாட்டேங்கிறாரு... அவருக்கு பதிலா வேற யாரையாவது போட்டு இருக்கலாம்...

த்ரிஷா ஒவ்வொரு காட்சிளையும் ரொம்ப அழகா வராங்க.... அதும் ட்ரெயின் சீன்ல அவங்களோட முக பாவனைகள் அட்டகாசம். சிம்புவோட இருக்கனும்கிரதுக்காக ஆபீசெளையும் வீட்டுலயும் பொய் சொல்லிட்டு அவரோட படத்துக்கு போற சீன்ல அவங்க முகத்துல ஒரு பயத்தையும் படபடப்பையும் அதோட சேத்து காதலையும் காட்டிஇருப்பாங்க... கிரேட் டெலிவரி.... கடைசில எனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாதுடான்னு சிம்புகிட அவங்க சொல்லும்போது ஒரு maturity இல்லாத குழப்பமான மனநிலையில இருக்கிற பொண்ண நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டி இருப்பாங்க....

படத்துல முக்கியமான ரெண்டு விஷயங்கள் இசை , ஒளிப்பதிவு ... ரெண்டையும் பத்தி சொல்ல தேவை இல்ல ... இசை சில இடங்களில் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது சில இடங்களில் நம்மை மௌனமாய் அழ வைக்கிறது .... ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.....

நீங்க காதல் செய்து முடித்தவரா? உங்களுக்கு உங்கள் பழைய நினைவுகளை மீட்டு தரும் ... நீங்கள் காதல் செய்து கொண்டு இருப்பவரா? உங்களை கண்டிப்பாய் அழ வைத்து விடும்.... நீங்கள் காதல் செய்ய ஆசை படுபவரா? உங்களை கண்டிப்பாய் ஏங்க வைத்து விடும்...
நீங்கள் காதல் என்றாலே பயந்து ஒடுபவரா? உங்களுக்கு கண்டிப்பாய் தலைவலியை கொடுத்து விடும்.....

காதலுக்கு மரியாதை கொடுத்து அதற்க்கு தமிழ் சினிமா கட்டிய கோட்டையில் இந்த படம் ஒரு வைர கல்லாய் மின்னும்

3 comments:

  1. எனக்கு படம் பிடித்துள்ளது. கௌதமின் முந்தைய படத்தை விட இது எவ்வளவோ மேல்... :P
    த்ரிஷாவை விட சிம்பு தான் கதையில் வாழ்ந்து காட்டி இருக்கார் என எனக்கு தோன்றுகிறது... :)

    ReplyDelete
  2. விண்ணை தாண்டி வருவாயா என்னக்கு பிடிக்கல இது ஆனந்த தாண்டவம் நகல் சிம்பு வேறு தமிழ்ப்படம் பார்ப்பது இல்லையா இருந்தாலும் ஆனந்த தாண்டவம் நல்ல படம்

    ReplyDelete
  3. padam super thrisha yindha padathula kadha pathramava vazhndhurukanga....simbu not bad...priya

    ReplyDelete

write something about your view on this post...